ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

ஓரின செயற்கையாளர்களை ஆதரிக்கலாமா..??


ப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம். ஏதோ
தங்களை உத்தம சீலராக காட்டிக்கொண்டு அடுத்தவர்
அந்தரங்களுக்குள் புகுந்து சும்மா பிரித்து மேய்ந்து விடுவார்கள். ஒரு மனிதனின் தனி மனித சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோ
புரிந்து கொள்ள முடியாதவன் என்னைபொருத்தவரை மனிதனாய்
இருக்க எவ்வித தகுதியும் அற்றவன்.

ஓரின செயற்கை இன்று பெரும்பாலான நாடுகளில் அங்கீகரித்த
ஒன்று ஆனால் இதை பற்றிய தெளிவான அறிவோ அவர்களை புரிந்து
கொள்ளும் மனப்பக்குவமோ நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான்
கசப்பான உண்மை. மிக சின்ன வயதிலேயே பிரான்ஸ் வந்ததாலேயோ
என்னவோ என்னுடைய பாடசாலை வாழ்க்கையிலும் சரி இப்போது
வேலைசெய்யும் இடத்திலும் சரி நிறைய ஓரின செயர்க்கையாளர்களை
சந்திக்குறேன், அவர்கள் எனக்கு நண்பர்களாகவும் இருந்து
இருக்கிறார்கள்  ஏன் இப்போதும் இருக்கிறார்கள். நான் வேலை செய்யும் இடத்தில் ஜோன், ஜூலியத்  என்ற இரு  ஓரின செயர்க்கையாளர்கள் இருக்கிறார்கள். கிடத்தட்ட  100 பேர் வேலைசெய்யும் இடத்தில் இவர்கள் ஓரின செயர்க்கையாளர்கள் என்று தெரிந்தும்   இவர்களை சீண்டியோ மனம் நோகும்படியோ பேசியவர்கள் யாருமில்லை.  ஒரு வேளை
இதற்க்கு காரணம் என்னோடு வேலை செய்பவர்கள் பெரும்பாலும் 
வெளிநாட்டவராகவும்  நம்மவர் இல்லாமல்  இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.  அவர்களுடன் பழகும் போது "செக்ஸ் விருப்பு"   ஒன்றை தவிர வேறு எந்த வித்தியாசத்தையும் நான் அவர்களிடம் உணரவில்லை.  சொல்லபோனால் அவர்களைபற்றிய நல்ல புரிதல்  என்னிடம் எப்போதும் இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை செக்ஸ் என்பது அவரவர் விருப்பம்,
இரண்டு பேர் தங்கள் விருப்பத்துடனும் சம்மதத்துடனும் உறவில் ஈடுபடும்போது இங்கே தவறு  என்று சொல்ல என்ன இருக்கின்றது. அதைவிட நமக்கு ஒரு உணவு பிடிக்கின்றது அதை சாப்பிடுகிறோம், எங்களுக்கு பிடிக்காத ஒரு உணவை இன்னொருவன்
சாப்பிடுகின்றான்  என்பதற்காக அய்யயோ...  அவன் கெட்டவன், 
அவனை ஒதுக்கி வைக்க  வேண்டும், எங்கள் மானமே போய் விட்டது, என்று  கத்தி கூச்சல் போடவா  முடியுமா??

நான்  காலேஜ் படிக்கும் காலத்தில் அஸிஸ் என்று ஒரு அரபு நாட்டு
நண்பன் ஒருவன் இருந்தான். அவனும் ஓரின செயர்க்கையாளனே.
இது எல்லோருக்கும் தெரிந்து இருந்தும் அவனை வகுப்பிலேயோ
வெளியிலேயோ கேலி பேசியவர்கள் யாருமில்லை. பல தடவை அவன் வீட்டுக்கு கூட சென்று உள்ளேன். அவன் வீட்டில் அவன் தம்பி பெற்றோர் என எல்லோருக்கும் அவனைப்பற்றி தெரிந்து இருந்தும் அவர்கள் அவன் உணர்வுகளுக்கு மதிபளிக்கும் விதம் உண்மையில் என்னை பல தடவை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது. அவன் உடனான என் நட்பை இன்றுவரை என்னால் மறக்க முடியாது காரணம் காலேஜ் வாழ்க்கையில் எனக்கும் தனிஷா என்ற  ஒரு இலங்கை பெண்ணுக்கும் ஏற்ப்பட்ட காதல்
அதனால் வந்த பல பிரச்சனைகளை என்னுடன் சேர்ந்து
எதிர்கொண்டவன்.  பின் காதலில்  ஏற்ப்பட்ட பல கசப்பான
சம்பவங்களால் என் காலேஜ் வாழ்க்கைக்கே நான் முற்றுபுள்ளி
வைக்க எதிர்பாராவிதமாக அவனுடனான என் நட்புக்கும் அது முற்றுப்புள்ளி ஆகிவிட்டது.

"தோஸ்தானா" திரைப்படத்தில்
     ஜான் ஆபிரிகாம்-அபிஷேக் பச்சான்.

இந்தியாவில் அதிகளவு ஓரின  செயர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்
என்று பல தகவல் மீடியாக்கள் சொல்கிறது. ஆனால் அங்கு  பலருக்கு ஓரினசெயர்க்கையாளர்களை பற்றிய புரிதல்  எவ்வளவு  இருக்கிறது என்பது இன்றளவிலும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் தைரியமாக ஓரின செயற்கையை
ஆதரித்தவர்கள் பழம் பெரும் நடிகர் எம்.ஆர் ராதா, அதன் பின்
நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் ஜான் ஆபிரிகாம் தான். அதிலும்
எம்.ஆர் ராதா அந்த காலத்திலேயே ஓரின செயற்கையை ஆதரித்தது மட்டும் இன்றி தானும் ஒரு ஓரின செயர்க்கையாளன் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டது  உண்மையில் மிக தில்லான
பாராட்ட தக்க விடயமே. அண்மையில் ஓரின செயற்கை பற்றி விலாவாரியாக பேசி  வந்த ."கோவா" திரைப்படம் விமர்சனத்துக்கு உள்ளானது அவர்கள்  பற்றிய  "புரிதல்" எத்தகையது என்று காட்டிகொடுத்தது.  ஒரு முன்னணி வார இதழ் கோவா திரைப்பட விமர்சனத்தில் தடித்த எழுத்தில் சொல்கிறது. "ரஜனி மகள் ஓரினசெயர்க்கையாளர் பற்றி படம் எடுப்பது அவர்களுக்கு வேண்டுமென்றால் பெருமையாக இருக்கலாம், ஆனால் ரஜனி மகளுக்கு இது பெருமை இல்லை என்று"  ஹும்..  இப்படிப்பட்ட அறிவுஜீவி மீடியாக்கள் எல்லாம் இருக்கும் போது அவர்களை  குறை சொல்லி
என்ன பயன்.  ஆனால் பல ஹிந்தி திரைப்படங்கள் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஓரின செயற்கை பற்றி அழகாக சொல்லி போகிறது. 
அவற்றுள் அண்மையில் வெளிவந்த நந்திதா தாஸ் நடித்த (பயர் இல்லை)  ஒரு திரைப்படத்தை சொல்லலாம். ஏன் தேசிய விருது பெற்ற பாஷன் திரைப்படமும், தோஸ்தானா திரைப்படமும் அத்தகையதே. அதிலும் தோஸ்தானா திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் "அபிஷேக்பச்சனும்- ஜான் ஆபிரிகாம்" இருவரும் ஜோடியாக ஓரின செயர்க்கையாலர்களாக
நடித்து  காமர்சியலாகவே சூப்பர் ஹிட் ஆன திரைப்படம்..  நாம் மட்டும் அல்ல நம் ஹீரோக்களும் வளர இன்னும் நிறையவே  இருக்கு.

ஊரில்தான் இப்படி என்றால் இங்கு ஓரின செயர்க்கையாளர்களை அங்கீகரித்த நாடுகளில் தஞ்சம் புகந்த   நம்மவர்கள் அவர்களைப்பற்றி அடிக்கும் கமெண்ட்ஸ் நா கூசும்படி இருக்கும்,  நம்மவர்கள் இடம் கொடுத்தால் மடம் கட்டுவார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஊரில் இருந்து இங்கு தலைதெறிக்க ஓடிவந்து நிம்மதியான காற்றை சுவாசித்த பின் தான் அவர்களுக்கு தங்கள் கலாச்சாரம் பற்றி நினைவு வருகிறது. இருக்கட்டுமே... இது நல்லதுதான் அதற்காக இருக்க இடம் கொடுத்தவன் சட்டதிட்டங்களிலேயே விமர்சித்து கேலி பேசுவது எந்த வகையில் நியாயம். அண்டி பிழைக்கவந்த நாட்டில் வரம் தந்த குற்றத்துக்காக அவர்கள் தலையிலேயே கை வைப்பதுதான் இவர்கள் கலாச்சாரம் சொல்லி தந்த தர்மமா??

இவர்களின் காலாச்சார பாசம் கடந்த கனேடிய தேர்தலில் அத்துமீறிப்போய் தமிழர்கள் அனைவரையையும் அசிங்க படுத்தியது
என்னை மிகவும் எரிச்சல் படுத்திய ஒன்று.  கடந்த கனேடியன் தேர்தலில் 
போட்டி இட்டவர்களில் "rob ford "  என்பவர் ஒரு  கட்சி சார்பாகவும்
"ஜோர்ஜ்  ஸ்மிதேர்மன்" என்பவர் ஒரு கட்சி சார்பாகவும் போட்டி இட்டார்கள்.  ஜோர்ஜ்  ஸ்மிதேர்மன் போட்டியிட்ட கட்சியே கனேடிய
தமிழர்கள் மேல் அக்கறை உள்ள கட்சி என்ற போதும்
ஜோர்ஜ்  ஸ்மிதேர்மன் தன்னைப்போல் ஒரு ஆணையே திருமணம்
செய்து வாழும் ஒரு ஓரின செயர்க்கையாளர் என்பதை காரணம்
காட்டி கனேடிய தமிழர்கள் ஜோர்ஜ்  ஸ்மிதேர்மனுக்கு எதிர் பிரசாரத்தை
மேற்கொண்டது மிக கண்டனத்துக்கு உரியது. அதிலும் இவர்கள்
ஒரு படி மேலே போய்  பிரபல கனேடிய தமிழ் வானொலியான
CTBC மூலம் ஜோர்ஜ்  ஸ்மிதேர்மனுக்கு எதிராகவும் ஒட்டு மொத்த
ஓரின செயர்க்கையாளர்களையும் சாடி வெளியிட்ட விளம்பரம் 
கனேடிய  மக்கள் மனதில் இவர்கள் மேல் ஒரு வெறுப்பை
ஏற்படுத்தியது. ஜோர்ஜ்  ஸ்மிதேர்மன் ஆணுடன் வாழ்ந்தால் என்ன பெண்ணுடன் வாழ்ந்தால் என்ன.. அவர், அவர் கட்சி உங்களுக்கு என்ன செய்தது என்ன செய்யபோகுது என்பதுதானே முக்கியம்.. அதை விட்டு
அவர் அந்தரங்களுக்குள் மூக்கை நுளைப்பதுதான் பாரம்பரிய தமிழன் என்று சொல்லிகொள்ளும் உங்களுக்கு அழகா?? இந்த விளம்பரத்தை  வெளியிட்ட CTBC  வானொலிக்கு செருப்பால அடிக்கணும். காசு இருந்தால் எவனும் வானொலி ஆரம்பிக்கலாம். அணைவு இருந்தால் எவனும் அறிவிப்பாளர் ஆகலாம் என்பதற்கு இந்த குப்பைகள் ஒரு
உதாரணம்.  உந்த விளம்பரத்தின் தாக்கம் எத்தகையது என்பதை புரிகிற அறிவு கூட அவர்களுக்கு இல்லை. சும்மாவா சொன்னார்கள் 'ஆட்கள் இல்லா ஊருக்கு அரைகுறைதான் நிறைகுடமாம்' என்று. சரி இங்கே  கலாச்சார  காவலர்கள்!  போல் தங்களை   காட்டிகொள்பவர்களுக்கு   
கனேடிய மக்களுடன் அந்த நாட்டின் கலாச்சாரத்துடன் ஒற்றுமையாக வாழ பிடிக்கவில்லை என்றால்   ஊருக்கு நடையை கட்ட வேண்டியதுதானே..??   இது வெளிநாட்டில் வாழும்  தமிழ்  கலாச்சார காவலர்களாக தங்களை  காட்டிகொள்ளும் எல்லா  அறிவு ஜீவிகளுக்கும் பொருந்தும்.

பிந்திய சேர்க்கை-: வானொலியில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நம்மவர் விளம்பரத்தின் ஒரு பகுதி. இந்த விளம்பரம் என்னைப்பொறுத்தவரை
மிக கண்டனத்துக்கு உரியது.


 





180 கருத்துகள்:

  1. பல தரவுகளை அலசி ஆராயும் சரியான சமுக அலசல் மற்றும் சாடல்

    இப்படி பட்ட விடயங்களை எழுதும் உங்கள் மனப்பக்குவத்தை வால்துக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. டேம்லேட் டிசைன் கண்ணை கவருது நட்பு

    பதிலளிநீக்கு
  3. எம்.ஆர்.ராதா குறித்த தகவல் கேள்விபட்டதில்லை. நன்றாக எழுதி இருக்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் மருமோனே இது ஒரு அருமையான பதிவுன்னு சொல்லி நிறுத்திட மனம் இடம் கொடுக்கவில்லை.. எம் உறவுகள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விடயமிது.. இப்டியான ஒரு பதிவ போட்டதற்கு.. நன்றி நன்றி...

    இதில ஒரு சின்ன திருத்தமையா MRராதா அவர்கள் ஓரினசேர்கையாளர் இல்லையப்பு Bi செக்சுவல்யா அதாவது.... வேண்டாமையா என்ர செம்ப நெளிச்சுடுவாங்கையா... ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  5. உண்மையில் இங்கு இருக்கும் கலாச்சாரக் காவலர்களுக்கு மற்றவர்களின் சுதந்திரம் பற்றிய புரிதல் இல்லை எனலாம் எப்போதும் மற்றவர் என்ன செய்கின்றார் என்பதை ஆராய்வது தான் அதிகம் !ஒரினச் சேர்க்கை என்பது அவர்களின் உரிமை பாரிஸ் முற்போக்கா நடக்கும் போது நம்மவர் முகம் சுழிக்கும் காட்சியை பலர் செய்வது வேதனை மிக்கது இன்னும் கூறலாம் இரவு  வருகின்றேன் வேலை முடித்து.

    பதிலளிநீக்கு
  6. இதில அந்த கனேடிய வானொலி கட்டிக்கப்படவேண்டும் இவர்கள் எந்தக்காலத்தில இருக்கிறார்கள்..!!? ஐரோப்பாவில் பெல்ஜியம் ஹொலன் ஸ்பயின் போன்ற நாடுகளில் ஓரினசேர்கையாளர்கள் திருமணபந்தத்தில் இணைய சட்டம் இடமளிக்கிறது.. 

    அடுத்த வருடம் பிரான்சில் நடக்கவுள்ள தேர்தலில் சோசலிச கட்சி ஆட்சிக்கு வந்தால் இஞ்சேயும் அந்த சட்டம் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார்கள்.. ஒரு வானொலியை நடத்தும் அந்த அறிவுஜீவிகளை நினைத்து வெக்கப்படுகிறேன்.. 

    பதிலளிநீக்கு
  7. தான் படிக்க / சாதிக்க விரும்பியதை தன் குழந்தைகளுக்கு திணிக்கும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம்...

    இவர்களுக்கு தனிமனித சுதந்திரத்தை பற்றியெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்?

    பதிலளிநீக்கு
  8. சமுகத்தில் நடக்கும் இயல்பான விடயம்தான் ஒரினச்சேர்க்கை இதைப்பற்றி பல ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது .பாரிஸ் மாநகரமுதல்வர்  paris-19 mayar கூட ஒரு ஒரினச் சேர்க்கையாளர் அவர் சேவையால்தான்  நாம் பல கோயில்கள் நம்கலாசத்திற்கு ஏற்ப செயல்படமுடியுது அவரைப்போய் சீண்டிணால் அவர் என்ன சொல்வார் என் நாட்டில் என் சுதந்திரம் எனக்கு கிடைத்திருக்கு நான் நடித்து ஏமாற்றுவது இல்லை என்று வெளிப்படையாக சொல்லுவார் இது தான் வெள்ளைத்தோலுக்கும் நமக்கும் இருக்கும் புரிதல்.நாம் கலாச்சார காவலர் என்ற பெயரில் இவர்களின் உரிமையை நசுக்குகின்றோம்! 

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துஷி

    செக்ஸ் என்பது அவரவர் விருப்பம். அது ஏற்றுக்கொள்ளக்கூடியதுகூட

    ஆனால் ஒரு விடயம். இந்த ஓரினச்சேர்க்கை எந்த வகைக்குள் அடங்குகிறது என்பதுதான் என் கேள்வி. அத்துடன் ஓரினச்சேர்க்கையை எதிர்ப்பவர்களை ஏன் கலாச்சார காவலர்கள் என்ற பதத்துக்குள் அடக்குகிறார்கள் என்று தெரியவில்லை.இயற்கை அழிவை எதிர்த்தால் சூழல்வாதிகள் என்கிறார்கள். அதேநேரம் ஓரினச்செர்க்கையை எதிர்த்தால் கலாச்சார காவலர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். ஓரினச்சேர்க்கை கூட ஓர்வகை இயற்கை அழிவுதானே.

    ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்பதுதான் அதை எதிர்ப்பவர்களின் வாதம்.ஆண் பெண்ணுடன் உறவு கொள்வதுதானே இயற்கை. மனிதன் எங்கெல்லாம் இயற்கை மீது கை வைத்திருக்கிறானோ அங்கெல்லாம் மரண அடி வாங்கியிருக்கிறான் என்பதுதான் வரலாறு.

    காமம் என்பது ஒரு உணர்வு. உணர்ச்சிகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். சிலர் வித்தியாசமான உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள். காமத்தில் வித்தியாசமான உணர்ச்சிகளை கொண்டவர்கள்தான் இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள்.

    ஒருவரின் உணர்ச்சிகளில் அடுத்தவர் தலையிடுவது தவறுதான். ஆனால் எனக்கு ஒருவனை கொலை செய்யவேண்டும் என்று தோன்றினால் அதுவும் உணர்ச்சிதான். அதற்காக அது அடுத்தவர் உணர்வு. அதில் நாம் தலையிடமுடியாது, சட்டம் போட முடியாது என்று இருக்கமுடியாது. அது போலத்தான் இதுவும்.

    பதிலளிநீக்கு
  10. //ஊரில்தான் இப்படி என்றால் இங்கு ஓரின செயர்க்கையாளர்களை அங்கீகரித்த நாடுகளில் தஞ்சம் புகந்த நம்மவர்கள் அவர்களைப்பற்றி அடிக்கும் கமெண்ட்ஸ் நா கூசும்படி இருக்கும், //

    தமிழர்களின் செயல் கண்டிக்கப்படவேண்டியது. அடுத்தவன் நாட்டில் ஒண்டியிருந்துகொண்டு அவர்களின் சட்டங்களை கேலி செய்வதற்கு இவர்கள் யார்?

    பதிலளிநீக்கு
  11. //ஊரில்தான் இப்படி என்றால் இங்கு ஓரின செயர்க்கையாளர்களை அங்கீகரித்த நாடுகளில் தஞ்சம் புகந்த நம்மவர்கள் அவர்களைப்பற்றி அடிக்கும் கமெண்ட்ஸ் நா கூசும்படி இருக்கும், //

    எதிர்ப்பதென்றால் ஓரினச்சேர்க்கையைத்தான் எதிர்க்கவேண்டுமே தவிர ஓரினச்சேர்க்கையாளர்களை அல்ல

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் பிரெண்ட்ஸ். பதிவை போட்டுட்டு ஒரு வேலையா வெளிய போய்ட்டேன். இப்போத்தான் வந்தேன்... சாரி.ஆஹா..... இன்னைக்கு எங்க நம்ம 'பெரிய தலை' ஒன்றையும் காணோம்..!!!சர்ச்சை மேட்டர் என்றதும் எல்லாரும் பதுங்கிட்டீனமா ?? அவ்வவ்.நமக்குத்தான் ரிஸ்க் என்றா ரஸ்க் சாப்புடுற மாதிரி இல்ல, ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  13. அப்ப பாத்தீங்களா... எங்கள எல்லாம் சின்ன தல எண்டுறீங்களா

    பதிலளிநீக்கு
  14. //கவி அழகன் கூறியது...
    பல தரவுகளை அலசி ஆராயும் சரியான சமுக அலசல் மற்றும் சாடல்

    இப்படி பட்ட விடயங்களை எழுதும் உங்கள் மனப்பக்குவத்தை வால்துக்கின்றேன்//


    தேங்க்ஸ் நண்பா..

    உண்மைதான் நண்பா, இதைப்பற்றி பேசினாலே நீயும் அவனா?? என்ற தோணியில் பேசும் அறிவுஜீவிகள்தான் நம்மில் அதிகம். என்னை பொறுத்தவரை எனக்கு எது சரி என்று படுதோ எது தப்பு என்று படுதோ அதை எழுதுவதில் எந்த பயமும் எனக்கு இல்லை. இவர்கள் பூச்சாண்டி எல்லாம் நம்மகிட்ட பலிக்காது நண்பா.

    பதிலளிநீக்கு
  15. //கவி அழகன் கூறியது...
    டேம்லேட் டிசைன் கண்ணை கவருது நட்பு//


    தேங்க்ஸ் நண்பா... அப்போ இதை இனி மாற்றாமல் தொடர வேண்டியதுதான்,
    நாமதான் அடிக்கடி மாற்றும் ஆள் ஆச்சே....

    பதிலளிநீக்கு
  16. //தமிழ் உதயம் கூறியது...
    எம்.ஆர்.ராதா குறித்த தகவல் கேள்விபட்டதில்லை. நன்றாக எழுதி இருக்கிறிர்கள்.//


    தேங்க்ஸ் பாஸ்.

    நானும் எம்.ஆர் ராதா பற்றி சொன்ன தகவல் சரி பட் கொஞ்சம் திருத்தம் தேவை பாஸ் அதில்.
    காட்டான் மாமாவின் தகவலே சரி.... காட்டான் மாமாவின் கருத்தை பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. // மதுரன் கூறியது...
    அப்ப பாத்தீங்களா... எங்கள எல்லாம் சின்ன தல எண்டுறீங்களா//


    அடப்பாவி பயலே....
    கோர்த்து விடுறீயா??? ஏற்க்கனவே நிறைய பேர் என் மேலே செம காண்டத்தில் திரியிறாங்க
    நீங்க வேற... ஹீ ஹீ..
    உன்மைதான பாஸ் நாம எல்லாம் சின்ன ஆக்கள் தான ( அப்படித்தான் நினைக்குறேன்)ஆனாலும் சரியோ பிழையோ உங்க கருத்தை துணிந்து சொல்லுறீங்க பாருங்க நம்ம இனம் பாஸ் நீங்க.. ரியலி கிரேட்.

    அப்புறம் இன்னைக்கு உங்க சம்மந்தமாத்தான் வெளியே போனேன்.
    கருவாச்சி காவியம் மட்டும் வேண்டினேன் மற்றது இல்லயாம் ஓடர் பண்ணிட்டு வந்தேன்.
    ஒரு வாரத்தில் வருமாம்.
    கருவாச்சி காவியம் என்ன மொத்தம்... அவ்வ்

    பதிலளிநீக்கு
  18. ///காட்டான் கூறியது...
    வாழ்த்துக்கள் மருமோனே இது ஒரு அருமையான பதிவுன்னு சொல்லி நிறுத்திட மனம் இடம் கொடுக்கவில்லை.. எம் உறவுகள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விடயமிது.. இப்டியான ஒரு பதிவ போட்டதற்கு.. நன்றி நன்றி...
    இதில ஒரு சின்ன திருத்தமையா MRராதா அவர்கள் ஓரினசேர்கையாளர் இல்லையப்பு Bi செக்சுவல்யா அதாவது.... வேண்டாமையா என்ர செம்ப நெளிச்சுடுவாங்கையா... ஹி ஹி ஹி///


    வணக்கம் மாமா.
    தேங்க்ஸ், உண்மைதான் எம் உறவுகள் பழசையே பேசிக்கொண்டு
    இன்னும் 1856 லேயே நிக்காமல் 2011 க்கு சீக்கிரம் வரணும்
    ஹீ ஹீ.

    எம் ஆர் ராதா தகவலுக்கு நன்றி, பின்பு தேடி பார்த்தேன் நீங்கள் சொன்னதுதான் சரி.கவலை படாதீங்க இன்னைக்கு செம்பு நெளியாது ஹீ ஹீ
    காரணம் எல்லோரும் பதுங்கி இருக்காங்கப்பா....

    பதிலளிநீக்கு
  19. // Riyas கூறியது...
    NO COMMENTS..//

    ஹீ ஹீ. நோ கமெண்ட்ஸ் பா :))

    பதிலளிநீக்கு
  20. ரொம்ப நன்றி துஷி

    அப்புறம் காட்டான் மாமா மாமா என்று சொல்லுறீங்களே
    அவர் சொந்த மாமாவா அல்லது அந்த மாமாவா

    ஹி ஹி
    பாருங்க இப்ப காட்டான் பாய்ஞ்சடிச்சு வருவார்

    பதிலளிநீக்கு
  21. //காட்டான் கூறியது...
    இதில அந்த கனேடிய வானொலி கட்டிக்கப்படவேண்டும் இவர்கள் எந்தக்காலத்தில இருக்கிறார்கள்..!!? ஐரோப்பாவில் பெல்ஜியம் ஹொலன் ஸ்பயின் போன்ற நாடுகளில் ஓரினசேர்கையாளர்கள் திருமணபந்தத்தில் இணைய சட்டம் இடமளிக்கிறது..

    அடுத்த வருடம் பிரான்சில் நடக்கவுள்ள தேர்தலில் சோசலிச கட்சி ஆட்சிக்கு வந்தால் இஞ்சேயும் அந்த சட்டம் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார்கள்.. ஒரு வானொலியை நடத்தும் அந்த அறிவுஜீவிகளை நினைத்து வெக்கப்படுகிறேன்.. //


    அந்த வானொலிக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியாது,
    நான் முதலே சொன்னது போல்
    "ஆள் இல்லா ஊருக்கு அரைகுறைகள்தான் நிறைகுடமாம் என்பதுதான் உண்மை"

    வெள்ளைக்காரர்கள் பற்றி நாம் நிறைய நல்லாள் கமெண்ட்ஸ் அடிப்போம்
    ஆனால் எங்கள் அரைவேக்காடு தனத்தை அவர்கள் கமெண்ட்ஸ்
    அடிக்க வெளிக்கிட்டால் நாம் எல்லாம் வெளியே தலை காட்டவே
    முடியாது..................

    பதிலளிநீக்கு
  22. //குடிமகன் கூறியது...
    தான் படிக்க / சாதிக்க விரும்பியதை தன் குழந்தைகளுக்கு திணிக்கும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம்...

    இவர்களுக்கு தனிமனித சுதந்திரத்தை பற்றியெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்?//

    அழகா சொன்னீங்க பாஸ்,
    தனி மனித சுதந்திரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேப்பவர்கள் தான் நம்மில் அதிகம்........................

    பதிலளிநீக்கு
  23. //சார்வாகன் கூறியது...
    Nice//

    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  24. ///Nesan கூறியது...
    சமுகத்தில் நடக்கும் இயல்பான விடயம்தான் ஒரினச்சேர்க்கை இதைப்பற்றி பல ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது .பாரிஸ் மாநகரமுதல்வர் paris-19 mayar கூட ஒரு ஒரினச் சேர்க்கையாளர் அவர் சேவையால்தான் நாம் பல கோயில்கள் நம்கலாசத்திற்கு ஏற்ப செயல்படமுடியுது அவரைப்போய் சீண்டிணால் அவர் என்ன சொல்வார் என் நாட்டில் என் சுதந்திரம் எனக்கு கிடைத்திருக்கு நான் நடித்து ஏமாற்றுவது இல்லை என்று வெளிப்படையாக சொல்லுவார் இது தான் வெள்ளைத்தோலுக்கும் நமக்கும் இருக்கும் புரிதல்.நாம் கலாச்சார காவலர் என்ற பெயரில் இவர்களின் உரிமையை நசுக்குகின்றோம்! ///


    நேசன் அண்ணா.. உங்க பதில் மிக சரியே....

    யா நம் மேயர் ஒரு ஓரின செயற்கை ஆளர் என்பது நானும் அறிந்ததே.. நிறைய நல்லது செய்து இருக்கார்.

    ஹும்... வெள்ளைக்காரன் எதையும் ஒளிவு மறைவு இன்றி நேரடியாக செய்வான், நாம் தேவாரம் படித்துக்கொண்டே சிவன் கோயிலை
    இடிப்பவர்கள் ஆச்சே.... இலங்கை இந்தியா போன்ற நம் நாடுகளில்தான் அதிகம் ஓரின செயற்கை சம்மந்தமான அத்துமீறல்கள்
    நடக்குது... இலங்கையில் ஒரு குறுப் வெளிநாட்டவர்களுக்கு ஓரின செயற்கைக்கு சிறுவர்களை அனுப்புது
    என்று அண்மைக்காலமாகவே பல செய்திகள் வருது.. ஏன் இந்தியாவில் மிக அண்மையில் ஒரு விடுதியை மூடினார்கள் ஓரின செயற்கை நடை பெறுவதாக காரணம் காட்டி.. நம்மவர் யோக்கியம் இந்தளவே....(

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இப்போது கொஞ்சம் பிசியாக இருக்கிறேன்! அப்புறம் வருகிறேன்!

    இன்னிக்கு இருக்கு கச்சேரி!

    பதிலளிநீக்கு
  26. /// மதுரன் கூறியது...
    வணக்கம் துஷி

    செக்ஸ் என்பது அவரவர் விருப்பம். அது ஏற்றுக்கொள்ளக்கூடியதுகூட

    ஆனால் ஒரு விடயம். இந்த ஓரினச்சேர்க்கை எந்த வகைக்குள் அடங்குகிறது என்பதுதான் என் கேள்வி. அத்துடன் ஓரினச்சேர்க்கையை எதிர்ப்பவர்களை ஏன் கலாச்சார காவலர்கள் என்ற பதத்துக்குள் அடக்குகிறார்கள் என்று தெரியவில்லை.இயற்கை அழிவை எதிர்த்தால் சூழல்வாதிகள் என்கிறார்கள். அதேநேரம் ஓரினச்செர்க்கையை எதிர்த்தால் கலாச்சார காவலர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். ஓரினச்சேர்க்கை கூட ஓர்வகை இயற்கை அழிவுதானே.

    ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்பதுதான் அதை எதிர்ப்பவர்களின் வாதம்.ஆண் பெண்ணுடன் உறவு கொள்வதுதானே இயற்கை. மனிதன் எங்கெல்லாம் இயற்கை மீது கை வைத்திருக்கிறானோ அங்கெல்லாம் மரண அடி வாங்கியிருக்கிறான் என்பதுதான் வரலாறு.

    காமம் என்பது ஒரு உணர்வு. உணர்ச்சிகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். சிலர் வித்தியாசமான உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள். காமத்தில் வித்தியாசமான உணர்ச்சிகளை கொண்டவர்கள்தான் இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள்.

    ஒருவரின் உணர்ச்சிகளில் அடுத்தவர் தலையிடுவது தவறுதான். ஆனால் எனக்கு ஒருவனை கொலை செய்யவேண்டும் என்று தோன்றினால் அதுவும் உணர்ச்சிதான். அதற்காக அது அடுத்தவர் உணர்வு. அதில் நாம் தலையிடமுடியாது, சட்டம் போட முடியாது என்று இருக்கமுடியாது. அது போலத்தான் இதுவும்.///



    நன்றி பாஸ் உங்கள் விரிவான கருத்துக்கு...

    நீங்கள் சொன்னதுபோல ஒருவர் நாட்டில் அகதியாக இருந்துகொண்டு அவர்கள் சட்டத்தை பழிப்பது, அவர்களுக்கு எங்கள் மேல் நிறைய அவ நம்பிக்கையை கொடுத்துவிடும்.

    அப்புறம் ஏன் ஓரின செயர்க்கையாளர்களை எதிர்ப்பவர்களை கலாச்சார காவற்கார்ர்கள் என்று முத்திரை குத்துகிறீர்கள் என்று கேட்டு இருந்தீர்கள். அனேகமாக ஏன் அதிகமாகவே தமிழ் கலாச்சாரத்தை தூக்கி பிடிப்பவர்கள்தான் ( இதை நான் தப்பு சொல்லவில்லை, இதை காரணம் காட்டி அடுத்தவர் அந்தரத்துக்குள் நுழைவதையும் அவர்கள் மேல் தங்கள் கருத்தை திநிப்பதையும்தான் தப்பு என்கிறேன்) இப்படி பட்ட விடயத்தை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறார்கள் அதனால்தான் அவர்களை இதற்குள் அடக்கி விடுகிறார்கள்.கற்பு சம்மந்தமான விடயங்களில் இவர்கள் கூப்பிடாமலே வந்து விடுவார்கள், இதுவும் ஒருவித பப்புளிசிட்டியே ..

    ஓரின செயற்கை ஒரு இயற்க்கை அழிவாக நீங்கள் குறிப்பிட்டது சரியாக இருந்தாலும் இவர்களை இவர்கள் உணர்வுகளை படைத்ததும் இயற்கைதானே...... இதுக்கு என்ன பதில் சொல்வது???????

    அப்புறம் ஓரின செயர்க்கையாளர்கள் உணர்சிகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டது மிக சரியே இதைதான் நானும் சொன்னேன், எங்களுக்கு ஒரு உணர்ச்சி அதை நாங்கள் அனுபவிக்கிறோம்
    அவர்களுக்கு இன்னொரு வகையான உணர்ச்சி அதை அவர்கள் அனுபவிக்கிறார்கள் இதில் என்ன தவறு???? அடுத்தவரை நோகடிக்காத பாதிக்காத எந்த செயலும்
    தவறு இல்லை என்பது ஏன் கருத்து.

    அப்புறம்.... உங்கள் கடைசி வரி மிக அபத்தம்....உங்கள் ஒப்பீடே மிக தவறு.... கொலை செய்யும் உணர்ச்சிக்கும் ஓரின செயற்கை உணர்ச்சிக்கும் என்ன சம்மந்தம் ???அப்படிபார்க்க போனால் மிக அபத்தமாக இப்படியும் கேக்கலாம்
    ஆணுக்கு பெண் மேல் வரும் உணர்ச்சியையும் சட்டம் போட்டு தடை செய்வோம் ஏன் எனில் இந்த உணர்ச்சியால்தானே நிறைய கற்பழிப்பு சிறுமிகள் துஸ்பிரயோகம் நடக்குது.....இந்த சட்டம் ஒப்பீடு எத்தகைய அபத்தமோ அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது உங்கள் கொலை உணர்ச்சிக்கும் ஓரின செயற்கை உணர்ச்சிக்கும் நீங்கள் வைத்த ஒப்பீடு.

    பதிலளிநீக்கு
  27. //மதுரன் கூறியது...
    //ஊரில்தான் இப்படி என்றால் இங்கு ஓரின செயர்க்கையாளர்களை அங்கீகரித்த நாடுகளில் தஞ்சம் புகந்த நம்மவர்கள் அவர்களைப்பற்றி அடிக்கும் கமெண்ட்ஸ் நா கூசும்படி இருக்கும், //

    தமிழர்களின் செயல் கண்டிக்கப்படவேண்டியது. அடுத்தவன் நாட்டில் ஒண்டியிருந்துகொண்டு அவர்களின் சட்டங்களை கேலி செய்வதற்கு இவர்கள் யார்?///


    தமிழன் இடம் கொடுத்தால் மடம் கட்டுவான் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்...

    பதிலளிநீக்கு
  28. //மதுரன் கூறியது...
    //ஊரில்தான் இப்படி என்றால் இங்கு ஓரின செயர்க்கையாளர்களை அங்கீகரித்த நாடுகளில் தஞ்சம் புகந்த நம்மவர்கள் அவர்களைப்பற்றி அடிக்கும் கமெண்ட்ஸ் நா கூசும்படி இருக்கும், //

    எதிர்ப்பதென்றால் ஓரினச்சேர்க்கையைத்தான் எதிர்க்கவேண்டுமே தவிர ஓரினச்சேர்க்கையாளர்களை அல்ல//


    என்னைப்பொறுத்தவரை ரெண்டுமே தேவை அற்ற ஒண்டு, இந்த உலகம் எல்லோருக்குமானது... எங்களுக்கு பிடித்ததை நாம் எடுத்துக்கொள்வோம், அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்..... இந்த ரெண்டிலுமே அடுத்தவர் சுதந்திரத்தையும் மனதையும்
    காயப்படுத்தாமல் இருப்பதுதான் இங்கே அவசியம்

    பதிலளிநீக்கு
  29. //மதுரன் கூறியது...
    ரொம்ப நன்றி துஷி

    அப்புறம் காட்டான் மாமா மாமா என்று சொல்லுறீங்களே
    அவர் சொந்த மாமாவா அல்லது அந்த மாமாவா

    ஹி ஹி
    பாருங்க இப்ப காட்டான் பாய்ஞ்சடிச்சு வருவார்//


    ist ஒக்கே மதுரன்.

    ஆஹா....... நல்ல டவுட்டுத்தான் போங்கோ......
    இப்போ பாருங்க நம்ம மாமா
    கோமணத்தை இருக்கிகட்டிகொண்டு
    செம்பு நெளிக்க வருவாரு........
    எண்ட குருவாயூரப்பா... மதுரனை நீ தான் காப்பாற்றனும்.
    ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  30. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
    வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இப்போது கொஞ்சம் பிசியாக இருக்கிறேன்! அப்புறம் வருகிறேன்!

    இன்னிக்கு இருக்கு கச்சேரி!//


    அண்ணே!! வணக்கம் கும்புடுறேன் சாமியோவ்....

    பிறகு வாறன் என்றதை நம்பலாமா?? இல்லை எஸ்கேப்பா.... ஹீ ஹீ.

    என்ன பாஸ் பிறகு கச்சேரி இருக்குண்ணு ரெம்ப பயப்படுத்துறீங்க.... அவ்வவ்

    பதிலளிநீக்கு
  31. துஷி
    நான் ஓரினச்சேர்க்கையை கொலையோடு ஒப்பிடவில்லை. தவறான உணர்வுகள் சரியல்ல என்பதை விளக்கத்தான் அப்படி கூறினேன்.
    மிகுதி பின்னூட்டங்களுக்கு நாளை வருகிறேன்

    பதிலளிநீக்கு
  32. பெரிய விடயம் அழகாக சொல்லி இருக்குறீர்கள்..............

    நான் இதை என்னும் முழுமையாக ஆதரிக்க வில்லை.....நான் இருக்கும் இடத்தில் அவளவாக இவர்கள் இல்லை...

    பதிலளிநீக்கு
  33.  மதுரன் கூறியது...
    ரொம்ப நன்றி துஷி

    அப்புறம் காட்டான் மாமா மாமா என்று சொல்லுறீங்களே
    அவர் சொந்த மாமாவா அல்லது அந்த மாமாவா

    ஹி ஹி
    பாருங்க இப்ப காட்டான் பாய்ஞ்சடிச்சு வருவார்

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 9:21:00 am GMT-07:00
    வந்திட்டேன்யா...
    ஐயா மதுரன் நான் மற்றவங்கமாதிரி கொமொண்ட போட்டமா போனமான்னு இருக்க மாட்டேன்யா அதுக்கு என்ன பதில் வருகுதென்னு பார்பேனையா இன்னைக்கு எனக்கு மூக்கு வேர்கேக்கையே யாரோ என்ர கோவணத் உருவப்போறாங்கன்னு தெரியுமையா..  நீங்க சொல்லுற அந்த மாமா வேலை பார்க்கிறதுக்கு நாலு குட்டிகளும் கொஞ்சம் புட்டிகலும் தேவையாமேய்யா..!!? என்னட்ட இருக்கிறது இந்த கோவணமும் கொக்குத்தடியும்தான்யா.. சந்தேகப்படாத அவன் என்ர உண்மையான மருமோன்தாய்யா.. 

    பதிலளிநீக்கு
  34. காட்டான் மாமா சின்ன மருமகன மறந்திட்டியல்....

    பதிலளிநீக்கு
  35.  ஆகுலன் கூறியது...
    பெரிய விடயம் அழகாக சொல்லி இருக்குறீர்கள்..............

    நான் இதை என்னும் முழுமையாக ஆதரிக்க வில்லை.....நான் இருக்கும் இடத்தில் அவளவாக இவர்கள் இல்லை...

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 11:22:00 am GMT-07:00
    அட என்ர சின்ன மருமோனே உது ஊரெல்லாம் இருக்கையா.. நீங்க அத ஆதரிக்கிறதோ இல்லையோன்னு இல்லாமா அவர்களையும் மனிசனா நடத்துங்கோய்யா அதுவே போதுமையா..

    பதிலளிநீக்கு
  36. என்ன மதுரன் உங்களோட அடிக்கடி எனக்கு சண்ட வருகுது.. ஏன் நாங்க முற்பிறப்பில தம்பதிகளா இருந்தோமோய்யா.. ஹி ஹி ஹி

    நீங்க சொல்லுறத ஏற்றுக்கொள்ள முடியாதையா.. உங்கட பாணியிலேயே சொல்லப்போனா.. இயற்கை படைத்த மனிசனிடம்தானே இயற்கையாக அந்த உணர்வுகள் வருது இதில எங்கையா செயற்கை இருக்கையா.. ஐயா நான் காட்டானையா. உங்கள மாதிரி எனக்கு விளக்கம் குறைவையா.. நீங்க நாளைக்கு வந்து அத விளங்கப்படுத்தினா நல்லா இருக்குமையா... நாளைக்கு வந்து பார்கிறேனையா உங்கட விளக்கத்தை..
    கடவுளை ஏற்காத நீங்க இதற்கு மதத்தை துணைக்கு அழைச்சு வரமாட்டீங்கன்னு நம்புறேனையா..!!? அப்பிடி பர்த்தாலும் இந்து மதத்திலயே இதை ஆதரித்த நிலையில் கடவுள்களே இருக்காங்னையா..ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  37.  ஆகுலன் கூறியது...
    காட்டான் மாமா சின்ன மருமகன மறந்திட்டியல்....

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 11:48:00 am GMT-07:00
    அட என்ர சின்ன மருமோன் வாங்கையா உங்கள நான் மறக்கிறதா..!!!!??? இந்த பதிவில எல்லாரும் பம்முற மாதிரி இருக்கையா.. நீயுமா பம்முற மருமோனே..!!?? உன்ர அண்ணண்ட செம்ப நெளிக்க விட்டுறாத.. ஹி ஹி ஹி
     

    பதிலளிநீக்கு
  38. @மதுரன் இயற்கையுடன் ஏன் ஒரினச் சேர்க்கையாளகளை ஒப்பீடு செய்கின்றீர்கள் துசி சொல்வது ஒரினச்சேர்க்கையாளர் உரிமை ஏன் நம்மவர் சீரலிக்கின்றனர்/வழங்க மறுக்கின்றனர் என்பதே கேள்வி இதை எப்படி இயற்கைக்கு முரன் என்பது ஆதிகாலம் தொட்டு ஒரினச் சேர்க்கை வாழ்வு இருக்கு  இதிகாசத்தில் அனுமான்,கர்ணன், என ஒரினச் சேர்க்கையில் இருந்தவர்கள் வடஇந்திய வால்மீகியில் இது தெளிவா விரிவாக்கப்பட்டதை பின் வந்த கம்பன் மர்றியது இலக்கியம் அதைத்தான் நாம் படிப்பது.அப்படியான அமைப்பில் இருந்துவிட்டு இதை கேவலமான விடயமாக பார்ப்பது ஏன் அவர்களின் செக்ஸ் உரிமையை ஏற்பது தவறு என்பது ஏன் மனிதகுலத்தில் மூன்று இனமும் இருக்கு இதைத் தடுக்க சமயங்கள் தீட்டியது பாவம் என்ற செயல் ஒருவரின் உரிமையைத் தடுப்போர் அவன் மீது வன்முறையை அல்ல செய்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  39. காச கொடுத்தா எதையும் போடலாமா..!? இந்த விளம்பரத்தை வைச்சே அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம்.. ஆனா இவர்கள் அதை  கலை கலாச்சாரம்ன்னு பீலா விடுறாங்கையா.. அப்படிப்பார்தா இவர்கள் கும்பிடும் அர்த்தநாதீஸ்வரர் யார்..? இதில் இவர்களுக்கு சாட்டையடி பதில் கொடுக்கலாம் ஆனால் அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தி விடுமோன்னு அஞ்சுகிறேன்...

    பதிலளிநீக்கு
  40. @மதுரன் நம்மில் பலருக்கு ஒரினச் சேர்க்கையாளர்கள் அதீத செக்ஸ் வெறியர் என்று பார்ப்பது தவறான பார்வை துசியைப் போல் நானும் ஒரினச் சேர்க்கையாள நண்பர்(ள்)களுடன் தான் வேலை செய்கின்றேன் அவர்கள் என்னுடன் இனிமையாக பழகுகின்றார்கள் எந்த வேற்றுமையும் நானும் அவர்களும் பார்ப்பதில்லை அவனின் விருப்பில் அவன் சுதந்திரமாக இருக்கும் போது நம்தேசம் அயல் தேசம் அவர்களை நசுக்கும் செயல் ஏன் அதுதான் துசி தேடும் விடை அதைவிடுத்து நீங்கள் அவர்கள்தான் மற்றவர்களை  செக்ஸ்  வெறியில்கொலை செய்வோராக என்னுவது நம்புரிதல்/கல்வியில் /சமூகத்தின் பார்வையில் உள்ள பிழை!

    பதிலளிநீக்கு
  41. @மதுரன் காமத்தில் தான் ஒரினச் சேர்க்கையாளன் வேறு படுவது என்பது தவறு அவர்கள் மெண்மையான உணர்வாளர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். ஒத்தவர்கள்(வெள்ளைத்தோல் ஐரோப்பியர்) மனைவியின் விருப்பம் இன்றிக்கூட காமத்தை தீர்பவர்கள்.

    பதிலளிநீக்கு
  42. கலாசாரக்காவல்கள் இப்போது பொருமுவது தம் புகழை அடைவதற்கு மற்றும்படி ஏன் ஒரினச் சேர்க்கையை ஸ்பெயின் போல் ஏற்றுக் கொள்ளலாம் பாரிஸ் விரைவில் வரும். நம்மவர்கள் எதிலும் தீர்க்கமான செயல்/திட்டம் இருப்பதில்லை ஒரினச் சேர்கையாளரை விருப்பின்றி ஆண்பிள்ளை/பெண்பிள்ளை என்று சொல்லி கலியாணம் முடித்துவிட்டு காலம் எல்லாம் இரு ஒவ்வாதவர்களின் சண்டையில் சீரலிவது வாழ்க்கை.இதை ஊரில் நேரில் பார்த்திருக்கின்றேன் அப்போது காரணம் புரியவில்லை(சின்னப்புள்ளை) இப்போது புரிகின்றது.

    பதிலளிநீக்கு
  43. தம்பி துசி கருத்துப் போட்டதுடன் என்பணி முடிந்து விடும் பதிவாளர் என்ன பின்னூட்டம் கொடுத்தார் என்று இதுவரை தனிமரம் யாரின் பதிவிலும் மீண்டும் போனதில்லை(பாரிஸ் கோப்பை கழுவல் இருக்கே ஸ்சப்பா) முதல் முறையாக நாளை வருவேன் உங்களிடம்! தனிமரம் நண்பனைக் கைவிடாது!

    பதிலளிநீக்கு
  44. நம்மில் இருக்கும் சுயவிருப்பத்தை பகிரவே அல்லது தேடலையே பதிவாகப் போட்டால் கும்மியடிக்க ஆட்கள் வரமாட்டினம் போல இப்படித்தான் இருக்கு எங்கள் புரிதல்கள் என்ன செய்வது மற்றவர்கள் உரிமை/சுதந்திரம் இப்படித்தான் இருக்கு இந்தத் திரத்தில் கருத்துச் சொன்னால் என்னையும் கேவலமாகப் பார்ப்பார்கள் !

    பதிலளிநீக்கு
  45. @காட்டான் ! 
    அர்த்தநாதீஸ்வரர்,சுயமாகத்தோன்றியவர் இது புரானம் ஒரு கண்டுபிடிப்பு தனக்கு உரியது என்பதால்தானே காப்பீடு செய்கின்றோன் இல்லை எனில் காப்பிபேஸ்ட் ஆகிவிடும்.இந்த இடத்தில் ஒன்று சொல்வேன் பஹவான் ஐயப்பன் ஒரினச் சேர்க்கை அல்ல மோகினியை(பெண்) நினைத்து சிவன் விட்ட விந்தில் உருவானவர் அவர் விந்தை தாங்கியதால் கையனார் என்பது கால ஓட்டத்தில் ஐயனார்( ஐயப்பன்) ஆனது வரலாறு இதையும் துசியின் கேள்வியையும் குழப்பி அவரின் பதிவின் தரத்தை கீழ் இறக்கி விடாதீர்கள்!

    பதிலளிநீக்கு
  46. ஓரின செயற்கையாளர்களை ஆதரிக்கலாமா..??:////


    எதுக்கு சந்தேகம்? கண்டிப்பாக ஆதரிக்கலாம்!

    பதிலளிநீக்கு
  47. எப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம்.///

    இதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கு! ஆனால் நாலு நல்லவிஷயங்களைப் படி என்றால் எல்லோரும் சொல்வது - நோ டைம்!

    பதிலளிநீக்கு
  48. ஒரு மனிதனின் தனி மனித சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோபுரிந்து கொள்ள முடியாதவன் என்னைபொருத்தவரை மனிதனாய் இருக்க எவ்வித தகுதியும் அற்றவன்.////

    கீழைத்தேய நாடுகள் பலவற்றில் இது இல்லை! பள்ளிக்கூடங்களிலும் இவை கற்பிக்கப்படுவதில்லைப் போலும்!

    பதிலளிநீக்கு
  49. ஓரின செயற்கை இன்று பெரும்பாலான நாடுகளில் அங்கீகரித்த ஒன்று ஆனால் இதை பற்றிய தெளிவான அறிவோ அவர்களை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமோ நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. ////

    ஆண் -பெண் உறவையே, ஏதோ தேசத் துரோகம் போலப் பார்ப்பவர்களுக்கு, ஓரினச்சேர்க்கை என்றால் கசக்கும்தானே!

    பதிலளிநீக்கு
  50. மிக சின்ன வயதிலேயே பிரான்ஸ் வந்ததாலேயோ என்னவோ என்னுடைய பாடசாலை வாழ்க்கையிலும் சரி இப்போது வேலைசெய்யும் இடத்திலும் சரி நிறைய ஓரின செயர்க்கையாளர்களை சந்திக்குறேன், அவர்கள் எனக்கு நண்பர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் ///

    அருமை துஷ்யந்தன்! ஒரு காலத்தில் எயிட்ஸ் நோயாளிகளுடன் பழகுவது தவறு என்று எம்மில் பலர் விலகி நடந்தோம்! ஏதோ, அவர்களைத் தொட்டாலே பாவம் என்பது போல!

    இப்போதும் பலர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்களாம்!

    பதிலளிநீக்கு
  51. கிடத்தட்ட 100 பேர் வேலைசெய்யும் இடத்தில் இவர்கள் ஓரின செயர்க்கையாளர்கள் என்று தெரிந்தும் இவர்களை சீண்டியோ மனம் நோகும்படியோ பேசியவர்கள் யாருமில்லை. ////

    அந்த இடத்தில் நம்மவர்கள் வேலை செய்வதில்லை என்று நினைக்கிறேன்!


    அட, அடுத்த வரியில் சொல்லியிருக்கிறீர்கள்! நன்று!

    பதிலளிநீக்கு
  52. என்னைப்பொறுத்தவரை செக்ஸ் என்பது அவரவர் விருப்பம், இரண்டு பேர் தங்கள் விருப்பத்துடனும் சம்மதத்துடனும் உறவில் ஈடுபடும்போது இங்கே தவறு என்று சொல்ல என்ன இருக்கின்றது. ///

    அதுதானே! எனது கருத்தும் இதுதான்!

    பதிலளிநீக்கு
  53. எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் தைரியமாக ஓரின செயற்கையை ஆதரித்தவர்கள் பழம் பெரும் நடிகர் எம்.ஆர் ராதா, அதன் பின் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் ஜான் ஆபிரிகாம் தான். ///

    மிகவும் ஆச்சரியமான உண்மை சார்!

    பதிலளிநீக்கு
  54. பிந்திய சேர்க்கை-: வானொலியில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நம்மவர் விளம்பரத்தின் ஒரு பகுதி. இந்த விளம்பரம் என்னைப்பொறுத்தவரை
    மிக கண்டனத்துக்கு உரியது.////

    அந்தக் கனேடிய வானொலி விளம்பரத்தை வன்மையாக கண்டிக்கிறேன்! இது ஒட்டு மொத்த தமிழினத்துக்கே அவமானம்!

    பதிலளிநீக்கு
  55. அருமையான, யாருமே தொடத்துணியாத விஷயத்தை எடுத்து பதிவு போட்டமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  56. <<<மதுரன் சொன்னது…
    துஷி
    நான் ஓரினச்சேர்க்கையை கொலையோடு ஒப்பிடவில்லை. தவறான உணர்வுகள் சரியல்ல என்பதை விளக்கத்தான் அப்படி கூறினேன்.மிகுதி பின்னூட்டங்களுக்கு நாளை வருகிறேன்<<<<


    உங்கள் கமெண்ட்ஸ் நான் புரிந்து கொண்ட அர்த்தத்தைத்தான் தருகிறது பாஸ், ஆனால் நீங்கள் வேறு ஒன்றை சொல்ல நினைத்து இருந்தால்
    என் இத்தகைய புரிதலுக்கு சாரி பாஸ்..

    உங்கள் நாளைய பதிலுக்கு காத்திருக்கிறேன் பாஸ்.

    பதிலளிநீக்கு
  57. <<<<<ஆகுலன் கூறியது...
    பெரிய விடயம் அழகாக சொல்லி இருக்குறீர்கள்..............

    நான் இதை என்னும் முழுமையாக ஆதரிக்க வில்லை.....நான் இருக்கும் இடத்தில் அவளவாக இவர்கள் இல்லை..<<<<<


    தேங்க்ஸ் பாஸ்...

    இதில் காட்டான் மாவின் கருத்தே என் கருத்தும் அவர்களை ஆதரிக்கா விட்டாலும் நோகடிக்காமல்
    இருந்தாலே மனிதனாய் மதித்தாலே போதும்.

    பதிலளிநீக்கு
  58. <<<<<காட்டான் சொன்னது…
    மதுரன் கூறியது...
    ரொம்ப நன்றி துஷி

    அப்புறம் காட்டான் மாமா மாமா என்று சொல்லுறீங்களேஅவர் சொந்த மாமாவா அல்லது அந்த மாமாவா

    ஹி ஹி பாருங்க இப்ப காட்டான் பாய்ஞ்சடிச்சு வருவார்

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011
    வந்திட்டேன்யா...
    ஐயா மதுரன் நான் மற்றவங்கமாதிரி கொமொண்ட போட்டமா போனமான்னு இருக்க மாட்டேன்யா அதுக்கு என்ன பதில் வருகுதென்னு பார்பேனையா இன்னைக்கு எனக்கு மூக்கு வேர்கேக்கையே யாரோ என்ர கோவணத் உருவப்போறாங்கன்னு தெரியுமையா.. நீங்க சொல்லுற அந்த மாமா வேலை பார்க்கிறதுக்கு நாலு குட்டிகளும் கொஞ்சம் புட்டிகலும் தேவையாமேய்யா..!!? என்னட்ட இருக்கிறது இந்த கோவணமும் கொக்குத்தடியும்தான்யா.. சந்தேகப்படாத அவன் என்ர உண்மையான மருமோன்தாய்யா.<<<<


    மதுரன் நான் அப்பவே சொன்னான் இல்ல மாமா வருவாரு என்று..... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  59. <<<ஆகுலன் சொன்னது…
    காட்டான் மாமா சின்ன மருமகன மறந்திட்டியல்...<<<


    இது மிக பெரிய குற்றம் ஆச்சே.....
    ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  60. ///காட்டான் சொன்னது…
    ஆகுலன் கூறியது...
    பெரிய விடயம் அழகாக சொல்லி இருக்குறீர்கள்..............

    நான் இதை என்னும் முழுமையாக ஆதரிக்க வில்லை.....நான் இருக்கும் இடத்தில் அவளவாக இவர்கள் இல்லை...

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 11:22:00 am GMT-07:00
    அட என்ர சின்ன மருமோனே உது ஊரெல்லாம் இருக்கையா.. நீங்க அத ஆதரிக்கிறதோ இல்லையோன்னு இல்லாமா அவர்களையும் மனிசனா நடத்துங்கோய்யா அதுவே போதுமையா..///


    அதே... அதே...

    பதிலளிநீக்கு
  61. //காட்டான் சொன்னது…
    என்ன மதுரன் உங்களோட அடிக்கடி எனக்கு சண்ட வருகுது.. ஏன் நாங்க முற்பிறப்பில தம்பதிகளா இருந்தோமோய்யா.. ஹி ஹி ஹி

    நீங்க சொல்லுறத ஏற்றுக்கொள்ள முடியாதையா.. உங்கட பாணியிலேயே சொல்லப்போனா.. இயற்கை படைத்த மனிசனிடம்தானே இயற்கையாக அந்த உணர்வுகள் வருது இதில எங்கையா செயற்கை இருக்கையா.. ஐயா நான் காட்டானையா. உங்கள மாதிரி எனக்கு விளக்கம் குறைவையா.. நீங்க நாளைக்கு வந்து அத விளங்கப்படுத்தினா நல்லா இருக்குமையா... நாளைக்கு வந்து பார்கிறேனையா உங்கட விளக்கத்தை..
    கடவுளை ஏற்காத நீங்க இதற்கு மதத்தை துணைக்கு அழைச்சு வரமாட்டீங்கன்னு நம்புறேனையா..!!? அப்பிடி பர்த்தாலும் இந்து மதத்திலயே இதை ஆதரித்த நிலையில் கடவுள்களே இருக்காங்னையா..ஹிஹிஹி//

    ஆஹா.... அப்போ உங்களுக்கும் மதுரனுக்கும்
    ராசி நல்ல ராசி போல, மதுரனுக்கும் எனக்கும் கூடசில விடயங்களில் அடிகடி முரண் பாடு வருது ஆனாலும் அவன் என் நல்ல நண்பன் என்பதில் மாற்றுக்கருத்து என்னிடம் எப்போதும் இல்லை.

    உண்மையான் இதைத்தான் நான் முதலிலும் கேட்டு இருந்தேன்
    ஓரினசெயர்க்கை இயற்க்கைக்கு அழிவு தருமென்றால்..அது ஓரின செயர்க்கையாலர்களை படைத்ததும்அவர்களுக்கு அந்த உணர்வை கொடுத்ததும் இயற்கைதானே???

    பதிலளிநீக்கு
  62. //காட்டான் சொன்னது…
    ஆகுலன் கூறியது...
    காட்டான் மாமா சின்ன மருமகன மறந்திட்டியல்....

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 11:48:00 am GMT-07:00
    அட என்ர சின்ன மருமோன் வாங்கையா உங்கள நான் மறக்கிறதா..!!!!??? இந்த பதிவில எல்லாரும் பம்முற மாதிரி இருக்கையா.. நீயுமா பம்முற மருமோனே..!!?? உன்ர அண்ணண்ட செம்ப நெளிக்க விட்டுறாத.. ஹி ஹி ஹி///


    நம்ம குட்டிப்பையன் ஆகுலனும்
    கருத்து சொல்ல பயப்படுது......
    என்னோட தனிய சட் பண்ணும்போது
    வார தைரியம் இங்கே வருது இல்ல ஹா ஹா விடுங்கோ மாமா குட்டி பையன் தானே பாவம் அவனும்.....

    பதிலளிநீக்கு
  63. தூக்கம் வந்துவிட்டதால்........அந்தரங்கம் புனிதமானது என்று சொல்லி விடை பெறுகிறேன்.

    நல்ல விரிவான அலசல் துஷ்..பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  64. //Nesan சொன்னது…
    @மதுரன் இயற்கையுடன் ஏன் ஒரினச் சேர்க்கையாளகளை ஒப்பீடு செய்கின்றீர்கள் துசி சொல்வது ஒரினச்சேர்க்கையாளர் உரிமை ஏன் நம்மவர் சீரலிக்கின்றனர்/வழங்க மறுக்கின்றனர் என்பதே கேள்வி இதை எப்படி இயற்கைக்கு முரன் என்பது ஆதிகாலம் தொட்டு ஒரினச் சேர்க்கை வாழ்வு இருக்கு இதிகாசத்தில் அனுமான்,கர்ணன், என ஒரினச் சேர்க்கையில் இருந்தவர்கள் வடஇந்திய வால்மீகியில் இது தெளிவா விரிவாக்கப்பட்டதை பின் வந்த கம்பன் மர்றியது இலக்கியம் அதைத்தான் நாம் படிப்பது.அப்படியான அமைப்பில் இருந்துவிட்டு இதை கேவலமான விடயமாக பார்ப்பது ஏன் அவர்களின் செக்ஸ் உரிமையை ஏற்பது தவறு என்பது ஏன் மனிதகுலத்தில் மூன்று இனமும் இருக்கு இதைத் தடுக்க சமயங்கள் தீட்டியது பாவம் என்ற செயல் ஒருவரின் உரிமையைத் தடுப்போர் அவன் மீது வன்முறையை அல்ல செய்கிறார்கள்!//


    நிஜமே........ ஓரின செயர்க்கையாலர்களை ஆதரிக்கா விட்டாலும். அவர்களை அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் அவர்களை நோகடிக்க படாது என்பதும் என் வாதமே....வெளிநாட்டவர் பழைய வரலாறுகளில் மட்டும் அல்ல நம் ஆதிகால முன்னோர்களும் ஓரின செயர்க்கையாலர்களாக
    இருந்து இருப்பதுக்கு எமிடம் ஆதாரம் இருக்கு.. பழைய காலத்தில் இருந்து பழக்கத்தில் இருக்கும் ஒரு உறவை ஆதரிப்பதில் என்ன சீரழிவு வந்திட போகுது.

    பதிலளிநீக்கு
  65. <<<<காட்டான் சொன்னது…
    காச கொடுத்தா எதையும் போடலாமா..!? இந்த விளம்பரத்தை வைச்சே அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம்.. ஆனா இவர்கள் அதை கலை கலாச்சாரம்ன்னு பீலா விடுறாங்கையா.. அப்படிப்பார்தா இவர்கள் கும்பிடும் அர்த்தநாதீஸ்வரர் யார்..? இதில் இவர்களுக்கு சாட்டையடி பதில் கொடுக்கலாம் ஆனால் அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தி விடுமோன்னு அஞ்சுகிறேன்...<<<<<


    உண்மை காட்டான் மாமா.
    தங்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தை விளம்பரம் என்ற பெயரில் போட்டு விட்டு, அது கட்டண விளம்பரம் என்று பின்னாலேயே சொல்வது
    சும்மா பம்மாத்து.. காசு கொடுத்த என்ன விளம்பரம் என்றாலும் போடுவார்களா??????இவர்களுக்கு தாங்கள் தான் தமிழர்களின் பிர நிதிகள் என்ற வெளம்பரம் வேணும்
    அதுக்கே இந்த குப்பை.

    பதிலளிநீக்கு
  66. //Nesan சொன்னது…
    @மதுரன் நம்மில் பலருக்கு ஒரினச் சேர்க்கையாளர்கள் அதீத செக்ஸ் வெறியர் என்று பார்ப்பது தவறான பார்வை துசியைப் போல் நானும் ஒரினச் சேர்க்கையாள நண்பர்(ள்)களுடன் தான் வேலை செய்கின்றேன் அவர்கள் என்னுடன் இனிமையாக பழகுகின்றார்கள் எந்த வேற்றுமையும் நானும் அவர்களும் பார்ப்பதில்லை அவனின் விருப்பில் அவன் சுதந்திரமாக இருக்கும் போது நம்தேசம் அயல் தேசம் அவர்களை நசுக்கும் செயல் ஏன் அதுதான் துசி தேடும் விடை அதைவிடுத்து நீங்கள் அவர்கள்தான் மற்றவர்களை செக்ஸ் வெறியில்கொலை செய்வோராக என்னுவது நம்புரிதல்/கல்வியில் /சமூகத்தின் பார்வையில் உள்ள பிழை!//


    நானும் அவதானித்த ஒன்று..
    ஓரின செயர்க்கயாளர்கள் மிக மென்மையான உள்ளம்
    படைத்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது நான், நேசன் அண்ணா பழகியவர்கள் மட்டும் இப்படியோ
    தெரியாது.... இது நான் அதிகம் கவனித்தது.

    பதிலளிநீக்கு
  67. //Nesan சொன்னது…
    கலாசாரக்காவல்கள் இப்போது பொருமுவது தம் புகழை அடைவதற்கு மற்றும்படி ஏன் ஒரினச் சேர்க்கையை ஸ்பெயின் போல் ஏற்றுக் கொள்ளலாம் பாரிஸ் விரைவில் வரும். நம்மவர்கள் எதிலும் தீர்க்கமான செயல்/திட்டம் இருப்பதில்லை ஒரினச் சேர்கையாளரை விருப்பின்றி ஆண்பிள்ளை/பெண்பிள்ளை என்று சொல்லி கலியாணம் முடித்துவிட்டு காலம் எல்லாம் இரு ஒவ்வாதவர்களின் சண்டையில் சீரலிவது வாழ்க்கை.இதை ஊரில் நேரில் பார்த்திருக்கின்றேன் அப்போது காரணம்புரியவில்லை(சின்னப்புள்ளை) இப்போது புரிகின்றது.///



    மிக சரி.......

    அப்புறம்.... கலாச்சார காவலர்களின் முக்கிய நோக்கமே
    இதை வைத்து தங்கள் புகழை ஒளிர வைப்பதே...

    பதிலளிநீக்கு
  68. //Nesan சொன்னது…
    தம்பி துசி கருத்துப் போட்டதுடன் என்பணி முடிந்து விடும் பதிவாளர் என்ன பின்னூட்டம் கொடுத்தார் என்று இதுவரை தனிமரம் யாரின் பதிவிலும் மீண்டும் போனதில்லை(பாரிஸ் கோப்பை கழுவல் இருக்கே ஸ்சப்பா) முதல் முறையாக நாளை வருவேன் உங்களிடம்! தனிமரம் நண்பனைக் கைவிடாது!//

    ஆஹா..... தேங்க்ஸ். வாங்கோ வாங்கோ , ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  69. //Nesan சொன்னது…
    நம்மில் இருக்கும் சுயவிருப்பத்தை பகிரவே அல்லது தேடலையே பதிவாகப் போட்டால் கும்மியடிக்க ஆட்கள் வரமாட்டினம் போல இப்படித்தான் இருக்கு எங்கள் புரிதல்கள் என்ன செய்வது மற்றவர்கள் உரிமை/சுதந்திரம் இப்படித்தான் இருக்கு இந்தத் திரத்தில் கருத்துச் சொன்னால் என்னையும் கேவலமாகப் பார்ப்பார்கள் !//


    இந்த பதிவுக்கு என் நண்பர்களே கருத்து போட அதிகம் வர வில்லை
    காரணம் எங்கே கருத்து போட்டால் நீயும் அவனா?? என்று நினைத்துவிடுவார்களோ
    என்ற பயம் போல்,, ஹீ ஹீ

    அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்க்காகவேல்லாம்
    என்னால் பதிவோ கருத்தோ போட முடியாது பாஸ்.எனக்கு எது சரியோ அதுதான் என் முடிவு.ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக நினைக்கட்டும்
    அவர்கள் பற்றி நோ கமெண்ட்ஸ்.

    பதிலளிநீக்கு
  70. //Nesan சொன்னது…
    @காட்டான் !
    அர்த்தநாதீஸ்வரர்,சுயமாகத்தோன்றியவர் இது புரானம் ஒரு கண்டுபிடிப்பு தனக்கு உரியது என்பதால்தானே காப்பீடு செய்கின்றோன் இல்லை எனில் காப்பிபேஸ்ட் ஆகிவிடும்.இந்த இடத்தில் ஒன்று சொல்வேன் பஹவான் ஐயப்பன் ஒரினச் சேர்க்கை அல்ல மோகினியை(பெண்) நினைத்து சிவன் விட்ட விந்தில் உருவானவர் அவர் விந்தை தாங்கியதால் கையனார் என்பது கால ஓட்டத்தில் ஐயனார்( ஐயப்பன்) ஆனது வரலாறு இதையும் துசியின் கேள்வியையும் குழப்பி அவரின் பதிவின் தரத்தை கீழ் இறக்கி விடாதீர்கள்!//

    உந்த மோகினி கதை எனக்கும் புதுசு
    தகவலுக்கு நன்றி நேசன் பாஸ்.

    பதிலளிநீக்கு
  71. <<<<ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    ஓரின செயற்கையாளர்களை ஆதரிக்கலாமா..??:////


    எதுக்கு சந்தேகம்? கண்டிப்பாக ஆதரிக்கலாம்!<<<<<<

    பாஸ் முதலில் கையை கொடுங்க, உங்க துணிவுக்கு என் வாழ்த்துக்கள்.
    சட்டென உடைச்சு உங்க முடிவை சொன்னீங்க பாருங்க, ரியலி கிரேட்

    பதிலளிநீக்கு
  72. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
    எப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம்.///

    இதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கு! ஆனால் நாலு நல்லவிஷயங்களைப் படி என்றால் எல்லோரும் சொல்வது - நோ டைம்!//


    அதே அதே, அடுத்தவன் அந்தரங்களை பேசுவது கேப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் இங்கு இருக்கும் பலருக்கு.

    பதிலளிநீக்கு
  73. ///ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    ஒரு மனிதனின் தனி மனித சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோபுரிந்து கொள்ள முடியாதவன் என்னைபொருத்தவரை மனிதனாய் இருக்க எவ்வித தகுதியும் அற்றவன்.////

    கீழைத்தேய நாடுகள் பலவற்றில் இது இல்லை! பள்ளிக்கூடங்களிலும் இவை கற்பிக்கப்படுவதில்லைப் போலும்!///

    ஹீ ஹீ
    பள்ளியில் சொல்லி கொடுக்கும் போது
    அங்கும் யாருடையேனும் அந்தரங்களை கிண்டி
    கேட்டுக்கொண்டு இருந்தால் படிப்பிச்சது எங்கே மண்டைக்கே ஏறப்போகுது..

    பதிலளிநீக்கு
  74. //////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    ஓரின செயற்கை இன்று பெரும்பாலான நாடுகளில் அங்கீகரித்த ஒன்று ஆனால் இதை பற்றிய தெளிவான அறிவோ அவர்களை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமோ நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. ////

    ஆண் -பெண் உறவையே, ஏதோ தேசத் துரோகம் போலப் பார்ப்பவர்களுக்கு, ஓரினச்சேர்க்கை என்றால் கசக்கும்தானே!///




    உண்மையே............ எனக்கும் பல நாட்களாவே இந்த டவுட்டு
    செக்ஸ் என்றாலே எல்லோரும் முகத்தை சுழிச்சி ஏதோ
    அசிங்கத்தை மித்தித்தது போல் ஒரு அக்டிங் ,

    அப்போ எப்புடி
    இவ்ளோ மக்கள் தொகை வந்திச்சு ???
    எல்லோரும் உலக மகா நடிகர்கள் சாமியோவ்

    பதிலளிநீக்கு
  75. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    மிக சின்ன வயதிலேயே பிரான்ஸ் வந்ததாலேயோ என்னவோ என்னுடைய பாடசாலை வாழ்க்கையிலும் சரி இப்போது வேலைசெய்யும் இடத்திலும் சரி நிறைய ஓரின செயர்க்கையாளர்களை சந்திக்குறேன், அவர்கள் எனக்கு நண்பர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் ///


    உண்மைதான் பாஸ்
    இன்னும் பலர் நம்மில், அதே நிலையிதான் இருக்கீறார்கள்

    அருமை துஷ்யந்தன்! ஒரு காலத்தில் எயிட்ஸ் நோயாளிகளுடன் பழகுவது தவறு என்று எம்மில் பலர் விலகி நடந்தோம்! ஏதோ, அவர்களைத் தொட்டாலே பாவம் என்பது போல!

    இப்போதும் பலர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்களாம்!///

    பதிலளிநீக்கு
  76. ///ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    கிடத்தட்ட 100 பேர் வேலைசெய்யும் இடத்தில் இவர்கள் ஓரின செயர்க்கையாளர்கள் என்று தெரிந்தும் இவர்களை சீண்டியோ மனம் நோகும்படியோ பேசியவர்கள் யாருமில்லை. ////

    அந்த இடத்தில் நம்மவர்கள் வேலை செய்வதில்லை என்று நினைக்கிறேன்!

    அட, அடுத்த வரியில் சொல்லியிருக்கிறீர்கள்! நன்று!///

    கரெட்டா கண்டு பிடிச்சி இருக்கீங்க பாஸ்
    ஹா ஹா

    பதிலளிநீக்கு
  77. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    என்னைப்பொறுத்தவரை செக்ஸ் என்பது அவரவர் விருப்பம், இரண்டு பேர் தங்கள் விருப்பத்துடனும் சம்மதத்துடனும் உறவில் ஈடுபடும்போது இங்கே தவறு என்று சொல்ல என்ன இருக்கின்றது. ///

    அதுதானே! எனது கருத்தும் இதுதான்!///


    அசத்தல் துணிச்சல் பாஸ் உங்களுக்கு
    நன்பேண்டா :))))

    பதிலளிநீக்கு
  78. ///ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் தைரியமாக ஓரின செயற்கையை ஆதரித்தவர்கள் பழம் பெரும் நடிகர் எம்.ஆர் ராதா, அதன் பின் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் ஜான் ஆபிரிகாம் தான். ///

    மிகவும் ஆச்சரியமான உண்மை சார்!//


    உண்மைகள் எங்கேயும் கொஞ்சமாய் தான் இருக்கும் போல பாஸ் :((

    பதிலளிநீக்கு
  79. ///ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    பிந்திய சேர்க்கை-: வானொலியில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நம்மவர் விளம்பரத்தின் ஒரு பகுதி. இந்த விளம்பரம் என்னைப்பொறுத்தவரை
    மிக கண்டனத்துக்கு உரியது.////

    அந்தக் கனேடிய வானொலி விளம்பரத்தை வன்மையாக கண்டிக்கிறேன்! இது ஒட்டு மொத்த தமிழினத்துக்கே அவமானம்!//

    உண்மைதான் பாஸ்... அந்த வானொலி செய்தது மிக இழிவான செயல். இது ஒட்டு மொத்த தமிழர்களையும் பாதிக்கும் செயல்.

    பதிலளிநீக்கு
  80. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…
    அருமையான, யாருமே தொடத்துணியாத விஷயத்தை எடுத்து பதிவு போட்டமைக்கு வாழ்த்துக்கள்!//தேங்க்ஸ் பாஸ். உங்கள் வரவு மிக நல்ல ஆதரவு கருத்துக்கள் ஒரு வித துணிவை கொடுக்குது.
    உண்மையை சொல்ல போனால் இது எப்பயோ எழுதி இருக்க வேண்டிய பதிவு.
    நம்மவர் மேல் உள்ள ஒரு பயத்தால் (பயம் என்று இவர்களுடன் சண்டை போட நேரமில்லை எனக்கு, ஹீ ஹீ)
    தள்ளி தள்ளி போட்டு இன்றுதான் நடப்பது நடக்கட்டும் என்று எழுதினேன்...

    நீங்கள் காட்டான் நேசன் போன்றவர்களின் விரிவான புரிதல் கருத்துக்கள் இதுபோல் பிதிவேளுதலாம் என்ற துணிவை தந்துவிட்டது தேங்க்ஸ் பிரெண்ட்ஸ்

    பதிலளிநீக்கு
  81. ///செங்கோவி கூறியது...
    தூக்கம் வந்துவிட்டதால்........அந்தரங்கம் புனிதமானது என்று சொல்லி விடை பெறுகிறேன்.

    நல்ல விரிவான அலசல் துஷ்..பாராட்டுகள்.///


    ஹீ ஹீ, தேங்க்ஸ் பாஸ்.

    உங்க கனவில் ஹன்சிகா வர
    வாழ்த்துக்கள் ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  82. கள்ளத்தோணி என்று சொன்னால் அடியடா பிடியடா என்று அலறுவார்கள். ஆனால்.. இவர்கள் மற்றவனை ஒருபால் அரைப்பால் காப்பால் என...்று சொல்லி மகிழ்வார்களாம். நாங்கள் எங்களுக்குள் அமைதி அடைந்துவிட்டு போகலாம்.. ஆனால்... இந்த தமிழ் வானொலியின் ஓரினச்சேர்க்கை விளம்பரம் கனேடிய ஊடகங்களால் இன்னமும் எத்தனை பல வருடங்களுக்கு மேற்கோள் காட்டப்பட்டு இழுபடப்போகின்றது என்று பாருங்கள்.கனடாவின் அனைத்து பிரதான செய்தி ஊடகங்களும் தமிழ் வானொலி எண்டு நல்ல தெளிவாய் சொல்லி எழுதி உள்ளன. இப்படி தமிழர்கள் பற்றி எதிர்மறையான செய்திகள் தமிழ் மக்கள் பற்றிய ஒரு எதிர்மறையான மனபதிவையே வேற்றின மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட விரும்பும் தமிழர்களுக்கு வேற்றின மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணக்கருக்கள் உருவாவது உதவிகரமாக இருக்காது.

    பதிலளிநீக்கு
  83. எப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம்.//

    ஹீ ஹீ.. என்னை தானே சொல்லுறாய்...

    பதிலளிநீக்கு
  84. ஒரு மனிதனின் தனி மனித சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோ
    புரிந்து கொள்ள முடியாதவன் என்னைபொருத்தவரை மனிதனாய்
    இருக்க எவ்வித தகுதியும் அற்றவன்.//

    மச்சி தத்துவம் எல்லாம் பேசுது

    பதிலளிநீக்கு
  85. மிக சின்ன வயதிலேயே பிரான்ஸ் வந்ததாலேயோ
    என்னவோ என்னுடைய பாடசாலை வாழ்க்கையிலும் சரி இப்போது
    வேலைசெய்யும் இடத்திலும் சரி நிறைய ஓரின செயர்க்கையாளர்களை
    சந்திக்குறேன், //

    ம்ம்ம் .

    பதிலளிநீக்கு
  86. உண்மையில் மிக தில்லான
    பாராட்ட தக்க விடயமே. //\

    தில்லிருந்த படியால் தான் MGR i சுட்டார்

    பதிலளிநீக்கு
  87. வணக்கம் பாஸ் மிகவிரிவான அலசல்

    இதில் என் கருத்து என்ன வென்றால்.ஒரு புகழ் பெற்ற அமேரிக்கன் பழமொழியுள்ளது(நம்ம ஊர்களில்தான் பழமொழி என்பார்கள் அங எப்படி சொல்கின்றார்களோ எனக்குத்தெரியாது)
    அதாவது”உனக்கு சுகந்திரம் இருக்கு என்பதற்காக நீ கையை உயர்த்தினால் அது மற்றவரின் மூக்கின் மேல் படக்கூடாது”அம்புட்டுதான்

    பதிலளிநீக்கு
  88. துஷ்யந்தன்...... முதல்ல எம்மவர்களைப் பொருத்தமட்டில் கொஞ்சம் புரிதலில் சிக்கல் உள்ள விஷயத்தை தொட்டிருக்கிறீர்கள். முடிந்தளவு ஆதாரத்துடன் சொல்ல முயன்றும் இருக்கிறீர்கள். உங்களின் புரிதல் எழுத்தில் தெரிகிறது. இருந்தாலும் இன்னும் சிறப்பாக இதை சொல்லியிருக்கலாம்.

    அடுத்து கனடா பற்றி நீங்கள் குறிப்பிடுவதால் இதை எழுதுகிறேன். நான் CTBC வானொலி கேட்டதில்லை, எப்போதுமே. நான் அந்த வானொலிக்காக வக்காலத்து வாங்கவுமில்லை. அதனால் அந்த விளம்பரம் பற்றி தெரியவில்லை. அதே போல் கனடாவில் வாழும் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகம் சார்பாக பேச எனக்கு அதிகாரமும் இல்லை. இருந்தாலும், பெரும்பாலான தமிழ் கனேடியர்கள் இங்குள்ள மக்களைப் போல் அடுத்தவர்களின் உரிமைகளை மதிக்கத்தெரிந்தவர்கள் என்பது நான் கவனித்தது. ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தில் ஒட்டுமொத்தமாக ஓர் சமூகத்தை நோக்கி விரல் சுட்டுவது சரியா தெரியவில்லை. தவிர, இதுபோன்ற விளம்பரங்கள் ஒரு கட்சி குறித்து இன்னோர் கட்சி என்ன செய்தியை தேர்தல் விளம்பரத்தில் சொல்ல நினைக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது. அதைவிடவும், முன்னாள் பிரதம மந்திரியின் உடல் குறைபாட்டை விளம்பரப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தது ஒரு தேசிய அரசியல் கட்சி. இது போல் இன்னும் நிறையவே என்னால் சொல்ல முடியும்.

    ஓரினச் சேர்க்கை பற்றி எம்மவர்களுக்கு அதிகம் அறிவோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமல் இருக்கலாம். அதை எப்படி களையலாம் என்பதையும் உங்கள் கட்டுரையில் சேர்த்தே சொல்லியிருக்கலாம். எப்படி அது எம்மவர்கள் மனதில் ஓர் தவறான புரிதலாக உருவானது என்பதையும், அது குறித்து தீர்வையும் இன்னோர் பதிவில் சொல்லுங்கோ.

    உங்களால் முடியும். :))

    பதிலளிநீக்கு
  89. @துஷியந்தன், காட்டான், நேசன்

    இங்கு கருத்திட்டுள்ள அனைவருமே ஆதரவாகவே கருத்திட்டுள்ளனர். என்னைத்தவிர. ஒருவேளை கருத்திட்டோரில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வாழ்பவராக இருப்பதாலாக இருக்கலாம். இவ்வாறான சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டு அதை ஏற்றுக்கொ பக்குவம் உங்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் வாழும் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியளவு மிகவும் குறைவு. இப்படி வித்தியாசமான உணர்ச்சி உள்ளவர்களை வித்தியாசமாகவே பார்க்கும் சமூகத்தில் இருப்பதால் எனக்கும் அது வித்தியாசமாக தெரிந்திருக்கலாம்.

    காட்டான்.. உணர்ச்சிகள் எல்லோருக்குமே இயற்கைதான். ஆனால் அந்த உணர்ச்சிகளை பயன்படுத்தும் மனித மனம் செயற்கையானது.
    ஒரு மனிதனின் நடத்தைகள், பாவனைகள், செயற்பாடுகள் எல்லாமே அவனது மனதில் பிறக்கும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே. அந்த உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் ஒருவன் நல்லவன் என்றோ தீயவன் என்றோ தீர்மாணிக்கப்படுகிறான்.
    நான் முதலில் சொல்ல வந்ததன் அர்த்தமும் இதுதான்.

    மிகுதிக்கு இரவு வருகிறேன்

    பதிலளிநீக்கு
  90. //ஐயா மதுரன் நான் மற்றவங்கமாதிரி கொமொண்ட போட்டமா போனமான்னு இருக்க மாட்டேன்யா அதுக்கு என்ன பதில் வருகுதென்னு பார்பேனையா இன்னைக்கு எனக்கு மூக்கு வேர்கேக்கையே யாரோ என்ர கோவணத் உருவப்போறாங்கன்னு தெரியுமையா.. நீங்க சொல்லுற அந்த மாமா வேலை பார்க்கிறதுக்கு நாலு குட்டிகளும் கொஞ்சம் புட்டிகலும் தேவையாமேய்யா..!!? என்னட்ட இருக்கிறது இந்த கோவணமும் கொக்குத்தடியும்தான்யா.. சந்தேகப்படாத அவன் என்ர உண்மையான மருமோன்தாய்யா.. //

    ஹா ஹா

    பதிலளிநீக்கு
  91. //என்ன மதுரன் உங்களோட அடிக்கடி எனக்கு சண்ட வருகுது.. ஏன் நாங்க முற்பிறப்பில தம்பதிகளா இருந்தோமோய்யா.. ஹி ஹி ஹி//

    புரியுது.. நீங்க உக்கட மனைவியோட ஒரே சண்டைன்னு புரியுது
    ஹி ஹி

    பதிலளிநீக்கு
  92. //ஆஹா.... அப்போ உங்களுக்கும் மதுரனுக்கும்
    ராசி நல்ல ராசி போல, மதுரனுக்கும் எனக்கும் கூடசில விடயங்களில் அடிகடி முரண் பாடு வருது ஆனாலும் அவன் என் நல்ல நண்பன் என்பதில் மாற்றுக்கருத்து என்னிடம் எப்போதும் இல்லை.//

    துஷி.. வந்தமா நல்ல பதிவு எண்டு கருத்த போட்டமா போனமா எண்டில்லாம அத பற்றி விவாதிக்கிறது நல்ல விசயம் தானே. சில வேளைகளில் பதிவில் சொல்லப்பட்ட விடயங்களை விட விவாதிக்கும் போது மேலும் பல விடயங்கள் தெரியவரலாம். சுவாரஷியமான விசயமும் கூட

    ஹி ஹி என்ன நகைச்சுவை என்றால் நானும் நீங்களும் விவாதிக்கிறத பலபேர் ரெண்டுபேருக்கும் சண்டை என்று நினைச்சுக்கொண்டிருக்கினம்.

    பதிலளிநீக்கு
  93. ஓரின செயற்கையாளர்களை ஆதரிக்கலாமா..??//

    கேள்வியே காத்திரமாக,
    தலைப்பே காத்திரமாக இருப்பதால்,

    ஆதரிக்கலாம் என்பதே என்னுடைய பதில்.

    காரணம் பூமியில் படைக்கப்பட்ட மனித ஜீவராசிகளுக்கு உணர்ச்சி என்பது பொதுவானது.
    ஒரு மனிதனின் அடி மனதில் தான் யாருடன் வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற உண்மை தெரிகின்றதோ?
    அப்போது தான் அவன் பரி பூரண சுதந்திரம் பெற்ற மனிதனாக மாறி விடுகின்றான்.
    ஆகவே ஒரு மனிதனுக்கு தனக்குப் பிடித்த துணையுடன் வாழும் உரிமை இருக்கின்றது என்பதனை எமது சமூகங்கள் சட்டமாக இயற்றி வைத்திருக்கும் போதும்,

    ஓரினச் சேர்க்கையாளர்களையும் நாம் மதித்து, அவர்கள் சேர்ந்து வாழும் போது,

    ஏனைய சமூகத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் சம உரிமையினை இவர்களுக்கும் வழங்கு ஆதரிப்பது சிறந்த செயற்பாடெனக் கருதுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  94. எப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம். ஏதோ
    தங்களை உத்தம சீலராக காட்டிக்கொண்டு அடுத்தவர்
    அந்தரங்களுக்குள் புகுந்து சும்மா பிரித்து மேய்ந்து விடுவார்கள். ஒரு மனிதனின் தனி மனித சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோ
    புரிந்து கொள்ள முடியாதவன் என்னைபொருத்தவரை மனிதனாய்
    இருக்க எவ்வித தகுதியும் அற்றவன்.//

    தமிழனோடு கூடப் பிறந்த விடயங்களே இவை தானே பாஸ்..

    இது ஒரு சுய இன்பம் போன்றது. அதாவது சுய இன்பம் என்று நான் கூறுவது பலருக்கு வியப்பினைத் தரலாம்.
    ஆனால் ஒரு மனிதனின் அந்தரங்கங்களை ஆராய்வது,
    அவனைப் பற்றி கேலி கிண்டல் புரிவது,
    நையாண்டி செய்வது என்பது தமிழனத்தின் பரம்பரை அணுக்களில் ஊறிய ஒரு விடயம்,.

    இது என்று மாறுகின்றதோ,
    அன்றைய தினம் எம் நாடுகளில் அபிவிருத்தி நிகழ்ந்து, மேற்குலகத்திற்கு நிகரான வளர்ச்சியினைச் சகல துறைகளிலும் எம் நாடுகள் பெற்று நிற்கும்.

    எம்மவர்களில் பலர் அடுத்தவனின் அந்தரங்களைக் கிளறுவதற்காக,

    குசு குசு ரகசியம் அடுத்தவனைப் பற்றிப் பகிர்வதற்காக (Gossip) நாளொன்றுக்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு மேற் செலவு செய்கின்றான் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்./

    பதிலளிநீக்கு
  95. நல்லதொரு இடுகை மச்சி,
    விரிவான ஆதாரங்களோடு குறிப்பெடுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

    எமது சமூகம் முன்னேற வேண்டும், ஓரினச் சேர்க்கை போன்ற பல விடயங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றால்,
    மீடியாக்களில் உள்ளவர்களை நாம் முதலில் மாற்ற வேண்டும்,
    கமர்சியல் மீடியாக்கள் என்ற போர்வையில் சமூகத்தினுள் நச்சு விதைகளை விதைப்போரால் தான் இன்றும் எம் சமூகம் அதள பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  96. அடுத்த பதிவில் சந்திப்போம் துஷி...
    -:)

    பதிலளிநீக்கு
  97. நண்பா கொஞ்சம் சென்சிடிவ் மேட்டர்தான். ஆனால் இதில் எல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை. என்னை பொறுத்தவரை ஒரே பாலினத்தின் மீது வரும் செக்ஸுவல் ஈர்ப்பு ஒரு விட மனநோய். இது இயற்கைக்கு மாறானதுதான்.

    நம் விருப்பத்திற்கிணங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறினால், திருமணத்தை தாண்டிய உறவுகள், தகாத உறவுகள் எல்லாமே சரி என்ற நிலைக்கே நாம் வர வேண்டி இருக்கும். வாழ்வை புரிந்து கொள்ளும் முறை தவறாக இருக்கும்போது எல்லாமே தவறாக அமைந்து விடுகிறது.


    வாழ்வு என்பது நாம் இந்தியர்களின் படி வேறு விதமாக நோக்கப்படுகிறது. அதே போல வெளிநாட்டவர்களுக்கு அது வேறு விதம். ஆனால் வெளிநாட்டு கலப்பு நாம் இந்தியர்களின் மன நிலையையும் மாற்றி வருகிறது என்பதே உண்மை. இவை என் கருத்துக்களே. நான் யார் மீதும் இதை திணிக்க விரும்ப வில்லை. நான் கலாச்சார காவலன் அல்ல. ஆகவே வெளிநாட்டு சட்டத்தை தீட்டும் உரிமை நமக்கு கிடையாது.

    பதிலளிநீக்கு
  98. துசி ஒரு பால்கோப்பி சொல்லப்பா தம்பி ராச்சுக்கும் சேர்த்து அவர் என்னுடன் மிகுந்த பாசம் தம்பி செம்பு வேனுமாம் அவர் சொல்வதைக் கேளுங்க.//

    வணக்கம் பாஸ் மிகவிரிவான அலசல்//

    இதில் என் கருத்து என்ன வென்றால்.ஒரு புகழ் பெற்ற அமேரிக்கன் பழமொழியுள்ளது(நம்ம ஊர்களில்தான் பழமொழி என்பார்கள் அங எப்படி சொல்கின்றார்களோ எனக்குத்தெரியாது)
    அதாவது”உனக்கு சுகந்திரம் இருக்கு என்பதற்காக நீ கையை உயர்த்தினால் அது மற்றவரின் மூக்கின் மேல் படக்கூடாது”அம்புட்டுதான்
    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 6:08:00 pm GMT-07:00
     //இதில் இவர் யாரை இழுக்கிறார் அமெரிக்கனை அவங்கள் இந்த விடத்தில் (ஒரினச் சேர்க்கையில் உலக வலம் வந்தவர்கள் போதகர்களின் லீலை என்று இந்த செயலை சந்தி சிரிக்க காரணமானவர்கள்) உண்மையில் மூக்கின் நுனிவரை சுதந்திரம் இருக்கனும் என்று தல தீனா படத்தில் பேசிய பஞ்சு டயலாக் இவர் இதைவிடுத்து ஏன் அமெரிக்கனை இழுக்கிறார்.ஒன்னுமா புரியல கேள்வி ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று தானே இவர் என்ன விஜய் மாதிரி குழப்புகின்றார் ஓ இவர் விஜய் ரசிகரா!?

    பதிலளிநீக்கு
  99. @மதுரன் ஐயா நீங்க சொல்வது ஒரு விடயத்தை மீள வலியுறுகின்றேன்!//@துஷியந்தன், காட்டான், நேசன்

    இங்கு கருத்திட்டுள்ள அனைவருமே ஆதரவாகவே கருத்திட்டுள்ளனர். என்னைத்தவிர. ஒருவேளை கருத்திட்டோரில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வாழ்பவராக இருப்பதாலாக இருக்கலாம். இவ்வாறான சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டு அதை ஏற்றுக்கொ பக்குவம் உங்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் வாழும் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ..(விரல்விட்டு எண்ணக்கூடியளவு மிகவும் குறைவு. இப்படி வித்தியாசமான உணர்ச்சி உள்ளவர்களை )வித்தியாசமாகவே பார்க்கும் சமூகத்தில் இருப்பதால் எனக்கும் அது வித்தியாசமாக தெரிந்திருக்கலாம்.//
     இப்படி வித்தியாசமானவர்கள் என்று ஏன் ஐயா பிரித்துப்பார்கின்றீர்கள் அவர்களும் மனிதர்கள் தானே வித்தியாசம் எதில் இனைவின் விருப்பில் மாத்திரம் தானே அதை அவர்கள் நான்கு சுவருக்குள் தானே  செய்கின்றார்கள் //இதற்குப்போய் தண்டிப்பது தவர அவர்களையும் அன்புடன் நேசியுங்கள் என்பதே ஆவல் வீன்விளம்பரம் வேண்டாம் நம் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம்  என்பதே என் வேண்டு கோள். //
    மதுரன் ஐயா ,ராச் தம்பி உங்கள் மீது எந்த தனிப்பட்ட கோபம்/கால்புனர்வு இல்லை தனிமரத்திற்கு கருத்து மோதல் என்றாள் செம்பு நெளியத்தான்  வரும் நீங்கள் என் நண்பர்கள் புரிந்துகொள்ளுங்கள்.

    தம்பி துசி இப்படி உங்கள் வீட்டில் கோப்பி
    குடித்துக்கொண்டிருந்தால் தனிமரம் வீட்டிலும் வேலை இருக்கு நான் போய்ட்டுவாரன்.வந்தவேலை முடிந்தது.மறக்கவேண்டாம் கோப்பை கழவ போகனும்!அவ்வ்!

    பதிலளிநீக்கு
  100.  ரெவெரி கூறியது...
    அடுத்த பதிவில் சந்திப்போம் துஷி...
    -:)

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 10:11:00 pm GMT-07:00 

    ஆகா இதுதான்யா சூப்பர் கொமொண்டு.. நாமதான் கொஞ்சம் வாய கொடுத்திட்டமோ...!!??

    பதிலளிநீக்கு
  101. இதில இப்ப மதுரன் சொல்வதை நான் ஓரளவு ஏற்றுக்கொள்கிறேன்.. நானும் அங்கு இருந்தால் அவர்களைப்பற்றிய புரிந்துணர்வு இல்லாது போயிருக்கலாம்.. அதேவேளை நாங்க இங்கு இப்பிடியானவர்களை நேரடியாக சந்திப்பதாலும் அவர்களுடன் வேலை செய்வதாலும் அவர்களை புரிந்து கொள்கிறோம்..

     அதே நேரத்தில் கீழதேய நாடுகளில் பெரும்பான்மையான ஹோமோ செக்சுவல் மனிதர்கள் சமூக கட்டுப்பாடுகளுக்கு பயந்து அதை வெளிக்காட்டுவதில்லை ஆகையால் அவர்களைப்பற்றிய புரிந்துணர்வு அங்கு இல்லை என்றே கூறலாம்.. ஏன் பிரான்சில் 1982ல் வந்தமுதலாவது சோசலிச கட்சி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் ஆட்சியில்தான் இவர்களுக்கு எதிரான சட்டமே நீக்கப்பட்டது.. முன்னர் இப்படி வாழ்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்..

    பதிலளிநீக்கு
  102. எம் ஆர் ராதா மேட்டர் நான் அறியாத தகவல்

    பதிலளிநீக்கு
  103. அட வெளங்கதவனுங்களா? இதுக்கும் மைனஸ் ஓட்டா?

    பதிலளிநீக்கு
  104.  K.s.s.Rajh கூறியது...
    வணக்கம் பாஸ் மிகவிரிவான அலசல்

    இதில் என் கருத்து என்ன வென்றால்.ஒரு புகழ் பெற்ற அமேரிக்கன் பழமொழியுள்ளது(நம்ம ஊர்களில்தான் பழமொழி என்பார்கள் அங எப்படி சொல்கின்றார்களோ எனக்குத்தெரியாது)
    அதாவது”உனக்கு சுகந்திரம் இருக்கு என்பதற்காக நீ கையை உயர்த்தினால் அது மற்றவரின் மூக்கின் மேல் படக்கூடாது”அம்புட்டுதான்

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 6:08:00 pm GMT-07:00
    வாங்க மாப்பிள இதில அமெரிக்கன் என்ன சொல்லுறான்ரத விட்டுட்டு உங்க கருத்த விலாவாரியா சொன்னா நல்லா இருக்குமேய்யா(மதுரன விட்டுட்டு உங்கள பிடிச்சாச்சுங்கோ..ஹி ஹி ஹி மதுரன் சிரிக்கிற சத்தம் கேக்குது பேந்து ஒரு பதிவில வராமயோ போயிடுவீங்க..ஹி ஹி ஹி)

    பதிலளிநீக்கு
  105. அடடா ஓரினச் சேர்க்கயைாளன் கூட யாரோ பதிவு படிக்கிறாங்கள் போல மைனஸ் விழுந்திருக்கு...

    பதிலளிநீக்கு
  106. அது ஏன் ஈழத்தவரின்ர எந்த தமிழ் விளம்பரமென்றாலும் மணியண்ணை என்று தான் தொடங்குகிறார்கள். தமிழ்ழ வேற பெயரில்லையா?

    பதிலளிநீக்கு
  107. இந்திய பாரம்பரியத்தில் ஓரினச்சேர்க்கை மிக நீண்டகாலமாக இருந்து வருவதுதான். பல லட்சம் தென்னிந்தியர்கள் வழிபடும் சபரிமலை அய்யப்பன் சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்தவன் (அது சாத்தியமா என்பது வேறு செய்தி) என்றும், அரவாணை கிருட்டிணன் மணந்தான் என்றும் நமது புராணங்கள் கூறுகின்றன.

    எனவே, பாரம்பரியத்தில் இல்லாதது, இயற்கைக்கு முரணானது என்றெல்லாம் பேசுவது வெட்டிவேலை. மேலும் ஓரின சேர்க்கை ஒரு மனநோய் என்பதும் ஆதரமற்ற தவறான கருத்து.

    இந்த சிக்கல் குறித்து விரிவாக காண:

    "The Right that Dares to Speak its Name"

    http://www.tarshi.net/downloads/The_right%20that_Dares_to_Speak_its_Name.pdf

    "The Yogyakarta Principles"

    http://www.yogyakartaprinciples.org/

    பதிலளிநீக்கு
  108. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  109. //////பாலா சொன்னது…
    நண்பா கொஞ்சம் சென்சிடிவ் மேட்டர்தான். ஆனால் இதில் எல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை. என்னை பொறுத்தவரை ஒரே பாலினத்தின் மீது வரும் செக்ஸுவல் ஈர்ப்பு ஒரு விட மனநோய். இது இயற்கைக்கு மாறானதுதான்.

    நம் விருப்பத்திற்கிணங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறினால், திருமணத்தை தாண்டிய உறவுகள், தகாத உறவுகள் எல்லாமே சரி என்ற நிலைக்கே நாம் வர வேண்டி இருக்கும். வாழ்வை புரிந்து கொள்ளும் முறை தவறாக இருக்கும்போது எல்லாமே தவறாக அமைந்து விடுகிறது.


    வாழ்வு என்பது நாம் இந்தியர்களின் படி வேறு விதமாக நோக்கப்படுகிறது. அதே போல வெளிநாட்டவர்களுக்கு அது வேறு விதம். ஆனால் வெளிநாட்டு கலப்பு நாம் இந்தியர்களின் மன நிலையையும் மாற்றி வருகிறது என்பதே உண்மை. இவை என் கருத்துக்களே. நான் யார் மீதும் இதை திணிக்க விரும்ப வில்லை. நான் கலாச்சார காவலன் அல்ல. ஆகவே வெளிநாட்டு சட்டத்தை தீட்டும் உரிமை நமக்கு கிடையாது/////

    நண்பர் பாலாவின் கருத்துடன் நானும் ஒத்துப்போகின்றேன்.
    ஏன் என்றால் எங்கள் ஊர்களில் இப்படியான சம்பவங்களை விரல் விட்டு எண்ணலாம்.
    ஒவ்வொறு சமூகத்திற்கும் ஒவ்வொறு கலாச்சார நிர்ணயங்கள் உண்டு அல்லாவா நண்பரே எனவே அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அந்த சமூகத்தை சார்ந்தவர்களுக்கு இருக்கு..உதாரணத்திற்கு மேலத்தேய நாடுகளில் ஒரு இனச்சேர்க்கை அங்கிகரக்கப்பட்ட நாடுகளில் ஈழத்தவர் ஒருவர் ஒர் இனச்செயற்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் அது தவறு ஆனால் ஈழத்தில் அவரது சமூகத்தில் இப்படி நடக்கும் போது அவர் நிச்சயமாக அதற்கு எதிராக குரல் கொடுப்தோ இல்லை அதை எதிர்ப்பதோ பிழை இல்லை என்பது என் கருத்து.என்னைப்பொறுத்தவை ஒரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானது.

    பதிலளிநீக்கு
  110. //இரண்டு பேர் தங்கள் விருப்பத்துடனும் சம்மதத்துடனும் உறவில் ஈடுபடும்போது இங்கே தவறு என்று சொல்ல என்ன இருக்கின்றது. அதைவிட நமக்கு ஒரு உணவு பிடிக்கின்றது அதை சாப்பிடுகிறோம், எங்களுக்கு பிடிக்காத ஒரு உணவை இன்னொருவன்
    சாப்பிடுகின்றான் என்பதற்காக அய்யயோ... அவன் கெட்டவன்,
    அவனை ஒதுக்கி வைக்க வேண்டும், எங்கள் மானமே போய் விட்டது, என்று கத்தி கூச்சல் போடவா முடியுமா??//

    இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது..ஏன் என்றால் நண்பர் பாலா சொன்னது போல திருமணத்தை தாண்டிய உறவுகள்,கல்யாணத்துக்கு அப்பால் தனது துணைதவிர்ந்த ஏனையோருடன் உறவுகொள்ளுதல் போன்றவிடயங்கள் அவர்களின் விருப்பத்தின் பெயரில் ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  111. @அருள் ஐயா!
     //
    பாரம்பரியத்தில் ஓரினச்சேர்க்கை மிக நீண்டகாலமாக இருந்து வருவதுதான். பல லட்சம் தென்னிந்தியர்கள் வழிபடும் சபரிமலை அய்யப்பன் சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்தவன் (அது சாத்தியமா என்பது வேறு செய்தி) என்றும், அரவாணை கிருட்டிணன் மணந்தான் என்றும் நமது புராணங்கள் கூறுகின்றன.//

    உங்களுக்கு சிறுவிளக்கம் அடியவனின் ஐயப்பன் +!சிவனுக்கும் விஸ்னுவுக்கும் பிறந்த என்பது தவறு இதன் முழுமையான விடயம் சிவன் விஸ்னு மோகினி அவதாரம் எடுத்தபோது ஏற்பட்ட கிளர்ச்சி அதாவது(ஒரு வயசுப்போடியன் ஹன்சிஹாவை நினைத்துக் கொண்டு உறங்கும் போது அவனை அறியாமல்/அறிந்து  வெளியேறும் விந்து ( இதுக்கு விஞ்ஞானம் வேறு பெயர் கொடுக்கின்றது)அப்படி வெளியேறிய விந்தை விஸ்னு கைகளில் தாங்கினார் இதை விபரமாக ஐயப்பன் சரித்திரம் நூல் (நர்மதா பதிப்பகம் ) கூறுகின்றது அதைவிடுத்து பலர் இந்த விடயத்தை ஒரினச் சேர்க்கை என்ற விடயத்துக்குள் சோடிப்பது குஸ்பூ பிரபு உடன் குடித்தனம் நடுத்தும்போது ஏன் கர்பம் தரிக்கவில்லை என்று பின்னாளில் ஒரு கேடுகெட்ட நிருபர் கேட்டதைப் போல இருக்கு.//
    ஐயா விடயம் ஒரினச் சேர்க்கையாளரை ஆதரிக்கலாமா இல்லையா என்பதே! நீங்கள் படித்தவர்களே இப்படி ஆன்மீகத்தையும் அறிவியலையும் குழப்பளாமா சார்!
    தவறு இருப்பின் அடியேனின் கூற்றை மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  112. ராசுக்குட்டி நீங்க ரெம்ப குழம்பிபோய் உள்ளீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களை தவராக நினத்து விடுவார்களோன்னு.. இது ஒரு விவாதம் நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு கொஞ்சம் குழப்பமா இருக்கையா நான் இப்பிடியான ஹோமோ செஸ்சுவல்களுடன் பழகி இருக்கேன்யா இத எழுதுவதைக்கூட நான் வெக்கப்பட மாட்டேன்யா.. உங்கள் கருத்துக்களை பார்கும்போது நீங்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் ஏன் கூட பயபடுகிறீர்கள்.. கல்யாணம் கட்டாத வயசுப்பொடியங்க நீங்க உங்களையும் தப்பா நினைச்சிடுவாங்கோன்னுதானே.. இப்பிடி பார்தா நாளைக்கு நாங்க எயிஸ் பத்தி எழுதினா அவருக்கு எயிஸ்ன் கத வந்தாலும் ஆச்சரியமில்லை.. என்னை பொறுத்த வரை இந்த அம்மா கட்சிக்காரன் எழுதின பதிவில இதுதான் சிறந்த பதிவு.. ஒரு விடயத்தை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும் எனது அப்பாவிடம் கூட இந்த பதிவை வாசிக்க சொன்னேன்.. வயசு போனவங்களுக்கு இருக்கும் தெளிவு ஆச்சரியமளிக்கிறது... மாப்பிள நீ பயபடும் காரணம் எனக்கு தெரியுது உன்ர காதலுக்கு எனது வாழ்த்துக்கள்.. மாப்பிள அரசியல் பதிவுல கருத்து போட பயப்பிட்டா புரிந்து கொள்ளலாம் இதுல போய்... ஹி ஹி ஹி

    அப்பாடா செம்ப நெளிக்க ஒருத்தர் கிடைச்சிட்டாரையா ஹிஹி

    பதிலளிநீக்கு
  113. இன்றைய நிலையில் மிகவும் தேவியான பதிவு மனித வுரவுகள் இப்படி மாறுபட்ட பாலுறவுகளால் சீரழிவது உண்மையில் வருந்த வேண்டிய செய்தி மனது எல்லாவற்றையும் ஆசைகொள்ளும் அனாலும் அவற்றில் எல்லாவற்றிலும் மனதினை செலவிடகூடது கூட்டு குடும்ப உறவுகளும் குடும்ப உறவுகளும் இதனால் கேடு அடையும். இடுக்கைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  114. யோ இந்த தனிமரத்த பிடிச்சு வையுங்கோய்யா இந்தாள் சாமி எப்பிடி வந்தாரென்று கதையளக்கிறார்... இல்லாதவர் எப்பிடி ஐயா வர முடியும்..!!???

    பதிலளிநீக்கு
  115. ...
    அது ஏன் ஈழத்தவரின்ர எந்த தமிழ் விளம்பரமென்றாலும் மணியண்ணை என்று தான் தொடங்குகிறார்கள். தமிழ்ழ வேற பெயரில்லையா?

    திங்கள், 12 செப்டெம்ப்ர், 2011 12:18:00 am
    யோ மாப்பிள இது நல்லாயில்ல என்ர மணியண்ண எனக்கு பிடிக்குதையா அதுக்கு நீங்க ஏன்யா வரிஞ்சு கட்டுறீங்க.. வேற பெயர்கள் இருக்கையா இப்ப எங்கட பிள்ளையளுக்கு இவங்க வைக்கிற பேர எனக்கு தமிழ்ல எழுத வருகுதிலைலையா..!!!!!???

    பதிலளிநீக்கு
  116. Nesan கூறியது...
    @அருள் ஐயா!
    // //ஐயா விடயம் ஒரினச் சேர்க்கையாளரை ஆதரிக்கலாமா இல்லையா என்பதே! நீங்கள் படித்தவர்களே இப்படி ஆன்மீகத்தையும் அறிவியலையும் குழப்பளாமா சார்!// //

    ஆதரிக்கலாமா? இல்லையா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். "ஆதரிக்க மாட்டோம்" என்று ஒருவர் கூறுவதால் அது தவறு என்று கூறிவிட முடியாது என்பதே எனது கருத்து. ஏனெனில், ஓரின சேர்க்கை என்பது அடிப்படை மனித உரிமையுடன் தொடர்புடைய விடயம்.

    இந்திய நீதிமன்றம் ஏற்கனவே ஓரின சேர்க்கை என்பது தனிமனித உரிமை, கண்ணியத்துடன் வாழும் உரிமை என்றெல்லாம் விளக்கி உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து இங்கே காண்க: India's Historic Ruling on Gay Rights

    http://www.time.com/time/world/article/0,8599,1908406,00.html?iid=sphere-inline-bottom

    இந்திய பாரம்பரியத்தில் ஓரின சேர்க்கை ஒரு அங்கமாக இருந்துவருகிறது என்பதும் ஏற்கனவே விரிவாக விளக்கப்பட்ட விடயம்தான். அதனை இங்கே காண்க: http://www.galva108.org/samesex.html

    http://www.yorku.ca/irjs/Archives/F20/FB206.pdf

    காமசூத்திரத்திலும் கஜுரோகா சிற்பத்திலும் கூட ஓரின சேர்க்கை உண்டு. காண்க: http://en.wikipedia.org/wiki/File:Samesexloveindia.jpg

    பொதுவாக ஓரின சேர்க்கை என்பது மனநோய் என்று பலர் கூறிவருகின்றனர். ஆனால், உண்மையில் ஓரின சேர்க்கையை எதிர்ப்பதுதான் ஒருவகையான மனநோயாகக் கருதப்படுகிறது - Homophobia!

    பதிலளிநீக்கு
  117. இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது..ஏன் என்றால் நண்பர் பாலா சொன்னது போல திருமணத்தை தாண்டிய உறவுகள்,கல்யாணத்துக்கு அப்பால் தனது துணைதவிர்ந்த ஏனையோருடன் உறவுகொள்ளுதல் போன்றவிடயங்கள் அவர்களின் விருப்பத்தின் பெயரில் ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ளலாமா?
    திங்கள், 12 செப்டெம்ப்ர், 2011 1:22:00 am GMT-07:00
     // 
    தம்பி ராச் நீங்கள் விடயத்தை மீறி விதண்டாவாதம் செய்கின்றீர்கள் சமூகத்தில் இருக்கும் செயல்களை அங்கிகரீக்கனும் அடக்குவது பாரிய பின்விளைவைத் தரும். ஒருத்தன்/தி ஒரினச் சேர்க்கையாளர் என்றாள் ஏன் சமுகம் தடுக்கனும் அதில் ஏன் ஐயா கலாசாரக்காவலர் வேசம் விஜய் படுத்தை தூகினால் சும்மா பால் பீர் ஊத்தி நாறடிக்கின்றீங்க ஆனால் உண்மையை சொன்னால் சமுகத்தில் அடக்கியும் அவனை/ அவளை கேவலமாக தாக்குவதும் ஏன் அதைவிடுத்து தேவையற்ற இன்னொரு உறவு வேலிதாண்டிய வெள்ளாடு என்று பதிவின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல்  சமுக்தை திருத்தவந்த போக்கிரி என்று ஒரவனின் உரிமை /சமத்துவம் /சுதந்திரம் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள் ஓ நீங்கள் இருப்பது பினம்தின்னும் ஆட்சியிலும் கூராயுதம் வீரர்களுக்கு விசில் அடிக்கவும் தானா//ஹீ ஹீ //
    .நண்பா இந்த ராச் என்னை ரொம்ப இம்சை கொஞ்சம் சொல்லுங்க சரன்யாகுட்டி தேடுது தனிமரத்துடன் கில்லி வேண்டாம் எனறு அவ்வ்!

    பதிலளிநீக்கு
  118. ////காட்டான் சொன்னது…
    ராசுக்குட்டி நீங்க ரெம்ப குழம்பிபோய் உள்ளீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களை தவராக நினத்து விடுவார்களோன்னு.. இது ஒரு விவாதம் நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு கொஞ்சம் குழப்பமா இருக்கையா நான் இப்பிடியான ஹோமோ செஸ்சுவல்களுடன் பழகி இருக்கேன்யா இத எழுதுவதைக்கூட நான் வெக்கப்பட மாட்டேன்யா.. உங்கள் கருத்துக்களை பார்கும்போது நீங்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் ஏன் கூட பயபடுகிறீர்கள்.. கல்யாணம் கட்டாத வயசுப்பொடியங்க நீங்க உங்களையும் தப்பா நினைச்சிடுவாங்கோன்னுதானே.. இப்பிடி பார்தா நாளைக்கு நாங்க எயிஸ் பத்தி எழுதினா அவருக்கு எயிஸ்ன் கத வந்தாலும் ஆச்சரியமில்லை.. என்னை பொறுத்த வரை இந்த அம்மா கட்சிக்காரன் எழுதின பதிவில இதுதான் சிறந்த பதிவு.. ஒரு விடயத்தை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும் எனது அப்பாவிடம் கூட இந்த பதிவை வாசிக்க சொன்னேன்.. வயசு போனவங்களுக்கு இருக்கும் தெளிவு ஆச்சரியமளிக்கிறது... மாப்பிள நீ பயபடும் காரணம் எனக்கு தெரியுது உன்ர காதலுக்கு எனது வாழ்த்துக்கள்.. மாப்பிள அரசியல் பதிவுல கருத்து போட பயப்பிட்டா புரிந்து கொள்ளலாம் இதுல போய்... ஹி ஹி ஹி

    அப்பாடா செம்ப நெளிக்க ஒருத்தர் கிடைச்சிட்டாரையா ஹி.ஹி.ஹி.ஹி///

    மாமா இந்த ஒரினச்சேர்க்கையாளர்கள் எங்கள் ஊரில் விரல்விட்டு என்னலாம்.அப்படி ஒன்று இரண்டு பேர்கள் இருந்தாலும்..வெளிநாடுகளில் இருப்பதுபோல...சர்வசாதாரணமாக வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.அதைவிட தமிழனின் பண்பாடு கொஞ்சமும்(கவனிக்க கொஞ்சமும்)இன்னும் எங்கள் மண்ணில் மிஞ்சி இருக்கின்றது.இதை நான் உங்களுக்கு சொல்லவேண்டியது இல்லை என்னைவிட உங்களுக்கு எங்கள் மண்ணைப்பற்றி நன்றாக தெரியும் ஏன் என்றால் உங்கள் வயதில் கால்வாசிதான் எனக்கு(அப்ப மாமாவின் வயது என்ன?)எனவே எங்கள் சமூகத்தில் ஒர் இனச்செயற்கை என்பது முற்றிலும் தவரான ஒன்றாகவே இன்றுவரை இருக்கின்றது ஏன் அங்கு இருக்கும் மக்கள் பலரிடம் கேட்டுப்பாருங்கள் ஹோமோ செக்ஸ் என்றால் என்ன என்று பாதிப்பேருக்கு தெரியாது..நீங்கள் எடுத்துச்சொன்னால் உங்களை ஒரு மாதிரியாகப்பார்ப்பார்கள்.இதுதான் இங்கு கலாச்சாரம்.இதைத்தான் மதுரனும் சொல்கின்றார்.எனவே இந்த விடயத்தில் நானும் மதுரனுக்கு ஆதரவு ஒரு இனச்சேர்க்கை என்பது நிச்சயம் இயற்கைக்கு முரணானதே.

    பதிலளிநீக்கு
  119. ///தம்பி ராச் நீங்கள் விடயத்தை மீறி விதண்டாவாதம் செய்கின்றீர்கள் சமூகத்தில் இருக்கும் செயல்களை அங்கிகரீக்கனும் அடக்குவது பாரிய பின்விளைவைத் தரும். ஒருத்தன்/தி ஒரினச் சேர்க்கையாளர் என்றாள் ஏன் சமுகம் தடுக்கனும் அதில் ஏன் ஐயா கலாசாரக்காவலர் வேசம் விஜய் படுத்தை தூகினால் சும்மா பால் பீர் ஊத்தி நாறடிக்கின்றீங்க ஆனால் உண்மையை சொன்னால் சமுகத்தில் அடக்கியும் அவனை/ அவளை கேவலமாக தாக்குவதும் ஏன் அதைவிடுத்து தேவையற்ற இன்னொரு உறவு வேலிதாண்டிய வெள்ளாடு என்று பதிவின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் சமுக்தை திருத்தவந்த போக்கிரி என்று ஒரவனின் உரிமை /சமத்துவம் /சுதந்திரம் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள் ஓ நீங்கள் இருப்பது பினம்தின்னும் ஆட்சியிலும் கூராயுதம் வீரர்களுக்கு விசில் அடிக்கவும் தானா//ஹீ ஹீ //
    .நண்பா இந்த ராச் என்னை ரொம்ப இம்சை கொஞ்சம் சொல்லுங்க சரன்யாகுட்டி தேடுது தனிமரத்துடன் கில்லி வேண்டாம் எனறு அவ்///

    பாஸ் நான் நான் துசியின் கேவிகுத்தான் பதில் கேள்வி கேட்டுள்ளேன்...அதாவது

    துசி சொன்னது.....
    /////இரண்டு பேர் தங்கள் விருப்பத்துடனும் சம்மதத்துடனும் உறவில் ஈடுபடும்போது இங்கே தவறு என்று சொல்ல என்ன இருக்கின்றது. அதைவிட நமக்கு ஒரு உணவு பிடிக்கின்றது அதை சாப்பிடுகிறோம், எங்களுக்கு பிடிக்காத ஒரு உணவை இன்னொருவன்
    சாப்பிடுகின்றான் என்பதற்காக அய்யயோ... அவன் கெட்டவன்,
    அவனை ஒதுக்கி வைக்க வேண்டும், எங்கள் மானமே போய் விட்டது, என்று கத்தி கூச்சல் போடவா முடியுமா??//
    இவரது இந்தக்கருத்துக்கு என் கேள்வி?
    அப்படி என்றால்
    திருமணத்தை தாண்டிய உறவுகள்,கல்யாணத்துக்கு அப்பால் தனது துணைதவிர்ந்த ஏனையோருடன் உறவுகொள்ளுதல் போன்றவிடயங்கள் அவர்களின் விருப்பத்தின் பெயரில் ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ளலாமா?

    இதற்கு என்ன பதில்?

    அதைவிட இன்றும் எங்கள் மண்ணில் கொஞ்சமும் காலச்சாரம் எஞ்சி நிற்கின்றது..மேலத்தேய காலாச்சாரங்களை எங்கள் மண்ணின் பாரம் பரியத்தை அழிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது....வெளிநாட்டில் வெள்ளைக்காரன் நிர்வாணமாக வீதியில் ஆர்ப்பாட்டம் செய்கின்றான் என்றாள் அதை யாழ்ப்பாணத்திலோ இல்லை கிளிநொச்சியிலோ ஒருவர் அப்படி ஆர்ப்பாட்டம் செய்தால் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாமா?முடியாது..அப்படித்தான் இயற்கைக்கு முரணாக எங்கள் காலாச்சாரத்தை சீரழிக்கும் ஒர் இனச்சேர்க்கையும்.இதை சொன்னால் நான் காலாச்சாரகாவலன் என்று நீங்க கருதினால் நிச்சயம் நான் காலாச்சாரக்காவலனே...

    அதுசரி அண்ணா ஏன் எதுக்கெடுத்தாலும் டாக்குத்தர் விசயை இழுகின்றீர்கள்...அந்த மனுசன் பாவம்யா.

    பதிலளிநீக்கு
  120. ////ஒரு வேளை
    இதற்க்கு காரணம் என்னோடு வேலை செய்பவர்கள் பெரும்பாலும்
    வெளிநாட்டவராகவும் நம்மவர் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்/// நச் ....))

    பதிலளிநீக்கு
  121. ///காரணம் காலேஜ் வாழ்க்கையில் எனக்கும் தனிஷா என்ற ஒரு இலங்கை பெண்ணுக்கும் ஏற்ப்பட்ட காதல் /// ஓகோ பெரிய காதல் மன்னனாய் இருப்பிங்க போல .ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  122. ///அண்டி பிழைக்கவந்த நாட்டில் வரம் தந்த குற்றத்துக்காக அவர்கள் தலையிலேயே கை வைப்பதுதான் இவர்கள் கலாச்சாரம் சொல்லி தந்த தர்மமா??// இது பெரும்பாலான தமிழர்களின் குணம்.....

    பதிலளிநீக்கு
  123. நீங்கள் இட்ட இடுகையில் சிறந்த இடுகையாக இதையும் உள்ளடக்குவேன் ....

    செக்ஸ் அவரவர் சுதந்திரம், இயற்க்கைக்கு புறம்பானது என்றாலும் ஏதாவது பாதிப்பு வரும் என்று தெரியவில்லை..அப்படி மனித குலத்துக்கு பாதிப்பு வரக்கூடியது என்றால் அந்த நாட்டு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டாது..

    பதிலளிநீக்கு
  124. ///மேலத்தேய காலாச்சாரங்களை எங்கள் மண்ணின் பாரம் பரியத்தை அழிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது//// ராஜா இன்று மேலைத்தேய நாட்டவர்களது வளர்ச்சியை பாருங்கள்... இந்த காலாச்சாரம் என்ற கட்டுப்பாடுகள் இல்லாததால் தான் அவர்களால் ஜெட் வேகத்தில் செல்ல முடிகிறது..ஆனால் நம்ம நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் கணவன் செத்தால் மனைவி விதவை, மூலைக்குள் ஒடுங்கி தான் கிடக்க வேண்டும் -- இது தான் நம் கலாசாரம்.. ஒரு சிலவற்றை உடைத்தெறிவதில் எந்த தப்பும் இல்லை நண்பா!!!!

    பதிலளிநீக்கு
  125. நண்பர்கள் மன்னிக்கவும் கொஞ்சம் பிஸி அதனால், என்னை இழுத்து பிடித்து கேள்விகனை தொடுக்கும்
    நண்பன் ராஜ் க்கு மட்டும் இப்போது பதில், உங்களிடம் பிறகு வருகுறேன்....

    வணக்கம் K.s.s.Rajh .

    உங்கள் கேள்விகளை முதலே பார்த்தேன், ஆனால் பதில் தரவில்லை, காரணம் உங்கள் தனி ஒருவரின் முடிவை எல்லோர் முடிவாகவும் திணிக்கும் உங்கள் விதண்டா வாதமே.....இனி உங்கள் கேள்விகளுக்கு பதிலும் என் கேள்விகளும்.

    மதுரனின் கருத்து என் கருத்து என்கிறீர்கள், மதுரனின் கருத்துக்கு நான் பதில் சொல்லி அவரும் என் கருத்து தவறாக விளங்கப்பட்டு விட்டது என்று சொல்லிய நிலையில், அதைப்பற்றி மீண்டும் பேசுவது நாகரிகம் இல்லை இருந்தும் அதில் இருந்து மதுரனை விலக்கி அது உங்கள் கருத்தாக நினைத்து அதற்க்கு விளக்கத்தை மீண்டும் தருகிறேன்....

    உணர்ச்சி என்ற முறையில் ஓரின செயற்கைக்கு ஆதரவு அளித்தால், கொலை செய்வதும் ஒருவித உணர்ச்சியேஅதையும் அப்போ ஆதரிப்பதா என்று கேட்டு கொலை உணர்ச்சியையும் ஓரினசெயர்க்கை உணர்ச்சியையும் ஒப்பிட்டு இருந்தீர்கள்.உங்கள் ஒப்பீடே மிக தவறு.... கொலை செய்யும் உணர்ச்சிக்கும் ஓரின செயற்கை உணர்ச்சிக்கும் என்ன சம்மந்தம் ???
    அப்படிபார்க்க போனால் மிக அபத்தமாக இப்படியும் கேக்கலாம் ஆணுக்கு பெண் மேல் வரும் உணர்ச்சியையும் சட்டம் போட்டு தடை செய்வோம் ஏன் எனில் இந்த உணர்ச்சியால்தானே நிறைய கற்பழிப்பு சிறுமிகள் துஸ்பிரயோகம் நடக்குது.....இந்த சட்டம் ஒப்பீடு எத்தகைய அபத்தமோ அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது
    உங்கள் கொலை உணர்ச்சிக்கும் ஓரின செயற்கை உணர்ச்சிக்கும் நீங்கள் வைத்த ஒப்பீடு..


    அடுத்தது மதுரனை விட்டு பாலா கருத்தும் என் கருத்து என்று சொல்லி, அவரவர் விருப்பம் என்று சொல்லி ஓரின செயற்கையை ஆதரித்தால், திருமணமான ஆண் பெண் இன்னோர் ஆண் பெண்ணுடன் உறவு கொள்வதையும் அவரவர் விருப்பம் என்று சொல்லி ஏற்றுக்கொள்ளலாமோ
    என்று நேரடியாகவே என்னை பதில் சொல்ல சொல்லி கேட்டு இருந்தீர்கள்.

    நண்பா சாரி.... இதுவும் மிக அபத்தமான கேள்வியே....... மேலே எங்கேயாவது நான் சொல்லி இருக்கேனா ஓரின செயர்க்கையாளன் இன்னொருத்தியின் கணவனை இழுத்துபோய் உறவு வைத்தான் என்றோ அப்படி வைத்தால் அது அவரவர் விருப்பம் என்றோ ???
    இங்கே நாங்கள் திருமணத்தின் முன் நடக்கும் ஆண் பெண் தெரிவை பற்றியே பேசுகிறோம், அப்படி அவரவர் விரும்பியதை தெரிவு செய்வது அவரவர் விருப்பம் என்பதே சொல்கிறேன்... திருமணத்தின் பின் நடப்பதை நான் சொல்லவில்லை நீங்கள் ஆசைப்பட்டால் இது பற்றி பிறகு ஒரு பதிவு போடுகிறேன்.

    அதைவிட முக்கியமாக மிக முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டுயது, ஒருவன் ஒழுக்கமாக இருக்க வைக்க சட்டம் போட்டு அவனை அடக்கிவிட முடியாது..... அவனாய் நினைத்து ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே முடியும். ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் பின் வேறு ஒருவருடன் உறவு வைக்காமல் ஒழுக்கமாக இருக்கிறார்களோ இதே ஒழுக்கம் ஓரின
    செயர்க்கையாலர்களிடமும் இருக்கு.
    அவர்களும் உங்களைப்போலவே.... தான் தேடிய துணையுடனே கடைசி வரை இருக்கிறார்கள். உங்கள் திருமண வாழ்வில் உள்ள ஒருத்தனுக்கு ஒருத்தி (திருமணத்தின் பின்) முறையை அவர்களும் பின் பற்றுகிறார்கள்.. முதலில் அவர்களை ஒரு காம வெறியர்களாக நினைப்பதை நிறுத்துங்கள், அவர்களும் எங்களைப்போன்றவர்களே.......

    பதிலளிநீக்கு
  126. அப்புறம்...... அய்ய்யோயோ எங்கள் நாட்டில் கலாச்சாரம் இன்னும் கொஞ்சம் அழியாமல் இருக்கு ஓரின செயற்கை ஆளர்களை
    ஆதரித்தால் அதுவும் புட்டுட்டு போய்விடும் அதை காப்பாற்ற நான் கலாச்சார காவலன் ஆக இருப்பேன் என்கிறீர்கள்.வாழ்த்துக்கள். எங்கள் நாட்டில் கலாச்சாரம் இன்னும் கொஞ்சம்தான் இருக்கு என்ற உண்மையை உங்கள் வாயாலேயே ஒத்துக்கொண்டு சொன்னதுக்கு நன்றி. அந்த மிகுதி கொஞ்சமும் எப்படி ஓரின செயற்கையாய் ஆதரிப்பதால் அழியும்
    என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை. முதலில் நீங்கள் எழுதிய ஒரு கில்மா பதிவில் திருமணத்தின் முன் உறவு வைத்து
    பின் வேறு ஒருவனுடன் திருமணம் செய்த ஒரு பெண்ணையும், உங்கள் பிரெண்ட்டை தொல்லை பண்ணி அழைத்து நிறைய தரம் செக்ஸ் வைத்து பின் திருமணம் செய்து வெளிநாடு போய் அங்கே இருந்தும் உங்கள் பிரெண்ட் டை மறக்காமல் அந்த செக்ஸ் சுகத்தை இழக்க மனமில்லாமல் உங்கள் பிரெண்ட் க்கு போன் பண்ணிய ஒருத்தியை நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் இப்படி நிறைய கதை இருக்கு என்று வேற சொல்லி இருக்கீங்க , இதில் என் கேள்வி என்னவென்றால் இந்த ஆண் பெண் சகிக்க முடியாத உறவுகளால் அழியாத உங்கள் கலாச்சாரம் ஒரு ஓரின செயர்க்கையாலனை
    ஆதரிப்பதில் எப்படி அழிந்து போகும் ???????????????????????????????????????????????????? அப்படியானால் ஆண் பெண் உறவும் ஒருவகையில்
    கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்குது ஆகவே ஆண் பெண் உறவையும் எதிர்க்க நீங்கள் தயாரா???
    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் எல்லாவற்றுள்ளும் நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு.

    கலாச்சாரம் என்று சொல்லி காவடி தூக்கும் உங்கள் நாட்டில் தான் பெண்கள் மேலான பாலியல் கொடுமைகள் அதிகம் நடக்குது. இன்னொன்று கொழும்பில் தமிழ் சிறுவர்களை வைத்து ஒரு கும்பல் ஆண் விபச்சாரம் செய்யுதாம்
    வெள்ளைக்காரனின் ஓரின செக்ஸ் வெறிக்கு. இது உங்கள் கலாச்சார நாட்டில்தான் நடக்குது. கொழும்போ கடற்கரைகளில்
    சிறுவர்கள் செக்ஸ் துஸ்பிரயோகம் அதிகம் நடக்குது என்று உங்கள் மீடியாக்களே அலறுகிறது. இவை எல்லாம் நடப்பது உங்கள் கலாச்சார நாட்டிலேயே..... இவை எல்லாம் அத்துமீறி நடக்கும் நாட்டில் தங்கள் உரிமைக்காய் குரல் கொடுக்கும் ஓரின செயர்க்கையாலர்களை ஆதரிப்பதில் என்ன புதுசா கலாச்சார சீரழிவு வந்திட போகுது..அதுசரி கலாச்சாரம் என்ற பெயரில் தேவாரம் பாடிக்கொண்டு சிவன் கோயிலை
    இடிக்கும் வம்சம் ஆச்சே.............

    அடுத்து சொல்கிறீர்கள் எங்கள் ஊரில் ஓரின செயர்க்கையாளர்கள் ஒரு சிலரே.... அதைவிட இது பற்றி நம்மவருக்கு அதிகம் தெரியாது
    சோ ஆதற்க முடியாது என்று..... பாஸ் ஒரு விடயம் உங்களை சார்ந்தவர்களுக்கு தெரியாது என்றால் அதை ஆதரிக்க படாதா??
    உலகம் மாறுது பாஸ் நாமும் மாறியே ஆக வேண்டிய கட்டாயம். ஐயோ அவர்களுடன் சேர்ந்து ஒடமாட்டோம் என்றால் தேங்கி சாக்கடை ஆகிவிடுவோம்...

    அப்புறம் சொல்ல்கிறீர்கள்.. ஓரின செயற்கை இயற்க்கை முரணாது அது செயற்கை என்று...இதுதான் செம காமெடி..... ஓரின செயர்க்கையாளர் பற்றிய ஆராட்சி முடிவு சொல்லு
    ஒரு தாயின் வயிற்றுக்குள்ளேயே ஓரின செயற்கை உணர்வு மூளை வளர்ச்சு உருவாகுது என்று
    சோ ஓரின செயற்கை உணர்வு இயற்கையே...உங்களுக்கு எப்படி உணர்ச்சி தானா இயற்கையாய் வாருதோ அவர்களுக்கும் அப்படியே....இங்கே இது இயற்க்கை முரண் என்பதே விதண்டா வாதம்.இங்கே எது தெரியுமா??? செயற்கை, உங்கள் கலாச்சாரமே

    பாஸ் இதை விளங்கி கொண்டால் எல்லாம் சரியாகும்.. அவர்களை ஆதரிக்க முடியாதற்கு நீங்கள் கை காட்டுவது உங்கள் கலாச்சாரத்தையே அதனால்....

    செயற்கையாக மனிதனுக்காகவே
    கலாச்சாரம் உருவாக்கபட்டு படைக்கப்பட்டது.எங்கேயும் கலாச்சாரத்துக்காக மனிதனை படைக்கவில்லை....

    அப்புறம் இந்த கருத்தில் ஒரு டிஸ்கி : இன்றைய நக்கீரன் இணையத்தின் தலைப்பு செய்தியை போய் பாருங்கள்
    இந்தியாவில் கோவையில் 4 பேர் ஒரு பசு மாட்டை விடாது கற்பழித்ததில் மாடு
    கவலைக்கிடமாம்...அந்த 4 பேரையும் போலிஸ் அரஸ் பண்ணிட்டுது. அந்த 4 பேரின் புகைப்படத்துடன் மாட்டின்
    புகைப்படத்துடனும் செய்தி இருக்கு....... கலாச்சார காவடி தூக்கும் நாட்டில் தான் இந்த செய்திகள்...போங்க சார் நீங்களும் உங்க கலாச்சாரமும்

    பதிலளிநீக்கு
  127. ரோமில் இருக்கையில் ரோமானியனைப்போல்
    உடை உடுத்துவதுதான் சரி
    இந்தக் கருத்தை மிக அழகாக வலியுறுத்திப்போகிறது
    உங்கள் பதிவு
    தெளிவான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  128. @துஷ்யந்தன் சொன்னது...

    வணக்கம் பாஸ்.இங்கே மாறி மாறி கருத்துரை இடுவதால் நட்புக்கு எந்த சேதமும் வரக்கூடாது...விமர்சணங்கள் என்பது பொதுவானது.என்பது என் கருத்து..

    நீங்கள் சொன்னது போல் இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகம் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லையே..

    ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி..இன்று உலகத்தில் ஒர் இனச்சேர்க்கையை சட்டபூர்வமாக ஆதரிக்கும் நாடுகள் எத்தனை?உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் ஆதரிக்கவில்லையே.பல மேலத்தேய நாடுகளில் கூட ஆதரிக்கவில்லை இப்படி இருக்க.இலங்கையில் அதுவும் வடபகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும்பகுதியில் மிகுந்த கட்டுகோப்பான காலச்சாரம் நிலவிய இடத்தில் ..இன்று காலாச்சாரம் என்ற ஒன்று கொஞ்சமாவது எஞ்சி இருக்கும் ஒர் இடத்தில்..இங்கே ஒர் இனச்சேர்க்கை என்பது மிகவும் விரும்பத்தகாத விடயமாக வே இருக்கின்றது..எனவே அப்படி பட்ட இடத்தில் பிறந்து வளர்ந்த நான் அதை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது நண்பா?

    வெளிநாடுகளில் எத்தனையோ ஒர் இனச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக வாழ்கின்றார்கள்.இதற்கு காரணம் அங்கே நிலவுகின்ற கலாச்சாரம்.இதை அவர்கள் யாரும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை.

    ஆனால்.கிளிநொச்சியிலோ இல்லை யாழ்ப்பாணத்திலோ..ஏன் இலங்கையில் உங்களால் திருமணம் செய்த ஒர்இனச்சேர்க்கையாளர்கள் ஒரு ஜோடியையாவது உங்களால் காட்டமுடியுமா?நிச்சயமாக முடியாது.அதற்காக இங்கு ஒரு இனச்சேர்க்கையாளர்கள் இல்லை என்று இல்லை..

    ஆனால் இங்க ஒருஇனசேர்க்கை அங்கிகரிக்கப்படாத விடயமாகவே இருக்கின்றது...எனவே...ஒரு இனச்சேர்க்கையை சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் இடத்தி இருக்கும் நீங்கள் அதை தவறு இல்லை என்று சொல்வது போல..ஒர் இனச்சேர்க்கையை தவறு என்று சொல்லும் இடத்தில் இருக்கும் நான் அதை எதிர்ப்பதில் என்ன தவறு நண்பா?

    பதிலளிநீக்கு
  129. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர்களே..இங்கு பெரும்பாலும் ஒரினச்சேர்க்கைக்கு ஆதரவாகத்தான் கருத்துரை இடுகின்றார்கள்.

    ஆனால் நான் பார்க்கும் என் சமூகத்தில் ஒரினச்சேர்க்கை என்பது அங்கிகரிக்கப்படாதவிடயமாக தான் இருகின்றது.அதை கேவலமாகத்தான் இங்கே பார்க்கப்படுகின்றது.எனவே எனக்கும் ஒரினச்சேர்க்கை தவறான விடயமாகத்தெரிகின்றது..இதனால் அதை நான் எதிர்ப்பதில் எனக்கு ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.இதற்கு மேலும் இந்தவிடயத்தை பற்றி கதைத்து எனது செம்பை மேலும் நெளிக்கவிரும்பவில்லை..
    நன்றி
    வணக்கம்

    பதிலளிநீக்கு
  130. வணக்கம் நண்பா..

    நோ சான்ஸ் நண்பா.. இதற்க்கெல்லாம் நம் பிறேண்ட்ஷிபில் பாதிப்பு வராது... உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு , அதை மறுக்க
    எனக்கும் உரிமை உண்டு... நமக்குள் உள்ள இந்த கருத்து இப்பதிவோடு போய்விடும் , நீங்கள் என்னை கோவிக்காமல் இருந்தால் சரி...

    என் கட்டுரையின் சாராம்சமே ஓரின செயர்க்கையையை ஆதரித்து சட்டம் கொண்டு வர சொல்வது அல்ல. உங்கள் நாடுகளில் இருக்கும்
    ஓரின செயர்க்கையாலர்களை நோகடிக்காமல் அவர்களை அவர்கள் உணர்வுகளை சக மனிதனாக ஆதரியுங்கள் என்பதே...
    இடையில்... நீங்கள் அதை புரிந்து கொள்ளாமல் கேள்விக்கணை தொடுக்க நானும் கொஞ்சம் தடம்மாறி வந்துவிட்டேன்...

    நண்பா.... நீங்கள் சொல்வது போல் யாழ்பாணத்திலும் கிளிநெச்சியிலும் ஓரின திருமணம் செய்து வாழமுடியுமா
    என்று கேட்டீர்கள்.. அது அவ்வளவு சுலபம் இல்லை ஒத்துக்கொள்கிறேன்... ஆனால் அங்கேயும் ஒரு சில
    ஓரினசெயர்க்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்களே ஒத்துகொள்கிறீர்கள். எனவே அப்போ அவர்கள்
    நிலை என்ன?? அவர்களை என்ன செய்வதை உத்தேசம் ???? அவர்களை சேர்க்க சட்டம் கொண்டுவாங்கோ என்பது
    என் வாதம் அல்ல. இருக்கும் அவர்களை தள்ளி வேக்காமல் சக மனிதனாய் மதியுங்கள் என்பதே என் வாதம்.

    இல்லை இல்லை அவர்களை ஆதரிக்க மனிதனாய் மதிக்க எங்களால் முடியாது அது சட்டத்தில் இல்லை என்றால்.சட்டம் சொல்வதையெல்லாம் நீங்கள் எல்லா சமயங்களிலும் ஏற்றுக்கொள்ளுவீர்களா ???
    சடத்தை மதிப்பதை விட சக மினித உணர்வுகளை மதிப்பதே முக்கியம்
    சட்டம் சொல்வதை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன் என்றால்
    சில தூக்கு தண்டனைகள் கொடுப்பதும் அதே சட்டம் தான், அப்போ சட்டம் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று தூக்கு தண்டனையை எதிர்த்து வீதி வந்து போராடாமல் சட்டத்தை மதித்து வீட்டிலேயே இருந்து ஆதரிக்க முடியுமா???

    திரும்பவும் சொல்கிறேன்..... ஓரின செயர்க்கையாலர்களை இணைக்கும் சட்டத்தின் உங்கள் நாட்டில்
    நீங்கள் கொண்டு வாருங்கள் கொண்டுவராமல் போங்கள் அது உங்கள் நாட்டு பிரச்சனை.
    ஆனால் ஒரு சக மனிதனாய் ஒரு மனிதாபிமானம் உள்ள மனிதனாய் என் வேண்டுகோள் உங்கள் நாட்டில் இருக்கும் ஓரினசெயர்க்கையாலர்களை ஆதரித்து அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் ஒருவனுடைய உணர்வுகளை கொள்வது கூட ஒரு கொலைக்கு சமமானது.

    பதிலளிநீக்கு
  131. நான் இந்தப் பதிவைப் படிக்கவில்லை,அதனால்,கருத்தும் உரைக்கவில்லை!யாரும் எக்கேடு கெட்டுப் போகட்டுமென்றும் சொல்லவில்லை!எனது கொள்கை மற்றையோர் சுதந்திரத்தில் தலையிடாமை,அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  132. //KANA VARO சொன்னது…
    எப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம்.//
    ஹீ ஹீ.. என்னை தானே சொல்லுறாய்.//

    புரிஞ்சு போச்சா...... ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  133. //KANA VARO சொன்னது…
    ஒரு மனிதனின் தனி மனித சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோ
    புரிந்து கொள்ள முடியாதவன் என்னைபொருத்தவரை மனிதனாய்
    இருக்க எவ்வித தகுதியும் அற்றவன்.//
    மச்சி தத்துவம் எல்லாம் பேசுது//

    கண்டுக்காதீங்க பாஸ் ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  134. //KANA VARO சொன்னது…
    மிக சின்ன வயதிலேயே பிரான்ஸ் வந்ததாலேயோ
    என்னவோ என்னுடைய பாடசாலை வாழ்க்கையிலும் சரி இப்போது
    வேலைசெய்யும் இடத்திலும் சரி நிறைய ஓரின செயர்க்கையாளர்களை
    சந்திக்குறேன், //

    ம்ம்ம் .///

    :)))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  135. //KANA VARO சொன்னது…
    மிக சின்ன வயதிலேயே பிரான்ஸ் வந்ததாலேயோ
    என்னவோ என்னுடைய பாடசாலை வாழ்க்கையிலும் சரி இப்போது
    வேலைசெய்யும் இடத்திலும் சரி நிறைய ஓரின செயர்க்கையாளர்களை
    சந்திக்குறேன், //

    ம்ம்ம் .///

    :)))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  136. //KANA VARO சொன்னது…
    உண்மையில் மிக தில்லான
    பாராட்ட தக்க விடயமே. //\

    தில்லிருந்த படியால் தான் MGR i சுட்டார்//

    உண்மைதான் பாஸ்..... நிஜ ஹீரோ எம் ஆர் ராதா.

    பதிலளிநீக்கு
  137. //KANA VARO சொன்னது…
    CTBC//

    No Comments//

    ஏன் பாஸ் ??????????????

    பதிலளிநீக்கு
  138. //Rathi சொன்னது…
    துஷ்யந்தன்...... முதல்ல எம்மவர்களைப் பொருத்தமட்டில் கொஞ்சம் புரிதலில் சிக்கல் உள்ள விஷயத்தை தொட்டிருக்கிறீர்கள். முடிந்தளவு ஆதாரத்துடன் சொல்ல முயன்றும் இருக்கிறீர்கள். உங்களின் புரிதல் எழுத்தில் தெரிகிறது. இருந்தாலும் இன்னும் சிறப்பாக இதை சொல்லியிருக்கலாம்.

    அடுத்து கனடா பற்றி நீங்கள் குறிப்பிடுவதால் இதை எழுதுகிறேன். நான் CTBC வானொலி கேட்டதில்லை, எப்போதுமே. நான் அந்த வானொலிக்காக வக்காலத்து வாங்கவுமில்லை. அதனால் அந்த விளம்பரம் பற்றி தெரியவில்லை. அதே போல் கனடாவில் வாழும் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகம் சார்பாக பேச எனக்கு அதிகாரமும் இல்லை. இருந்தாலும், பெரும்பாலான தமிழ் கனேடியர்கள் இங்குள்ள மக்களைப் போல் அடுத்தவர்களின் உரிமைகளை மதிக்கத்தெரிந்தவர்கள் என்பது நான் கவனித்தது. ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தில் ஒட்டுமொத்தமாக ஓர் சமூகத்தை நோக்கி விரல் சுட்டுவது சரியா தெரியவில்லை. தவிர, இதுபோன்ற விளம்பரங்கள் ஒரு கட்சி குறித்து இன்னோர் கட்சி என்ன செய்தியை தேர்தல் விளம்பரத்தில் சொல்ல நினைக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது. அதைவிடவும், முன்னாள் பிரதம மந்திரியின் உடல் குறைபாட்டை விளம்பரப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தது ஒரு தேசிய அரசியல் கட்சி. இது போல் இன்னும் நிறையவே என்னால் சொல்ல முடியும்.

    ஓரினச் சேர்க்கை பற்றி எம்மவர்களுக்கு அதிகம் அறிவோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமல் இருக்கலாம். அதை எப்படி களையலாம் என்பதையும் உங்கள் கட்டுரையில் சேர்த்தே சொல்லியிருக்கலாம். எப்படி அது எம்மவர்கள் மனதில் ஓர் தவறான புரிதலாக உருவானது என்பதையும், அது குறித்து தீர்வையும் இன்னோர் பதிவில் சொல்லுங்கோ.
    உங்களால் முடியும். :))//


    விரிவான கருத்துக்கு தேங்க்ஸ் அக்கா.

    நீங்கள் கனடா வா?? இப்போத்தான் தெரிந்து கொண்டேன்.
    நீங்கள் சொல்வது சரியே.. அங்கு இருப்பவர்கள் எல்லோரும் அப்படியல்ல என் தவறுக்கு வருந்துகின்றேன்.

    இதுவும் நீங்கள் சொல்வது நிஜமே.... நான் ஒருவித அவசத்தில் எழுதியதில்
    நிறைய விடயங்களை மிஸ் பண்ணிவிட்டேன்.இதைபற்றி மறுபடியும் கண்டிப்பாக எழுதுகின்றேன்.விரிவாகவும் நீங்கள் சொன்னது போலவும் எழுதுகின்றேன்.
    என் மேல் நீங்கள் வைத்து இருக்கும்
    நம்பிக்கைக்கு தேங்க்ஸ் அக்கா.

    பதிலளிநீக்கு
  139. //மதுரன் சொன்னது…
    @துஷியந்தன், காட்டான், நேசன்

    இங்கு கருத்திட்டுள்ள அனைவருமே ஆதரவாகவே கருத்திட்டுள்ளனர். என்னைத்தவிர. ஒருவேளை கருத்திட்டோரில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வாழ்பவராக இருப்பதாலாக இருக்கலாம். இவ்வாறான சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டு அதை ஏற்றுக்கொ பக்குவம் உங்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் வாழும் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியளவு மிகவும் குறைவு. இப்படி வித்தியாசமான உணர்ச்சி உள்ளவர்களை வித்தியாசமாகவே பார்க்கும் சமூகத்தில் இருப்பதால் எனக்கும் அது வித்தியாசமாக தெரிந்திருக்கலாம்.

    காட்டான்.. உணர்ச்சிகள் எல்லோருக்குமே இயற்கைதான். ஆனால் அந்த உணர்ச்சிகளை பயன்படுத்தும் மனித மனம் செயற்கையானது.
    ஒரு மனிதனின் நடத்தைகள், பாவனைகள், செயற்பாடுகள் எல்லாமே அவனது மனதில் பிறக்கும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே. அந்த உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் ஒருவன் நல்லவன் என்றோ தீயவன் என்றோ தீர்மாணிக்கப்படுகிறான்.
    நான் முதலில் சொல்ல வந்ததன் அர்த்தமும் இதுதான்.

    மிகுதிக்கு இரவு வருகிறேன்//


    உங்கள் விளக்கத்துக்கு நன்றி பாஸ்... :)))

    பதிலளிநீக்கு
  140. //மதுரன் சொன்னது…
    //என்ன மதுரன் உங்களோட அடிக்கடி எனக்கு சண்ட வருகுது.. ஏன் நாங்க முற்பிறப்பில தம்பதிகளா இருந்தோமோய்யா.. ஹி ஹி ஹி//

    புரியுது.. நீங்க உக்கட மனைவியோட ஒரே சண்டைன்னு புரியுது
    ஹி ஹி//

    அவ்வ....
    இதுதான் பொல்லு கொடுத்து அடி வாங்குறதோ???

    பதிலளிநீக்கு
  141. //மதுரன் சொன்னது…
    //ஆஹா.... அப்போ உங்களுக்கும் மதுரனுக்கும்
    ராசி நல்ல ராசி போல, மதுரனுக்கும் எனக்கும் கூடசில விடயங்களில் அடிகடி முரண் பாடு வருது ஆனாலும் அவன் என் நல்ல நண்பன் என்பதில் மாற்றுக்கருத்து என்னிடம் எப்போதும் இல்லை.//

    துஷி.. வந்தமா நல்ல பதிவு எண்டு கருத்த போட்டமா போனமா எண்டில்லாம அத பற்றி விவாதிக்கிறது நல்ல விசயம் தானே. சில வேளைகளில் பதிவில் சொல்லப்பட்ட விடயங்களை விட விவாதிக்கும் போது மேலும் பல விடயங்கள் தெரியவரலாம். சுவாரஷியமான விசயமும் கூட

    ஹி ஹி என்ன நகைச்சுவை என்றால் நானும் நீங்களும் விவாதிக்கிறத பலபேர் ரெண்டுபேருக்கும் சண்டை என்று நினைச்சுக்கொண்டிருக்கினம்.//


    நிஜமே...... நானும் ஆதரிக்கும் கமெண்ட்ஸ் வருவதை விட விவாத கமெண்ட்ஸ் வருவதைத்தான் விரும்புகின்றேன்.
    அப்போதுதான் நிறைய எனக்கே தெரியா விடயங்களை அறிய முடியும். விவாத கமெண்ட்ஸ் ஆரோக்கியமாதே..

    ஹா ஹா
    மிக ய்ந்மை மது, நிறைய பேர் நினைக்கிணன் ஏன் என்னிடம் கூட கேக்கினம் மறக்கும் உனக்கும் சண்டையா என்று...அட போங்கப்பா பிரெண்ட்ஸ் என்றா எல்லா விடயங்களிலும் ஒத்துத்தான் போகணும்
    என்ற எந்த விதிவிலக்கும் இல்லையே

    பதிலளிநீக்கு
  142. //நிரூபன் சொன்னது…
    ஓரின செயற்கையாளர்களை ஆதரிக்கலாமா..??//

    கேள்வியே காத்திரமாக,
    தலைப்பே காத்திரமாக இருப்பதால்,

    ஆதரிக்கலாம் என்பதே என்னுடைய பதில்.

    காரணம் பூமியில் படைக்கப்பட்ட மனித ஜீவராசிகளுக்கு உணர்ச்சி என்பது பொதுவானது.
    ஒரு மனிதனின் அடி மனதில் தான் யாருடன் வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற உண்மை தெரிகின்றதோ?
    அப்போது தான் அவன் பரி பூரண சுதந்திரம் பெற்ற மனிதனாக மாறி விடுகின்றான்.
    ஆகவே ஒரு மனிதனுக்கு தனக்குப் பிடித்த துணையுடன் வாழும் உரிமை இருக்கின்றது என்பதனை எமது சமூகங்கள் சட்டமாக இயற்றி வைத்திருக்கும் போதும்,

    ஓரினச் சேர்க்கையாளர்களையும் நாம் மதித்து, அவர்கள் சேர்ந்து வாழும் போது,

    ஏனைய சமூகத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் சம உரிமையினை இவர்களுக்கும் வழங்கு ஆதரிப்பது சிறந்த செயற்பாடெனக் கருதுகின்றேன்.///


    அப்படி போடுங்க பாஸ்...
    தல, தல தான் பாஸ்

    பதிலளிநீக்கு
  143. //நிரூபன் சொன்னது…
    எப்போதுமே அடுத்தவரின் அந்தரங்களுக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவது என்றால் நம்மில் பலருக்கு அலாதி பிரியம். ஏதோ
    தங்களை உத்தம சீலராக காட்டிக்கொண்டு அடுத்தவர்
    அந்தரங்களுக்குள் புகுந்து சும்மா பிரித்து மேய்ந்து விடுவார்கள். ஒரு மனிதனின் தனி மனித சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோ
    புரிந்து கொள்ள முடியாதவன் என்னைபொருத்தவரை மனிதனாய்
    இருக்க எவ்வித தகுதியும் அற்றவன்.//

    தமிழனோடு கூடப் பிறந்த விடயங்களே இவை தானே பாஸ்..

    இது ஒரு சுய இன்பம் போன்றது. அதாவது சுய இன்பம் என்று நான் கூறுவது பலருக்கு வியப்பினைத் தரலாம்.
    ஆனால் ஒரு மனிதனின் அந்தரங்கங்களை ஆராய்வது,
    அவனைப் பற்றி கேலி கிண்டல் புரிவது,
    நையாண்டி செய்வது என்பது தமிழனத்தின் பரம்பரை அணுக்களில் ஊறிய ஒரு விடயம்,.

    இது என்று மாறுகின்றதோ,
    அன்றைய தினம் எம் நாடுகளில் அபிவிருத்தி நிகழ்ந்து, மேற்குலகத்திற்கு நிகரான வளர்ச்சியினைச் சகல துறைகளிலும் எம் நாடுகள் பெற்று நிற்கும்.

    எம்மவர்களில் பலர் அடுத்தவனின் அந்தரங்களைக் கிளறுவதற்காக,

    குசு குசு ரகசியம் அடுத்தவனைப் பற்றிப் பகிர்வதற்காக (Gossip) நாளொன்றுக்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு மேற் செலவு செய்கின்றான் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.//

    ஆணித்தரமான சரியான விளக்கம் பாஸ்
    சூப்பர்

    பதிலளிநீக்கு
  144. //நிரூபன் சொன்னது…
    நல்லதொரு இடுகை மச்சி,
    விரிவான ஆதாரங்களோடு குறிப்பெடுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

    எமது சமூகம் முன்னேற வேண்டும், ஓரினச் சேர்க்கை போன்ற பல விடயங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றால்,
    மீடியாக்களில் உள்ளவர்களை நாம் முதலில் மாற்ற வேண்டும்,
    கமர்சியல் மீடியாக்கள் என்ற போர்வையில் சமூகத்தினுள் நச்சு விதைகளை விதைப்போரால் தான் இன்றும் எம் சமூகம் அதள பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.////


    நன்றி பாஸ்
    விரிவான கருத்துக்கு,
    ஏன் பதிவில் இல்லா நல்ல ஆழமான
    கருத்துக்களை சொல்லி இருக்கீங்க
    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  145. //ரெவெரி சொன்னது…
    அடுத்த பதிவில் சந்திப்போம் துஷி...//

    கண்டிப்பாக...

    பதிலளிநீக்கு
  146. ///பாலா சொன்னது…
    நண்பா கொஞ்சம் சென்சிடிவ் மேட்டர்தான். ஆனால் இதில் எல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை. என்னை பொறுத்தவரை ஒரே பாலினத்தின் மீது வரும் செக்ஸுவல் ஈர்ப்பு ஒரு விட மனநோய். இது இயற்கைக்கு மாறானதுதான்.

    நம் விருப்பத்திற்கிணங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறினால், திருமணத்தை தாண்டிய உறவுகள், தகாத உறவுகள் எல்லாமே சரி என்ற நிலைக்கே நாம் வர வேண்டி இருக்கும். வாழ்வை புரிந்து கொள்ளும் முறை தவறாக இருக்கும்போது எல்லாமே தவறாக அமைந்து விடுகிறது.


    வாழ்வு என்பது நாம் இந்தியர்களின் படி வேறு விதமாக நோக்கப்படுகிறது. அதே போல வெளிநாட்டவர்களுக்கு அது வேறு விதம். ஆனால் வெளிநாட்டு கலப்பு நாம் இந்தியர்களின் மன நிலையையும் மாற்றி வருகிறது என்பதே உண்மை. இவை என் கருத்துக்களே. நான் யார் மீதும் இதை திணிக்க விரும்ப வில்லை. நான் கலாச்சார காவலன் அல்ல. ஆகவே வெளிநாட்டு சட்டத்தை தீட்டும் உரிமை நமக்கு கிடையாது.///

    நன்றி பாஸ் ,
    இதற்க்கு முடிந்தவரை விளக்கம் தந்து விட்டேன் என்று நினைக்குறேன் பாஸ் ஆனாலும் உங்கள் கருத்தை மதிக்குறேன்.

    பதிலளிநீக்கு
  147. /////Nesan சொன்னது…
    துசி ஒரு பால்கோப்பி சொல்லப்பா தம்பி ராச்சுக்கும் சேர்த்து அவர் என்னுடன் மிகுந்த பாசம் தம்பி செம்பு வேனுமாம் அவர் சொல்வதைக் கேளுங்க.//

    வணக்கம் பாஸ் மிகவிரிவான அலசல்//

    இதில் என் கருத்து என்ன வென்றால்.ஒரு புகழ் பெற்ற அமேரிக்கன் பழமொழியுள்ளது(நம்ம ஊர்களில்தான் பழமொழி என்பார்கள் அங எப்படி சொல்கின்றார்களோ எனக்குத்தெரியாது)
    அதாவது”உனக்கு சுகந்திரம் இருக்கு என்பதற்காக நீ கையை உயர்த்தினால் அது மற்றவரின் மூக்கின் மேல் படக்கூடாது”அம்புட்டுதான்
    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 6:08:00 pm GMT-07:00
    //இதில் இவர் யாரை இழுக்கிறார் அமெரிக்கனை அவங்கள் இந்த விடத்தில் (ஒரினச் சேர்க்கையில் உலக வலம் வந்தவர்கள் போதகர்களின் லீலை என்று இந்த செயலை சந்தி சிரிக்க காரணமானவர்கள்) உண்மையில் மூக்கின் நுனிவரை சுதந்திரம் இருக்கனும் என்று தல தீனா படத்தில் பேசிய பஞ்சு டயலாக் இவர் இதைவிடுத்து ஏன் அமெரிக்கனை இழுக்கிறார்.ஒன்னுமா புரியல கேள்வி ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று தானே இவர் என்ன விஜய் மாதிரி குழப்புகின்றார் ஓ இவர் விஜய் ரசிகரா!?//////


    ஹீ ஹீ , நோ கமெண்ட்ஸ்

    பதிலளிநீக்கு
  148. ///Nesan சொன்னது…
    @மதுரன் ஐயா நீங்க சொல்வது ஒரு விடயத்தை மீள வலியுறுகின்றேன்!//@துஷியந்தன், காட்டான், நேசன்

    இங்கு கருத்திட்டுள்ள அனைவருமே ஆதரவாகவே கருத்திட்டுள்ளனர். என்னைத்தவிர. ஒருவேளை கருத்திட்டோரில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வாழ்பவராக இருப்பதாலாக இருக்கலாம். இவ்வாறான சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டு அதை ஏற்றுக்கொ பக்குவம் உங்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் வாழும் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ..(விரல்விட்டு எண்ணக்கூடியளவு மிகவும் குறைவு. இப்படி வித்தியாசமான உணர்ச்சி உள்ளவர்களை )வித்தியாசமாகவே பார்க்கும் சமூகத்தில் இருப்பதால் எனக்கும் அது வித்தியாசமாக தெரிந்திருக்கலாம்.//
    இப்படி வித்தியாசமானவர்கள் என்று ஏன் ஐயா பிரித்துப்பார்கின்றீர்கள் அவர்களும் மனிதர்கள் தானே வித்தியாசம் எதில் இனைவின் விருப்பில் மாத்திரம் தானே அதை அவர்கள் நான்கு சுவருக்குள் தானே செய்கின்றார்கள் //இதற்குப்போய் தண்டிப்பது தவர அவர்களையும் அன்புடன் நேசியுங்கள் என்பதே ஆவல் வீன்விளம்பரம் வேண்டாம் நம் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம் என்பதே என் வேண்டு கோள். //
    மதுரன் ஐயா ,ராச் தம்பி உங்கள் மீது எந்த தனிப்பட்ட கோபம்/கால்புனர்வு இல்லை தனிமரத்திற்கு கருத்து மோதல் என்றாள் செம்பு நெளியத்தான் வரும் நீங்கள் என் நண்பர்கள் புரிந்துகொள்ளுங்கள்.

    தம்பி துசி இப்படி உங்கள் வீட்டில் கோப்பி
    குடித்துக்கொண்டிருந்தால் தனிமரம் வீட்டிலும் வேலை இருக்கு நான் போய்ட்டுவாரன்.வந்தவேலை முடிந்தது.மறக்கவேண்டாம் கோப்பை கழவ போகனும்!அவ்வ்!///


    அண்ணே உங்கள் கருத்து நியாமானது. இவ்ளோ நேரமா நம்ம கடையிலும் நின்று விருந்துனருக்கு பதில் சொல்வதற்கு தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  149. ///காட்டான் சொன்னது…
    ரெவெரி கூறியது...
    அடுத்த பதிவில் சந்திப்போம் துஷி...
    -:)

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 10:11:00 pm GMT-07:00
    ஆகா இதுதான்யா சூப்பர் கொமொண்டு.. நாமதான் கொஞ்சம் வாய கொடுத்திட்டமோ...!!??///

    மாமா முழுக்க நனைஞ்ச பின் முக்காடுக்கு ஓடர் பண்ண படாது, ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  150. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    அவங்கவங்க இஷ்டம்///

    கரெட் பாஸ்

    பதிலளிநீக்கு
  151. காட்டான் சொன்னது…
    இதில இப்ப மதுரன் சொல்வதை நான் ஓரளவு ஏற்றுக்கொள்கிறேன்.. நானும் அங்கு இருந்தால் அவர்களைப்பற்றிய புரிந்துணர்வு இல்லாது போயிருக்கலாம்.. அதேவேளை நாங்க இங்கு இப்பிடியானவர்களை நேரடியாக சந்திப்பதாலும் அவர்களுடன் வேலை செய்வதாலும் அவர்களை புரிந்து கொள்கிறோம்..

    அதே நேரத்தில் கீழதேய நாடுகளில் பெரும்பான்மையான ஹோமோ செக்சுவல் மனிதர்கள் சமூக கட்டுப்பாடுகளுக்கு பயந்து அதை வெளிக்காட்டுவதில்லை ஆகையால் அவர்களைப்பற்றிய புரிந்துணர்வு அங்கு இல்லை என்றே கூறலாம்.. ஏன் பிரான்சில் 1982ல் வந்தமுதலாவது சோசலிச கட்சி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் ஆட்சியில்தான் இவர்களுக்கு எதிரான சட்டமே நீக்கப்பட்டது.. முன்னர் இப்படி வாழ்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.////


    இதுவும் என்னவோ கொஞ்சம் உண்மைதான்

    பதிலளிநீக்கு
  152. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    எம் ஆர் ராதா மேட்டர் நான் அறியாத தகவல்//

    இதுக்கு பதில் மாமா மேலே பதில் தந்து இருக்கார் பாருங்க பாஸ்.
    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  153. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    அட வெளங்கதவனுங்களா? இதுக்கும் மைனஸ் ஓட்டா?//

    அவரு கடந்த ஒரு மாதமா எனக்கு மைனஸ் ஒட்டு போட்டவடி என் பின்னாலேயே திரியிறாரு...
    ஒரு விதத்தில் நம் காவன் மாதிரி ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  154. //காட்டான் சொன்னது…
    K.s.s.Rajh கூறியது...
    வணக்கம் பாஸ் மிகவிரிவான அலசல்

    இதில் என் கருத்து என்ன வென்றால்.ஒரு புகழ் பெற்ற அமேரிக்கன் பழமொழியுள்ளது(நம்ம ஊர்களில்தான் பழமொழி என்பார்கள் அங எப்படி சொல்கின்றார்களோ எனக்குத்தெரியாது)
    அதாவது”உனக்கு சுகந்திரம் இருக்கு என்பதற்காக நீ கையை உயர்த்தினால் அது மற்றவரின் மூக்கின் மேல் படக்கூடாது”அம்புட்டுதான்

    ஞாயிறு, 11 செப்டெம்ப்ர், 2011 6:08:00 pm GMT-07:00
    வாங்க மாப்பிள இதில அமெரிக்கன் என்ன சொல்லுறான்ரத விட்டுட்டு உங்க கருத்த விலாவாரியா சொன்னா நல்லா இருக்குமேய்யா(மதுரன விட்டுட்டு உங்கள
    பிடிச்சாச்சுங்கோ..ஹி ஹி ஹி மதுரன் சிரிக்கிற சத்தம் கேக்குது பேந்து ஒரு பதிவில வராமயோபோயிடுவீங்க..ஹி ஹி ஹி)///


    உண்மைதான் அவர்கள் கருத்தை விட்டு விட்டு நம்ம கருத்தை முன் வைப்பதே சிறப்பு

    பதிலளிநீக்கு
  155. ♔ம.தி.சுதா♔ சொன்னது…
    அடடா ஓரினச் சேர்க்கயைாளன் கூட யாரோ பதிவு படிக்கிறாங்கள் போல மைனஸ் விழுந்திருக்கு...///

    :)))))

    பதிலளிநீக்கு
  156. //♔ம.தி.சுதா♔ சொன்னது…
    அது ஏன் ஈழத்தவரின்ர எந்த தமிழ் விளம்பரமென்றாலும் மணியண்ணை என்று தான் தொடங்குகிறார்கள். தமிழ்ழ வேற பெயரில்லையா/////


    வங்கி விளம்பரமோ காண்டம் விளம்பரமோ இந்த பெறத்தான் சொல்லுறாங்கய்யா அவ்வவ்

    பதிலளிநீக்கு
  157. அருள் சொன்னது…
    இந்திய பாரம்பரியத்தில் ஓரினச்சேர்க்கை மிக நீண்டகாலமாக இருந்து வருவதுதான். பல லட்சம் தென்னிந்தியர்கள் வழிபடும் சபரிமலை அய்யப்பன் சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்தவன் (அது சாத்தியமா என்பது வேறு செய்தி) என்றும், அரவாணை கிருட்டிணன் மணந்தான் என்றும் நமது புராணங்கள் கூறுகின்றன.

    எனவே, பாரம்பரியத்தில் இல்லாதது, இயற்கைக்கு முரணானது என்றெல்லாம் பேசுவது வெட்டிவேலை. மேலும் ஓரின சேர்க்கை ஒரு மனநோய் என்பதும் ஆதரமற்ற தவறான கருத்து.

    இந்த சிக்கல் குறித்து விரிவாக காண:

    "The Right that Dares to Speak its Name"

    http://www.tarshi.net/downloads/The_right%20that_Dares_to_Speak_its_Name.pdf

    "The Yogyakarta Principles"

    http://www.yogyakartaprinciples.org//////


    விரிவான அசத்தல் தகவல்களுக்கு நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  158. Nesan சொன்னது…
    ///@அருள் ஐயா!
    //
    பாரம்பரியத்தில் ஓரினச்சேர்க்கை மிக நீண்டகாலமாக இருந்து வருவதுதான். பல லட்சம் தென்னிந்தியர்கள் வழிபடும் சபரிமலை அய்யப்பன் சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்தவன் (அது சாத்தியமா என்பது வேறு செய்தி) என்றும், அரவாணை கிருட்டிணன் மணந்தான் என்றும் நமது புராணங்கள் கூறுகின்றன.//


    நோ கமெண்ட்ஸ்

    உங்களுக்கு சிறுவிளக்கம் அடியவனின் ஐயப்பன் +!சிவனுக்கும் விஸ்னுவுக்கும் பிறந்த என்பது தவறு இதன் முழுமையான விடயம் சிவன் விஸ்னு மோகினி அவதாரம் எடுத்தபோது ஏற்பட்ட கிளர்ச்சி அதாவது(ஒரு வயசுப்போடியன் ஹன்சிஹாவை நினைத்துக் கொண்டு உறங்கும் போது அவனை அறியாமல்/அறிந்து வெளியேறும் விந்து ( இதுக்கு விஞ்ஞானம் வேறு பெயர் கொடுக்கின்றது)அப்படி வெளியேறிய விந்தை விஸ்னு கைகளில் தாங்கினார் இதை விபரமாக ஐயப்பன் சரித்திரம் நூல் (நர்மதா பதிப்பகம் ) கூறுகின்றது அதைவிடுத்து பலர் இந்த விடயத்தை ஒரினச் சேர்க்கை என்ற விடயத்துக்குள் சோடிப்பது குஸ்பூ பிரபு உடன் குடித்தனம் நடுத்தும்போது ஏன் கர்பம் தரிக்கவில்லை என்று பின்னாளில் ஒரு கேடுகெட்ட நிருபர் கேட்டதைப் போல இருக்கு.//ஐயா விடயம் ஒரினச் சேர்க்கையாளரை ஆதரிக்கலாமா இல்லையா என்பதே! நீங்கள் படித்தவர்களே இப்படி ஆன்மீகத்தையும் அறிவியலையும் குழப்பளாமா சார்!
    தவறு இருப்பின் அடியேனின் கூற்றை மன்னிக்கவும்!///

    பதிலளிநீக்கு
  159. காட்டான் சொன்னது…
    ராசுக்குட்டி நீங்க ரெம்ப குழம்பிபோய் உள்ளீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களை தவராக நினத்து விடுவார்களோன்னு.. இது ஒரு விவாதம் நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு கொஞ்சம் குழப்பமா இருக்கையா நான் இப்பிடியான ஹோமோ செஸ்சுவல்களுடன் பழகி இருக்கேன்யா இத எழுதுவதைக்கூட நான் வெக்கப்பட மாட்டேன்யா.. உங்கள் கருத்துக்களை பார்கும்போது நீங்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் ஏன் கூட பயபடுகிறீர்கள்.. கல்யாணம் கட்டாத வயசுப்பொடியங்க நீங்க உங்களையும் தப்பா நினைச்சிடுவாங்கோன்னுதானே.. இப்பிடி பார்தா நாளைக்கு நாங்க எயிஸ் பத்தி எழுதினா அவருக்கு எயிஸ்ன் கத வந்தாலும் ஆச்சரியமில்லை.. என்னை பொறுத்த வரை இந்த அம்மா கட்சிக்காரன் எழுதின பதிவில இதுதான் சிறந்த பதிவு.. ஒரு விடயத்தை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும் எனது அப்பாவிடம் கூட இந்த பதிவை வாசிக்க சொன்னேன்.. வயசு போனவங்களுக்கு இருக்கும் தெளிவு ஆச்சரியமளிக்கிறது... மாப்பிள நீ பயபடும் காரணம் எனக்கு தெரியுது உன்ர காதலுக்கு எனது வாழ்த்துக்கள்.. மாப்பிள அரசியல் பதிவுல கருத்து போட பயப்பிட்டா புரிந்து கொள்ளலாம் இதுல போய்... ஹி ஹி ஹி
    அப்பாடா செம்ப நெளிக்க ஒருத்தர் கிடைச்சிட்டாரையா ஹிஹி//////



    உங்க ராசுக்குட்டிக்கு என்னால் முடிந்த வரை பதில் சொல்லிட்டேன், இனி என்னால முடியாதய்யா.......ஆவ்வ்வ்

    பதிலளிநீக்கு
  160. மாலதி சொன்னது…
    இன்றைய நிலையில் மிகவும் தேவியான பதிவு மனித வுரவுகள் இப்படி மாறுபட்ட பாலுறவுகளால் சீரழிவது உண்மையில் வருந்த வேண்டிய செய்தி மனது எல்லாவற்றையும் ஆசைகொள்ளும் அனாலும் அவற்றில் எல்லாவற்றிலும் மனதினை செலவிடகூடது கூட்டு குடும்ப உறவுகளும் குடும்ப உறவுகளும் இதனால் கேடு அடையும். இடுக்கைக்கு பாராட்டுகள்///////


    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  161. காட்டான் சொன்னது…
    யோ இந்த தனிமரத்த பிடிச்சு வையுங்கோய்யா இந்தாள் சாமி எப்பிடி வந்தாரென்று கதையளக்கிறார்... இல்லாதவர் எப்பிடி ஐயா வர முடியும்..!!???/////

    காட்டான் மாமா பார்த்து , சாமி கண்ணை கொத்த போகுது , ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  162. காட்டான் சொன்னது…
    ...
    அது ஏன் ஈழத்தவரின்ர எந்த தமிழ் விளம்பரமென்றாலும் மணியண்ணை என்று தான் தொடங்குகிறார்கள். தமிழ்ழ வேற பெயரில்லையா?

    திங்கள், 12 செப்டெம்ப்ர், 2011 12:18:00 am
    யோ மாப்பிள இது நல்லாயில்ல என்ர மணியண்ண எனக்கு பிடிக்குதையா அதுக்கு நீங்க ஏன்யா வரிஞ்சு கட்டுறீங்க.. வேற பெயர்கள் இருக்கையா இப்ப எங்கட பிள்ளையளுக்கு இவங்க வைக்கிற பேர எனக்கு தமிழ்ல எழுத வருகுதிலைலையா..!!!!!???//////

    ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  163. அருள் சொன்னது…
    Nesan கூறியது...
    @அருள் ஐயா!
    // //ஐயா விடயம் ஒரினச் சேர்க்கையாளரை ஆதரிக்கலாமா இல்லையா என்பதே! நீங்கள் படித்தவர்களே இப்படி ஆன்மீகத்தையும் அறிவியலையும் குழப்பளாமா சார்!// //

    ஆதரிக்கலாமா? இல்லையா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். "ஆதரிக்க மாட்டோம்" என்று ஒருவர் கூறுவதால் அது தவறு என்று கூறிவிட முடியாது என்பதே எனது கருத்து. ஏனெனில், ஓரின சேர்க்கை என்பது அடிப்படை மனித உரிமையுடன் தொடர்புடைய விடயம்.

    இந்திய நீதிமன்றம் ஏற்கனவே ஓரின சேர்க்கை என்பது தனிமனித உரிமை, கண்ணியத்துடன் வாழும் உரிமை என்றெல்லாம் விளக்கி உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து இங்கே காண்க: India's Historic Ruling on Gay Rights

    http://www.time.com/time/world/article/0,8599,1908406,00.html?iid=sphere-inline-bottom

    இந்திய பாரம்பரியத்தில் ஓரின சேர்க்கை ஒரு அங்கமாக இருந்துவருகிறது என்பதும் ஏற்கனவே விரிவாக விளக்கப்பட்ட விடயம்தான். அதனை இங்கே காண்க: http://www.galva108.org/samesex.html

    http://www.yorku.ca/irjs/Archives/F20/FB206.pdf

    காமசூத்திரத்திலும் கஜுரோகா சிற்பத்திலும் கூட ஓரின சேர்க்கை உண்டு. காண்க: http://en.wikipedia.org/wiki/File:Samesexloveindia.jpg

    பொதுவாக ஓரின சேர்க்கை என்பது மனநோய் என்று பலர் கூறிவருகின்றனர். ஆனால், உண்மையில் ஓரின சேர்க்கையை எதிர்ப்பதுதான் ஒருவகையான மனநோயாகக் கருதப்படுகிறது - Homophobia!/////


    தேங்க்ஸ் பாஸ்.

    நேசன் அண்ணா இது உங்களுக்கான பதில்.

    பதிலளிநீக்கு
  164. Nesan சொன்னது…
    இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது..ஏன் என்றால் நண்பர் பாலா சொன்னது போல திருமணத்தை தாண்டிய உறவுகள்,கல்யாணத்துக்கு அப்பால் தனது துணைதவிர்ந்த ஏனையோருடன் உறவுகொள்ளுதல் போன்றவிடயங்கள் அவர்களின் விருப்பத்தின் பெயரில் ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ளலாமா?
    திங்கள், 12 செப்டெம்ப்ர், 2011 1:22:00 am GMT-07:00
    //
    தம்பி ராச் நீங்கள் விடயத்தை மீறி விதண்டாவாதம் செய்கின்றீர்கள் சமூகத்தில் இருக்கும் செயல்களை அங்கிகரீக்கனும் அடக்குவது பாரிய பின்விளைவைத் தரும். ஒருத்தன்/தி ஒரினச் சேர்க்கையாளர் என்றாள் ஏன் சமுகம் தடுக்கனும் அதில் ஏன் ஐயா கலாசாரக்காவலர் வேசம் விஜய் படுத்தை தூகினால் சும்மா பால் பீர் ஊத்தி நாறடிக்கின்றீங்க ஆனால் உண்மையை சொன்னால் சமுகத்தில் அடக்கியும் அவனை/ அவளை கேவலமாக தாக்குவதும் ஏன் அதைவிடுத்து தேவையற்ற இன்னொரு உறவு வேலிதாண்டிய வெள்ளாடு என்று பதிவின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் சமுக்தை திருத்தவந்த போக்கிரி என்று ஒரவனின் உரிமை /சமத்துவம் /சுதந்திரம் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள் ஓ நீங்கள் இருப்பது பினம்தின்னும் ஆட்சியிலும் கூராயுதம் வீரர்களுக்கு விசில் அடிக்கவும் தானா//ஹீ ஹீ //
    .நண்பா இந்த ராச் என்னை ரொம்ப இம்சை கொஞ்சம் சொல்லுங்க சரன்யாகுட்டி தேடுது தனிமரத்துடன் கில்லி வேண்டாம் எனறு அவ்வ்!////

    யப்பா என்னால முடியல்ல, அவ்வவ்

    பதிலளிநீக்கு
  165. நிகழ்வுகள் சொன்னது…
    ////ஒரு வேளை
    இதற்க்கு காரணம் என்னோடு வேலை செய்பவர்கள் பெரும்பாலும்
    வெளிநாட்டவராகவும் நம்மவர் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்/// நச் ....))/////

    தேங்க்ஸ் பாஸ்.

    பதிலளிநீக்கு
  166. //நிகழ்வுகள் சொன்னது…
    ///காரணம் காலேஜ் வாழ்க்கையில் எனக்கும் தனிஷா என்ற ஒரு இலங்கை பெண்ணுக்கும் ஏற்ப்பட்ட காதல் /// ஓகோ பெரிய காதல் மன்னனாய் இருப்பிங்க போல .ஹிஹிஹி///

    அவ்வ்... ஏன் இந்த கொலை வெறி...... :)))

    பதிலளிநீக்கு
  167. கழ்வுகள் சொன்னது…
    ///அண்டி பிழைக்கவந்த நாட்டில் வரம் தந்த குற்றத்துக்காக அவர்கள் தலையிலேயே கை வைப்பதுதான் இவர்கள் கலாச்சாரம் சொல்லி தந்த தர்மமா??// இது பெரும்பாலான தமிழர்களின் குணம்...../////

    நிஜம் பாஸ்

    பதிலளிநீக்கு
  168. நிகழ்வுகள் சொன்னது…
    நீங்கள் இட்ட இடுகையில் சிறந்த இடுகையாக இதையும் உள்ளடக்குவேன் ....

    செக்ஸ் அவரவர் சுதந்திரம், இயற்க்கைக்கு புறம்பானது என்றாலும் ஏதாவது பாதிப்பு வரும் என்று தெரியவில்லை..அப்படி மனித குலத்துக்கு பாதிப்பு வரக்கூடியது என்றால் அந்த நாட்டு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டாது..////

    தேங்க்ஸ் பாஸ்,

    என்னால் நான் அதிகம் திட்டு வாங்கிய இடுகையாக இதையும் சேர்க்கலாம் ஹீ ஹீ
    செமையா நெளிச்சுட்டாங்க இல்ல

    பதிலளிநீக்கு
  169. நிகழ்வுகள் சொன்னது…
    ///மேலத்தேய காலாச்சாரங்களை எங்கள் மண்ணின் பாரம் பரியத்தை அழிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது//// ராஜா இன்று மேலைத்தேய நாட்டவர்களது வளர்ச்சியை பாருங்கள்... இந்த காலாச்சாரம் என்ற கட்டுப்பாடுகள் இல்லாததால் தான் அவர்களால் ஜெட் வேகத்தில் செல்ல முடிகிறது..ஆனால் நம்ம நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் கணவன் செத்தால் மனைவி விதவை, மூலைக்குள் ஒடுங்கி தான் கிடக்க வேண்டும் -- இது தான் நம் கலாசாரம்.. ஒரு சிலவற்றை உடைத்தெறிவதில் எந்த தப்பும் இல்லை நண்பா!!!!/////


    அதைத்தான் நானும் சொல்கின்றேன் புரிந்துகொள்கின்றார்கள் இல்லையே..
    இவர்கள் இருக்கும் வரை நம்மால் முன்னுக்கு வருவது அவ்வளவு எளிது இல்லை

    பதிலளிநீக்கு
  170. Ramani சொன்னது…
    ரோமில் இருக்கையில் ரோமானியனைப்போல்
    உடை உடுத்துவதுதான் சரி
    இந்தக் கருத்தை மிக அழகாக வலியுறுத்திப்போகிறது
    உங்கள் பதிவுதெளிவான பதிவு தொடர வாழ்த்துக்கள்///

    தேங்க்ஸ் பாஸ், உங்களை போன்ற பெரியவர்களே இதை புரிந்து பெருந்தன்மையாய் நடப்பது ஆச்சரியம்.
    நீங்கள் ரெம்ப வித்தியாசமான ஆள்தான் பாஸ்.

    பதிலளிநீக்கு
  171. //Yoga.s.FR சொன்னது…
    நான் இந்தப் பதிவைப் படிக்கவில்லை,அதனால்,கருத்தும் உரைக்கவில்லை!யாரும் எக்கேடு கெட்டுப் போகட்டுமென்றும் சொல்லவில்லை!எனது கொள்கை மற்றையோர் சுதந்திரத்தில் தலையிடாமை,அவ்வளவுதான்!///


    வணக்கம் பாஸ்,
    எங்க கொஞ்ச நாளாய் ஆளே காணோம்???
    நல்லா இருக்கீங்களா பாஸ்.

    பாஸ் உங்கள் கொள்கை மிக நல்லது.
    இதை எல்லோரும் பின் பற்றினால் பிரச்சனையே வராது.
    தேங்க்ஸ் பாஸ்.

    பதிலளிநீக்கு
  172. தனிமனித சுதந்திரத்தில் அதிகம் மூக்கை நுழைக்கும் எங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். எனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதைவிட பக்கத்துவீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவதில்தான் எம்மவர் பலருக்கும் ஆர்வம். தன்னினச்சேர்க்கையும் இயற்கையின் விதிகளில் ஒன்று அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இங்கு நான் வாழும் ஜேர்மனியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர் இந்தவகையைச் சேர்ந்தவர். ஆனால் அதற்காக அவரை மக்கள் ஒதுக்கிவிடவில்லை. மந்திரிப்பதவிவரை உயர்த்தி இருக்கிறார்கள். எங்கள் எண்ணங்களில் மாற்றம் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  173. ஒவ்வொரு சமுதாயத்தினதும்மொழி, மொழியின் எழுத்துக்கள், கலாச்சாரம் எல்லாமே காலத்திற்குக்காலம் மாற்றம்பெற்றுவருகிறது. ஒவ்வொரு இனமும் அவ்வப்போது சுயவிமர்சனங்கள் மீளாய்வுகள் மூலம் காலமாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால் நிலைத்திருக்கமுடியாது. நாம் இப்படித்தான் இருந்தோம் இப்படியேதான் இருப்போம் என முரண்டுபிடிப்பதி அர்த்தமில்லை

    பதிலளிநீக்கு
  174. வணக்கம் துஷ்யந்தன்;
    உங்கள் பதிவுகளைப் படிப்பதில் தனி ஆர்வம் வந்து விட்டது.

    பலர் ஒரினச் சேர்க்கையை இயற்கைக்கு முரண் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆண் பெண் உறவு உருவானதே இன விருத்திக்காக மட்டும் என்று கூற வருகிறார்களா??? அப்படியென்றால் கருத்தடை உபயோகிப்பது கூட இயற்கைக்கு முரண் தான். அதற்காக அதை நிறுத்தினால் மக்கள் தொகை என்னவாவது??? ஒரினச் சேர்க்கையை கொலை உணர்வுடன் ஒப்பிடுவது எவ்வளவு அபத்தம். திருமணத்தை தாண்டிய உறவில் கூட ஒருவரை நோகடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இது இருவரின் ஒப்புதலோடு நடப்பது. ஒருவர் இதை மனநோய் என்று குறிப்பிட்டிருந்தார். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது சமூகத்தில் உள்ளவர்களது வாழ்க்கையையோ பாதிப்பு ஏற்படுத்துவதைத் தான் நோய் என்பது. இவர்களின் செயலால் யாருக்கு என்ன பாதிப்பு. சொல்லப்போனால் இவர்களில் பலர் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். இதனால் சமூகத்திற்கும் மனித இனத்திற்கும் நன்மை தானே. இதில் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது??

    Even at the beginning of evolution, we needed some altruistic organisms to push life on earth ahead. Have you heard about cyanobacteria. One kind of them actually died without reproducing so they can fix nitrogen for others to reproduce. Nature obviously selected for those kind of bacteria not for their procreating effects but for their altrustic effects. Why don't we think of homosexuality as one such phenomenon??

    ஜீவா (
    சிலவற்றுக்கு எனக்கு தமிழ்ச்சொற்கள் தெரியாது. அதனால் கடைசியில் கொஞ்சம் ஆங்கிலக்கலப்பு. போகப் போக பழகிக் கொள்கிறன்)

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...