புதன், அக்டோபர் 31, 2012

சின்மயி'யும் சாரு ஷோபாசக்தி வகையறாக்களும்..


ன் பங்குக்கு மீண்டும் ஒரு முறை பதிவுலகை ரணகளம் ஆக்கியிருக்கின்றார் சின்மயி.

இந்த விடயம் பற்றி நிறைய பதிவர்கள் அலசி ஆராந்து நார் நாராக கிழித்து தொங்கப்போட்டு விட்டார்கள். இதற்கு மேல் நான் சொல்ல என்னதான் இருக்கு என்ற நிலையிலேயே அமைதியாக இருந்தேன். ஆனால் அட்டவனை போட்டு அறிக்கை விடுவது போல் நாளொரு வி.ஜ.பியும் ஊடகமும் ராஜன் சின்மயி கைய பிடிச்சான்&இழுத்தான் என்ற ரேஞ்சுக்கு பொங்குவதை பார்க்கத்தான் சகிக்க முடியவில்லை.

என்னைப்பொறுத்தவரை இந்த விடயத்தில் இரு பகுதியினர் மீதும் தவறுகள் இருக்கு. சின்மயியை அவர் தாயாரை ஆபாசமாக திட்டியது எத்தகை கண்டணங்களுக்கு உரியதோ அதை போலவே அப்படி அவர்களை பேச வைத்த சின்மயி'யின் அரைவேக்காட்டுத்தன அரசியல் கருத்துக்களும் மிக மிக கண்டணத்துக்கு உரியது. ஆனால் பிரபலம் என்ற ஒரே காரணத்துக்காய் ஒருவரை தப்ப விட்டு இன்னொருவருக்கு தண்டனை கொடுப்பது எந்த வகையில் நியாயம்..?

அதிகமான சினிமா பிரபலங்கள் பொது விடயங்களில் மக்குகளாக இருப்பார்களே தவிற எப்பவும் அறிவுஜீவிகளாக இருந்தது இல்லை என்ற பொத்தம் பொதுவான கருத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் சின்மயி.

சின்மயி

பொது இடங்களில் தங்கள் கருத்துக்களை பகிரும் போது ராஜன் போன்ற சாதாரணமானவர்களை விட சின்மயி போன்ற பிரபலங்கள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான பிரபலங்கள் அதுவும் சினிமா பிரபலங்கள் சொல்லும் கருத்துக்களை சரியா பிழையா என்று யோசிக்க கூட நேரமில்லாமல் பின் பற்ற நம்மில் பெரும்பாலானோர் தயாராவே இருப்பார்கள். இது தமிழனிடம் இருக்கும் பின்னடைவான ஒரு விடயமும் கூட :((

தன்னை யாராவது விமர்சிப்பதோ தன்னுடைய கருத்துக்களுக்கு எதிர் கருத்து சொல்வதோ சின்மயி'யிக்கு பிடிக்காத பட்சத்தில் அவர்களை இலகுவாக தன் கருத்துக்களை பார்க்கவும் விமர்சிக்கவும் முடியாதவாறு  Block பண்ணியிருக்கலாமே..? இதைத்தானே சமூக தளங்களில் நடமாடும் பிரபலங்களில் அதிகமானோர் செய்கின்றார்கள். இதுதான் பிரபலங்களுக்கு அழகும் கூட. அதை விட்டு பிரச்சனையை வளர்த்து ரசித்து சந்தர்ப்பம் பார்த்து பொறியில் சிக்க வைத்த சின்மயி'யின் குள்ள நரித்தனத்தை என்னவென்று சொல்வது...?!

சின்மயி'யின் இந்த செய்கை. நான் ஒரு பிரபலம். நான் என்ன சொன்னாலும் நீ கேக்க வேண்டும், எனக்கு எதிராய் நீ எந்த கருத்தும் சொல்லக்கூடாது என்ற அவரின் அதிகார திமிரைத்தான் காட்டுகின்றது. 

சின்மயி'யின் அலட்டலும் திமிரும் ஏற்கனவே ஊர் அறிந்ததுதான். விஜய் டிவியின் வெற்றி நிகழ்ச்சியான "சூப்பர் சிங்கரை" ஆரம்ப காலத்தில் தொகுத்து வழங்கியது இதே சின்மயி தான். பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிக பெரிய வெற்றியடைந்து ரேட்டிங் எகிறிய போது, அந்த நிகழ்ச்சி ஹிட்டானதே தன்னால்தான் என்ற சின்மயி'யின் அலட்டலால் கடுப்பான விஜய் டிவி சின்மயியை தூக்கி எறிந்து விட்டு அந்த இடத்தில் வேறு ஒருவரை வைத்து இன்றும் அதே ஹிட்டுடன் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றது.

ஆரம்பகால சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுடன் சின்மயி

அதன் பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அப்படியே அப்பட்டமாய் காப்பியடித்த சன் டிவி, தொகுப்பாளாரை சின்மயியை போட்டு ஆரவாரமாய் ஆரம்பித்த அதே வேகத்தோடு நிகழ்ச்சியை இழுத்து மூடி சின்மயியையும் வீட்டுக்கு அனுப்பியது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஹிட்டானது தன்னால் இல்லை என்பது சின்மயி'யிக்கு அப்போதாவது உறைத்து இருக்குமா தெரியாது.

இப்படியான விடயங்களில் சின்மயி போன்ற பிரபலங்களின் தவறுகளை விட அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் எங்கள் தவறுகள் தான் அதிகம். பற்பொடி விளம்பரத்தில் இருந்து ஆணுறை விளம்பரம் வரை பிரபலங்கள் சொன்னால்த்தான் கேப்போம் என்ற எங்கள் 'பிரபலங்கள் மேல் இருக்கும் மையலை' அவர்கள் அழகாக பயன்படுத்தி கொள்கின்றார்கள். அதை நாங்கள் சில இடங்களில் மீறும் போது பொறுக்க முடியாமலும் சகிக்க முடியாமலும் இப்படியான அதிகார இடங்களை நாடி எங்களை ஒடுக்க பாக்கின்றார்கள்.

சின்மயி'யின் அரசியல் கருத்துப்போலவே அவரின் பிரபலமும் அரைகுறைதான். அதனால் தான் என்னவோ இன்று சின்மயிக்கு எதிரான கருத்துக்கள் குவிகின்றன. இதே சின்மயி இடத்தில் விஜய்யோ அஜித்தோ இருந்து இந்த கருத்தை பகிர்ந்து இருந்தால் இப்போது எங்களிடம் இருக்கும் இந்த ஒற்றுமை அப்போதும் இருந்து இருக்குமா என்பது கேள்விக்குறிதான். 

உதாரணமாக சின்மயி இடத்தில் விஜய் இப்படி நடந்து கொண்டிருந்தால், ராஜன் மேல் தவறு இல்லா பட்சத்திலும் விஜய்க்கே ஆதரவு குவிந்து இருக்கும். நம்ம தலைவருக்கு எதிராய் நீ எப்படி கருத்து சொல்லலாம் என்று ஒரு குறூப்பே கொலைவெறியோடு கிளம்பியிருக்கும். விஜயை விமர்சித்தால் விஜயின் மனைவி பிள்ளைகளுக்கு கோபம் வருகின்றதோ இல்லையோ சினிமா பிரபலங்களை கடவுளாக நினைக்கும் நம்மவர்களுக்கு அறச்சீற்றம் வந்து தொலைத்து பல நாள் பழகிய நண்பன் என்று கூட பார்க்காமல் கிழித்து தொங்கப்போட்டு விடுவார்கள்.

இங்கே.. இங்கே தான் நாங்கள் பெரும் தவறு செய்கிறோம். இப்படி அவர்களை தூக்கி வைத்து பூசித்துக்கொண்டே இருக்கும் நாங்கள் திடிரென அவர்களை கீழே போட்டு விமர்சிக்கும் போது அதை சகித்துக்கொள்ள முடியாமல் இப்படியான கீழ்த்தரமான வேலைகளில் இறங்கின்றார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி காலம் காலமாக பிரபலங்களுக்கு குறிப்பாய் சினிமா பிரபலங்களுக்கு காவடி தூக்கும் எங்கள் செயலை முதலில் நிறுத்த வேண்டும்.

இணைய அறிவு கொஞ்சமும் இல்லாமல், அங்கே என்ன நடக்கின்றது நடந்தது என்று அறிந்து கொள்ளவும் விருப்பம் இல்லாமல் நியாயங்களை குழி தோண்டி புதைத்து விட்டு பிரபலம் என்றே ஒரே காரணத்துக்காய் சின்மயிக்கு ஒத்து ஊதும் ராஜ் டிவி போன்ற ஊடகங்கள் மிக மிக கண்டணத்துக்கு உரியவை.

இவர்கள் தான் இப்படி என்றால் இந்த சாருநிவேதா ஷோபாசக்தி வகையறாக்கள் எல்லாம் திடீர் கடவுளாகி ஆபாச பேச்சுக்களை எல்லாம் கண்டித்து பெண்களை காக்க வெளிக்கிட்டதுதான் 'என்ன கொடுமை சரவணா' ரகம். இந்த சாருவை பற்றி நான் சொல்லித்தான் தெரியணுமா..? இவரு வாய திறந்தா எந்த மாதிரி இருக்கும் என்பது உலக பிரபலமே. அடுத்தவர் நம்ம ஊர்க்காரர் (அதாங்க ஃப்ரான்ஸ்) ஷோபாசக்தி. ரெம்ப நல்லவன் போல் புலி எதிர்ப்பில் நடுநிலை வேஷம் போடும் இவர் பெண்கள் விடயத்தில் எப்படிப்பட்டவர் என்பதை அண்மையில் தமிழச்சி போட்டு உடைத்து கிழி கிழி என்று கிழித்ததை இலகுவில் மறந்து விட முடியுமா என்ன..? சாரு+ஷோபா இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் தான். அதனால் தான் இத்தகைய ஒரே சிந்தனை. இதில் ஷோபா சக்தி சொல்கிறார் சாருவுக்கு பெண்ணியம் பேச தகுதியில்லையாம்!

பட உதவி: 'நிகழ்வுகள்' கந்தசாமி.

அதைவிட எந்த ஒரு தலைபோற பிரச்சனை நடந்தாலும் அதை எல்லாம் கண்டுக்காமல் புலி எதிர்ப்பிலும், வாசகர்கள்(!) கடிதங்களுக்கு ஆபாசமாக பதில் சொல்வதிலும் மூழ்கி இருப்பவங்களுக்கு எங்கிருந்தாவது ஒரு "பொண்ணு" குரல் கொடுக்கும் போது 'மட்டும்' இவங்களுக்கு எல்லாம் எப்படித்தான் அறச்சீற்றம் வந்து தொலைக்கின்றதோ தெரியவில்லை. இப்படியான சமயங்களில் மட்டும் வேதம் ஓதும் இந்த சாத்தான்களுக்கு முதலில் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

எது எப்படியே பழைய பகையை மனசில் வைத்து ஊடகங்களை தன் பக்கம் திருப்பி தன் பழி வாங்கும் படலத்தை ஜோராக நடத்தி முடித்து விட்டார் சின்மயி. ராஜன் தரப்பு மேல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளே தள்ளியவர் உண்மையாகவே தன் பக்கமும் நியாயங்கள் இருக்கும் பட்சத்தில் தனது பிரபலம் என்ற செல்வாக்கை பயன்படுத்துவதையும், ஜெயலலிதாவை கடிச்சாங்க கருணாநிதியை கடிச்சாங்க அட கனிமொழி குஷ்பூ நயன்தாராவையும் கடிச்சாங்க என்று 'பக்கத்து இலைகளுக்கு எல்லாம் பாயாசம்' கேட்டு பிரச்ச்னையை திசை திருப்பி இப்படி கேவலமாய் பிரபலங்களிடமும் அதிகாரவர்க்கங்களிடமும் தனக்கு ஆதரவு தேடுவதை விட்டுவிட்டு நியாயமான வழியில் ராஜன் தரப்புடன் மோதினால் தன் மேல் இருக்கு கொஞ்ச நம்பிக்கையையும் மரியாதையையும் ஆவது சின்மயி காப்பாற்றிக்கொள்ளலாம்.

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

குட்டிம்மாவும் நானும் ஒரு 'டெரார்' டிஸ்கஷன்.


நமக்கு மட்டும் ஏந்தான் எல்லாமே இப்படி ஆகுதோ தெரில்ல.. :((
நமக்கும் குட்டிம்மாவுக்கும் கல்யாணம் பிக்ஸான உடனேயே நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் ஒன்று சேர்ந்து 'அதான் முடிவாயிட்டெல்ல, இனி பொண்ணு பையன் வீட்டையே நிக்கட்டும்.. என்னதான் ஒண்டுக்க ஒண்டா இருந்தாலும் இனி கொஞ்சம் அதிகமாவே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு நல்லா பழகிக்கணும் இல்ல..' அப்படிண்ணு சொன்னத கேட்டதுமே நாம அப்படியே ஷாக்'காகிட்டோம் என்றா பாருங்களேன்.

அடியாத்தீ... வழமையா இவிங்க வில்லங்கமா பேசி கல்யாணம் வரைக்கும் பக்கத்திலேயே அண்ட விட மாட்டாங்களே, ஆனா இங்கே எல்லாமே தலைகீழா நடக்குதே...! என்று குழப்பிட்டே இருந்தோமா, அப்புறந்தான் புரிஞ்சுது அவிங்க பொண்ண பழக கூட்டியாந்தது நம்ம கூட இல்லயாம் பெரியவங்க அவிங்க கூடவாம். அவ்வ்வ்வ்... என்ன ஒரு வில்லத்தனம். :((

சரி வுட்றா துஷி, வாழ்கையென்றாலே இப்படியான துரோகங்களும் ஏமாற்றங்களும் சகஜம்தானேடா.. அப்படிண்டுட்டு நாமளும் ஃப்ராண்ஸ் வந்து சரி ஃபோனிலேயாவது பழகலாமே என்று வீட்டுக்கு ஃபோனைப்போட்டா.., அங்காலப்பக்கம் அவள சுத்தி ஒரு கிராமமே ஆ'வென்று பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கும். நாம ஏதாவது அவ கிட்ட கேட்டா சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நமட்டு சிரிப்போட பதில் சொல்லுறது இங்கிட்டு நமக்கு கேக்கும். நாமளும் அசடு வழிஞ்சுக்கிட்டே ஃபோனை வைச்சுடுவோம்.


இப்படியே நம்ம 'பழகணும்' என்ற ஆசை நிறைவேறாமலே இருக்கும் போதுதான் ஒரு நாள் எதார்த்தமா அங்கால ஃபோனை போட்டா, ஆச்சரியமா அதிசயமா நம்ம குட்டிம்மா 'ஹலோ..' எங்கிறா. நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல நம்பவும் முடியல்ல. இதற்கிடையில் அவ நாலு வாட்டி 'ஹலோ.. ஹலோ..' என்றுட்டு பதிலே இல்லாததால டொக்'குண்ணு ஃபோனை வேற வைச்சுட்டா. வைச்சுட்டா மட்டும் விட்றவமா நாங்க..? விட்றவமா எங்கிறேன்.. விட்டா இப்படி ஒரு சான்ஸ் மறுபடியும் கிடைச்சுடுமா என்ன.. ??

மறுபடியும் ஃபோனைப்போட்டு நாமளும் 'ஹலோ..'என்ற, 'ஹய்யோ நீயா.... எப்படிடா இருக்க..' என்று அங்காலப்பக்கமும் சந்தோஷத்தில் திக்குமுக்காட. உடனே நாம, 'ஹேய்ய்ய்.. குட்டிம்மா, வழமையா எப்பவுமே உன்ன சுற்றி ஒரு கிராமமே ஒக்காந்திருக்குமே எங்கப்பா அதுங்க எல்லாம்..? என்று சந்தேகமாவே கேக்க', அவ கடுப்பா 'பெரியவங்கள இப்படியா பேசுவ..' என்று சொல்லியபடியே அவங்க ஒவ்வொருத்தரும் போன இடங்கள விலாவாரியா சொல்லீட்டே போக உடனே 'ஹய்யோ....... எங்காவது போயிருக்கட்டும் அத விடு, ஹேய் குட்டிம்மா அவிங்க வாறதுக்குள்ள நாம ரெண்டு பேரும் பழகுவோமா..' என்று நாம கேட்டோமா... சட்டுண்ணு அங்காலப்பக்கம் பேச்சுமூச்சே இல்ல.

ஆனா.., அங்கிட்டு அவ திக்'குண்ணு ஆயிட்டா என்று மட்டும் நமக்கு புரிஞ்சு போச்சு. நாம உடனேயே உசாராகி 'ஹேய்.. ஹேய்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லப்பா.. ச்சும்மா பேசி பேசி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு பழகிப்போம் என்றுதான் சொல்ல வந்தேன்' என்று சொன்னாப்பிறம்தான் 'ஓ.. அதுவா.. ஓக்கே ஓக்கே' என்று அங்காலப்பக்கம் சத்தமே (மூச்சே) வந்திச்சு. (ஹீ..ஹீ....).

அப்பாடா.. நெருங்கீட்டோம் இல்ல என்று நம்மளுக்கு ஒரே குஷியாப்போச்சு. சரி எல்லோரும் எங்க இருந்து தொடங்குவாங்க நாமளும் அங்கேயிருந்தே தொடங்குவோம் என்று நினைச்சவாறே... 'குட்டிம்மா உனக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லேன்' என்றமா 'சின்ன வயசிலேருந்து பார்த்துட்டே இருக்கே, உனக்கு தெரியாதா எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று..? உடனே அவ வார, நாம கடுப்போட 'அடி லூஸு.. கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுடி..' என்று எகிற அவ சிரித்தபடியே.. 'ஓக்கே துஷிக்குட்டி (அவ்வ்வ்) உனக்கு பிடிச்ச எல்லாமே எனக்கும் பிடிக்கும்.. உனக்கு பிடிக்காத எதுவுமே எனக்கும் பிடிக்காது' என்று சொ(ஜொ)ல்ல நாம அப்படியே உருகிப்போயிட்டம் அப்படிண்ணு சொல்லப்போறேன் என்று தானே நீங்க நினைக்கிறீங்க..!! ஆனா அதான் இல்ல நாம பதிலுக்கு செம காண்டாகிட்டோம் இல்ல. 

'அடியே மக்கு.. மக்கு.., இப்படி ஊரில எத்தன பேரடி கிளம்பியிருக்கீங்க.. அதெப்படி எனக்கு பிடிச்சது எல்லாமே உனக்கும் பிடிக்கும்..?! பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவே வேணாம்.. பொண்ணுங்க எல்லோருமே இப்படித்தாண்டி பசங்கள பற்றி தப்புக்கணக்கு போடுறீங்க.. இப்படி சொல்லுற பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு பிடிக்குமுண்ணு நீங்களாவே நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் அடிச்சுவிட்டே இம்சை பண்றீங்க.. நிஜமாவே இப்படியான பொண்ணுங்கள பசங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது தெரியுமா..' என்று நாம கொஞ்சம் சூடாவே எகிற.

பதிலுக்கு அவ 'நா ஒண்ணும் பொய் சொல்லல நெசமாவே அப்படித்தான்.. அதெல்லாம் தன் பார்ட்டனர ரெம்ப நேசிக்கிறவங்களாலதான் புரிஞ்சுக்க முடியும்.. உன்னால எல்லாம் புரிஞ்சுக்க முடியாதிடா..' என்று கடுப்பாக, அப்போத்தான் நமக்கு ஆஹா... கொஞ்சம் ஓவறாத்தான் போயிட்டோமோ என்று ஒரே பீலிங்காப்போச்சு.

அப்புறம் சட்டுண்ணு நாமளும் கூலாகி 'கோவிச்சுக்காத குட்டிம்மா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்(!) ஹீ..ஹீ... சரி வுடு., பசங்களுக்கு எப்படியான பொண்ணுங்கள பிடிக்குமுண்ணு சொல்லுறேன்.. சரி வாணாம் (அவ்வ்வ்..). துஷி கூட குட்டிம்மா எப்படி எல்லாம் இருக்கணும், எப்படி எப்படி எல்லாம் நடந்துக்கணும் என்று துஷி ஆசைப்படுதுண்ணு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ.. நோட் பாயிண்ட் செல்லம்.. :))' ஆங்...... 


"அஜீத் என்றா எனக்கு ரெம்ப பிடிக்கும் தெரியுமா..? என்ன ஒரு அழகு.. என்ன ஸ்டையில்.. ஹீரோண்ணா அது அஜீத்'தான்" அப்படிண்ணு நா சொல்லுவேன். உடனே, "யாரு... மாசமா இருக்கிற பொண்ணு மாதிரியே இருப்பாரு.. டான்ஸாடுவாரு அவரா...? அதுசரி.... :)) என்னதான் இருந்தாலும் நம்ம விஜய் மாதிரி வருமாண்ணு.." நீ சொல்லணும். 

"சாண்டில்யன் புத்தகங்கள் படிச்சுப்பாறேன்.. அவர் புத்தகங்கள் பெரும்பாலும் எல்லாமே படிச்சுட்டேன் தெரியுமா..? ஒரு அறையில் சாண்டில்யன் புத்தகங்களை நிறைச்சுப்போட்டு எனக்கு சாப்பாடு தண்ணி தராமா அடைச்சு வைச்சாக்கூட அங்கேயே இருக்க சம்மதிப்பேன். சாண்டில்யன் புத்தகம் என்றால் எனக்கு உசிரு.. ஜ லவ் சாண்டில்யன்" அப்படிண்ணு நா சொல்லுவேன் உடனே நீ "அடப்பாவி.. எப்ப பார்தாலும் கடலு.. கொள்ளை.. பொண்ணு.. என்று கற்பனையிலேயே கட்டு கட்டா எழுதுவாரே.. அவரா..??ஹய்யே... அவரு புத்தகம் எனக்கு ஆகவே ஆகாதுப்பா... நமக்கு இந்த கனவு கற்பனை என்று எதுக்குமே பிரயோசனம் இல்லா புத்தகங்க எழுதுறவங்கள கொஞ்சமும் பிடிக்காது நமக்கு எப்பவுமே சுஜாதா'தான். ரியலி கிரேட் சுஜாதா தெரியுமா.." என்றணும். 

"ஹேய்ய்.. நீ உன் கண்களுக்கு மட்டும் தான் அழகா லேசா மை தீட்ற.. மற்றும் படி அதிகம் நீ மேக்கப் போட்டுக்கிறதே இல்ல.. இது எனக்கு பிடிக்கவே இல்ல தெரியுமா.. நீ ரெம்ப அழகுதான் ஒத்துக்கிறேன் ஆனாலும் அந்த அழக இன்னும் பளிச்சுண்ணு காட்ட லைட்டா மேக்கப் போட்டுக்கிறது ஒண்ணும் தப்பில்லையே. குறிப்பா.. உன் உதடு செகப்பா கிளிச்சொண்டு போல் அவ்ளோ அழகு.. இதனாலேயே என்னவோ அதற்கு நீ லிப்டிக் என்ற ஒரு ஜட்டத்தை கண்ணுலேயே காட்டுறது இல்ல.. அந்த செவந்த சின்ன உதட்டுக்கு கொஞ்சம் லைட்டா லிப்டிக் போட்டு பாறேன்.. சான்ஸே இல்ல.. அவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா..??" இது நானு, உடனே நீ... "ஹேய்.. ஸ்டாப் ஸ்டாப்... என்னடா சொல்லுற... ஸப்பா... இதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. முகத்துல ஒரு கிலோ ரோஸ் பவுடர அள்ளி தப்பிறதும் உதட்டுக்கு கலர் கலரா லிப்டிக் அடிக்கிறதும் நல்லாவா இருக்கும்..?! எப்பவும் இயர்க்கையா கடவுள் கொடுத்த அழகு  மட்டுமே  அழகு அதுவே எனக்கு போதும் இந்த ஆடம்பர அலங்காரம் எல்லாம் எனக்கு பிடிக்கவும் மாட்டுது எனக்கு அது தேவையும் இல்லை" என்று மூஞ்சல அடிச்சாப்ல சொல்லணும். 

"ஹேய்ய்ய்... குட்டிம்மா, பிடுங்கியெடுத்து ஃபிரஸா கழுவி வைச்ச மஞ்சள் கிழங்கு மாதிரி என்னமா கலரு உன் கலரு...!! ஃப்ராண்ஸில எனக்கு Riitou's Rts  என்று ஒரு மச்சாள் இருக்கா, அப்படியே உன் கலரு.. உன் அழகு. அவ போன சண்டே ஒரு விழாவுக்கு வந்திருந்தா.. மஞ்சள் நிற சுடிதார், மஞ்சள் நிற வளையல்கள், மஞ்சள் நிற மாலை என்று எல்லாமே மஞ்சள் மஞ்சளாவே. அவ கலருக்கும் அழகுக்கும் மஞ்சள் அவ்ளோ பொருத்தமா எடுப்பா இருந்திச்சு தெரியுமா..? ஏதோ தேவதையே நேரில வந்தா போல இருந்திச்சு. ஹேய்ய்.. ஹேய்ய்ய்... ப்ளீஸ் ப்ளீஸ் நீயும் அப்படி ரெஸ்ட் பண்ணிப்பாறேன் செமையா இருக்கும் தெரியுமா..?" அப்படின்பேன், உடனே நீ "அடேய்ய்ய்... தெரியாமாத்தான் கேக்குறேன் உன் Riitou  மச்சாள் என்ன ராமராஜன் ஃபானா..?? மஞ்சள் பச்சைண்ணு கலர் கலரா ரெஸ்ட் பண்ண.. ஆள விடு இப்படியான மட்டமான ரசனையெல்லாம் எனக்கில்லைப்பா.." அப்படிண்ணு சொல்லனனும்.

இப்படி எல்லா மேட்டரிலும் அவ (நீ தாண்டி.. அவ்வ்வ்) நினைச்சதையே பேசணும் அவளுக்கு பிடிச்சதையே செய்யணும். அவ எப்பவும் அவளாவே இருக்கணும். அழகில அன்பில மட்டும் இல்ல கோபத்திலயும் பிடிவாதத்திலயும் ஏன் திமிரில கூடவும் ராட்சஷியா இருக்கணும். அவ எனக்காக விட்டுக்கொடுத்தும் போகக்கூடாது என்னோடு எந்த விடயத்திலும் அனுசரிச்சும் போகக்கூடாது.. எப்போ பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் என் கூட ஃபைட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

இப்படி நம்ம ஆசை'கள சொல்லிட்டே போனமா.. அங்காலப்பக்கம் சத்தமே இல்ல. நாமளும் ஒரு டவுட்டாகி "குட்டிம்மா... லைன்ல தான இருக்க..??" அப்படிண்ண. அங்கிட்டு... "ஆமா... எல்லாம் சொல்லி முடிஞ்சுதா சார்.. சரி வைச்சுடட்டுமா ஃபோன.. ?" உடனே நாம... "என்ன குட்டிம்மா.. இவ்வ்வ்ளோ...... நேரமா நானும் தம் கட்டி என் ஆசை'களை எல்லாம் கொட்டி கொட்டி சொன்னேனே.. நீ பதிலே சொல்லலேயே...?' என்றோமா  அப்பாவியா.

அவ "இப்போ என்ன.. உன்னோட சண்டை போடணும் அவ்ளோ தானே..? உன்ன......... பாரு இப்படியே பேசிட்டு இருந்த இனி மாமாக்கிட்ட தான் சொல்லுவேன். நீ வழமை போல அத்த மாமா வீட்ட நிக்கும் போதே இனி கால் பண்ணு சரியா....? ப்ளாக்'ல எழுதுறேன் எழுதுறேன் என்றுட்டு அங்க யாரோடயாவது வம்பிழுத்து சண்டை போட்டுப்போட்டே அந்தப்பழக்கம் இப்ப வீடு வரைக்கும் வருது. முதல்ல உன் ப்ளாக் ப்ரெண்ஷிப்'க்ல கட் பண்ணுடா... முடிஞ்சா ப்ளாக்'ல எழுதுறேன் என்ற பேர்ல குப்பை கொட்டுறதையும் நிப்பாட்டு.. "டொக்க்க்க்க்.........." யோவ் அவ ஃபோனை வைச்சுட்டாய்யா வைச்சுட்டா... இப்போ மறுபடியும் முதல் வரிய படியுங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...