ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

கலைஞர் ஐயாவை பிடிக்கும்! காரணங்கள் சில..


ரு காலத்தில் புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு இல்லை என்று
சொன்னவர் நீங்கள். ஆனால்  உங்கள் தொண்டன் வைகோவுக்கு
கிடைக்கும் செல்வாக்கை பார்த்து எங்கே நான் பூதம் போல் பாதுகாத்து
வைத்திருக்கும் திமுகா என்ற சொத்து எனக்கு பின் என் வாரிசுகளுக்கு
போகாமல் வைகோவுக்கு போய்விடுமோ என்ற அச்சத்தில் கொஞ்சமும்
நா கூசாமல் "வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
அசராமல் பொய் சொன்னீர்களே அப்போதே உங்களை எனக்கு
ரெம்ப பிடித்து போய்விட்டது.

ல்லா நாட்டு, மாநில முதல்வர்களும் எப்போது பார்த்தாலும் நேரம் இல்லை நேரம் காணாது என்று பந்தா பண்ணுகிறார்கள், ஆனால்
நீங்கள் இவ்வளவு பிஸியிலும் "சித்தி" மெகா தொடர் வெற்றி
விழாவிலும் "மெட்டி ஒலி" மெகா  தொடர் வெற்றி விழாவிலும்  மேடை 
ஏறி ஒரு எபிசோட்டை கூட மிஸ் பண்ணாமல் பார்த்தேன் என்று
சொல்லி புகழ்ந்து தள்ளி அண்டை மாநில முதல்வர்களை மட்டும்
அல்ல கழக கண்மணிகளையும் வீட்டு பெண்மணிகளையும் உங்கள்
கலைத்தாகத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்க வைத்தீர்களே
அப்போதும்  உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ம்மையார் ஆட்சிக்கு வந்துவிட்டார். உங்கள் கைதும் நெருங்கி
விட்டது, உங்களை கைது செய்யும் நாளும் தெரிந்துவிட்டது.. அட
நேரம் கூட தெரிந்து விட்டது. சன் டிவி காரனுக்கு அதான் உங்க 
பேரணுக்கு போனைப்போட்டு  உங்கள் வீட்டுக்கு வெளியேயும்
உள்ளேயும் ஒளிந்து இருக்க செய்து விட்டு, போலிஸ் உங்கள் வீடு
வந்து கைது செய்த போது எதுவுமே தெரியாதவர் போல
"லுங்கியுடன்"  நின்று ஐய்யோ  கொல்லுறாங்களே.. அய்யோ   
கொல்லுறாங்களே..  என்று   கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்
கத்தி ஒளிந்து நின்ற பேரன்களைக்கொண்டு  படம் புடித்து அதை 
சன் டிவியில் ஒளிபரப்பு செய்து உலக தமிழருக்கே உங்கள் நடிப்பு திறமையை காட்டினீர்களே அப்போதும் எனக்கு உங்களை ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

நீங்கள் ஒரு மிக சிறந்த நாத்திகவாதி!!. ஆனால் பேரன்களோ
தங்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆன்மிகம் வளர்த்து கல்லா 
கட்டுகிறார்கள் . ஏன் உங்கள் தொலைக்காட்சியிலேயே விநாயகர் 
சதுர்த்திக்கு விடுமுறை தினமென்று சொல்லி சிறப்பு படம்! காட்டுகிறீர்கள். 
உங்கள்  வீட்டு மனைவி-துணைவி உட்பட்ட உறவுகளே  கோயில் கோயிலாக ஏறி இறங்கி உங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள்.
இது கூட பெரிய விடயம் இல்லை. பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு
அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை
கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்துள்ளீர்களே
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.

ஜெயலலிதா-சசிகலா ஒரு  கோயில் விழாவில் பங்கேற்ற போது,
ஜெயலலிதா தனக்கு அணிவித்த மாலையை கழட்டி சசிகலா
கழுத்தில் போட்டார், உடனே நீங்கள் உங்கள் ஆக்களைகொண்டு
அதை படம் பிடித்து உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்  திரும்ப  திரும்ப  ஒளிபரப்பாக்கி ஜெயாவும்-சசியும் மாலை மாற்றினார்கள்
என்று  "ஓரின செயர்க்கையாளர்கள்" என்ற ரேஞ்சில் சொல்லி 
நல்ல மனிதர்கள் பலரை உங்கள் முகத்தில் காரி துப்ப வைத்தீர்களே
(எழுத்தாளர் ஞானி கூட உங்களை குமுதத்தில் கண்டித்து இருந்தார்)
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ருத்துக்கணிப்பு என்ற பெயரில் உங்கள் பேரன்-மகன்களுக்குள்
நடந்த பொழுது போக்கு சண்டையில் "தினகரன்" அலுவலகம்
கொளுத்தப்பட்டு அப்பாவி உயிர்கள் சில பலியாக பெரிய
நாட்டாமை போல் அவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை
என்று பேரங்களை தள்ளி வைத்தீர்கள். அவர்களுக்கு சன் டிவிக்கு
போட்டியாக மக்கள் சொத்தில் உங்கள் சொத்தாக கலைஞர்
தொலைக்காட்சியை ஆரம்பித்தீர்கள் எல்லாம் ஒக்கேதான் திடீர்
என ஒருநாள் உங்களுக்கு "இதயம் இனிக்க கண்கள் பனிக்க" 
சில லாபம் தேடி ஒட்டிவிட்டீர்கள் பேரன்களுடன். கழக கண்மணிகள்
கூட ஒருநிமிடம் ஆடித்தான் போய்விட்டார்கள். ஆனால் உங்களுக்கு
இதில் எத்தனை லாபங்கள்  அப்போதே யோசித்து பார்த்த உடனேயே
உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்தில் இறுதிப்போர் ஆரம்பமாகிவிட்டது, கொத்து கொத்தாக எம்
சனத்தை எல்லாம் கொன்று குவிக்க ஆரம்பித்து விட்டான் சிங்கள
இனவெறியன். நாங்கள் கத்தினோம் கதறினோம் தமிழ்நாட்டில்
மக்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
"முத்துகுமார்" என்ற ஒரு புனித உயிர் எங்களுக்காக உங்களிடம்
மன்றாடி தீக்கு இரையாகிவிட்டது, உலக தமிழினமே உங்களிடம்
கையேந்தி நிக்குது அசைந்தீர்களா ?? நீங்கள். இப்போ பாருங்கள்
 பாசிச! ஜெயலலிதாவை  தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற
என்னால் முடியாது என்றவர் இந்த சிறு மக்கள் கொந்தளிப்பை
பார்த்தே மனம்மாறி அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்திலேயே
தீர்மானம் கொண்டு  வந்துவிட்டார் அடிகடி முடிவை மாற்றும் இவர்
எல்லாம் முதல்வரா?? ஆனால் நீங்கள் அப்படியா கடிதம் எழுதி
எழுதி, ஆர்ப்பாட்டக்காரர்களை  கைது செய்தும் கடைசி வரை
காங்கிரஸின் ஆசையை நிறைவேற்ற இத்தாலி அன்னைக்கு ஆதரவாக பக்க பலமாக இருந்தீர்களே, நீங்கள் அல்லவா முதல்வர்!! அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்தின் இன அழிப்பு வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.
மக்கள் கொந்தளிப்பையும் மீடியாக்கள் கேள்விக்கனைகனைகளையும்
சமாளிக்க முடியவில்லை உங்களால், திடீரென ஒருநாள்   காலையில்
பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு செரிக்காமல் மெரினாவீச்சுக்கு
காத்து வாங்க வந்த நீங்கள் சட்டென மனைவி தலைமாட்டுக்கும்
துணைவி கால்மாட்டுக்கும் இருக்க படுத்துவிட்டீர்கள் "உண்ணாவிரதம்"
என்ற பெயரில் மெரினாவில். சில மணித்தியாலங்கள் கரைய பசி
குடலை புடுங்க லஞ்சுக்கு வூட்டுக்கு போகணும் என்ற பரிதவிப்பில் "அங்கே" இருந்து போன் அடிச்சாங்க யுத்தம் எல்லாம் நின்னுட்டாம்.
என்று   சொல்லி விட்டு உண்ணாவிரதத்தை! நிறைவு செய்தீங்க
பாருங்க அப்பொழுதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

டுத்த நாள் மீடியாவே திரண்டு வந்து உங்களை செருப்பால
அடிக்காத குறையாக யுத்தம் எல்லாம் நின்னுட்டாம் என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்தபின்தான் கொத்துக்குண்டுகளில்
கொத்துகொத்தாக எம் இனம்  கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
அசராமல்  உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ல்லாமே முடிந்துவிட்டது. சொந்த நாட்டிலேயே அகதி ஆகி
விட்டோம் நாங்கள். எங்களிடம் இருந்து உறிஞ்சப்பட்ட ரத்தம்
காங்கிரஸ் பற்களிலும் தெரிகிறது, அது உங்கள் கண்களுக்கும்
தெரிகிறது.அப்போது கூட நீங்கலாக விலக்க வேண்டாம் காங்கிரசை,
பிடிச்ச  சனியன் லேசில் போகாது இங்கே உங்களை விட்டு தானே
காங்கிரஸ் போகிறேன் என்று அடம்பிடிக்குது விட்டீர்களா? நீங்கள்.
கோவிச்சுக்கொண்டு அம்மா வீட்டுக்கு போன புது மனுசியை
சமாதானப்படுத்துவது போல் போய் கையில் காலில் விழுந்து
கூட்டி வந்து தேர்தலில் அத்தனை இடங்களை அள்ளி கொடுத்து
பார்த்து பார்த்து இடங்களை கூட தெரிவு செய்து கொடுத்தீர்களே
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

யுத்தம் என்ற பெயரில் சிங்கள காடையன் எங்களை  அழித்து கொண்டிருந்த  நேரத்தில் தமிழ் நாடே  கொந்தளித்துக் கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டின் முக்கிய தலைவர்கள் சோனா நமிதா பாபிலோனா எல்லோரையும் அறிவாலயம் அழைத்து பேசி நாளொரு வண்ண புகைப்படத்தை முரசொலியில் பிரசுரித்துகொண்டு  
இருந்தீர்களே   அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்து உயிர்களை  காப்பாற்ற சொல்லி  மத்தியரசுக்கு வெறும்  தந்தி
மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அப்போதும்
உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்.

னிமொழி மகளை முக்கிய புள்ளியாக வைத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் 
ஊழலில் மக்கள் பணம் ரூ. 1.76 லட்சம் கோடியை அலாக்கா கொள்ளை அடித்துவிட்டு அந்த பணத்தை மனைவி துணைவி மகள் என்று
எல்லோர் பெயரிலும் போட்டு கலைஞர் தொலைக்காட்சி வேறு ஆரம்பித்துவிட்டு கொஞ்சம்  கூட குற்ற உணர்வு இன்றி இப்படிப்பட்ட 
ஒரு ஊழல்  நடக்கவே இல்லை என்று சத்தியம் பண்ணாத 
குறையாக  அண்டைப்புளுகு புளுகினீர்களே அப்போதும் உங்களை
எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

திமுகாவை அதன் முந்தைய தலைவர்கள் வளர்த்து இந்த நிலைக்கு
கொண்டுவர எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள். ஆனால் இன்று
நீங்கள் பார்த்துகொண்டு இருக்கவே காங்கிரஸ் மெல்ல தன்னுடன்
சேர்த்து திமுகாவையும் முழ்கடித்து கொண்டு இருக்குறது. ஆனால்
"திமுகா என்ன அப்பன் வீட்டு சொத்தா" என்ற கணக்கில் திமுகாவை
விட மகள்தான் எனக்கு முக்கியம் என்று இன்னும்  காங்கிரசின்
கால்கழுவி அவர்களிடம் வலுக்கட்டாயமாக ஒட்டிக்கொண்டு 
இருக்கிறீர்களே  இப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ண்மையில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
தூக்கு தண்டனையை நிறைவேற்ற முயன்ற போது,  குற்றம் சாட்டப்பட்ட
அந்த மூவரையும் தூக்கில் போட பரிந்துரைத்தவர்  சிபாரிசு  செய்தவர் 
நீங்கள்தான் என்பதையும் மற(றைத்)ந்து, ஐயோ காப்பாருங்கள் என்று   
அம்மையாருக்கு கருணை மடல் வரைந்து கபட நாடகத்தை ஜோராக
அரங்கேற்றினீர்களே அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ட இப்போக்கூட பாருங்க....  பேரறிவாளன் முருகன் சாந்தன்
ஆகியோரை காப்பாற்ற சட்டமன்றத்தில் அம்மையார் தீர்மானம் கொண்டுவந்தது.நான் இந்த விடயத்தை கையில் எடுத்ததை பார்த்து பயந்துதான் என்று நேர்மையாக உண்மையாக அறிக்கை விட்டீர்கள் பாருங்கள் இப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.


குறிப்பு: பதிவின் நீளம் கருதி தலைவரை பிடித்ததின் காரணங்களின்
பகுதி-01 முற்றும்.









159 கருத்துகள்:

  1. இனிய இரவு வணக்கங்கள் மச்சாங்.

    பதிலளிநீக்கு
  2. கலைஞர் அய்யாவை பிடிக்கும்! காரணங்கள் சில.//

    தலைப்பிலே தெரிகிறதே...துஸி...கட்சி மாறிட்டார்,
    கலைஞருக்கு விசுவாசியாகிட்டார் என்று;-))))))

    நான் சும்மா சொன்னனான்..

    உள்ளே தானே எரிமலை இருக்கும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. "வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
    திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
    அசராமல் பொய் சொன்னீர்களே அப்போதே உங்களை எனக்கு
    ரெம்ப பிடித்து போய்விட்டது.//

    ஹா...ஹா...
    கலைஞர் ஒரு ஓப்பின் மைண்ட்...

    இல்லேன்னா அவர் ஒரு உளறுவாயா...

    அது தான் உங்களுக்குப் பிடிச்சிருக்கோ...

    பதிலளிநீக்கு
  4. இனிய இரவு வணக்கங்கள் பாஸ்.

    பதிலளிநீக்கு
  5. "சித்தி" மெகா தொடர் வெற்றி
    விழாவிலும் "மெட்டி ஒலி" மெகா தொடர் வெற்றி விழாவிலும் மேடை
    ஏறி ஒரு எபிசோட்டை கூட மிஸ் பண்ணாமல் பார்த்தேன் என்று
    சொல்லி புகழ்ந்து தள்ளி அண்டை மாநில முதல்வர்களை மட்டும்
    அல்ல கழக கண்மணிகளையும் வீட்டு பெண்மணிகளையும் உங்கள்
    கலைத்தாகத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்க வைத்தீர்களே
    அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    அவ்...அப்படீன்னா கலைஞருக்கு இந்த வயசிலும் பொம்பிளைங்க சமாச்சாரம் பிடிக்கும் என்று சொல்ல வாறீங்களா....

    டிங்கிரி டிங்காலே...மீனாட்சி டிங்கிரி டிங்காலே..
    உலகம் போற போக்கைப் பாரு தங்கமேத் தில்லாலே;-))))))))

    பதிலளிநீக்கு
  6. படம் புடித்து அதை
    சன் டிவியில் ஒளிபரப்பு செய்து உலக தமிழருக்கே உங்கள் நடிப்பு திறமையை காட்டினீர்களே அப்போதும் எனக்கு உங்களை ரெம்ப பிடித்துப்போய்விட்டது//

    என்னா தெம்பு உனக்கு மவனே?
    வீட்ட சொல்லிட்டு வந்தியா..
    நம்ம கலைஞர் ஒரு சந்தர்ப்பவாதி, சுயநலக்காரர் என்பதையும் வெளிப்படையாக குத்திக் காட்டுறியே மாப்ளே..

    திமுக கழக தொண்டர்களே,
    வலையுலக போலி விசுவாசிகளே!
    இது உங்களின் கவனத்திற்கு!
    எப்பூடி கோர்த்து விடுவமில்லே.

    பதிலளிநீக்கு
  7. பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு
    அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை
    கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்துள்ளீர்களே
    அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது//

    அப்படீன்னா கலைஞர் ஒரு வேசக்காரன் என்பதால் உங்களுக்குப் பிடிச்சிருக்கா பாஸ்.

    பதிலளிநீக்கு
  8. ஜெயாவும்-சசியும் மாலை மாற்றினார்கள்
    என்று "ஓரின செயர்க்கையாளர்கள்" என்ற ரேஞ்சில் சொல்லி
    நல்ல மனிதர்கள் பலரை உங்கள் முகத்தில் காரி துப்ப வைத்தீர்களே
    (எழுத்தாளர் ஞானி கூட உங்களை குமுதத்தில் கண்டித்து இருந்தார்)
    அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    அடடா...இதன் மூலம் கலைஞர் சந்தர்ப்பம் பார்த்துக் கழுத்தறுக்கும் குள்ள நரி என்று சொல்ல வாறீங்களா?
    இல்லே வசை பாடுவதில், பிறரைத் தூற்றுவதில் சிறந்தவர் என்று சொல்ல வாறீங்களா?
    அவ்..............

    பதிலளிநீக்கு
  9. தினகரன்" அலுவலகம்
    கொளுத்தப்பட்டு அப்பாவி உயிர்கள் சில பலியாக பெரிய
    நாட்டாமை போல் அவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை
    என்று பேரங்களை தள்ளி வைத்தீர்கள். அவர்களுக்கு சன் டிவிக்கு
    போட்டியாக மக்கள் சொத்தில் உங்கள் சொத்தாக கலைஞர்
    தொலைக்காட்சியை ஆரம்பித்தீர்கள் எல்லாம் ஒக்கேதான் திடீர்
    என ஒருநாள் உங்களுக்கு "இதயம் இனிக்க கண்கள் பனிக்க"//

    அப்படீன்ன கலைஞர் ஒரு சமயோசித நடிகர் என்று சொல்ல வாறீங்களோ...

    அவ்....

    பதிலளிநீக்கு
  10. வணக்க பாஸ், ஹீ ஹீ , இப்போ இங்க டைம் 05 பாஸ்

    பதிலளிநீக்கு
  11. ஆனால் நீங்கள் அப்படியா கடிதம் எழுதி
    எழுதி, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தும் கடைசி வரை
    காங்கிரஸின் ஆசையை நிறைவேற்ற இத்தாலி அன்னைக்கு ஆதரவாக பக்க பலமாக இருந்தீர்களே, நீங்கள் அல்லவா முதல்வர்!! அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்துவிட்டது.//

    அப்படீன்னா கலைஞர் ஒரு அடிவருடி என்று சொல்ல வாறீங்களா?
    இல்லே காங்கிரஸின் அல்லக்கை என்று சொல்ல வாறீங்களா?

    பதிலளிநீக்கு
  12. "உண்ணாவிரதம்"
    என்ற பெயரில் மெரினாவில். சில மணித்தியாலங்கள் கரைய பசி
    குடலை புடுங்க லஞ்சுக்கு வூட்டுக்கு போகணும் என்ற பரிதவிப்பில் "அங்கே" இருந்து போன் அடிச்சாங்க யுத்தம் எல்லாம் நின்னுட்டாம்.
    என்று சொல்லி விட்டு உண்ணாவிரதத்தை! நிறைவு செய்தீங்க
    பாருங்க அப்பொழுதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது//

    ஐயோ...ஐயோ...முடியலையே...

    இதுக்குப் பெயர் தான் கபோதி, சாரி கபட நாடகம் ஆடுவதோ?

    பதிலளிநீக்கு
  13. எம் இனம் கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
    அசராமல் உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
    தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
    உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
    எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது//

    அடப் பாவமே...இப்படியெல்லாம் கலைஞர் திருவிளையாடல் புரிந்திருக்கிறாரா...

    இது நமக்குத் தெரியாமப் போச்சே...
    ச்...சீ தூ...

    பதிலளிநீக்கு
  14. // நிரூபன் கூறியது...
    படம் புடித்து அதை
    சன் டிவியில் ஒளிபரப்பு செய்து உலக தமிழருக்கே உங்கள் நடிப்பு திறமையை காட்டினீர்களே அப்போதும் எனக்கு உங்களை ரெம்ப பிடித்துப்போய்விட்டது//

    என்னா தெம்பு உனக்கு மவனே?
    வீட்ட சொல்லிட்டு வந்தியா..
    நம்ம கலைஞர் ஒரு சந்தர்ப்பவாதி, சுயநலக்காரர் என்பதையும் வெளிப்படையாக குத்திக் காட்டுறியே மாப்ளே..

    திமுக கழக தொண்டர்களே,
    வலையுலக போலி விசுவாசிகளே!
    இது உங்களின் கவனத்திற்கு!
    எப்பூடி கோர்த்து விடுவமில்லே///


    ஐயோ பாஸ் ஏன் இந்த கொலை வெறி..ஏற்கனவே அவங்க கிட்ட நான் மாடி படுற பாடு இருக்கே
    இதுல்ல நீங்க வேறையா .. அவ்வ்
    ஆனானும் இனி சண்டைக்கு வராங்க பாஸ் அதுதான் தலைவரை புடிக்கும் என்று சொல்லிட்டனே......
    அதுவும் காரங்களையும் வேற சொல்லிட்டேன்...ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  15. நீங்கள்.
    கோவிச்சுக்கொண்டு அம்மா வீட்டுக்கு போன புது மனுசியை
    சமாதானப்படுத்துவது போல் போய் கையில் காலில் விழுந்து
    கூட்டி வந்து தேர்தலில் அத்தனை இடங்களை அள்ளி கொடுத்து
    பார்த்து பார்த்து இடங்களை கூட தெரிவு செய்து கொடுத்தீர்களே
    அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    அவ்...விழுந்தாலும் மீசையில மண் ஓட்டாத நிலமை....

    பதிலளிநீக்கு
  16. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
    நிருபா! துஷ்யந்தா வணக்கங்க//

    வணக்கம் பாஸ், தேங்க்ஸ் பாஸ் வருகைக்கு, நம்ம நிரு பாஸுக்கும்

    பதிலளிநீக்கு
  17. தமிழ் நாட்டின் முக்கிய சோனா நமிதா பாபிலோனா எல்லோரையும் அறிவாலயம் அழைத்து பேசி நாளொரு வண்ண புகைப்படத்தை முரசொலியில் பிரசுரித்துகொண்டு
    இருந்தீர்களே அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    அப்படீன்னா கலைஞர் ஒரு காரியதரிசி...அதனால உங்களுக்கு அவரைப் பிடிச்சிருக்கா..
    அதாங்க ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்று சொல்லுவாங்களே..

    பதிலளிநீக்கு
  18. ஈழத்து உயிர்களை காப்பாற்ற சொல்லி மத்தியரசுக்கு வெறும் தந்தி
    மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
    பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
    வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அப்போதும்
    உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்.//

    கலைஞரின் மஞ்சள் துண்டு, சாரி இங்கே துஸி அவர்களால் உருவப்படுகின்றது..
    ஹா...ஹா.....

    பதிலளிநீக்கு
  19. வாடா என்ர செல்ல மருமோனே..
    என்னடா மாமன விட்டுட்டு கட்சி மாறீட்டியோன்னு நான் பயந்திட்டன்..ஹிஹி அரசில் கும்மி பதிவ எழுதோனும்ன்னு முடிவெடுத்திட்ட சில சனீஸ்வரன்கள மாமனுட்ட போய்பாருங்கடான்னு வேற அனுப்பி வைச்சிட்ட வாங்கோ நாங்களும் கும்மிப்பார்போம்..

    பதிலளிநீக்கு
  20. ஈழத்து உயிர்களை காப்பாற்ற சொல்லி மத்தியரசுக்கு வெறும் தந்தி
    மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
    பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
    வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அப்போதும்
    உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்.//

    இது தான் வங்குரோத்து அரசியல் என்பதோ?
    துஸியின் கருத்துக்களுக்கு பொழிப்புரை வழங்குவது தான் என் பணி

    பதிலளிநீக்கு
  21. <<<<<<<<<நிரூபன் கூறியது...
    கலைஞர் அய்யாவை பிடிக்கும்! காரணங்கள் சில.//

    தலைப்பிலே தெரிகிறதே...துஸி...கட்சி மாறிட்டார்,
    கலைஞருக்கு விசுவாசியாகிட்டார் என்று;-))))))
    நான் சும்மா சொன்னனான்..
    உள்ளே தானே எரிமலை இருக்கும் என்று நினைக்கிறேன்<<<<<<<<<<


    பாஸ் நான் இப்போ தலைவர் கட்சிதான், இவ்ளோ செய்து இருக்காரு இதுக்கு பிறகும் அவர் பக்கம் சாயாட்டி எப்படி..??

    ஹீ ஹீ எரிமலை குழம்பு பகுதி 02 ம் தொடரும்..... :)

    பதிலளிநீக்கு
  22. <<<<நிரூபன் கூறியது...
    ஈழத்து உயிர்களை காப்பாற்ற சொல்லி மத்தியரசுக்கு வெறும் தந்தி
    மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
    பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
    வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அப்போதும்
    உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்.//

    இது தான் வங்குரோத்து அரசியல் என்பதோ?
    துஸியின் கருத்துக்களுக்கு பொழிப்புரை வழங்குவது தான் என் பணி<<<<<


    ஹீ ஹீ , அப்போ நான் வாங்கும் அடியில் பாஸ் உங்களுக்கும் பாதி கிடைக்க போகுது ரெடியா இருங்க.... மெயிலுக்கு வரும் செந்தமிழ் லெட்டெர்ஸ் என்று நினைக்குறேன்.... ஹ ஹா

    பதிலளிநீக்கு
  23. ஆரம்பித்துவிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இன்றி இப்படிப்பட்ட
    ஒரு ஊழல் நடக்கவே இல்லை என்று சத்தியம் பண்ணாத
    குறையாக அண்டைப்புளுகு புளுகினீர்களே அப்போதும் உங்களை
    எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    யோ...பன்னாடா...கஸ்மாலம்...

    எங்க கலைஞரையே நீ திட்டுறியா?
    கலைஞர் ஒரு பொய்யன், பித்தலாட்டக்காரர் என்று சொல்ல வாறீங்களா?
    மவனே...வீட்டுக்கு ஆட்டோ வரும்!

    பதிலளிநீக்கு
  24. <<<சி.பி.செந்தில்குமார் கூறியது...
    ஏகப்பட்ட உள்குத்துக்கள்<<<<


    ஹீ ஹீ, உறைக்கும் என்று நினைக்குறீங்க கழக கண்மணிகளுக்கு சான்சே இல்லை

    பதிலளிநீக்கு
  25. "திமுகா என்ன அப்பன் வீட்டு சொத்தா" என்ற கணக்கில் திமுகாவை
    விட மகள்தான் எனக்கு முக்கியம் என்று இன்னும் காங்கிரசின்
    கால்கழுவி அவர்களிடம் வலுக்கட்டாயமாக ஒட்டிக்கொண்டு
    இருக்கிறீர்களே இப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    இதுக்குத் தானே நம்மாளுங்க ஒரு ஸ்பெசல் நேம் சொல்லுறாங்க.

    பாசத் தலைவன் என்று...
    அவ்.........

    கலைஞரோட சிறப்பு பெயரிலேயே நீ கை வைச்சிட்டியா?

    பதிலளிநீக்கு
  26. <<<<<நிரூபன் கூறியது...
    ஆரம்பித்துவிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இன்றி இப்படிப்பட்ட
    ஒரு ஊழல் நடக்கவே இல்லை என்று சத்தியம் பண்ணாத
    குறையாக அண்டைப்புளுகு புளுகினீர்களே அப்போதும் உங்களை
    எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    யோ...பன்னாடா...கஸ்மாலம்...
    எங்க கலைஞரையே நீ திட்டுறியா?
    கலைஞர் ஒரு பொய்யன், பித்தலாட்டக்காரர் என்று சொல்ல வாறீங்களா?
    மவனே...வீட்டுக்கு ஆட்டோ வரும்!<<<<

    அவ்வ்..... பாஸ் நீங்க எந்த கட்சி....
    நீங்க என் பக்கமா ??
    அவங்க பக்கமா ?? lol

    பதிலளிநீக்கு
  27. ஐயோ காப்பாருங்கள் என்று
    அம்மையாருக்கு கருணை மடல் வரைந்து கபட நாடகத்தை ஜோராக
    அரங்கேற்றினீர்களே அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    இப்பூடி ஏதாச்சும் பண்ணினாத் தானே அடுத்த தடவையாச்சும் அவிழ்ந்த கோவணத்தை,
    சாரி இழந்த ஆட்சியை மீளவும் கைப்பற்றலாம்..

    இது தான் அரசியல் குள்ள நரித்தனம் என்று சொல்லுவாங்க.
    அப்படீன்னா கலைஞர் ஒரு குள்ள நரி சாரி கலைஞர் ஒரு தந்திரம் மிக்க மனிதர் என்று சொல்ல வாறீங்களா?

    பதிலளிநீக்கு
  28. குறிப்பு: பதிவின் நீளம் கருதி தலைவரை பிடித்ததின் காரணங்களின்
    பகுதி-01 முற்றும்//

    ஹி....ஹி....
    இது வேறையா...
    அவ்....அப்படீன்னா பதிவின் ரெண்டாம் பாகம் இருக்கா...

    க...க..க...போ....

    கலைஞரைக் கதறக் கதறப் போட்டுத் தாக்குறீங்களே பாஸ்.

    பதிலளிநீக்கு
  29. காட்டான் கூறியது...
    வாடா என்ர செல்ல மருமோனே..
    என்னடா மாமன விட்டுட்டு கட்சி மாறீட்டியோன்னு நான் பயந்திட்டன்..ஹிஹி அரசில் கும்மி பதிவ எழுதோனும்ன்னு முடிவெடுத்திட்ட சில சனீஸ்வரன்கள மாமனுட்ட போய்பாருங்கடான்னு வேற அனுப்பி வைச்சிட்ட வாங்கோ நாங்களும் கும்மிப்பார்போம்..//

    யோ...அண்ணாச்சி,
    உங்க கிட்ட மகளுங்க ஏதாச்சும் இருக்கா..
    பெத்து வைச்சிருக்கிறதே ரெண்டு பசங்களை...
    அதில மருமோனா...
    எங்கள் துஸிக்கு முதல்ல பாரிஸில் ஒரு பொண்ணு பார்த்துக் கொடுங்க பாஸ்..

    பதிலளிநீக்கு
  30. நன்றி மருமோனே நானும் என்ன வைச்சிகிடா வஞ்சகம் பண்ணுறன்.. உன்னுடைய பதிவ பார்தோன எனக்கும் அவர நல்லா பிடிச்சிடுச்சு..ஹி ஹி

    எல்லா இடத்திலேயும் நான் சொன்னதுதான் இதில இன்னும் பொருத்தமா இருக்கும் அவர் மூண்டு மணித்தியாலத்துக்கு மேல அந்த உடான்ச பாத்துக்கொண்டிருக்கும் அழகே அழகு இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.. ஹி ஹி

    பதிலளிநீக்கு
  31. நாம வந்த வேலை முடிஞ்சுது..வரட்டா...

    பதிலளிநீக்கு
  32. <<<<<காட்டான் கூறியது...
    வாடா என்ர செல்ல மருமோனே..
    என்னடா மாமன விட்டுட்டு கட்சி மாறீட்டியோன்னு நான் பயந்திட்டன்..ஹிஹி அரசில் கும்மி பதிவ எழுதோனும்ன்னு முடிவெடுத்திட்ட சில சனீஸ்வரன்கள மாமனுட்ட போய்பாருங்கடான்னு வேற அனுப்பி வைச்சிட்ட வாங்கோ நாங்களும் கும்மிப்பார்போம்..<<<<


    கட்சியா....?? மாறுறதா??? சான்சே இல்லை... சொல்லுறவங்க சொல்லிட்டு போகட்டும் அம்மாவின் "நமது எம்ஜீஆர்" என்று.
    அவங்க நல்லது செய்யுறாங்க ஆதரப்பது என்ன தப்பு??? கொலைஞரின் கபடத்தை தோல் உரிப்பதில் என்ன தப்பு ??
    நாங்க யாருக்காகவும் மாறவே மாட்டோம்..... இதெல்லாம் உங்களால்தான் (பிரெண்ட்ஸ்)
    இனி தொடர்ந்து அடிகடி வரும் அரசியம் பதிவுகள்....

    பதிலளிநீக்கு
  33. காட்டான் கூறியது...
    நன்றி மருமோனே நானும் என்ன வைச்சிகிடா வஞ்சகம் பண்ணுறன்.. உன்னுடைய பதிவ பார்தோன எனக்கும் அவர நல்லா பிடிச்சிடுச்சு..ஹி ஹி

    எல்லா இடத்திலேயும் நான் சொன்னதுதான் இதில இன்னும் பொருத்தமா இருக்கும் அவர் மூண்டு மணித்தியாலத்துக்கு மேல அந்த உடான்ச பாத்துக்கொண்டிருக்கும் அழகே அழகு இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.. ஹி ஹ//

    நண்பர்களே...இவர் அடுத்தவர்...இவரும் உங்களுக்கு எதிராகப் பேசுறார்..
    ஹி...ஹி...
    நான் நல்லவன் நம்புங்க..

    பாய்

    பதிலளிநீக்கு
  34. <<<<<<<<<<காட்டான் கூறியது...
    நன்றி மருமோனே நானும் என்ன வைச்சிகிடா வஞ்சகம் பண்ணுறன்.. உன்னுடைய பதிவ பார்தோன எனக்கும் அவர நல்லா பிடிச்சிடுச்சு..ஹி ஹி

    எல்லா இடத்திலேயும் நான் சொன்னதுதான் இதில இன்னும் பொருத்தமா இருக்கும் அவர் மூண்டு மணித்தியாலத்துக்கு மேல அந்த உடான்ச பாத்துக்கொண்டிருக்கும் அழகே அழகு இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.. ஹி ஹி<<<<<<<<


    அப்படி போடுங்க பாஸ் அருவாள........ ரெண்டும் பையன்கள் என்ற தைரியத்தில் என்னமா பேசுறாரு.......???
    அவ்வ்வ்வ்.............. நம்ம பீலிங் நமக்குதான தெரியும், இதோ இப்போ நம்ம நிரு பாஸுக்கு தெரிஞ்சுபோச்சு அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  35. என்னய்யா உன்ன இந்த நிரூபன் பயல் விடமாட்டான் போல நல்லாதான்யா எடுத்துக் கொடுக்கிறார் அடிப்பொடியளுக்கு நீ பதில் சொல்லியே மாலப்போற.. அவரு பதிவுலகத்தில தான் பெற்ற இன்பம் பெறுகவெண்டெல்லோ நிக்கிறார்... ஹி ஹி

    பதிலளிநீக்கு
  36. <<<<<<<<<நிரூபன் கூறியது...
    காட்டான் கூறியது...
    நன்றி மருமோனே நானும் என்ன வைச்சிகிடா வஞ்சகம் பண்ணுறன்.. உன்னுடைய பதிவ பார்தோன எனக்கும் அவர நல்லா பிடிச்சிடுச்சு..ஹி ஹி

    எல்லா இடத்திலேயும் நான் சொன்னதுதான் இதில இன்னும் பொருத்தமா இருக்கும் அவர் மூண்டு மணித்தியாலத்துக்கு மேல அந்த உடான்ச பாத்துக்கொண்டிருக்கும் அழகே அழகு இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.. ஹி ஹ//

    நண்பர்களே...இவர் அடுத்தவர்...இவரும் உங்களுக்கு எதிராகப் பேசுறார்..
    ஹி...ஹி...
    நான் நல்லவன் நம்புங்க..
    பாய்<<<<<<<<<<<


    கண்டிப்பா நம்பி இருப்பாங்க, போங்க சார் முன்னே, வரும் பின்னே செந்தமிழ் மெயிலு நம்ம கழக கண்மணிகளிடம் இருந்து... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  37. ////காட்டான் கூறியது...
    என்னய்யா உன்ன இந்த நிரூபன் பயல் விடமாட்டான் போல நல்லாதான்யா எடுத்துக் கொடுக்கிறார் அடிப்பொடியளுக்கு நீ பதில் சொல்லியே மாலப்போற.. அவரு பதிவுலகத்தில தான் பெற்ற இன்பம் பெறுகவெண்டெல்லோ நிக்கிறார்... ஹி ஹி////


    ஹீ ஹீ , அதே அதே .......
    நிருபன் பாஸ் தன பெற்ற இன்பம் எல்லோரும் பேரனும் என்ற பெரிய மனசோடு "எடுத்து" கொடுத்துவிட்டு போய்விட்டாரு... அவ்வ்

    பதிலளிநீக்கு
  38. <<<<நிரூபன் கூறியது...
    "வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
    திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
    அசராமல் பொய் சொன்னீர்களே அப்போதே உங்களை எனக்கு
    ரெம்ப பிடித்து போய்விட்டது.//
    ஹா...ஹா...
    கலைஞர் ஒரு ஓப்பின் மைண்ட்...
    இல்லேன்னா அவர் ஒரு உளறுவாயா...
    அது தான் உங்களுக்குப் பிடிச்சிருக்கோ...<<<<<<


    அது உளறுவாய் மட்டும் அல்ல.... ஊத்த வாயும் கூட... :)))))

    பதிலளிநீக்கு
  39. <<<<<<<<<நிரூபன் கூறியது...
    "சித்தி" மெகா தொடர் வெற்றி
    விழாவிலும் "மெட்டி ஒலி" மெகா தொடர் வெற்றி விழாவிலும் மேடை
    ஏறி ஒரு எபிசோட்டை கூட மிஸ் பண்ணாமல் பார்த்தேன் என்று
    சொல்லி புகழ்ந்து தள்ளி அண்டை மாநில முதல்வர்களை மட்டும்
    அல்ல கழக கண்மணிகளையும் வீட்டு பெண்மணிகளையும் உங்கள்
    கலைத்தாகத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்க வைத்தீர்களே
    அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    அவ்...அப்படீன்னா கலைஞருக்கு இந்த வயசிலும் பொம்பிளைங்க சமாச்சாரம் பிடிக்கும் என்று சொல்ல வாறீங்களா....
    டிங்கிரி டிங்காலே...மீனாட்சி டிங்கிரி டிங்காலே..
    உலகம் போற போக்கைப் பாரு தங்கமேத் தில்லாலே;-))))))))<<<<<<<<


    அடபாவி பாஸ்... இப்புடி கோர்த்து விடுறீங்க.....?? அவ்வவ்

    பாட்டு தாத்தாக்கு ஏற்றால் போல் தகிடு தத்தாவா இருக்கு

    பதிலளிநீக்கு
  40. <<<<<<<<நிரூபன் கூறியது...
    பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு
    அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை
    கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்துள்ளீர்களே
    அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது//

    அப்படீன்னா கலைஞர் ஒரு வேசக்காரன் என்பதால் உங்களுக்குப் பிடிச்சிருக்கா பாஸ்.<<<<<<<


    பாஸ் பாஸ்
    இது நான் சொல்லியா தெரியனும்.... :)

    பதிலளிநீக்கு
  41. அட என்ன நிரூபன் இப்பிடி சொல்லிபுட்டியள் இவரு கட்சி கட்சின்னு திரிஞ்சா யாரையா பொண்ணு குடுப்பாங்க.. ஆனா இதுக்கு ஒரு வழி இருக்கு இதில நான் சொல்லக்கூடாதாம் மரியாதை மாப்பிள மரியாதை...

    பதிலளிநீக்கு
  42. அட என்ன நிரூபன் இப்பிடி சொல்லிபுட்டியள் இவரு கட்சி கட்சின்னு திரிஞ்சா யாரையா பொண்ணு குடுப்பாங்க.. ஆனா இதுக்கு ஒரு வழி இருக்கு இதில நான் சொல்லக்கூடாதாம் மரியாதை மாப்பிள மரியாதை...

    பதிலளிநீக்கு
  43. <<<<<<<<<<<<wwநிரூபன் கூறியது...
    ஜெயாவும்-சசியும் மாலை மாற்றினார்கள்
    என்று "ஓரின செயர்க்கையாளர்கள்" என்ற ரேஞ்சில் சொல்லி
    நல்ல மனிதர்கள் பலரை உங்கள் முகத்தில் காரி துப்ப வைத்தீர்களே
    (எழுத்தாளர் ஞானி கூட உங்களை குமுதத்தில் கண்டித்து இருந்தார்)
    அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//


    பாஸ் இந்த ஈன தலைவனின் கேடுகெட்ட குணத்தை, மனதுக்குள் இருக்கும் வக்கிரத்தை பறைசாற்ற
    இந்த ஒரு விடயமே போது....... இப்புடியுமா ஒரு தலைவன் இருப்பாரு .................

    அடடா...இதன் மூலம் கலைஞர் சந்தர்ப்பம் பார்த்துக் கழுத்தறுக்கும் குள்ள நரி என்று சொல்ல வாறீங்களா?
    இல்லே வசை பாடுவதில், பிறரைத் தூற்றுவதில் சிறந்தவர் என்று சொல்ல வாறீங்களா?
    அவ்.............<<<<<<<<<<<<

    பதிலளிநீக்கு
  44. <<<<<நிரூபன் கூறியது...
    தினகரன்" அலுவலகம்
    கொளுத்தப்பட்டு அப்பாவி உயிர்கள் சில பலியாக பெரிய
    நாட்டாமை போல் அவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை
    என்று பேரங்களை தள்ளி வைத்தீர்கள். அவர்களுக்கு சன் டிவிக்கு
    போட்டியாக மக்கள் சொத்தில் உங்கள் சொத்தாக கலைஞர்
    தொலைக்காட்சியை ஆரம்பித்தீர்கள் எல்லாம் ஒக்கேதான் திடீர்
    என ஒருநாள் உங்களுக்கு "இதயம் இனிக்க கண்கள் பனிக்க"//

    அப்படீன்ன கலைஞர் ஒரு சமயோசித நடிகர் என்று சொல்ல வாறீங்களோ...

    அவ்....<<<<<


    அவரு ஒரு நவரசம் கொட்டும் ஆஸ்கார் வாங்க தகுதி பெற்ற நடிகர் பாஸ்.

    பதிலளிநீக்கு
  45. ///கலைஞர் அய்யாவை பிடிக்கும்! காரணங்கள் சில.. // இன்னாது கலைஞர் ஐயாவா !!!))

    பதிலளிநீக்கு
  46. ///"வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
    திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
    அசராமல் பொய் சொன்னீர்களே /// ஹிஹி கலைஞர் போன்ற கைப்புள்ளைய எல்லாம் எவனுக்கு தான் கொள்ள மனம் வரும் )))

    பதிலளிநீக்கு
  47. <<<<<நிரூபன் கூறியது...
    ஆனால் நீங்கள் அப்படியா கடிதம் எழுதி
    எழுதி, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தும் கடைசி வரை
    காங்கிரஸின் ஆசையை நிறைவேற்ற இத்தாலி அன்னைக்கு ஆதரவாக பக்க பலமாக இருந்தீர்களே, நீங்கள் அல்லவா முதல்வர்!! அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்துவிட்டது.//


    இதுக்கும் மேலே... உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம் பாஸ்...

    அப்படீன்னா கலைஞர் ஒரு அடிவருடி என்று சொல்ல வாறீங்களா?
    இல்லே காங்கிரஸின் அல்லக்கை என்று சொல்ல வாறீங்களா?<<<<<<<<<<

    பதிலளிநீக்கு
  48. ///ஆனால்
    நீங்கள் இவ்வளவு பிஸியிலும் "சித்தி" மெகா தொடர் வெற்றி
    விழாவிலும் "மெட்டி ஒலி" மெகா தொடர் வெற்றி விழாவிலும் மேடை
    ஏறி ஒரு எபிசோட்டை கூட மிஸ் பண்ணாமல் பார்த்தேன் என்று
    சொல்லி புகழ்ந்து தள்ளி அண்டை மாநில முதல்வர்களை மட்டும்
    அல்ல கழக கண்மணிகளையும் வீட்டு பெண்மணிகளையும் உங்கள்
    கலைத்தாகத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்க வைத்தீர்களே //// ஹிஹி வீட்ட மூணு மனிசி இருக்கே ,அது தான் தொல்லை தாங்க முடியாமல் தொடர் பார்க்க வெளிக்கிட்டு விட்டார் போல ))))

    பதிலளிநீக்கு
  49. குத்த வெளிக்கிட்டிட்டாங்களா??

    பதிலளிநீக்கு
  50. <<<<<<<<<<<<<நிரூபன் கூறியது...
    "உண்ணாவிரதம்"
    என்ற பெயரில் மெரினாவில். சில மணித்தியாலங்கள் கரைய பசி
    குடலை புடுங்க லஞ்சுக்கு வூட்டுக்கு போகணும் என்ற பரிதவிப்பில் "அங்கே" இருந்து போன் அடிச்சாங்க யுத்தம் எல்லாம் நின்னுட்டாம்.
    என்று சொல்லி விட்டு உண்ணாவிரதத்தை! நிறைவு செய்தீங்க பாருங்க அப்பொழுதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது//
    ஐயோ...ஐயோ...முடியலையே...
    இதுக்குப் பெயர் தான் கபோதி, சாரி கபட நாடகம் ஆடுவதோ<<<<<<<<<<<


    ஆட்ட நாயகன் இல்ல நம்ம ஆளு....

    பதிலளிநீக்கு
  51. ////பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு
    அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை
    கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்துள்ளீர்களே // அது ஒண்ணும் இல்லை, பாபாவுக்கும் கலைஞருக்கும் ஒற்றுமை உள்ளது ......................இருவரும் ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள், அது தான் அந்த பந்த பாசம் )))

    பதிலளிநீக்கு
  52. <<<<<நிரூபன் கூறியது...
    எம் இனம் கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
    அசராமல் உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
    தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
    உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
    எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது//

    அடப் பாவமே...இப்படியெல்லாம் கலைஞர் திருவிளையாடல் புரிந்திருக்கிறாரா...
    இது நமக்குத் தெரியாமப் போச்சே...
    ச்...சீ தூ...<<<<<<<<



    பாஸ் மனசொன்று இருந்தால் தானே உவருக்கு....பதறும் நேரத்தில் வார்த்தையே வராது எங்களுக்கு
    உவருக்கு அந்த நேரத்தில் கவிதை வருது....
    கருமம் டா

    பதிலளிநீக்கு
  53. மாப்பிள நீ தைரியமா எழுது கலைஞர நல்லவன்னாலும் நாலுபேர் உன்னை விமர்சிப்பார்கள் கெட்டவர்ன்னாலும் நாலுபேர் விமர்சிப்பார்கள்.. ஆனா ஒரு குறிப்பிட்ட விடயத்துக்குள்ள நீ சிக்கிடாத பரந்து எழுது உன்னுடைய எழுத்து ஆளுமைய ஒரு குறிபிட்ட வட்டத்துக்க்குள்ள முடக்காதே..!! இதில இருந்து மீண்டுவா...

    பதிலளிநீக்கு
  54. ///ஈழத்து உயிர்களை காப்பாற்ற சொல்லி மத்தியரசுக்கு வெறும் தந்தி
    மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
    பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
    வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே /// மக்களா முக்கியம் நமக்கு ))

    பதிலளிநீக்கு
  55. ////குறிப்பு: பதிவின் நீளம் கருதி தலைவரை பிடித்ததின் காரணங்களின்
    பகுதி-01 முற்றும்.

    // அப்போ இன்னொரு பகுதியும் இருக்கா அவ்வ்வ்வ் வேணாம் வலிக்குது.. பாவம் கலைஞர் ...)))

    பதிலளிநீக்கு
  56. <<<<<<<<<நிரூபன் கூறியது...
    ஈழத்து உயிர்களை காப்பாற்ற சொல்லி மத்தியரசுக்கு வெறும் தந்தி
    மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
    பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
    வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அப்போதும்
    உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்.//
    கலைஞரின் மஞ்சள் துண்டு, சாரி இங்கே துஸி அவர்களால் உருவப்படுகின்றது..
    ஹா...ஹா....<<<<<<<<<


    உருவனும் என்றுதான் ஆசை பாஸ், ஆனால் என்ன செய்ய அந்தாலே அம்மணமாய் நிக்குது இதுல போய் நான் எங்க மஞ்சள் துண்டை உருவுறது....

    பதிலளிநீக்கு
  57. ///நிரூபன் கூறியது...
    ஐயோ காப்பாருங்கள் என்று
    அம்மையாருக்கு கருணை மடல் வரைந்து கபட நாடகத்தை ஜோராக
    அரங்கேற்றினீர்களே அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.//

    இப்பூடி ஏதாச்சும் பண்ணினாத் தானே அடுத்த தடவையாச்சும் அவிழ்ந்த கோவணத்தை,
    சாரி இழந்த ஆட்சியை மீளவும் கைப்பற்றலாம்..
    இது தான் அரசியல் குள்ள நரித்தனம் என்று சொல்லுவாங்க.
    அப்படீன்னா கலைஞர் ஒரு குள்ள நரி சாரி கலைஞர் ஒரு தந்திரம் மிக்க மனிதர் என்று சொல்ல வாறீங்களா?///


    அந்த இழவு ஆசை வேற இன்னும் இருக்கா....

    பதிலளிநீக்கு
  58. <<<<<<<<<<<நிரூபன் கூறியது...
    குறிப்பு: பதிவின் நீளம் கருதி தலைவரை பிடித்ததின் காரணங்களின்
    பகுதி-01 முற்றும்//

    ஹி....ஹி....
    இது வேறையா...
    அவ்....அப்படீன்னா பதிவின் ரெண்டாம் பாகம் இருக்கா...
    க...க..க...போ....
    கலைஞரைக் கதறக் கதறப் போட்டுத் தாக்குறீங்களே பாஸ்.<<<<<<<<<<


    கவலைப்படாதீங்க பாஸ் உவர திட்டி திட்டியே எனக்கு டயர் ஆச்சு... சோ கொஞ்சநாளைக்கு ஆப்புரம்தான் பகுதி ரெண்டு வரும்.

    பதிலளிநீக்கு
  59. <<<<காட்டான் கூறியது...
    நன்றி மருமோனே நானும் என்ன வைச்சிகிடா வஞ்சகம் பண்ணுறன்.. உன்னுடைய பதிவ பார்தோன எனக்கும் அவர நல்லா பிடிச்சிடுச்சு..ஹி ஹி

    எல்லா இடத்திலேயும் நான் சொன்னதுதான் இதில இன்னும் பொருத்தமா இருக்கும் அவர் மூண்டு மணித்தியாலத்துக்கு மேல அந்த உடான்ச பாத்துக்கொண்டிருக்கும் அழகே அழகு இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.. ஹி ஹி<<<<<<



    காட்டான் மாமா
    அப்போ வாங்கே, சேர்ந்தே தலைவர் புகழ் பாடுவோம்...

    பதிலளிநீக்கு
  60. <<நிரூபன் கூறியது...
    நாம வந்த வேலை முடிஞ்சுது..வரட்டா..<<<


    ஹீ ஹீ
    ரெம்பவே செய்துட்டீங்க பாஸ்... lol

    பதிலளிநீக்கு
  61. <<<<காட்டான் கூறியது...
    அட என்ன நிரூபன் இப்பிடி சொல்லிபுட்டியள் இவரு கட்சி கட்சின்னு திரிஞ்சா யாரையா பொண்ணு குடுப்பாங்க.. ஆனா இதுக்கு ஒரு வழி இருக்கு இதில நான் சொல்லக்கூடாதாம் மரியாதை மாப்பிள மரியாதை...<<<<


    அவ்வ்வ்வ்..... நான் பேசவே இல்லை, எனக்கு பொன்னே வேண்டாம், ஆளை விடுங்க சாமி.....

    பதிலளிநீக்கு
  62. <<<<<<கந்தசாமி. கூறியது...
    ///கலைஞர் அய்யாவை பிடிக்கும்! காரணங்கள் சில.. // இன்னாது கலைஞர் ஐயாவா !!!))<<<<<<<<


    பாஸ் உஸ்ஸ் ............. சத்தமா சொல்லாதீங்க, அப்புறம் மெயிலு வந்திர போவுது..... :(

    பதிலளிநீக்கு
  63. <<<<கந்தசாமி. கூறியது...
    ///"வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
    திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
    அசராமல் பொய் சொன்னீர்களே /// ஹிஹி கலைஞர் போன்ற கைப்புள்ளைய எல்லாம் எவனுக்கு தான் கொள்ள மனம் வரும் )))<<<<<<<<<



    கரெக்ட்டா சொன்னீங்க பாஸ். கைப்புள்ளையை எல்லாம் கொன்று எவன்தான் பாவத்தை சேப்பான்

    பதிலளிநீக்கு
  64. <<<<<<<<கந்தசாமி. கூறியது...
    //// ஹிஹி வீட்ட மூணு மனிசி இருக்கே ,அது தான் தொல்லை தாங்க முடியாமல் தொடர் பார்க்க வெளிக்கிட்டு விட்டார் போல ))))<<<<<<<<<<<<<<

    அண்ணே உதுதான் நம்ம ஆள் எல்லாம் தொடரையும் அம்புட்டு சின்சியரா பாக்கிறாரா??

    பதிலளிநீக்கு
  65. <<<மைந்தன் சிவா கூறியது...
    குத்த வெளிக்கிட்டிட்டாங்களா??<<



    உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா..... குத்தி குத்தி நமக்குத்தான் டயர் ஆச்சு பாஸ்.... அவ்வ்

    பதிலளிநீக்கு
  66. <<<<கந்தசாமி. கூறியது...
    ////பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு
    அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை
    கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்துள்ளீர்களே // அது ஒண்ணும் இல்லை, பாபாவுக்கும் கலைஞருக்கும் ஒற்றுமை உள்ளது ......................இருவரும் ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள், அது தான் அந்த பந்த பாசம் )))<<<<<<<<<<<


    இதுவும் சரிதான், அதுதான் அந்த பாசமோ ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  67. <<<காட்டான் கூறியது...
    மாப்பிள நீ தைரியமா எழுது கலைஞர நல்லவன்னாலும் நாலுபேர் உன்னை விமர்சிப்பார்கள் கெட்டவர்ன்னாலும் நாலுபேர் விமர்சிப்பார்கள்.. ஆனா ஒரு குறிப்பிட்ட விடயத்துக்குள்ள நீ சிக்கிடாத பரந்து எழுது உன்னுடைய எழுத்து ஆளுமைய ஒரு குறிபிட்ட வட்டத்துக்க்குள்ள முடக்காதே..!! இதில இருந்து மீண்டுவா..<<<<



    உண்மைதான் மாம்ஸ்..... இதுதான் என் கவலையும். போன பதிவில் என்னை மீண்டு அரசியல் எழுத சொன்னவர்களுக்காகவும், கழக கண்மணிகளிடம் இன்னும் நான் அசரவில்லை என்று காட்டவே இப்பதிவு, பாஸ் அடுத்தது ரொமான்ஸ் வர போது வைட்டிங் பாஸ் ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  68. <<<<<<<<<<<<கந்தசாமி. கூறியது...
    ///ஈழத்து உயிர்களை காப்பாற்ற சொல்லி மத்தியரசுக்கு வெறும் தந்தி
    மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
    பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
    வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே /// மக்களா முக்கியம் நமக்கு ))<<<<<<<<<<<<<<<<



    ஹீ ஹீ அதுதானே ?? நாம என்ன சாதாரண தலைவரா ??

    பதிலளிநீக்கு
  69. கூறியது...
    <<<<<நிரூபன் கூறியது...
    எம் இனம் கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
    அசராமல் உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
    தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
    உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
    எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது//

    அடப் பாவமே...இப்படியெல்லாம் கலைஞர் திருவிளையாடல் புரிந்திருக்கிறாரா...
    இது நமக்குத் தெரியாமப் போச்சே...
    ச்...சீ தூ...<<<<<<<<


    உண்மைதான் மாப்பிள முள்ளி வாய்க்காலில் எங்கள் சகோதரர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது இவர் தன்ர பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவி வாங்க என்ன பாடுபட்டார்.. நான் ஒண்டும் அம்மா கட்சியில்ல ஒருகாலத்தில் உண்மையிலேயே இவர் தமிழ் இனதலைவர்ன்னு நம்பிய கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்.. பாரீஸ் வந்த ஆரம்ப நாட்களில் இவர் மீண்டும் முதல்வராகியதை எப்படி சந்தோஷமாக கொண்டாடினேன்.. ஏன் இவரின் போட்டோவை எனது ரூமில் மாட்டி வைத்திருந்தேன்.. எந்த புத்தகத்தை படிக்கவில்லையோ இவரின் நெஞ்சுக்கு நீதி படிச்சிருக்கேன்.. ஏன் ஈழ தமிழர்கள் அதிகமானவர்கள் நேதித்த ஒரு தலைவரும்கூட இப்பிடி நாங்க நேசித்த ஒரு தலைவரை அதை விட கடுமையாக எதிர்கிறோம் என்றால் ஏன் என்று இந்த அருவடிகளுக்கு விளங்க வில்லை.. முள்ளி வாய்கால் துயரத்திற்கு பிறகும் இவரின் நடவடிக்கையை ஆதரித்தால் எங்களை கீழம்பாக்கத்தில்தான் அனுமதிக்கவேண்டும்.. இப்படிப்பட்ட ஒருவரை நான் தோலில் வைத்து கொண்டாடிய நாட்களை எண்ணி இன்றும் மனவேதனை கொள்கிறேன்.. ஏன் இவர்கள் இதை புறிந்து கொள்கிறார்கள் இல்லை..

    பதிலளிநீக்கு
  70. <<<<<<<<<<<<கந்தசாமி. கூறியது...
    ////குறிப்பு: பதிவின் நீளம் கருதி தலைவரை பிடித்ததின் காரணங்களின்
    பகுதி-01 முற்றும்.

    // அப்போ இன்னொரு பகுதியும் இருக்கா அவ்வ்வ்வ் வேணாம் வலிக்குது.. பாவம் கலைஞர் ...)))<<<<<<<<<<<

    அவ்வ்.... அடிச்சு அடிச்சு எனக்கும்தான் வலிக்குது பாஸ். நான் என்ன பண்ண, நான் சிவனே என்று இருந்தாலும் விடுறாங்க இல்லையே... ரியலியாவே எனக்கும் வலிக்குது சோ அடுத்த சில பதிவுகள் கண்டிப்பா அரசியல் இல்லை :(((

    பதிலளிநீக்கு
  71. ஒரு சட்டி நிறைய காலையில் இட்லியை உள்ளே தள்ளிட்டு வந்து உண்ணாவிரதம் இருந்ததை சொல்லாமல் விட்டதுக்கு எனது கண்டனங்கள்..

    பதிலளிநீக்கு
  72. <<<<<<<<<<<<<<காட்டான் கூறியது...
    கூறியது...
    <<<<<நிரூபன் கூறியது...
    எம் இனம் கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
    அசராமல் உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
    தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
    உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
    எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது//

    அடப் பாவமே...இப்படியெல்லாம் கலைஞர் திருவிளையாடல் புரிந்திருக்கிறாரா...
    இது நமக்குத் தெரியாமப் போச்சே...
    ச்...சீ தூ...<<<<<<<<


    உண்மைதான் மாப்பிள முள்ளி வாய்க்காலில் எங்கள் சகோதரர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது இவர் தன்ர பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவி வாங்க என்ன பாடுபட்டார்.. நான் ஒண்டும் அம்மா கட்சியில்ல ஒருகாலத்தில் உண்மையிலேயே இவர் தமிழ் இனதலைவர்ன்னு நம்பிய கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்.. பாரீஸ் வந்த ஆரம்ப நாட்களில் இவர் மீண்டும் முதல்வராகியதை எப்படி சந்தோஷமாக கொண்டாடினேன்.. ஏன் இவரின் போட்டோவை எனது ரூமில் மாட்டி வைத்திருந்தேன்.. எந்த புத்தகத்தை படிக்கவில்லையோ இவரின் நெஞ்சுக்கு நீதி படிச்சிருக்கேன்.. ஏன் ஈழ தமிழர்கள் அதிகமானவர்கள் நேதித்த ஒரு தலைவரும்கூட இப்பிடி நாங்க நேசித்த ஒரு தலைவரை அதை விட கடுமையாக எதிர்கிறோம் என்றால் ஏன் என்று இந்த அருவடிகளுக்கு விளங்க வில்லை.. முள்ளி வாய்கால் துயரத்திற்கு பிறகும் இவரின் நடவடிக்கையை ஆதரித்தால் எங்களை கீழம்பாக்கத்தில்தான் அனுமதிக்கவேண்டும்.. இப்படிப்பட்ட ஒருவரை நான் தோலில் வைத்து கொண்டாடிய நாட்களை எண்ணி இன்றும் மனவேதனை கொள்கிறேன்.. ஏன் இவர்கள் இதை புறிந்து கொள்கிறார்கள் இல்லை..<<<<<<<<<<<<




    கழக கண்மணிகளுக்கு புரியாமல் இல்லை, புரிந்தும் பிரியாதது போல் மடையார் போல் உள்ளார்கள். இங்கே நானும் ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும் எனக்கும் ஆரம்பத்தில் கலைஞர் மேல் அதித வெறித்தனமான காதல் இருந்தது. அந்த காதலை அசால்ட்டையாக தானே போட்டு உடைத்துவிட்டார் அவர்.... அவரின் "பாயும் புலி பண்டாரவன்னியன்" வரலாற்று நாவல் படித்து அந்த சின்ன வயதிலும் கலைஞர் மேல் பையத்தியமாக
    திரிந்ததை இப்போது நினைத்தாலும் வேதனையாக வெக்கமாக இருக்கு. நாங்கள் அவரை இப்போது எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கிறோமோ .. முன்பு
    அவரை அவ்வளவுக்கு அவ்வளவு நேசித்தோம் என்பது சத்தியமான உண்மை. இதெல்லாம் அரவருடிகளுக்கு புரியாது... கடைசி வரை புரியாமே போகட்டும்....

    உங்கள் கருத்து உண்மையே காட்டான்.

    பதிலளிநீக்கு
  73. <<<<<<MANO நாஞ்சில் மனோ கூறியது...
    ஒரு சட்டி நிறைய காலையில் இட்லியை உள்ளே தள்ளிட்டு வந்து உண்ணாவிரதம் இருந்ததை சொல்லாமல் விட்டதுக்கு எனது கண்டனங்கள்..<<<<


    இந்த கூத்து வேற நடந்திச்சா............ ஹீ ஹீ ,
    பகுதி ரெண்டில் சேர்த்துக்கிறேன் பாஸ்..... :))))

    பதிலளிநீக்கு
  74. இது எழுபத்தி ஆறாவது கமெண்ட்டு!!

    பதிலளிநீக்கு
  75. //MANO நாஞ்சில் மனோ கூறியது...
    ஒரு சட்டி நிறைய காலையில் இட்லியை உள்ளே தள்ளிட்டு வந்து உண்ணாவிரதம் இருந்ததை சொல்லாமல் விட்டதுக்கு எனது கண்டனங்கள்..//



    ஹிஹி பலே பலே~!!

    கலக்கிறீங்க மனோ!!

    பதிலளிநீக்கு
  76. நீங்க ஐயாவையும் அம்மாவையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போல!

    பதிலளிநீக்கு
  77. ஒரு பால்கோப்பி கிடைக்குமா பாஸ் ?

    பதிலளிநீக்கு
  78. வணக்கம் துசி, நிரூ, காட்டான் அடநம்ம மைந்தனுமா பக்கத்தில் கந்தசாமி இங்க நடந்தது என்ன!

    பதிலளிநீக்கு
  79. அரசியலில் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு மூத்த தலைவரைப் போய் இப்படி வேட்டியை உரிவிவிடும் உங்கள் பதிவை இப்போது தான் படிக்கின்றேன் ஒரு பாசத்தலைவனுக்கு நடிகைகளின் காவலன் இவர் ஆட்சியில் மும்மாரி பொழியவைத்து தமிழ்நாட்டு மக்களை ஓட்டாண்டி ஆக்கின தாத்தாவை ஒரு ஐயா என்று விழித்த உங்களை கண்டிக்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  80. என்று ராமச்சந்திரன் தனியாக கட்சி தொடங்கினாரோ அன்றே நடிக்க வெளிக்கிட்டவர் இன்னும் தொடர்கிறார் இதுவும் ஒரு சாதனை விருது கொடுத்தால் சிரிச்சுக்கொண்டு அறிக்கைவிடுவார் இந்த கபோதி அவர்களை இப்படி தாக்கலாமா நள்ளிரவில் நாடகம் பார்ப்பார் பகலில் படுத்து தூங்குவார்!

    பதிலளிநீக்கு
  81. என்று ராமச்சந்திரன் தனியாக கட்சி தொடங்கினாரோ அன்றே நடிக்க வெளிக்கிட்டவர் இன்னும் தொடர்கிறார் இதுவும் ஒரு சாதனை விருது கொடுத்தால் சிரிச்சுக்கொண்டு அறிக்கைவிடுவார் இந்த கபோதி அவர்களை இப்படி தாக்கலாமா நள்ளிரவில் நாடகம் பார்ப்பார் பகலில் படுத்து தூங்குவார்!

    பதிலளிநீக்கு
  82. அரசியல் என்றாள் ஊழல்தான் திருவேற்காட்டில் இருந்து கையில் காசில்லாமல் வந்து இன்று சென்னையில் கோபாலபுரத்தில் அடுக்குமாடி கட்டி சொத்துகள் தன் பேரன் வரைக்கும் வசதியாக இருக்க இராப்பகலாக கஸ்ரப்பட்ட ஒரு  களவானியைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் நீங்கள் பாசத்தலைவனின் அருவருடிகள் மைனஸ் ஓட்டுப் போடுவார்கள் கருத்துத்துரையில்லாமல் சபையை சீரலிக்கப் போறார்கள் கவனம் தம்பி !

    பதிலளிநீக்கு
  83. அரசியல் என்றாள் ஊழல்தான் திருவேற்காட்டில் இருந்து கையில் காசில்லாமல் வந்து இன்று சென்னையில் கோபாலபுரத்தில் அடுக்குமாடி கட்டி சொத்துகள் தன் பேரன் வரைக்கும் வசதியாக இருக்க இராப்பகலாக கஸ்ரப்பட்ட ஒரு  களவானியைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் நீங்கள் பாசத்தலைவனின் அருவருடிகள் மைனஸ் ஓட்டுப் போடுவார்கள் கருத்துத்துரையில்லாமல் சபையை சீரலிக்கப் போறார்கள் கவனம் தம்பி !

    பதிலளிநீக்கு
  84. அரசியல் என்றாள் ஊழல்தான் திருவேற்காட்டில் இருந்து கையில் காசில்லாமல் வந்து இன்று சென்னையில் கோபாலபுரத்தில் அடுக்குமாடி கட்டி சொத்துகள் தன் பேரன் வரைக்கும் வசதியாக இருக்க இராப்பகலாக கஸ்ரப்பட்ட ஒரு  களவானியைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் நீங்கள் பாசத்தலைவனின் அருவருடிகள் மைனஸ் ஓட்டுப் போடுவார்கள் கருத்துத்துரையில்லாமல் சபையை சீரலிக்கப் போறார்கள் கவனம் தம்பி !

    பதிலளிநீக்கு
  85. ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போது வெளியுறவுத் துறை அதிகாரிகள் இருவர் இவர் வீட்டில் விருந்துடன் நீங்கள் அமைதியாக கடிதம் எழுதியும் ,தந்தியும்,உண்ணாவிரதமும் இருந்து நாடகம் போடுங்கள் உங்கள் ஊழல் பட்டியல் எங்களிடம் இருக்கு கதையாக பத்திரமாக இருக்கு மக்களுக்கு போர் முடிந்து விட்டது எல்லாம் பிரபாகரனின் அரசியல் அனுபவம் இல்லாதவருக்கு நான் கண்ணீர் வடிக்கின்றேன் என்று அப்பட்டமாக அறிக்கைவிட்ட தன்மானச்சிங்கம் என்ற நாதாரியைப் பிடிக்கும் என்று பதிவு போட்ட உங்களுக்கு கட்சிமாறிவிட்டீர்களோ என்றாள் இல்லை என்று கோபத்தைக் கொட்டியிருக்கும் இப்பதிவும் ஒரு முக்கியமான பதிவு உங்களிடம் வாழ்த்துக்கள் இன்று கும்மி உங்கள் வலையில் !

    பதிலளிநீக்கு
  86. ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போது வெளியுறவுத் துறை அதிகாரிகள் இருவர் இவர் வீட்டில் விருந்துடன் நீங்கள் அமைதியாக கடிதம் எழுதியும் ,தந்தியும்,உண்ணாவிரதமும் இருந்து நாடகம் போடுங்கள் உங்கள் ஊழல் பட்டியல் எங்களிடம் இருக்கு கதையாக பத்திரமாக இருக்கு மக்களுக்கு போர் முடிந்து விட்டது எல்லாம் பிரபாகரனின் அரசியல் அனுபவம் இல்லாதவருக்கு நான் கண்ணீர் வடிக்கின்றேன் என்று அப்பட்டமாக அறிக்கைவிட்ட தன்மானச்சிங்கம் என்ற நாதாரியைப் பிடிக்கும் என்று பதிவு போட்ட உங்களுக்கு கட்சிமாறிவிட்டீர்களோ என்றாள் இல்லை என்று கோபத்தைக் கொட்டியிருக்கும் இப்பதிவும் ஒரு முக்கியமான பதிவு உங்களிடம் வாழ்த்துக்கள் இன்று கும்மி உங்கள் வலையில் !

    பதிலளிநீக்கு
  87. கலைஞர் தன் சொத்தாக திமுகா வை வைத்துக்கொண்டு தமிழ்தலைவன் என்ற பட்டத்திற்காக எங்கே தலைவர் பிரபாகரன் வந்துவிடுவாரோ என்ற பயத்தில் செய்த குதர்க்க அறிக்கைகள் சதிகள் பற்றி எழுதுவது நீண்டதாகிவிடும் இத்தனைமக்களின் இறப்புக்கு இந்த தென்பாண்டிச் சிங்கம், ஒரு அறிக்கையும் இதுவரை விட்டது இல்லை மக்கள் மனநிம்மதியாக இருக்கிறார்கள் என்று காட்ட ஒரு குழுவை மகளோடு அனுப்பி செய்த செயல்கள் சாக்கடை அவரிடம் இருந்த மதிப்பை கீழ் இறக்க காரணமானது !

    பதிலளிநீக்கு
  88. அரசியல் குடும்பத்திற்கு என்றாள் யாரையும் பலிகொடுக்கத்தயங்காதவர் இவர் தினகரன் செயலில் இறந்தவர்கள் குடும்பத்தை இவருக்குத் தெரியுமா!

    பதிலளிநீக்கு
  89. இவர் போல் அறிவியலில் அரசியலில் யாரையும் ஒப்பீடு செய்யமுடியாது என்பதை ஏற்றுக் கொண்டாலும் குடும்பத்திற்காக ஒருவர் உயரத்திற்குப் போய் கண்முன்னே இறக்கும் தறுவாயில் ஊல்வினையால் நகைப்புக்கும் பழிப்புக்கும்  ஆளாகி மக்களுக்கு மறக்கமுடியாதவர் என்ற தகுதியை இந்த சக்கரநாட்காளியில் தவழும் தலைவரை நினைத்தால் கவலையாக இருக்கின்றது பாஸ்!

    பதிலளிநீக்கு
  90. உரியகாலத்தில் திமுகா தனியே விட்டுட்டு வீட்டில் ஓய்வு எடுக்கும் காலத்தில் கூட அரசியலில், சினிமாவில் அடம்பிடித்து குள்ளநரியாக இருக்கும் இவரை கட்டிப்பிடித்திருக்கும் மக்கள். கழக கண்மனிகள். ஞானி சொன்னது போல் வயது போன தந்தையை இப்படி வேதனைப்படுத்தும் பாசக்காரப்பிள்ளைகள் இருக்கும் போது இன்னும் இவர் மரியாதை காற்றில் கிளிக்கப்படும் .இதைப்புரிந்து கொள்வார்களா இவர்களின் தொண்டர்கள்!

    பதிலளிநீக்கு
  91. நண்பா சட்டைகிழியும் போல் இருக்கு முடிந்தால் நாளை வாரன் !

    பதிலளிநீக்கு
  92. அவ்வளவும் அப்பட்டமான உண்மை...

    பதிலளிநீக்கு
  93. Same side goal nnu நினைச்சேன்...அப்பா...பேரை காப்பாதீட்டங்க துஷி...

    சிவாவின்
    எழுபத்தி ஆறாவது கமெண்ட்டு தான்
    எனக்கு பிடிச்ச கமென்ட்...

    பதிலளிநீக்கு
  94. துஷி...!

    கலைஞர் ஜீ தொடர்பில் நீங்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்களுடனும் நானும் ஒத்துப்போகிறேன்.

    ”எதிரியை நம்பலாம். ஆனால், நண்பன் மாதிரி நடித்துக்கொண்டு குழிதோண்டுபவனை என்றைக்கும் மன்னிக்கவே கூடாது.” இது கலைஞருக்கு பொருந்திப்போனால் நான் பொறுப்பாளியல்ல.

    பதிலளிநீக்கு
  95. அருமை! நாக்கைப் பிடுங்கிக்(புடிங்கிட்டாலும்!)கொள்வது போல் அத்தனை பிடித்தங்களும் அருமையோ,அருமை!அடுத்ததை எதிர் பார்த்து.........................................

    பதிலளிநீக்கு
  96. காலணா இன்றி திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலேறி.........................

    பதிலளிநீக்கு
  97. ஜூலியஸ் சீசரின் நண்பன் ஆன்டனி உங்க கனவுல வந்துட்டாராக்கும்:)

    மே 13க்கு முன்னாடியே கும்மியிருந்தா இன்னும் ரெண்டு மூணு எதிர் வாக்காவது அவருக்கு கிடைச்சிருக்கும்!

    என்னது!பஞ்சாயத்து தேர்தலுக்கான பரப்புரையா!அவ்வ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
  98. அன்னை என்று அழைக்க அருகதையற்ற "அன்னா"க்களையெல்லாம் தாஜா செய்து,த்தூஊஊஊஊஊஊ...............!

    பதிலளிநீக்கு
  99. மைந்தன் சிவா கூறியது...

    இது எழுபத்தி ஆறாவது கமெண்ட்டு!!///சரியான கெட்டிக்காறப் புள்ள!எண்ணீட்டானே?

    பதிலளிநீக்கு
  100. அய்யகோ!என் செய்வேன் உடன் பிறப்பே?இந்தப் பயலும் டைரியில் குறித்து வைத்து என் வண்டவாளங்களையெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுகிறானே?நல்ல வேளை இன்னமும்,மா....மா.... பார்ப்பது பற்றி எதுவும் எழுதவில்லை!இனி எழுதி விடுவானோ?திகார் கோட்டையையும் இலக்கு வைத்திருப்பானோ?பதறுகிறதே,நெஞ்சம்!

    பதிலளிநீக்கு
  101. அநாமதேய கருத்துரைகளை இந்த வலைப்பதிவு அனுமதிக்கவில்லை.////இப்போது தான் கவனித்தேன்!நல்ல வேலை!பன்னாடைகளுக்கு இடம் வேண்டாம்!இருந்தாலும் பெயருடனும் சேற்றை வாரி வீசுவார்கள்!ஒருவர் பற்பல பெயரில் ஈ மையில் வைத்திருக்கிறார்கள்!கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
  102. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ஒருவரைப் பாராட்டுவதுபோல விபரித்து, அவரது தவறுகளைச் சுட்டிக்காட்டும் மரபு, இலக்கியத்தில் சங்க காலத்தில் இருந்து, தொடர்ந்து வருகிறது!

    உங்கள் பதிவு அப்படியொரு, தன்மையை வெளிப்படுத்துது சார்! கலைஞரைப் பாராட்டுவது போல எழுதி, அவரது தவறுகளை உரைத்துள்ளீர்கள்!

    ரொம்ப நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
  103. துஷ்யந்தன், உங்கள் பதிவை buzz இல் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அட என்னமா எழுதியிருக்கிறீங்க. நாங்களெல்லாம் உங்களட்ட பிச்சை எடுக்கவேணும்.

    பதிலளிநீக்கு
  104. உங்களுக்குப் பிடித்த என்பதை விட
    கலைஞரைப் (சனி) பிடித்ததற்கான காரணத்தை
    மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    சொல்ல வேண்டியதைச் சொல்லித்தான்ஆகவேண்டும்
    நீளம் கருதாதுஅடுத்த பதிவைத் தர வேணுமாய்
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
    மனம் தொட்ட பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  105. இதற்கு முன் இவர் ஈவிகே சம்பத் கட்சியிலிருந்து விலக ,அன்றைய இரண்டாம் இடத்திலிருந்த நாவலரை பின்தள்ளிவிட்டு முதல்வரானார்.
    இதன் பிறகு இதற்கு துணை செய்த எம் ஜி ஆரை ,சில பல சொந்த காரணங்களுக்கு நொண்டிச் சாக்கு சொல்லி வெளியேற்றினார் .இன்னமும்
    தலைவருடைய அருமைபெருமைகள் ஆயிரம் இருக்கின்றன .

    ஈழத்து விவகாரத்தில் எப்போதுமே இவரின் நிலைப்பாடு நிலையில்லாததாக இருந்திருக்கின்றது .விடுதலை புலிகளுக்கு எம் ஜி ஆர் நிதி +ஆதரவு அளித்த நிலையில் இவரும் ஆதரவு அரசியல் செய்தார் .மற்றபடி இந்த விஷயத்தில் இவர் பெரிதாக என்ன செய்திருக்கிறார் ?

    பதிலளிநீக்கு
  106. புல்லரிக்கிறது. இப்பேர்ப்பட்ட நல்லவரை தலைவனாக பெற நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  107. இதை எல்லாம் மறக்க உண்மை தமிழன் தயாரில்லை.. அதே போல் அம்மா செய்ததை மறந்த நீங்கள் உண்மை தமிழனும் இல்லை.. நாங்கள் அம்மாவையும் மன்னிக்க மாட்டோம் தாத்தாவையும் மன்னிக்க மாட்டோம், முதுகில் குத்திய வைகோ சீமான் ராமதாஸ் திருமா பொதுவுடைமை கட்சி தலைவர்கள் இவர்கள் யாரையும் மன்னிக்க மாட்டோம்..
    கலைஞரின் துரோகங்களை நீங்கள் தோலுரியுங்கள்... நாங்கள் வரவேற்கிறோம்..
    அம்மாவின் துரோகங்களை நாங்கள் தோலுரிக்கும் பொழுது இந்த அம்மா அப்படி என்னப்பா தப்பு பண்ணுச்சு அப்படின்னு வக்காலத்து வாங்காதீங்க வாய்தா ராணிக்கு..

    பதிலளிநீக்கு
  108. இந்த காரணங்களுக்காக கலைரை பிடித்தால் அது நியாயம்! எதுக்காக அவுங்க அய்யாவை பிடிக்கணும் ## டவுட்டு

    பதிலளிநீக்கு
  109. //suryajeevaகூறியது...
    இதை எல்லாம் மறக்க உண்மை தமிழன் தயாரில்லை..//

    மறக்க தயாராயில்ல என்பதால்தான், உண்மைத் தமிழனிடமிருந்து கலைஞரைப்பத்தி காத்திரமான பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  110. //suryajeevaகூறியது...
    அதே போல் அம்மா செய்ததை மறந்த நீங்கள் உண்மை தமிழனும் இல்லை//

    உண்மைதானே!

    துஷ்யந்தன் உணமைத்தமிழன் அல்ல?!

    துஷ்யந்தன் பிரான்ஸில் உள்ள பதிவர்.
    உணமைத்தமிழன் சிங்கார சென்னை பதிவர்.

    பதிலளிநீக்கு
  111. இந்த குத்தல்களுக்கு தான் இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சி அணின்னு சொல்வாங்களோ?

    பதிலளிநீக்கு
  112. நண்பரே நான் கூட அட ஏதாவது காரணம் இருக்கிறதா என்று ஆவலுடன் வந்தேன். இன்னும் நீண்டு கொண்டே போகும் பட்டியலிட்டால்.

    பதிலளிநீக்கு
  113. <<<மைந்தன் சிவா சொன்னது…
    இது எழுபத்தி ஆறாவது கமெண்ட்டு!!<<<<


    அட விஜகாந்த் சிஷ்யன் மாதிரி இருக்கீங்களே கணக்கில்
    ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  114. <<<<மைந்தன் சிவா கூறியது...
    //MANO நாஞ்சில் மனோ கூறியது...
    ஒரு சட்டி நிறைய காலையில் இட்லியை உள்ளே தள்ளிட்டு வந்து உண்ணாவிரதம் இருந்ததை சொல்லாமல் விட்டதுக்கு எனது கண்டனங்கள்..//
    ஹிஹி பலே பலே~!!
    கலக்கிறீங்க மனோ!!<<


    அதே..... அதே......

    பதிலளிநீக்கு
  115. <<<< KANA VARO கூறியது...
    நீங்க ஐயாவையும் அம்மாவையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போல!<<<<


    விடுற மாதிரி இல்லைத்தான், ஆனாலும் கொஞ்ச நாளைக்கு லீவு விட உத்தேஷம்

    பதிலளிநீக்கு
  116. <<<<Nesan சொன்னது…
    ஒரு பால்கோப்பி கிடைக்குமா பாஸ் ?<<<<

    உங்களுக்கு இல்லாமலா பாஸ்!!!!!!

    பதிலளிநீக்கு
  117. <<<Nesan சொன்னது…
    வணக்கம் துசி, நிரூ, காட்டான் அடநம்ம மைந்தனுமா பக்கத்தில் கந்தசாமி இங்க நடந்தது என்ன!<<<<<


    ஹீ ஹீ , கும்முறாங்கலாம் :)))

    பதிலளிநீக்கு
  118. <<<Nesan சொன்னது…
    அரசியலில் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு மூத்த தலைவரைப் போய் இப்படி வேட்டியை உரிவிவிடும் உங்கள் பதிவை இப்போது தான் படிக்கின்றேன் ஒரு பாசத்தலைவனுக்கு நடிகைகளின் காவலன் இவர் ஆட்சியில் மும்மாரி பொழியவைத்து தமிழ்நாட்டு மக்களை ஓட்டாண்டி ஆக்கின தாத்தாவை ஒரு ஐயா என்று விழித்த உங்களை கண்டிக்கின்றேன்!<<<<


    பாஸ் கருத்துரை கூட தொடர் மொழியில் சும்மா இலக்கியம் மாதிரி வருது, கலைஞர் தோத்தார் போங்கள், அவ்வவ்

    பதிலளிநீக்கு
  119. ///Nesan சொன்னது…
    என்று ராமச்சந்திரன் தனியாக கட்சி தொடங்கினாரோ அன்றே நடிக்க வெளிக்கிட்டவர் இன்னும் தொடர்கிறார் இதுவும் ஒரு சாதனை விருது கொடுத்தால் சிரிச்சுக்கொண்டு அறிக்கைவிடுவார் இந்த கபோதி அவர்களை இப்படி தாக்கலாமா நள்ளிரவில் நாடகம் பார்ப்பார் பகலில் படுத்து தூங்குவார்!///


    இப்படியும் சொல்லலாம்
    இரவில் நாடகம் பார்ப்பார்
    பகலில் நாடகம் நடிப்பார் மக்கள் முன்

    பதிலளிநீக்கு
  120. <<<<Nesan சொன்னது…
    அரசியல் என்றாள் ஊழல்தான் திருவேற்காட்டில் இருந்து கையில் காசில்லாமல் வந்து இன்று சென்னையில் கோபாலபுரத்தில் அடுக்குமாடி கட்டி சொத்துகள் தன் பேரன் வரைக்கும் வசதியாக இருக்க இராப்பகலாக கஸ்ரப்பட்ட ஒரு களவானியைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் நீங்கள் பாசத்தலைவனின் அருவருடிகள் மைனஸ் ஓட்டுப் போடுவார்கள் கருத்துத்துரையில்லாமல் சபையை சீரலிக்கப் போறார்கள் கவனம் தம்பி <<<<<<<<<<<


    இதனால்தான் நாங்க இப்போ எங்க கருத்து பொட்டிக்கு
    பலத்த காவல் போட்டுட்டோம் கவனிக்கவில்லையா???

    பதிலளிநீக்கு
  121. <<<<<<<<<<Nesan சொன்னது…
    ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போது வெளியுறவுத் துறை அதிகாரிகள் இருவர் இவர் வீட்டில் விருந்துடன் நீங்கள் அமைதியாக கடிதம் எழுதியும் ,தந்தியும்,உண்ணாவிரதமும் இருந்து நாடகம் போடுங்கள் உங்கள் ஊழல் பட்டியல் எங்களிடம் இருக்கு கதையாக பத்திரமாக இருக்கு மக்களுக்கு போர் முடிந்து விட்டது எல்லாம் பிரபாகரனின் அரசியல் அனுபவம் இல்லாதவருக்கு நான் கண்ணீர் வடிக்கின்றேன் என்று அப்பட்டமாக அறிக்கைவிட்ட தன்மானச்சிங்கம் என்ற நாதாரியைப் பிடிக்கும் என்று பதிவு போட்ட உங்களுக்கு கட்சிமாறிவிட்டீர்களோ என்றாள் இல்லை என்று கோபத்தைக் கொட்டியிருக்கும் இப்பதிவும் ஒரு முக்கியமான பதிவு உங்களிடம் வாழ்த்துக்கள் இன்று கும்மி உங்கள் வலையில் !<<<<


    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  122. <<<<<<<<Nesan சொன்னது…
    கலைஞர் தன் சொத்தாக திமுகா வை வைத்துக்கொண்டு தமிழ்தலைவன் என்ற பட்டத்திற்காக எங்கே தலைவர் பிரபாகரன் வந்துவிடுவாரோ என்ற பயத்தில் செய்த குதர்க்க அறிக்கைகள் சதிகள் பற்றி எழுதுவது நீண்டதாகிவிடும் இத்தனைமக்களின் இறப்புக்கு இந்த தென்பாண்டிச் சிங்கம், ஒரு அறிக்கையும் இதுவரை விட்டது இல்லை மக்கள் மனநிம்மதியாக இருக்கிறார்கள் என்று காட்ட ஒரு குழுவை மகளோடு அனுப்பி செய்த செயல்கள் சாக்கடை அவரிடம் இருந்த மதிப்பை கீழ் இறக்க காரணமானது !<<<<<


    இதுதான் நிஜம் பாஸ்

    பதிலளிநீக்கு
  123. <<<<<<<<<Nesan சொன்னது…
    அரசியல் குடும்பத்திற்கு என்றாள் யாரையும் பலிகொடுக்கத்தயங்காதவர் இவர் தினகரன் செயலில் இறந்தவர்கள் குடும்பத்தை இவருக்குத் தெரியுமா!<<<<<<<

    தெரியும் பாஸ் ஆனா தெரியா மாதிரி இருக்கார்,
    இந்த வழக்கை அம்மா ஆட்சியில் தூசு தட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  124. <<<<<wesan சொன்னது…
    இவர் போல் அறிவியலில் அரசியலில் யாரையும் ஒப்பீடு செய்யமுடியாது என்பதை ஏற்றுக் கொண்டாலும் குடும்பத்திற்காக ஒருவர் உயரத்திற்குப் போய் கண்முன்னே இறக்கும் தறுவாயில் ஊல்வினையால் நகைப்புக்கும் பழிப்புக்கும் ஆளாகி மக்களுக்கு மறக்கமுடியாதவர் என்ற தகுதியை இந்த சக்கரநாட்காளியில் தவழும் தலைவரை நினைத்தால் கவலையாக இருக்கின்றது பாஸ்<<<<<


    சரியாக சொன்னீர்கள் பாஸ்.

    பதிலளிநீக்கு
  125. <<<<<<<<<<<Nesan சொன்னது…
    உரியகாலத்தில் திமுகா தனியே விட்டுட்டு வீட்டில் ஓய்வு எடுக்கும் காலத்தில் கூட அரசியலில், சினிமாவில் அடம்பிடித்து குள்ளநரியாக இருக்கும் இவரை கட்டிப்பிடித்திருக்கும் மக்கள். கழக கண்மனிகள். ஞானி சொன்னது போல் வயது போன தந்தையை இப்படி வேதனைப்படுத்தும் பாசக்காரப்பிள்ளைகள் இருக்கும் போது இன்னும் இவர் மரியாதை காற்றில் கிளிக்கப்படும் .இதைப்புரிந்து கொள்வார்களா இவர்களின் தொண்டர்கள்!<<<<<<<<<

    இவர் போக வேண்டும் என்றால்
    ஒன்று
    திமுகா அழிய வேண்டும்
    அல்லது
    மக்கள் இவரை அடித்து துரத்த வேண்டும்

    பதிலளிநீக்கு
  126. <<<<<<<<<<Nesan சொன்னது…
    நண்பா சட்டைகிழியும் போல் இருக்கு முடிந்தால் நாளை வாரன் !<<<<<<<<<<


    ஹீ ஹீ
    ரெம்ப கிளிஞ்சுட்டுது
    நான் நீங்க கிழிச்ச கலைஞர் சட்டையை சொன்னான்.

    பதிலளிநீக்கு
  127. <<<<<ஆகுலன் சொன்னது…
    அவ்வளவும் அப்பட்டமான உண்மை...<<<<<


    தேங்க்ஸ் மச்சி

    பதிலளிநீக்கு
  128. <<<ரெவெரி சொன்னது…
    Same side goal nnu நினைச்சேன்...அப்பா...பேரை காப்பாதீட்டங்க துஷி...

    சிவாவின்
    எழுபத்தி ஆறாவது கமெண்ட்டு தான்
    எனக்கு பிடிச்ச கமென்ட்...<<<


    தேங்க்ஸ் பாஸ், அப்பா பேரை இன்னும் காப்பாற்றனும் என்று நினைக்குறேன், ஹீ ஹீ

    எனக்கும் மைந்தன் கமெண்ட்ஸ் தான் புடிச்சுது ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  129. <<<<மருதமூரான். சொன்னது…
    துஷி...!

    கலைஞர் ஜீ தொடர்பில் நீங்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்களுடனும் நானும் ஒத்துப்போகிறேன்.

    ”எதிரியை நம்பலாம். ஆனால், நண்பன் மாதிரி நடித்துக்கொண்டு குழிதோண்டுபவனை என்றைக்கும் மன்னிக்கவே கூடாது.” இது கலைஞருக்கு பொருந்திப்போனால் நான் பொறுப்பாளியல்ல<<<<<

    நன்றி பாஸ் உங்கள் வருகைக்கு.

    உங்கள் கடைசி வாக்கியம் உண்மையே
    எதிரி மேல் வரும் மதிப்பு துரோகி மேல் வருவது இல்லை,

    பதிலளிநீக்கு
  130. <<<Yoga.s.FR சொன்னது…
    அருமை! நாக்கைப் பிடுங்கிக்(புடிங்கிட்டாலும்!)கொள்வது போல் அத்தனை பிடித்தங்களும் அருமையோ,அருமை!அடுத்ததை எதிர் பார்த்து......................................<<...<


    தேங்க்ஸ் பாஸ், சீக்கிரமே போடுறேன் அடுத்த பகுதி...

    பதிலளிநீக்கு
  131. <<<<Yoga.s.FR சொன்னது…
    காலணா இன்றி திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலேறி.........................<<<


    ஆனா இப்போ பாருங்க
    சொந்தமா பிளேனே வைச்சு இருக்கான் பாவி பய..

    பதிலளிநீக்கு
  132. <<<<ராஜ நடராஜன் சொன்னது…
    ஜூலியஸ் சீசரின் நண்பன் ஆன்டனி உங்க கனவுல வந்துட்டாராக்கும்:)

    மே 13க்கு முன்னாடியே கும்மியிருந்தா இன்னும் ரெண்டு மூணு எதிர் வாக்காவது அவருக்கு கிடைச்சிருக்கும்!
    என்னது!பஞ்சாயத்து தேர்தலுக்கான பரப்புரையா!அவ்வ்வ்வ்வ்....<<<<


    அட அவரு என் கனவில் வந்ததை
    உங்க கிட்ட வந்தும் சொல்லீட்ட போயி இருக்காரு......
    துரோகி பயலா இருக்கானே பாவி பய :))

    பதிலளிநீக்கு
  133. <<<<<<<<<Yoga.s.FR சொன்னது…
    அன்னை என்று அழைக்க அருகதையற்ற "அன்னா"க்களையெல்லாம் தாஜா செய்து,த்தூஊஊஊஊஊஊ...............!<<<<<<<<


    அதே... அதே...

    பதிலளிநீக்கு
  134. <<<<Yoga.s.FR சொன்னது…
    மைந்தன் சிவா கூறியது...

    இது எழுபத்தி ஆறாவது கமெண்ட்டு!!///சரியான கெட்டிக்காறப் புள்ள!எண்ணீட்டானே<<<<

    யாரு நம்ம மைந்தன் :)))))

    பதிலளிநீக்கு
  135. <<<<Yoga.s.FR சொன்னது…
    அய்யகோ!என் செய்வேன் உடன் பிறப்பே?இந்தப் பயலும் டைரியில் குறித்து வைத்து என் வண்டவாளங்களையெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுகிறானே?நல்ல வேளை இன்னமும்,மா....மா.... பார்ப்பது பற்றி எதுவும் எழுதவில்லை!இனி எழுதி விடுவானோ?திகார் கோட்டையையும் இலக்கு வைத்திருப்பானோ?பதறுகிறதே,நெஞ்சம்<<<<<


    ரியலி சூப்பர், கலக்கல் கமெண்ட்ஸ்,

    பதிலளிநீக்கு
  136. <<<Yoga.s.FR சொன்னது…
    அநாமதேய கருத்துரைகளை இந்த வலைப்பதிவு அனுமதிக்கவில்லை.////இப்போது தான் கவனித்தேன்!நல்ல வேலை!பன்னாடைகளுக்கு இடம் வேண்டாம்!இருந்தாலும் பெயருடனும் சேற்றை வாரி வீசுவார்கள்!ஒருவர் பற்பல பெயரில் ஈ மையில் வைத்திருக்கிறார்கள்!கவனிக்கவும்<<<<


    உண்மைதான் பாஸ், எந்த புத்தில் எந்த பாம்பி இருக்கு என்றே தெரியுது இல்லை.

    பதிலளிநீக்கு
  137. <<<<<<<<ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ஒருவரைப் பாராட்டுவதுபோல விபரித்து, அவரது தவறுகளைச் சுட்டிக்காட்டும் மரபு, இலக்கியத்தில் சங்க காலத்தில் இருந்து, தொடர்ந்து வருகிறது!

    உங்கள் பதிவு அப்படியொரு, தன்மையை வெளிப்படுத்துது சார்! கலைஞரைப் பாராட்டுவது போல எழுதி, அவரது தவறுகளை உரைத்துள்ளீர்கள்!
    ரொம்ப நல்லா இருக்கு!<<<<<<<<<


    நம்ம சீரியஸ் பதிவு கூட உங்களுக்கு பிடிக்குதா??? தேங்க்ஸ் தல

    பதிலளிநீக்கு
  138. ///Rathi சொன்னது…
    துஷ்யந்தன், உங்கள் பதிவை buzz இல் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அட என்னமா எழுதியிருக்கிறீங்க. நாங்களெல்லாம் உங்களட்ட பிச்சை எடுக்கவேணும்.///


    தேங்க்ஸ் அக்கா.

    அய்யோ அக்கா.... உங்க அன்பு சந்தோசத்தை கொடுத்தாலும் அதற்க்கு நான் தகுதியாவவனா என்ற நெருடலே அதிகம், உங்களை விடமா நான் எழுதி விட்டேன், எப்பவும் உங்கள் பதிவுகளின் தரமே முதன்மை இடத்தில் அக்கா , ஆனாலும் தேங்க்ஸ் உங்க அன்புக்கு.

    பதிலளிநீக்கு
  139. <<<கவி அழகன் சொன்னது…
    எனக்கும் பிடிச்சிருக்கு<<<


    எனக்கும் நண்பா

    பதிலளிநீக்கு
  140. <<<<<<<<<<<<<Ramani சொன்னது…
    உங்களுக்குப் பிடித்த என்பதை விட
    கலைஞரைப் (சனி) பிடித்ததற்கான காரணத்தை
    மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    சொல்ல வேண்டியதைச் சொல்லித்தான்ஆகவேண்டும்
    நீளம் கருதாதுஅடுத்த பதிவைத் தர வேணுமாய்
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
    மனம் தொட்ட பதிவு.தொடர வாழ்த்துக்கள்<<<<


    உங்கள் அழகான விரிவான கருத்துக்கு தேங்க்ஸ் பாஸ்.
    விரைவில் தருகிறேன் பகுதி ரெண்டை, தேங்க்ஸ் பாஸ்.

    பதிலளிநீக்கு
  141. <<<பூங்குழலி சொன்னது…
    இதற்கு முன் இவர் ஈவிகே சம்பத் கட்சியிலிருந்து விலக ,அன்றைய இரண்டாம் இடத்திலிருந்த நாவலரை பின்தள்ளிவிட்டு முதல்வரானார்.
    இதன் பிறகு இதற்கு துணை செய்த எம் ஜி ஆரை ,சில பல சொந்த காரணங்களுக்கு நொண்டிச் சாக்கு சொல்லி வெளியேற்றினார் .இன்னமும்
    தலைவருடைய அருமைபெருமைகள் ஆயிரம் இருக்கின்றன .

    ஈழத்து விவகாரத்தில் எப்போதுமே இவரின் நிலைப்பாடு நிலையில்லாததாக இருந்திருக்கின்றது .விடுதலை புலிகளுக்கு எம் ஜி ஆர் நிதி +ஆதரவு அளித்த நிலையில் இவரும் ஆதரவு அரசியல் செய்தார் .மற்றபடி இந்த விஷயத்தில் இவர் பெரிதாக என்ன செய்திருக்கிறார் ?<<<<<<


    உங்கள் கேள்விகள் ஆதங்கம் நியாயமானதே,
    ஆனாலும் கழக கண்மணிகள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
    உங்கள் கருத்து பல தகவல்களை அறிய தந்தது, தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  142. <<<<தமிழ் உதயம் சொன்னது…
    புல்லரிக்கிறது. இப்பேர்ப்பட்ட நல்லவரை தலைவனாக பெற நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்<<<<<<


    அட என்னை மாதிரியே யோசிக்குறீங்க பேசுறீங்க lol

    பதிலளிநீக்கு
  143. <<<<<<<<<<<suryajeeva சொன்னது…
    இதை எல்லாம் மறக்க உண்மை தமிழன் தயாரில்லை.. அதே போல் அம்மா செய்ததை மறந்த நீங்கள் உண்மை தமிழனும் இல்லை.. நாங்கள் அம்மாவையும் மன்னிக்க மாட்டோம் தாத்தாவையும் மன்னிக்க மாட்டோம், முதுகில் குத்திய வைகோ சீமான் ராமதாஸ் திருமா பொதுவுடைமை கட்சி தலைவர்கள் இவர்கள் யாரையும் மன்னிக்க மாட்டோம்..
    கலைஞரின் துரோகங்களை நீங்கள் தோலுரியுங்கள்... நாங்கள் வரவேற்கிறோம்..
    அம்மாவின் துரோகங்களை நாங்கள் தோலுரிக்கும் பொழுது இந்த அம்மா அப்படி என்னப்பா தப்பு பண்ணுச்சு அப்படின்னு வக்காலத்து வாங்காதீங்க வாய்தா ராணிக்கு.<<<<<


    நீங்கள் மறக்காட்டி சந்தோசமே....

    அப்புறம் கீழே ஒரு அன்பர் சொன்னது போல்
    நான் உண்மைதமிழன் இல்லை, நீங்க ப்ளாக் மாறி வந்துட்டீங்க என்று
    நினைக்குறேன் பாஸ், ஹீ ஹீ

    பாஸ் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன்,
    ஆனா ஒண்ணு எல்லோருமே கெட்டவங்க என்றா
    யாரு நல்லவங்க யாருட்ட முறையிடுறது ஒரு பிரச்சனை
    என்று வந்துட்டா?????????????????

    பதிலளிநீக்கு
  144. <<<<<<<<<புதிய கோணங்கி ! சொன்னது…
    இந்த காரணங்களுக்காக கலைரை பிடித்தால் அது நியாயம்! எதுக்காக அவுங்க அய்யாவை பிடிக்கணும் ## டவுட்டு<<<<<<<<<


    இப்புடி ஒரு பித்தலாட்டக்காறரை பெத்துப்போட்டதுக்காண்டி
    ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  145. <<<<<<<புதிய கோணங்கி ! சொன்னது…
    //suryajeevaகூறியது...
    இதை எல்லாம் மறக்க உண்மை தமிழன் தயாரில்லை..//

    மறக்க தயாராயில்ல என்பதால்தான், உண்மைத் தமிழனிடமிருந்து கலைஞரைப்பத்தி காத்திரமான பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது<<<<<


    நிஜம்

    பதிலளிநீக்கு
  146. <<<<<<<<<<<<<<புதிய கோணங்கி ! சொன்னது…
    //suryajeevaகூறியது...
    அதே போல் அம்மா செய்ததை மறந்த நீங்கள் உண்மை தமிழனும் இல்லை//

    உண்மைதானே!

    துஷ்யந்தன் உணமைத்தமிழன் அல்ல?!

    துஷ்யந்தன் பிரான்ஸில் உள்ள பதிவர்.
    உணமைத்தமிழன் சிங்கார சென்னை பதிவர்.<<<<<<<<



    என்ன பாஸ் இப்படி கடிக்குறீங்க?????
    அவ்வ்வ்வவ்வ்

    பதிலளிநீக்கு
  147. <<<<<<<<<<<தமிழ்வாசி - Prakash சொன்னது…
    இந்த குத்தல்களுக்கு தான் இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சி அணின்னு சொல்வாங்களோ?<<<<<

    எல்லாம் தலைவர் கலைஞர் கிட்ட கத்துக்கிட்டது தான், ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  148. <<<<<பாலா சொன்னது…
    நண்பரே நான் கூட அட ஏதாவது காரணம் இருக்கிறதா என்று ஆவலுடன் வந்தேன். இன்னும் நீண்டு கொண்டே போகும் பட்டியலிட்டால்<<<


    ரெம்பத்தான் ஆசை பாஸ் உங்களுக்கு, இது நடக்க கூடிய ஆசையா????
    பகுதி பத்துவரை கொண்டு போகலாம் பாஸ் அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  149. வணக்கம் நண்பா நலமா,? .
    கடந்த சில வாரங்களாக வலைத்தள பக்கம் அதிகம் வரமுடியவில்லை . கொஞ்சம் பிசி
    இப்போது ஓகே . என்ன தலைப்பு எல்லாம் மாற்றி கலக்குறிங்க நண்பா . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  150. எல்லோரிடமும் நல்லகுனங்களும் உண்டு கேட்டதும் உண்டு .

    பதிலளிநீக்கு
  151. அருமை! ஆகா! உங்களுக்கு
    எவ்வளவு பொறுமை
    முத்துக் கோர்த்தது போல
    தெடர்ந்தது பதிவு
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  152. //Mahan.Thamesh சொன்னது…
    வணக்கம் நண்பா நலமா,? .
    கடந்த சில வாரங்களாக வலைத்தள பக்கம் அதிகம் வரமுடியவில்லை . கொஞ்சம் பிசி
    இப்போது ஓகே . என்ன தலைப்பு எல்லாம் மாற்றி கலக்குறிங்க நண்பா . வாழ்த்துக்கள்//


    நண்பா... வந்துட்டீங்கள???
    சந்தோசம்.....
    யா யா தலைப்பை மாற்றிவிட்டேன்,
    தேங்க்ஸ் நண்பா

    பதிலளிநீக்கு
  153. //Mahan.Thamesh சொன்னது…
    எல்லோரிடமும் நல்லகுனங்களும் உண்டு கேட்டதும் உண்டு .//

    உண்மைதான், ஆனா இவரிடம் அதிகம் கேட்டதுதானே இருக்கு....... அவ்வ்

    பதிலளிநீக்கு
  154. //புலவர் சா இராமாநுசம் சொன்னது…
    அருமை! ஆகா! உங்களுக்கு
    எவ்வளவு பொறுமை
    முத்துக் கோர்த்தது போல
    தெடர்ந்தது பதிவு
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுச//

    நன்றி அய்யா..... இதை இந்த பாராட்டை உங்கள் வாயால் கேட்பதுதான் எல்லையில்லா சந்தோஷத்தை கொடுக்குது.....

    பதிலளிநீக்கு
  155. நீங்கள் ஒரு மிக சிறந்த நாத்திகவாதி!!. ஆனால் பேரன்களோ
    தங்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆன்மிகம் வளர்த்து கல்லா
    கட்டுகிறார்கள் . ஏன் உங்கள் தொலைக்காட்சியிலேயே விநாயகர்
    சதுர்த்திக்கு விடுமுறை தினமென்று சொல்லி சிறப்பு படம்! காட்டுகிறீர்கள்.
    உங்கள் வீட்டு மனைவி-துணைவி உட்பட்ட உறவுகளே கோயில் கோயிலாக ஏறி இறங்கி உங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள்.
    இது கூட பெரிய விடயம் இல்லை. பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு
    அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை
    கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்துள்ளீர்களே
    அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.

    துஷ்யந்தா காணும் விட்டுடையா இதற்கு மேலும் உரியாத
    மானம் போயிடும் .ஹி .......ஹி ......ஹி ..........எப்புடி சகோ
    இதெல்லாம் ரூம்போட்டுத் திங் பண்ணினீங்களா?..............
    வாழ்த்துக்கள் .ஓட்டுக்கள் போட்டாச்சு .என் தளத்தில் கவிதா
    மன்னிக்கணும் கவிதை காத்திருக்கு விரைந்து போங்க .மிக்க
    நன்றி பகிர்வுக்கு ...........

    பதிலளிநீக்கு
  156. தலைவரைப் பிடித்த காரணங்கள் அபாரம். இன்னும் நெரைய குவாலிட்டீஸ் அவருகிட்ட இருக்கே.. அடுத்த பதிவுல எதிர்பாக்கலாமா?

    அழகான பதிவு. குத்தல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். இது வாழைப்பழம் இல்லை வெண்ணெயில் ஊசியா...?

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...