புதன், அக்டோபர் 31, 2012

சின்மயி'யும் சாரு ஷோபாசக்தி வகையறாக்களும்..


ன் பங்குக்கு மீண்டும் ஒரு முறை பதிவுலகை ரணகளம் ஆக்கியிருக்கின்றார் சின்மயி.

இந்த விடயம் பற்றி நிறைய பதிவர்கள் அலசி ஆராந்து நார் நாராக கிழித்து தொங்கப்போட்டு விட்டார்கள். இதற்கு மேல் நான் சொல்ல என்னதான் இருக்கு என்ற நிலையிலேயே அமைதியாக இருந்தேன். ஆனால் அட்டவனை போட்டு அறிக்கை விடுவது போல் நாளொரு வி.ஜ.பியும் ஊடகமும் ராஜன் சின்மயி கைய பிடிச்சான்&இழுத்தான் என்ற ரேஞ்சுக்கு பொங்குவதை பார்க்கத்தான் சகிக்க முடியவில்லை.

என்னைப்பொறுத்தவரை இந்த விடயத்தில் இரு பகுதியினர் மீதும் தவறுகள் இருக்கு. சின்மயியை அவர் தாயாரை ஆபாசமாக திட்டியது எத்தகை கண்டணங்களுக்கு உரியதோ அதை போலவே அப்படி அவர்களை பேச வைத்த சின்மயி'யின் அரைவேக்காட்டுத்தன அரசியல் கருத்துக்களும் மிக மிக கண்டணத்துக்கு உரியது. ஆனால் பிரபலம் என்ற ஒரே காரணத்துக்காய் ஒருவரை தப்ப விட்டு இன்னொருவருக்கு தண்டனை கொடுப்பது எந்த வகையில் நியாயம்..?

அதிகமான சினிமா பிரபலங்கள் பொது விடயங்களில் மக்குகளாக இருப்பார்களே தவிற எப்பவும் அறிவுஜீவிகளாக இருந்தது இல்லை என்ற பொத்தம் பொதுவான கருத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் சின்மயி.

சின்மயி

பொது இடங்களில் தங்கள் கருத்துக்களை பகிரும் போது ராஜன் போன்ற சாதாரணமானவர்களை விட சின்மயி போன்ற பிரபலங்கள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான பிரபலங்கள் அதுவும் சினிமா பிரபலங்கள் சொல்லும் கருத்துக்களை சரியா பிழையா என்று யோசிக்க கூட நேரமில்லாமல் பின் பற்ற நம்மில் பெரும்பாலானோர் தயாராவே இருப்பார்கள். இது தமிழனிடம் இருக்கும் பின்னடைவான ஒரு விடயமும் கூட :((

தன்னை யாராவது விமர்சிப்பதோ தன்னுடைய கருத்துக்களுக்கு எதிர் கருத்து சொல்வதோ சின்மயி'யிக்கு பிடிக்காத பட்சத்தில் அவர்களை இலகுவாக தன் கருத்துக்களை பார்க்கவும் விமர்சிக்கவும் முடியாதவாறு  Block பண்ணியிருக்கலாமே..? இதைத்தானே சமூக தளங்களில் நடமாடும் பிரபலங்களில் அதிகமானோர் செய்கின்றார்கள். இதுதான் பிரபலங்களுக்கு அழகும் கூட. அதை விட்டு பிரச்சனையை வளர்த்து ரசித்து சந்தர்ப்பம் பார்த்து பொறியில் சிக்க வைத்த சின்மயி'யின் குள்ள நரித்தனத்தை என்னவென்று சொல்வது...?!

சின்மயி'யின் இந்த செய்கை. நான் ஒரு பிரபலம். நான் என்ன சொன்னாலும் நீ கேக்க வேண்டும், எனக்கு எதிராய் நீ எந்த கருத்தும் சொல்லக்கூடாது என்ற அவரின் அதிகார திமிரைத்தான் காட்டுகின்றது. 

சின்மயி'யின் அலட்டலும் திமிரும் ஏற்கனவே ஊர் அறிந்ததுதான். விஜய் டிவியின் வெற்றி நிகழ்ச்சியான "சூப்பர் சிங்கரை" ஆரம்ப காலத்தில் தொகுத்து வழங்கியது இதே சின்மயி தான். பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிக பெரிய வெற்றியடைந்து ரேட்டிங் எகிறிய போது, அந்த நிகழ்ச்சி ஹிட்டானதே தன்னால்தான் என்ற சின்மயி'யின் அலட்டலால் கடுப்பான விஜய் டிவி சின்மயியை தூக்கி எறிந்து விட்டு அந்த இடத்தில் வேறு ஒருவரை வைத்து இன்றும் அதே ஹிட்டுடன் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றது.

ஆரம்பகால சூப்பர் சிங்கர் போட்டியாளர்களுடன் சின்மயி

அதன் பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அப்படியே அப்பட்டமாய் காப்பியடித்த சன் டிவி, தொகுப்பாளாரை சின்மயியை போட்டு ஆரவாரமாய் ஆரம்பித்த அதே வேகத்தோடு நிகழ்ச்சியை இழுத்து மூடி சின்மயியையும் வீட்டுக்கு அனுப்பியது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஹிட்டானது தன்னால் இல்லை என்பது சின்மயி'யிக்கு அப்போதாவது உறைத்து இருக்குமா தெரியாது.

இப்படியான விடயங்களில் சின்மயி போன்ற பிரபலங்களின் தவறுகளை விட அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் எங்கள் தவறுகள் தான் அதிகம். பற்பொடி விளம்பரத்தில் இருந்து ஆணுறை விளம்பரம் வரை பிரபலங்கள் சொன்னால்த்தான் கேப்போம் என்ற எங்கள் 'பிரபலங்கள் மேல் இருக்கும் மையலை' அவர்கள் அழகாக பயன்படுத்தி கொள்கின்றார்கள். அதை நாங்கள் சில இடங்களில் மீறும் போது பொறுக்க முடியாமலும் சகிக்க முடியாமலும் இப்படியான அதிகார இடங்களை நாடி எங்களை ஒடுக்க பாக்கின்றார்கள்.

சின்மயி'யின் அரசியல் கருத்துப்போலவே அவரின் பிரபலமும் அரைகுறைதான். அதனால் தான் என்னவோ இன்று சின்மயிக்கு எதிரான கருத்துக்கள் குவிகின்றன. இதே சின்மயி இடத்தில் விஜய்யோ அஜித்தோ இருந்து இந்த கருத்தை பகிர்ந்து இருந்தால் இப்போது எங்களிடம் இருக்கும் இந்த ஒற்றுமை அப்போதும் இருந்து இருக்குமா என்பது கேள்விக்குறிதான். 

உதாரணமாக சின்மயி இடத்தில் விஜய் இப்படி நடந்து கொண்டிருந்தால், ராஜன் மேல் தவறு இல்லா பட்சத்திலும் விஜய்க்கே ஆதரவு குவிந்து இருக்கும். நம்ம தலைவருக்கு எதிராய் நீ எப்படி கருத்து சொல்லலாம் என்று ஒரு குறூப்பே கொலைவெறியோடு கிளம்பியிருக்கும். விஜயை விமர்சித்தால் விஜயின் மனைவி பிள்ளைகளுக்கு கோபம் வருகின்றதோ இல்லையோ சினிமா பிரபலங்களை கடவுளாக நினைக்கும் நம்மவர்களுக்கு அறச்சீற்றம் வந்து தொலைத்து பல நாள் பழகிய நண்பன் என்று கூட பார்க்காமல் கிழித்து தொங்கப்போட்டு விடுவார்கள்.

இங்கே.. இங்கே தான் நாங்கள் பெரும் தவறு செய்கிறோம். இப்படி அவர்களை தூக்கி வைத்து பூசித்துக்கொண்டே இருக்கும் நாங்கள் திடிரென அவர்களை கீழே போட்டு விமர்சிக்கும் போது அதை சகித்துக்கொள்ள முடியாமல் இப்படியான கீழ்த்தரமான வேலைகளில் இறங்கின்றார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி காலம் காலமாக பிரபலங்களுக்கு குறிப்பாய் சினிமா பிரபலங்களுக்கு காவடி தூக்கும் எங்கள் செயலை முதலில் நிறுத்த வேண்டும்.

இணைய அறிவு கொஞ்சமும் இல்லாமல், அங்கே என்ன நடக்கின்றது நடந்தது என்று அறிந்து கொள்ளவும் விருப்பம் இல்லாமல் நியாயங்களை குழி தோண்டி புதைத்து விட்டு பிரபலம் என்றே ஒரே காரணத்துக்காய் சின்மயிக்கு ஒத்து ஊதும் ராஜ் டிவி போன்ற ஊடகங்கள் மிக மிக கண்டணத்துக்கு உரியவை.

இவர்கள் தான் இப்படி என்றால் இந்த சாருநிவேதா ஷோபாசக்தி வகையறாக்கள் எல்லாம் திடீர் கடவுளாகி ஆபாச பேச்சுக்களை எல்லாம் கண்டித்து பெண்களை காக்க வெளிக்கிட்டதுதான் 'என்ன கொடுமை சரவணா' ரகம். இந்த சாருவை பற்றி நான் சொல்லித்தான் தெரியணுமா..? இவரு வாய திறந்தா எந்த மாதிரி இருக்கும் என்பது உலக பிரபலமே. அடுத்தவர் நம்ம ஊர்க்காரர் (அதாங்க ஃப்ரான்ஸ்) ஷோபாசக்தி. ரெம்ப நல்லவன் போல் புலி எதிர்ப்பில் நடுநிலை வேஷம் போடும் இவர் பெண்கள் விடயத்தில் எப்படிப்பட்டவர் என்பதை அண்மையில் தமிழச்சி போட்டு உடைத்து கிழி கிழி என்று கிழித்ததை இலகுவில் மறந்து விட முடியுமா என்ன..? சாரு+ஷோபா இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் தான். அதனால் தான் இத்தகைய ஒரே சிந்தனை. இதில் ஷோபா சக்தி சொல்கிறார் சாருவுக்கு பெண்ணியம் பேச தகுதியில்லையாம்!

பட உதவி: 'நிகழ்வுகள்' கந்தசாமி.

அதைவிட எந்த ஒரு தலைபோற பிரச்சனை நடந்தாலும் அதை எல்லாம் கண்டுக்காமல் புலி எதிர்ப்பிலும், வாசகர்கள்(!) கடிதங்களுக்கு ஆபாசமாக பதில் சொல்வதிலும் மூழ்கி இருப்பவங்களுக்கு எங்கிருந்தாவது ஒரு "பொண்ணு" குரல் கொடுக்கும் போது 'மட்டும்' இவங்களுக்கு எல்லாம் எப்படித்தான் அறச்சீற்றம் வந்து தொலைக்கின்றதோ தெரியவில்லை. இப்படியான சமயங்களில் மட்டும் வேதம் ஓதும் இந்த சாத்தான்களுக்கு முதலில் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

எது எப்படியே பழைய பகையை மனசில் வைத்து ஊடகங்களை தன் பக்கம் திருப்பி தன் பழி வாங்கும் படலத்தை ஜோராக நடத்தி முடித்து விட்டார் சின்மயி. ராஜன் தரப்பு மேல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளே தள்ளியவர் உண்மையாகவே தன் பக்கமும் நியாயங்கள் இருக்கும் பட்சத்தில் தனது பிரபலம் என்ற செல்வாக்கை பயன்படுத்துவதையும், ஜெயலலிதாவை கடிச்சாங்க கருணாநிதியை கடிச்சாங்க அட கனிமொழி குஷ்பூ நயன்தாராவையும் கடிச்சாங்க என்று 'பக்கத்து இலைகளுக்கு எல்லாம் பாயாசம்' கேட்டு பிரச்ச்னையை திசை திருப்பி இப்படி கேவலமாய் பிரபலங்களிடமும் அதிகாரவர்க்கங்களிடமும் தனக்கு ஆதரவு தேடுவதை விட்டுவிட்டு நியாயமான வழியில் ராஜன் தரப்புடன் மோதினால் தன் மேல் இருக்கு கொஞ்ச நம்பிக்கையையும் மரியாதையையும் ஆவது சின்மயி காப்பாற்றிக்கொள்ளலாம்.

41 கருத்துகள்:

  1. வணக்கம் துஸி..
    சூப்பர் கட்டுரை, Sin மயி...இப்போது அமெரிக்கா போவதற்கு தயாராகுவதாக செய்தி வருகிறது.
    காரணம் சின்மயி கைது செய்யப்படலாம் எனும் தகவல் என்றும், இதனால் தப்பித்து அமெரிக்கா செல்ல தடாலடியாக நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள்!

    சாருவிற்கும், ஷோபாவிற்கும் இன்னும் உறைக்க கொடுத்திருக்கலாம்!
    இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. என்னை பொறுத்தவரை ராஜன் தரப்பில் எதுவித பிழையும் இல்லை, சின்மயி தாயாரின் போன் மூல உரையாடலை கேட்க்கும் போதே தெரிகிறது.. அவர்களின் வன்மமும், அதற்காக அவர்கள் காத்திருந்து வைத்த பொறியும்.. இப்போ கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை, ராஜனின் குடும்ப பின்னணியை கருத்தில் கொண்டு புகாரை வாபஸ் வாங்கலாம். ஆனால் அவர்கள் தரப்பின் ஆதிக்க திமிர் இடம் கொடுக்கவில்லை போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கை வாபஸ் வாங்க சின்மயின் திமிரும் ஆணவமும் இடம் கொடுக்காது என்றே நினைக்கிறேன். அப்படி வாபஸ் வாங்கினால் ராஜனுக்கு மட்டும் அல்ல அவருக்கும் நல்லது.

      நீக்கு
  3. இதில் ராஜ்டிவி போன்ற ஊடகங்கள் செய்த நாதாரித்தனமான கொடுமை, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு கொண்டு சென்று விடப்போகிறது என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த காலத்தில் ஊடகங்கள் நாடு நிலைமையை கடைப்பிடித்து இருக்கின்றது :(( அதைவிட ராஜ் டிவியை எல்லாம் யார் பாக்கிறா?? இப்படி பிரபலங்களுக்கு காக்கா பிடித்து தன இருப்பை தக்க வைத்து கொண்டால் ஒழிய... மற்றும்படி ஜீரோ ராஜ் டிவி

      நீக்கு
  4. சோபா சக்தியை, சாரு போன்ற வகையறாக்கள் ஒரே குட்டையில் ஊறியவர்கள்.. இவர்களின் பெண்ணியம் பல்லிளித்து பலகாலம் ஆகிவிட்டது.. கூடவே லீனா மணிமேகலை, ஜெயமோகன் போன்ற வகையறாக்களும் இந்த சின்ன பிரச்சனையில் தங்கள் புத்திஜீவி தனத்தை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தான் மகா காமெடி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேக்குறவன் கேணையனாய் இருந்தா இவர்கள் இது மட்டும் அல்ல இன்னும்பெசுவார்கள்.... :(

      நீக்கு
  5. பார்ப்பான்3:35 AM, நவம்பர் 01, 2012

    ஷோபா தனது நட்பு (!!!!!!!!!!!) வளையத்துக்குள் சின்மயியையும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இணைத்து கொள்ளலாம் என்று திட்ட மிட்டிருப்பார். ஹிஹிஹிஹ்ஹி

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா3:38 AM, நவம்பர் 01, 2012

    யாருடைய நட்பு வளையத்துக்குள் சின்மயியை இணைப்பது என்று ஷோபாவுக்கும் நம்ம காம வெறி எழுத்தாளருக்கும் இடையில் ஒரே போட்டா போட்டி.
    ஓநாய்களை நம்பிய ஆட்டு குட்டி

    பதிலளிநீக்கு
  7. ////ஆணுறை விளம்பரம் வரை பிரபலங்கள் சொன்னால்த்தான் கேப்போம் //// பிரபலங்களை அண்ணன் அசிங்கப்படுத்திட்டான் எலேய் இவருக்கும் ஒரு வழக்கு போடுங்களே

    பதிலளிநீக்கு
  8. இனி சின்மயின் எதிர்காலம் சினி பீல்டில் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழனுக்குத்தான் மறதி அதிகமே... சோ சின்மயியை இது பாதிக்காது என்றே நினைக்கிறேன் :(

      நீக்கு
  9. ////இதற்கெல்லாம் ஒரே வழி காலம் காலமாக பிரபலங்களுக்கு குறிப்பாய் சினிமா பிரபலங்களுக்கு காவடி தூக்கும் எங்கள் செயலை முதலில் நிறுத்த வேண்டும்.
    ////

    உண்மைதான் ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் ஆகும் என்பது சந்தேகமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹும்.... சாத்தியம் இல்லை என்பதுதான் கசக்கும் உண்மை ராஜ் :(

      நீக்கு
  10. டீயும்,போனும் மொகரக்கட்டையும்:)

    மொகரகட்டை சைபர் கிரைமில் சேர்த்தியா?அல்லது ஆணாதிக்க திமிரில் சேர்த்தியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜ நடராஜன் அண்ணா.
      உங்க வருகை ஹப்பியா இருக்கு... தேங்க்ஸ் :))))

      நீக்கு
  11. ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகளே!இதை விட முக்கியமான இலங்கை குறித்த ஜெனிவா நேரலை இன்னும் சில மணித்துளிகளில் துவங்க இருக்கிறது.

    நேரலை காண........

    http://webtv.un.org/live-now/watch/14th-session-of-the-universal-periodic-review-22-october-5-november-2012/1807081746001

    பதிலளிநீக்கு
  12. துஷ், அட்டகாசமான பதிவு..நன்றாக அலசி ஆராய்ந்துள்ளீர்கள்..கலக்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் செங்கோவி அண்ணா...
      எப்படி இருக்கீங்க......??
      நீங்களா பாராட்டுறது, இருங்கோ ஒருக்கா நேசமா என்று கிள்ளி பார்த்துக்கிறேன் :))) தேங்க்ஸ் அண்ணா....

      நீக்கு
  13. ****சாரு+ஷோபா இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் தான். அதனால் தான் இத்தகைய ஒரே சிந்தனை. இதில் ஷோபா சக்தி சொல்கிறார் சாருவுக்கு பெண்ணியம் பேச தகுதியில்லையாம்!****

    அந்த வகையில் ராஜன் இவர்களைபோல் எந்தப் பெண்ணிடமும் தவறாக நடக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டுகள் எதுவும் அவரை நோக்கி எய்யப்படவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பஹ்டு எவ்வளவு என்கிற கோட்டினை ராஜன் சரியாக அறியவில்லை என்பது மட்டும்தான் அவர் மேல் குற்றச்சாட்டு என்பதென்னவோ உண்மைதான், துஷி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருண், சரியான புரிதலோடு சொல்லி இருக்கீங்க, நீங்க சொன்னது மிக சரியே..... நீங்க சொல்வது போல் ராஜன் தவறு விட்ட இடம் அதுதான் :(((

      நீக்கு
  14. பெயரில்லா4:40 PM, நவம்பர் 01, 2012

    நலமா துஷி...?

    எனக்கெனவோ We are trying to beat a dead dogன்னு தோணுது துஷி...
    May be barking at the wrong tree too..-:)

    கொஞ்சமா கேள்விப்பட்ட விஷயங்கள் இப்ப நல்லா புரியுது...

    பிறகு சந்திக்கலாம்...

    பதிலளிநீக்கு
  15. என்னப்பா பதிவுலகின் பெரிய பெரிய கைகள் எல்லாம் வந்திருக்கிறார்கள்..? மருமோன் ரெம்பத்தான் வளர்ந்துட்டார்போல..!;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் மை மாம்ஸ்,
      எப்படி இருக்கீங்க?? :)))))
      ஆஹா.... உங்களுக்கு மருமோனை விட்டுக்கொடுக்காம புகழ்றதே வேலையா போச்சு.... ஹீ ஹீ.....
      ஆனாலும் தேங்க்ஸ் மாமா. ஜ லவ் யூ மாம்ஸ் :))))

      நீக்கு
  16. உண்மையான பதிவு.... நன்றாக இருக்கு உங்கள் கட்டுரை அமைப்பும் கருத்துக்களும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  17. சூப்பர் அதை பத்தின்ன என்னுடைய பதிவு இன்று எனது தளத்தில் http://chakkarakatti.blogspot.in/2012/11/blog-post_1.html

    பதிலளிநீக்கு
  18. பிரபலங்கள் எல்லோருமே மாயா உலகில் வாழ்பவர்கள் ,எதார்த்தமான மேடையில் நாலு வார்த்தைகள் சொந்தமாக பேச தெரியாதவர்கள் !!

    பதிலளிநீக்கு
  19. இந்த தருணத்தை பயண்படுத்தி தகவல் தொழில்நுட்ப சட்டத்தில்ம் திருத்தல் கொண்டு வரவேண்டும், அரசியல் அமைப்பு சட்டம் தரும் கருத்து உரிமைக்கு எதிரானது என்ற புரிதல் கொண்டு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா3:13 PM, நவம்பர் 12, 2012

    துஷி

    நலமா?


    உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  21. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  22. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் துஷி...

    60??? -:)

    பதிலளிநீக்கு
  23. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...