ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

கலைஞர் ஐயாவை பிடிக்கும்! காரணங்கள் சில..


ரு காலத்தில் புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு இல்லை என்று
சொன்னவர் நீங்கள். ஆனால்  உங்கள் தொண்டன் வைகோவுக்கு
கிடைக்கும் செல்வாக்கை பார்த்து எங்கே நான் பூதம் போல் பாதுகாத்து
வைத்திருக்கும் திமுகா என்ற சொத்து எனக்கு பின் என் வாரிசுகளுக்கு
போகாமல் வைகோவுக்கு போய்விடுமோ என்ற அச்சத்தில் கொஞ்சமும்
நா கூசாமல் "வைகோ புலிகளை வைத்து என்னை கொலை செய்ய
திட்டம் போடுகிறார்" என்று அத்தனை மீடியாவையும் அழைத்துவைத்து
அசராமல் பொய் சொன்னீர்களே அப்போதே உங்களை எனக்கு
ரெம்ப பிடித்து போய்விட்டது.

ல்லா நாட்டு, மாநில முதல்வர்களும் எப்போது பார்த்தாலும் நேரம் இல்லை நேரம் காணாது என்று பந்தா பண்ணுகிறார்கள், ஆனால்
நீங்கள் இவ்வளவு பிஸியிலும் "சித்தி" மெகா தொடர் வெற்றி
விழாவிலும் "மெட்டி ஒலி" மெகா  தொடர் வெற்றி விழாவிலும்  மேடை 
ஏறி ஒரு எபிசோட்டை கூட மிஸ் பண்ணாமல் பார்த்தேன் என்று
சொல்லி புகழ்ந்து தள்ளி அண்டை மாநில முதல்வர்களை மட்டும்
அல்ல கழக கண்மணிகளையும் வீட்டு பெண்மணிகளையும் உங்கள்
கலைத்தாகத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்க வைத்தீர்களே
அப்போதும்  உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ம்மையார் ஆட்சிக்கு வந்துவிட்டார். உங்கள் கைதும் நெருங்கி
விட்டது, உங்களை கைது செய்யும் நாளும் தெரிந்துவிட்டது.. அட
நேரம் கூட தெரிந்து விட்டது. சன் டிவி காரனுக்கு அதான் உங்க 
பேரணுக்கு போனைப்போட்டு  உங்கள் வீட்டுக்கு வெளியேயும்
உள்ளேயும் ஒளிந்து இருக்க செய்து விட்டு, போலிஸ் உங்கள் வீடு
வந்து கைது செய்த போது எதுவுமே தெரியாதவர் போல
"லுங்கியுடன்"  நின்று ஐய்யோ  கொல்லுறாங்களே.. அய்யோ   
கொல்லுறாங்களே..  என்று   கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்
கத்தி ஒளிந்து நின்ற பேரன்களைக்கொண்டு  படம் புடித்து அதை 
சன் டிவியில் ஒளிபரப்பு செய்து உலக தமிழருக்கே உங்கள் நடிப்பு திறமையை காட்டினீர்களே அப்போதும் எனக்கு உங்களை ரெம்ப பிடித்துப்போய்விட்டது.

நீங்கள் ஒரு மிக சிறந்த நாத்திகவாதி!!. ஆனால் பேரன்களோ
தங்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆன்மிகம் வளர்த்து கல்லா 
கட்டுகிறார்கள் . ஏன் உங்கள் தொலைக்காட்சியிலேயே விநாயகர் 
சதுர்த்திக்கு விடுமுறை தினமென்று சொல்லி சிறப்பு படம்! காட்டுகிறீர்கள். 
உங்கள்  வீட்டு மனைவி-துணைவி உட்பட்ட உறவுகளே  கோயில் கோயிலாக ஏறி இறங்கி உங்கள் நலம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள்.
இது கூட பெரிய விடயம் இல்லை. பாபா என்ற சாமியாரை வீட்டுக்கு
அழைத்து அவர் மந்திரமாக வரவழைத்து தந்த மோதிரத்தை
கைவிரலில் ஆசையாக பாதுகாப்பாக போட்டு வைத்துள்ளீர்களே
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.

ஜெயலலிதா-சசிகலா ஒரு  கோயில் விழாவில் பங்கேற்ற போது,
ஜெயலலிதா தனக்கு அணிவித்த மாலையை கழட்டி சசிகலா
கழுத்தில் போட்டார், உடனே நீங்கள் உங்கள் ஆக்களைகொண்டு
அதை படம் பிடித்து உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்  திரும்ப  திரும்ப  ஒளிபரப்பாக்கி ஜெயாவும்-சசியும் மாலை மாற்றினார்கள்
என்று  "ஓரின செயர்க்கையாளர்கள்" என்ற ரேஞ்சில் சொல்லி 
நல்ல மனிதர்கள் பலரை உங்கள் முகத்தில் காரி துப்ப வைத்தீர்களே
(எழுத்தாளர் ஞானி கூட உங்களை குமுதத்தில் கண்டித்து இருந்தார்)
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ருத்துக்கணிப்பு என்ற பெயரில் உங்கள் பேரன்-மகன்களுக்குள்
நடந்த பொழுது போக்கு சண்டையில் "தினகரன்" அலுவலகம்
கொளுத்தப்பட்டு அப்பாவி உயிர்கள் சில பலியாக பெரிய
நாட்டாமை போல் அவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை
என்று பேரங்களை தள்ளி வைத்தீர்கள். அவர்களுக்கு சன் டிவிக்கு
போட்டியாக மக்கள் சொத்தில் உங்கள் சொத்தாக கலைஞர்
தொலைக்காட்சியை ஆரம்பித்தீர்கள் எல்லாம் ஒக்கேதான் திடீர்
என ஒருநாள் உங்களுக்கு "இதயம் இனிக்க கண்கள் பனிக்க" 
சில லாபம் தேடி ஒட்டிவிட்டீர்கள் பேரன்களுடன். கழக கண்மணிகள்
கூட ஒருநிமிடம் ஆடித்தான் போய்விட்டார்கள். ஆனால் உங்களுக்கு
இதில் எத்தனை லாபங்கள்  அப்போதே யோசித்து பார்த்த உடனேயே
உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்தில் இறுதிப்போர் ஆரம்பமாகிவிட்டது, கொத்து கொத்தாக எம்
சனத்தை எல்லாம் கொன்று குவிக்க ஆரம்பித்து விட்டான் சிங்கள
இனவெறியன். நாங்கள் கத்தினோம் கதறினோம் தமிழ்நாட்டில்
மக்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
"முத்துகுமார்" என்ற ஒரு புனித உயிர் எங்களுக்காக உங்களிடம்
மன்றாடி தீக்கு இரையாகிவிட்டது, உலக தமிழினமே உங்களிடம்
கையேந்தி நிக்குது அசைந்தீர்களா ?? நீங்கள். இப்போ பாருங்கள்
 பாசிச! ஜெயலலிதாவை  தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற
என்னால் முடியாது என்றவர் இந்த சிறு மக்கள் கொந்தளிப்பை
பார்த்தே மனம்மாறி அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்திலேயே
தீர்மானம் கொண்டு  வந்துவிட்டார் அடிகடி முடிவை மாற்றும் இவர்
எல்லாம் முதல்வரா?? ஆனால் நீங்கள் அப்படியா கடிதம் எழுதி
எழுதி, ஆர்ப்பாட்டக்காரர்களை  கைது செய்தும் கடைசி வரை
காங்கிரஸின் ஆசையை நிறைவேற்ற இத்தாலி அன்னைக்கு ஆதரவாக பக்க பலமாக இருந்தீர்களே, நீங்கள் அல்லவா முதல்வர்!! அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்தின் இன அழிப்பு வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.
மக்கள் கொந்தளிப்பையும் மீடியாக்கள் கேள்விக்கனைகனைகளையும்
சமாளிக்க முடியவில்லை உங்களால், திடீரென ஒருநாள்   காலையில்
பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு செரிக்காமல் மெரினாவீச்சுக்கு
காத்து வாங்க வந்த நீங்கள் சட்டென மனைவி தலைமாட்டுக்கும்
துணைவி கால்மாட்டுக்கும் இருக்க படுத்துவிட்டீர்கள் "உண்ணாவிரதம்"
என்ற பெயரில் மெரினாவில். சில மணித்தியாலங்கள் கரைய பசி
குடலை புடுங்க லஞ்சுக்கு வூட்டுக்கு போகணும் என்ற பரிதவிப்பில் "அங்கே" இருந்து போன் அடிச்சாங்க யுத்தம் எல்லாம் நின்னுட்டாம்.
என்று   சொல்லி விட்டு உண்ணாவிரதத்தை! நிறைவு செய்தீங்க
பாருங்க அப்பொழுதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

டுத்த நாள் மீடியாவே திரண்டு வந்து உங்களை செருப்பால
அடிக்காத குறையாக யுத்தம் எல்லாம் நின்னுட்டாம் என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்தபின்தான் கொத்துக்குண்டுகளில்
கொத்துகொத்தாக எம் இனம்  கொலைசெய்யப்பட்டதை சொன்ன போது
அசராமல்  உங்கள் அக்மார்க் புன்னகையோடு "மழை விட்டாலும்
தூறல் இன்னும் விடவில்லைப்போல்" என்று அந்த நேரத்திலும்
உங்கள் இலக்கிய திறமைய காட்டினீர்களே.. அப்போதும் உங்களை
எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ல்லாமே முடிந்துவிட்டது. சொந்த நாட்டிலேயே அகதி ஆகி
விட்டோம் நாங்கள். எங்களிடம் இருந்து உறிஞ்சப்பட்ட ரத்தம்
காங்கிரஸ் பற்களிலும் தெரிகிறது, அது உங்கள் கண்களுக்கும்
தெரிகிறது.அப்போது கூட நீங்கலாக விலக்க வேண்டாம் காங்கிரசை,
பிடிச்ச  சனியன் லேசில் போகாது இங்கே உங்களை விட்டு தானே
காங்கிரஸ் போகிறேன் என்று அடம்பிடிக்குது விட்டீர்களா? நீங்கள்.
கோவிச்சுக்கொண்டு அம்மா வீட்டுக்கு போன புது மனுசியை
சமாதானப்படுத்துவது போல் போய் கையில் காலில் விழுந்து
கூட்டி வந்து தேர்தலில் அத்தனை இடங்களை அள்ளி கொடுத்து
பார்த்து பார்த்து இடங்களை கூட தெரிவு செய்து கொடுத்தீர்களே
அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

யுத்தம் என்ற பெயரில் சிங்கள காடையன் எங்களை  அழித்து கொண்டிருந்த  நேரத்தில் தமிழ் நாடே  கொந்தளித்துக் கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டின் முக்கிய தலைவர்கள் சோனா நமிதா பாபிலோனா எல்லோரையும் அறிவாலயம் அழைத்து பேசி நாளொரு வண்ண புகைப்படத்தை முரசொலியில் பிரசுரித்துகொண்டு  
இருந்தீர்களே   அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ழத்து உயிர்களை  காப்பாற்ற சொல்லி  மத்தியரசுக்கு வெறும்  தந்தி
மட்டும் அடித்துக்கொண்டு இருந்த நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு
பதவி வேண்ட மட்டும் புள்ளைகள் படை சூழ இந்த தள்ளாத
வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி விரைந்தீர்களே அப்போதும்
உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும்.

னிமொழி மகளை முக்கிய புள்ளியாக வைத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் 
ஊழலில் மக்கள் பணம் ரூ. 1.76 லட்சம் கோடியை அலாக்கா கொள்ளை அடித்துவிட்டு அந்த பணத்தை மனைவி துணைவி மகள் என்று
எல்லோர் பெயரிலும் போட்டு கலைஞர் தொலைக்காட்சி வேறு ஆரம்பித்துவிட்டு கொஞ்சம்  கூட குற்ற உணர்வு இன்றி இப்படிப்பட்ட 
ஒரு ஊழல்  நடக்கவே இல்லை என்று சத்தியம் பண்ணாத 
குறையாக  அண்டைப்புளுகு புளுகினீர்களே அப்போதும் உங்களை
எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

திமுகாவை அதன் முந்தைய தலைவர்கள் வளர்த்து இந்த நிலைக்கு
கொண்டுவர எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள். ஆனால் இன்று
நீங்கள் பார்த்துகொண்டு இருக்கவே காங்கிரஸ் மெல்ல தன்னுடன்
சேர்த்து திமுகாவையும் முழ்கடித்து கொண்டு இருக்குறது. ஆனால்
"திமுகா என்ன அப்பன் வீட்டு சொத்தா" என்ற கணக்கில் திமுகாவை
விட மகள்தான் எனக்கு முக்கியம் என்று இன்னும்  காங்கிரசின்
கால்கழுவி அவர்களிடம் வலுக்கட்டாயமாக ஒட்டிக்கொண்டு 
இருக்கிறீர்களே  இப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ண்மையில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
தூக்கு தண்டனையை நிறைவேற்ற முயன்ற போது,  குற்றம் சாட்டப்பட்ட
அந்த மூவரையும் தூக்கில் போட பரிந்துரைத்தவர்  சிபாரிசு  செய்தவர் 
நீங்கள்தான் என்பதையும் மற(றைத்)ந்து, ஐயோ காப்பாருங்கள் என்று   
அம்மையாருக்கு கருணை மடல் வரைந்து கபட நாடகத்தை ஜோராக
அரங்கேற்றினீர்களே அப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.

ட இப்போக்கூட பாருங்க....  பேரறிவாளன் முருகன் சாந்தன்
ஆகியோரை காப்பாற்ற சட்டமன்றத்தில் அம்மையார் தீர்மானம் கொண்டுவந்தது.நான் இந்த விடயத்தை கையில் எடுத்ததை பார்த்து பயந்துதான் என்று நேர்மையாக உண்மையாக அறிக்கை விட்டீர்கள் பாருங்கள் இப்போதும் உங்களை எனக்கு ரெம்ப பிடித்துபோய்விட்டது.


குறிப்பு: பதிவின் நீளம் கருதி தலைவரை பிடித்ததின் காரணங்களின்
பகுதி-01 முற்றும்.









LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...