புதன், ஜூன் 29, 2011

பாசமாவது.. பந்தமாவது.. இது வெளிநாடு.

பல விடயங்களை நாம்  நினைத்தது போல் எழுதிவிடலாம், 
சில விடயங்கள் மட்டும் நாம் நினைத்தை அப்படியே எழுதி விடமுடியாது அப்படித்தான் இப்பதிவும் எனக்கு. பல நாட்களாக இதைப்பற்றி  எழுதணும் எழுதணும் என்று நினைப்பேன் பின் ஏதோ ஒன்று என்னை தடுக்க  அப்படியே  கிடப்பில் போட்டு விடுவேன்,  இன்று எழுதிவிடுவது என்ற முடிவோடு ஆரம்பித்து விட்டேன்.  இதை மேற்கொண்டது எழுதுவது மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமானதுதான்  ஆனாலும் பரவாயில்லை இப்பதிவை படித்து ஒரு வெளிநாட்டு  உறவாவது   தங்கள் செய்கைகளையும் பார்வைகளையும் மாற்றிக்கொண்டால்  அதுவே 
எனக்கு போதுமானது.  

மனிதர்கள் எப்போதுமே பாசத்துக்கு அடிமைப்பட்டவர்கள்.  மனிதர்களின்
வாழ்க்கை சுற்றி சுற்றி உறவுகளால் பின்னப்பட்டது.  எனக்கு இப்போது கூட நினைவு இருக்குறது எங்கள் சொந்தங்கள் எல்லாம் வன்னியில்
இருந்த காலங்களில் எங்கள் குடும்பம் மட்டும் வவுனியாவில் இருந்தது,
வன்னியில் இருந்து கொழும்பு,வவுனியா வரும் என் அப்பாவின்
சொந்தங்களாக இருந்தாலும் சரி அம்மாவின் சொந்தங்களாக இருந்தாலும் சரி தங்கி செல்வது எங்கள் வீட்டில் தான்,  அதனாலே என்னவோ
எங்கள் வீட்டில் எங்கள் குடும்பம் என்று நாங்கள் எப்போதும் தனியாக இருந்ததே இல்லை எங்கள் வீட்டில் எப்போதும் யாராவது ஒரு விருந்தாளி  இருந்துகொண்டே இருப்பார்.  அம்மாவும் அப்பாவும் மனம் நோகாதபடி அவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பது இப்போதும்
என் கண்களில் நிற்கிறது.  அதை விட பாடசாலை விடுமுறை நாட்களில் யாரவது மச்சான்,மச்சாள் பெரியம்மா மகன்,மகள் என்று எங்கள் வீட்டில்தான் வந்து விடுமுறையை களிப்பார்கள். அப்படி வரும் நாட்களில்
என் பெற்றோர் எங்களை விட அவர்களைத்தான் அதிகம் கவனிப்பார்கள்.
எங்களுக்குள் சிறு சண்டை வந்தால் கூட என் பெற்றோர் அவர்கள் பக்கம் தான் நிப்பார்கள்.   சின்ன  வயசில் இதற்காக என் பெற்றோருடன்  சண்டை கூட போட்டு உள்ளேன் அதற்க்கு  அவர்கள்  சொல்லுவார் நீ என் பிள்ளை உன்னை கவனிக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னை நம்பி அவர்கள் பெற்றோர் அனுப்பி இருக்கிறார்கள் அவர்களும்  என்னை நம்பி வந்து இருக்கிறார்கள் அவர்கள் மனம் நோகாது நடந்து கொள்வதுதான் எனக்கு மட்டும் அல்ல உனக்கும் மரியாதை பெருமை என்று.  அதை போல்  நாங்கள் வன்னிக்கு எங்கள் சொந்தகாரங்கள்  வீட்டுக்கு போனாலும் இதே கதைதான் அங்கேயும் அவர்கள் பிள்ளைகளை விட எங்களைத்தான் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ஆக மொத்தம் ஊரில் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும்  பிற பிள்ளை தலை தடவினால் தன் பிள்ளை  தானே  வளரும் என்பது போலதான் அவர்கள் நடவடிக்கை அமைந்து இருக்கும்.  இதுவே அவர்களுக்கு சந்தோஷமும் கூட.

ஆனால் இதற்க்கு அப்படியே எதிர்மாரானவர்கள் நம் வெளிநாட்டு உறவுகள் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. 
பிறர் பிள்ளையாய் குட்டி வளர்த்தால் தன் பிள்ளை நல்லாய் வளரும் என்பது இவர்களின் கணக்கு. ஊரில் பெற்றோரால் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டு யுத்தம் காரணமாகவோ கஸ்ரம் காரணமாகவோ அல்லது வெளிநாட்டு மோகம் காரணமாகவோ அரும்பு மீசையுடன் கனவுகளையும் வளர்த்துகொண்டு வெளிநாடு வரும் இந்த அப்பாவி ஜீவன்கள் அடைக்கலம் புகுவது வெளிநாட்டில் வாழும் தங்கள் சொந்தங்களிடமே அங்கே இவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமும் விரக்தியும் மட்டுமே. 
ஊரில் இருந்து வருவவர்கள் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் செய்ய வேண்டும்,  மொத்தத்தில் தங்களுக்கு ஒரு நல்ல வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின்  அசைக்க முடியாத எண்ணம்.  தங்கள் பிள்ளைகளையும் ஊரில் இருந்து வரும் பிள்ளைகளையும் இவர்கள் பார்க்கும்  பார்வைகள் வேறு வேறு விதமாகவே இருக்கும்.  இரு பிள்ளைகளுக்கும் சம வயது இருந்தால் கூட தங்கள் பிள்ளைகளை நோகாமல் பார்த்துகொள்ளும்  இந்த  உத்தமர்கள்  ஊரில் இருந்து வந்த பிள்ளையை எடுப்பார் கைபிள்ளை போல்தான் நடத்துவார்கள் தங்களின் அந்த இழி செயல்களுக்கு கூட ஒரு நியாயமான! காரணத்தை தேடி கண்டு பிடித்து சொல்வார்கள் 'என் புள்ள இங்க பிறந்து வளந்தபுள்ள அது கஸ்ரம் நஸ்ரம் பாக்காதது அதுக்கு என்ன தலை எழுத்தா கஸ்ரப்படனும் என்று',  இதே ஊரில் இருந்து வந்த பிள்ளை என்றால் அங்கே சாப்பிட வழி அற்று நிறைய அடிபட்டு அவமானப்பட்டு இங்கே வந்தது அதனால் தாங்கள் எவ்வளவும் கேவலமாக அசிங்கப்படுத்தி கஸ்ரப்படுத்தினாலும் தாங்குவார்கள் தாங்கவேண்டும் என்பது இவர்களின் பணத்திமிரின் உச்சக்கட்ட தீர்ப்பு.  உண்மையில் கஸ்ரமோ  நஸ்ரமோ  ஊரில் இருக்கும் பெற்றோரும் தங்களை போன்றுதான் பாசத்தைக்கொட்டி தங்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி   வளர்க்கிறார்கள்,  காக்கைக்கும்    தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை ஏனோ இந்த ஓரவஞ்சக்காரர்கள்  சுலபமாக மறந்து விடுகிறார்கள். 

நான் பிரான்ஸ் வந்து படித்த காலங்களிலும் சரி இப்போது  வேலைக்கு செல்லும் காலத்திலும் சரி  ஊரில் செல்லமாக வளர்க்கப்பட்டு வெளிநாடு வந்து  இப்படிப்பட்ட சொந்தங்களிடம்! வீட்டு கொடுமைகளையும் 
அவமானங்களையும்  சகித்துக்கொண்டு வாழ்பவர்களை சந்தித்துகொண்டுதேதான்  இருக்குறேன். வெளியே சென்றால் அரவணைப்பார் இல்லாததாலும் விசா பிரச்சனை மொழி பிரச்சனை வேலைப்பிரச்சனை கூடவே வெளியே காத்திருக்கும் ஆபத்துக்கள் அதைவிட ஊரில் இருந்து பெற்றோர் உன் மாமா.. தானே சித்தி.. தானே சித்தப்பா தானே..  எனக்காக பொறுத்துக்கொண்டு இரு என்று  எங்கே வெளியே போனால் தன் பிள்ளை கெட்டுவிடும் என்ற அச்சத்தால் அவர்கள் இடும் பாசக்கட்டளைக்கும் இவர்கள் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாகவே இருந்து விடுகிறார்கள்.

ஊரில் செல்லமாக வளர்க்கப்பட்டு வசதி இருந்தும் வெளிநாட்டு மோகத்தால் பிரான்ஸ் வந்து இங்கே சொல்லனா துயரத்தை அனுபவித்த என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து இருக்குறேன் நான்.  எனக்கு அப்போது  17  வயது.  பிரான்சில் காலேஜ்  படித்து கொண்டு இருந்த காலம் அது. அப்போதுதான் புதிதாக வந்து அறிமுகமானான் அவன்.  பெயர் கணேஷ்,  எங்கள் வகுப்பில் மட்டும் அல்ல எங்கள்   காலேஜ் இலேயே நாங்கள் இரண்டு பேர் மட்டுமே தமிழ் என்பதால் நாங்கள் விரைவிலேயே நண்பர்கள் ஆனதில் ஆச்சரியம் இல்லை. வகுப்பில் எப்போதுமே யாரையாவது கலாய்துகொண்டு கொண்டு
மொக்கை போட்டுகொண்டு இருப்பவன் நான். எனக்கு எதிர்மாறானவன் அவன்.  முகத்தில் எப்போதுமே ஒருவித சோகமும் விரக்தியும் அப்பியே இருக்கும் காரணம் கேட்டால் சொல்ல மாட்டான்.  சில நாட்களில் அழுத முகத்துடனேயே  காலேஜ் வருவான்  எங்கள் வகுப்பு ஆசிரியர் கூட அவனிடம் சந்தேகப்பட்டு  வீட்டில்  உனக்கு  ஏதும்  பிரச்சனையா  என்று கூட கேடடு உள்ளார் எல்லாவற்றுக்கும் அவன் பதில் மறுப்பான தலை அசைவும் புன்னகையுமே.  ஒரு நாள் அடிபட்ட காயங்களுடன் காலேஜ் வந்து விழுந்துவிட்டேன் என்று ஒற்ற வரியில் காரணம் சொல்லிவிட்டு இருந்தவனை என்னால் மட்டும் நம்ப முடியவில்லை தனியே அழைத்து போய் விசாரித்ததில் மழுப்பியவன் ஒரு கட்டத்தில் உடைந்து போய் தேம்பி தேம்பி அழவே தொடக்கிவிட்டான், அதன் பின் அவன் சொன்ன காரணங்கள் எல்லாம் பக் பக் ரகம்.

வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளை அவன், வெளிநாட்டு ஆசையில் படிப்பை குழப்பி அடித்துக்கொண்டு பிரான்ஸ் வந்தவன் அடைக்கலம் ஆனது தன்
மாமன் ஆனா தாயின் சகோதரன் வீட்டில்,  ஆரம்பத்தில் எல்லாமே நல்லாத்தான் போனது போக போக அவனை வீட்டு வேலைக்காரர் ஆக
பார்க்க தொடக்கிவிட்டார்கள் அவர்கள்,  அதைவிட  குடிகாரர் ஆன இவன் மாமா  விடியப்பறம்  இரண்டு மணிக்கு வந்தாலும் இவன்தான் எழுந்து
சாப்பாடு போட்டு கொடுக்கணும், அவர்கள்  பிள்ளைகள்   பாடசாலை 
முடிந்து வந்து இன்டர்நெட் இருக்கும் போது கூட அவர்கள்  பசி  அறிந்து  ஏதாவது  சாப்பிட மேசைக்கு கொண்டு போய் வைக்கவேண்டும்  அவர்கள்
பிள்ளைகள் ரியூசன் போனாலும் சரி விளையாட போனாலும் சரி பின்னால்
இவனும் காவலுக்கு போக வேண்டும்,  நண்பர்கள் சக உறவினர்களுடன் பேச
 தடை  மொத்தத்தில் வீட்டு சிறையில் அடைத்து வேலைக்காரன் ஆக வைத்து இருந்தார்கள். அவனுக்கு அவர்கள் கொடுத்த ஒரே சுதந்திரம் காலேஜ்  போக அனுமதித்ததுதான், அது கூட பதினெட்டு வயதுக்கு குறைய
இருப்பவர்களை படிக்க விடாமல் வீடோடு வைத்து இருந்தால் இங்கத்த அரசாங்கத்துக்கு பதில் சொல்ல வேண்ட்டும் என்ற பயத்தால். இத்தனை  கொடுமைகள் பத்தாது என்று அவன் செய்கைகளில் பிழை கண்டு பிடித்து அடித்து சித்திரவதை செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். பல இரவுகள் அடித்து வீட்டுக்கு வெளியே விட்டும்  கதவை சாத்தி இருக்கிறார்கள்,  கணவன் மனைவிக்குள் வரும் சண்டை கூட இறுதியில் இவனை அடிப்பதில்தான்  முடியுமாம்.  இரவில் கண்ணீர் விட்டு அவன் தலையணையை   நனைக்காதா  நாட்களே இல்லை என்றான். இதையெல்லாம்  கேட்டு எனக்கு அவர்களை விட அவன் மேல் தான் அதிக கோவம்  வந்தது,  என்னைப்பொறுத்தவரை   குட்டுபவனை விட  குட்டு  வாங்குபவன்தான் முட்டாள்.

இவ்வளத்தையும்  கேட்ட பின் திரும்பவும் என் நண்பனை அவன் மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு சத்தியமாக இரவு என்னால் நிம்மதியாக தூங்கி இருக்க முடியாது,  என் நண்பனிடம் மனம் விட்டு பேசினேன் பின் அடுத்து என்ன செயலாம் என்று கூறி அதனால் வரும் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியல் இட்டு கூறிவிட்டு காலேஜ் மதிய சாப்பாட்டு நேரம் காலேஜ் கேட் ஏறி  குதித்து  ஒரு தமிழ் கடைக்கு வந்து நான்  போட்டு இருந்த சங்கிலி மோதிரம் இரண்டையும் வித்ததும் கையில் ஒரு 650ஜீரோ   கிடைத்தது (இந்த சங்கிலிமோதிரம் வித்து நான் வீட்டில் பட்ட பாடை ஒரு தனி பதிவாகவே போடலாம்) அந்த பணத்தை என் நண்பனிடம் ஏதும் அவசரம் என்றால் வைத்துகொள் என்று கூறி கொடுத்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு பிரான்சில் ஆதரவு அற்றவர்களுக்கு உதவிசெய்யும் ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று  அவன் நிலையை சொல்லி தங்கவும் படிக்கவும் உதவி கேட்டோம். அங்கே எங்கள் இருவருக்கும் பதினெட்டு வயதுக்கு குறைவு என்பாதால் அவர்கள் போலீஸுக்கு போன் பண்ண அவர்கள் வந்து எங்கள் இருவரையும் குண்டடியாக தூக்கி சென்று ஸ்டேசனில் வைத்துக்கொண்டு இருவீட்டாருக்கும் போன் பண்ணி வர சொல்லி விட்டார்கள்.  இருளத்தொடங்கிவிட்டது.  இருவரும்  இது  புதுஅனுபவம்  அதை விட இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை  என்பதால்  பயத்தில்  உறைந்துபோய் நிற்கின்றோம், சிறிது நேரத்துகெல்லாம் இரு வீட்டாரும் வந்து விட்டார்கள் விடிய விடிய நடக்கிறது விசாரணை இறுதியில் என் நண்பனை நாளை கோட்டில் ஆஜர் படுத்த போவதாக சொல்லி அவனை மட்டும் மறித்துக்கொண்டு எங்கள் எல்லோரையும் அனுப்புகிறார்கள் என் நண்பன் ஓடி வந்து என் கைகளை இறுக பற்றுகிறான் ஒரு பெண் போலீஸ் வந்து என் கையை பிடித்த அவன் கைகளை விலக்கி உள்ளே அழைத்து செல்கிறாள் எல்லாம் ஒரு கனவு போல் நடக்கிறது வெளியே வந்த எனக்கு  என்  நண்பனின்  மாமா கொடுத்த சாபங்கள்  இன்றுவரை  என்னால்  மறக்க முடியாதது.  எங்கள் வீட்டுக்கு வந்ததும் என் வீட்டார் எனக்கு செய்த அர்ச்சனைகள் எதுவுமே எனக்கு ஏறவில்லை மாறாக என் நண்பனின் அந்த கடைசி நேர பரிதாப முகமே கண்முன் நிழலாடுகிறது.  அடுத்த நாள் கோட்ஸ்க்கு  நண்பன் வருவான் என்று தெரியும் எவ்வளவு கெஞ்சியும் வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது,  மூன்று நாட்கள் வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை  நாலாம் நாள்  என் நண்பனை  எதர்பார்த்த படி  காலேஜ்  விரைகிறேன் அங்கே அவன் இல்லை  நாட்கள்  வாரங்கள்  ஆகி  வாரங்கள் மாதங்கள் ஆகிறது  அவன்  தகவல்தான் ஏதும்  இல்லை,  சுத்தி சுத்தி  எல்லா இடமும் விசாரித்தும் பயன் இல்லை,  எங்கே நான் தான்  தப்பு செய்து விட்டோமோ என்று மனச்சாட்சி உறுத்த முள்ளின் மேல் இருப்பதை போல் நாட்களை  கடத்திக்கொண்டு இருக்கிறேன்.  பல மாதங்களின் ஒரு நாள்  காலேஜ்  வகுப்பில் நுழைந்து என்  அருகே வந்து அமர்கிறான் என் நண்பன், சத்தியமா என் வாழ்க்கையில் அன்று அனுபவித்த சந்தோஷத்தை இன்றுவரை அனுபவித்தது இல்லை, எங்கே என் நண்பனின் வாழ்க்கையை நானே அழித்ததுவிட்டேனோ என்று குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருந்த எனக்கு அவனது வருகையும் புன்னகை முகமும் பெரும் மனநிறைவை  தந்தது.  "மச்சான் இப்போதுதாண்டா  நான் வெளிநாட்டில் இருப்பதை  போல் உணர்கிறேன்டா.. இந்த சந்தோஷம் உன்னால் வந்தது தேங்க்ஸ்டா துஷி" அவனுடைய இந்த ஒரு வார்த்தை போதும் அவனுக்காக நான் பட்ட காயங்களையும் அவமானங்களையும் ஆற்ற.

வெளிநாடுவாழ் உறவுகளே..  தயவுசெய்து  உங்கள் பிள்ளைகள் மேல் காட்டும் அன்பில் ஒரு சிறிய அளவையேனும் உங்களையே தஞ்சம் என
நம்பி வந்து இருக்கும் அப்பாவி ஜீவன்கள் மேலும் காட்டுங்கள் அல்லது
அன்பைக்காட்டாவிட்டாலும் அவர்கள் மேல் வெறுப்பையேனும் உமிழாமல்
இருங்கள். ஒன்றை மட்டும் உங்கள் மனதில் ஆழமாக பதித்து வையுங்கள்
நீங்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு பத்துமாசம் சுமந்து பிள்ளையை பெற்று
எடுகிறிர்களோ அதேபோல்தான் ஊரில் இருப்பவர்களும், அவர்கள்
குறைமாதத்திலோ அல்லது எந்தவித வலியையும் அனுபவிக்காமலோ
குழந்தையை பெற்ரெடுப்ப்பது இல்லை. உங்களுக்கு உங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும் பாசத்துக்கு எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை அவர்கள்
தங்கள் பிள்ளைகள் மேல் காட்டும் பாசம்.  அவர்களிடம் உங்களிடம் இருப்பதுபோல் பணம் இல்லாவிட்டாலும் அவர்களும் தங்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்து வலிகளையும் வேதனைகளையும்
அடக்கி கொண்டுதான் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை
மறக்காதீர்கள் தயவுசெய்து.

டிஸ்கி 1 :  வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படியல்ல, அதற்காக 
ஒருசிலர்தான் இப்படி என்று சொல்லக்கூட என் மனச்சாட்சி இடம் கொடுக்க வில்லை, வெளிநாடுவாழ் நம்மவர்களில் ஒரு சிலரை விட பெரும்பாலானர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

டிஸ்கி 2 :  இப்பதிவில் சொல்லிய என் நண்பனின் கதை அத்தனையும் உண்மை, சொல்லபோனால் அவனுக்கு அவர்கள் வீட்டில் நடந்த கொடுமைகள் சிலவற்றை இப்பதிவில்  மறைத்து  உள்ளேன்,  காரணம்  அவற்றை எல்லாம் எழுத எனக்கே வெக்கமாக இருக்கிறது.

டிஸ்கி 3 : சாரிடா கணேஷ் ,  உன்னிடம் கேட்காமல் உன் கடந்தாகால 
வாழ்க்கையை பதிவிட்டத்துக்கு.












97 கருத்துகள்:

  1. வணக்கம் துஷி, உங்கள் பதிவைப் படித்து மனசு கனத்துவிட்டது! நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை!

    பதிலளிநீக்கு
  2. துஷி நீங்கள் ஃபிரான்சில் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியாவிட்டாலும், இவ்வளவு துணிச்சலாக, உங்கள் மனக்குமுறலை வெளிக்கொணர்ந்தமைக்கு எனது நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  3. வெளினாட்டில் அப்படித்தான் துஷி! அன்புக்கும் உறவுக்கும் துளியளவும் மதிப்பு இல்லை! எல்லாமே பணம்தான்! மாதம் மாதம் தவறாமல் 250 யூரோ கொடுத்துவாருங்கள்! பேசாமல் இருப்பார்கள்! ஒரு மாதம் கொடுக்கப் பிந்தினால் போச்சு! ஒரே புறுபுறுப்பும், திட்டலும்!!

    பதிலளிநீக்கு
  4. படிக்கும்போதே மனதிற்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது. உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் நல்ல பதிவு. கடைசியில் கஷ்டம் விலகியுள்ளதாகவும், அதற்கு காரணமே நீங்கள் தான் என்று கணேஷ் சொல்வது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
    வணக்கம் துஷி, உங்கள் பதிவைப் படித்து மனசு கனத்துவிட்டது! நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை!
    //,

    வணக்கம் பாஸ்
    தேங்க்ஸ்..
    உண்மைதான் பாஸ், இங்கிருக்கும் உறவுகள் தாங்களும் ஊரில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். அதை கூட மன்னிக்கலாம்
    ஆனால் இவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு மாதிரி இவர்களை நம்பி வந்த பிள்ளைகளை ஒரு மாதிரி பார்க்கும் ஓரவஞ்சனை இருக்கே
    கடவுளே இவர்களுக்கு எல்லாம் கடவுள் மாசு என்று ஒன்றை வைத்து இருக்கிறானா..?? என்பதையே கேள்விக்குறி ஆக்கி விடும்.

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் ஊரில் படித்தவர்கள், பண்பானவர்கள் இப்படிச் செய்வதில்லை! அங்கு ஒழுங்காகப் படிக்காமல், மதிப்பில்லாமல் இருந்தவர்கள்தான் இங்கு வந்து பந்தா காட்டுகிறார்கள்! எமது பாஷையில் சொன்னால், ஆட்டம் போடுகிறார்கள்!

    அடிப்படைப் பிரச்சனை - படிப்பறிவின்மை!

    பதிலளிநீக்கு
  7. துஷி, கணேஷ் இப்போது ஃபோயரிலா தங்கி இருக்கிறான்! அவன் நல்லா இருக்கணும்! பாவம் அவன்! அவனுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்!

    அவனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்! எனது அன்பையும் அவனுக்குச் சொல்லிவிடுங்கள்!

    பதிலளிநீக்கு
  8. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
    துஷி நீங்கள் ஃபிரான்சில் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியாவிட்டாலும், இவ்வளவு துணிச்சலாக, உங்கள் மனக்குமுறலை வெளிக்கொணர்ந்தமைக்கு எனது நன்றிகள்!
    //

    நானும் பாரிஸ் தான் பாஸ்,
    இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற பல நாள் ஆதங்கத்தில் வந்த பதிவு பாஸ்.
    நீங்களும் பாரிஸ் தான??
    உங்கள் மாத்தியோசியின் ரசிகன் பாஸ் நான்
    இது பேச்சுக்கு சொல்லவில்லை,
    யாரவது ஏன் ப்ளாக் விலாசம் கேட்டால் உங்கள் ப்ளாக் இன் விலாசத்தையும் சேர்த்துத்தான் கொடுப்பேன்
    படிக்க சொல்லி... சூப்பரா எழுதுறிங்க, நகைச்சுவை உங்களுக்கு சரளமாக வருது பாஸ்,

    பதிலளிநீக்கு
  9. போதாக்குறைக்கு, ஊரில் இருக்கும் எமது பெற்றோர்களுக்கு இவர்களே ஃபோன் செய்து, உனது பிள்ளை அப்படி செய்கிறான்! அங்கு திரிகிறான், இங்கு திரிகிறான் என்று இல்லாத பொல்லாததையெல்லாம் சொல்லி விடுவார்கள்!

    பாவம் எமது அப்பாவிப் பெற்றோர்கள்! அவர்களுக்கு எப்படி உண்மை தெரியும்?

    பதிலளிநீக்கு
  10. துஷி, உங்கள் கடமை இன்னமும் முடிந்துவிடவில்லை!

    விசா இல்லாத புதுப்பெடியங்களை மிகவும் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தி, மாடு போல வேலை செய்விக்கும் தமிழ்க்கடை பத்ரோன்மார்,

    கேஸ் எழுதிக்கொடுக்கிறோம் என்ற பெயரில், பணம் பறிக்கும் கேஸ்காரகள்!,

    நல்ல வேலை பெற்றுத்தருகிறோம் என்று ஏமாத்தி பணம்பறிக்கும் அரக்கர்கள்!,

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

    தமிழனை ஃபிரான்சில் ஏமாத்துவது, அவனுக்கு குழிபறிப்பது எல்லாமே தமிழர்கள்தான்!

    எப்போதுதான் திருந்தப் போகிறார்களோ?

    பதிலளிநீக்கு
  11. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
    போதாக்குறைக்கு, ஊரில் இருக்கும் எமது பெற்றோர்களுக்கு இவர்களே ஃபோன் செய்து, உனது பிள்ளை அப்படி செய்கிறான்! அங்கு திரிகிறான், இங்கு திரிகிறான் என்று இல்லாத பொல்லாததையெல்லாம் சொல்லி விடுவார்கள்!
    பாவம் எமது அப்பாவிப் பெற்றோர்கள்! அவர்களுக்கு எப்படி உண்மை தெரியும்?
    //

    இது நிதர்சனம் பாஸ்
    இதை ஏன் பதிவில் எழுத நினைத்து பின் விட்ட ஒன்று , இது கணேஷ்க்கும் நடந்தது
    இவனுக்கு அடித்து சித்திரவை செய்துவிட்டு ஊரில் இவன் அம்மாவுக்கு போன் போட்டு இவன் அப்படி செய்தான் இப்படி செய்தான் இவனால் எங்கள் குடுப்பம் பிரிய போகிறது என்று சொல்லி பேசுவார்களாம்,
    அப்போது அங்கே விடியப்பறம்
    அந்த அப்பாவி தாய் பிள்ளையின் அழுகுரல் கேட்டு எவ்வளவு துடிப்பால் என்று யோசித்து பாருங்கள்.
    கடவுளே.....

    பதிலளிநீக்கு
  12. நானும் பாரிஸ் தான் பாஸ்,
    இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற பல நாள் ஆதங்கத்தில் வந்த பதிவு பாஸ்.
    நீங்களும் பாரிஸ் தான??
    உங்கள் மாத்தியோசியின் ரசிகன் பாஸ் நான்
    இது பேச்சுக்கு சொல்லவில்லை,
    யாரவது ஏன் ப்ளாக் விலாசம் கேட்டால் உங்கள் ப்ளாக் இன் விலாசத்தையும் சேர்த்துத்தான் கொடுப்பேன்
    படிக்க சொல்லி... சூப்பரா எழுதுறிங்க, நகைச்சுவை உங்களுக்கு சரளமாக வருது பாஸ்,/////

    மிக்க நன்றி துஷி, உங்கள் அனைவரினதும் அன்பால்தான் இது சாத்தியமாகிறது நண்பா! மிக்க நன்றி!

    உங்களது இப்பதிவை எனது ஃபேஸ்புக்கில் சிறிது நேரத்தில் ஷேர் பண்ணிவிடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  13. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப்
    உங்களது இப்பதிவை எனது ஃபேஸ்புக்கில் சிறிது நேரத்தில் ஷேர் பண்ணிவிடுகிறேன்!//

    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்
    உங்கள் FACEBOOK எங்களுக்கும் தந்தாள் நாங்களும் பின் தொடர்வோம் இல்லே.. :))

    பதிலளிநீக்கு
  14. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
    வெளினாட்டில் அப்படித்தான் துஷி! அன்புக்கும் உறவுக்கும் துளியளவும் மதிப்பு இல்லை! எல்லாமே பணம்தான்! மாதம் மாதம் தவறாமல் 250 யூரோ கொடுத்துவாருங்கள்! பேசாமல் இருப்பார்கள்! ஒரு மாதம் கொடுக்கப் பிந்தினால் போச்சு! ஒரே புறுபுறுப்பும், திட்டலும்!!//

    உண்மைதான் பாஸ்
    அப்படி கொடுத்தால் கூட இவர்கள் தொல்லைகள் குறையாது பாஸ்

    பதிலளிநீக்கு
  15. //வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
    படிக்கும்போதே மனதிற்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது. உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் நல்ல பதிவு. கடைசியில் கஷ்டம் விலகியுள்ளதாகவும், அதற்கு காரணமே நீங்கள் தான் என்று கணேஷ் சொல்வது சற்றே ஆறுதல் அளிக்கிறது.//

    நன்றி அய்யா
    உங்களைபபோன்ர் பெரியவர்களின் வருகை
    உண்மையில் மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்குது ,
    நன்றி
    அடிக்கடி வாருங்கள் அய்யா

    பதிலளிநீக்கு
  16. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
    உண்மையில் ஊரில் படித்தவர்கள், பண்பானவர்கள் இப்படிச் செய்வதில்லை! அங்கு ஒழுங்காகப் படிக்காமல், மதிப்பில்லாமல் இருந்தவர்கள்தான் இங்கு வந்து பந்தா காட்டுகிறார்கள்! எமது பாஷையில் சொன்னால், ஆட்டம் போடுகிறார்கள்!

    அடிப்படைப் பிரச்சனை - படிப்பறிவின்மை!//

    அதே.. அதே..
    இதே காரணத்தைதான் நானும் நினைப்பேன் பாஸ்

    பதிலளிநீக்கு
  17. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
    துஷி, உங்கள் கடமை இன்னமும் முடிந்துவிடவில்லை!

    விசா இல்லாத புதுப்பெடியங்களை மிகவும் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தி, மாடு போல வேலை செய்விக்கும் தமிழ்க்கடை பத்ரோன்மார்,

    கேஸ் எழுதிக்கொடுக்கிறோம் என்ற பெயரில், பணம் பறிக்கும் கேஸ்காரகள்!,

    நல்ல வேலை பெற்றுத்தருகிறோம் என்று ஏமாத்தி பணம்பறிக்கும் அரக்கர்கள்!,

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

    தமிழனை ஃபிரான்சில் ஏமாத்துவது, அவனுக்கு குழிபறிப்பது எல்லாமே தமிழர்கள்தான்!

    எப்போதுதான் திருந்தப் போகிறார்களோ?//

    இவர்கள் அட்டகாசம் இன்னும் இருக்கு பாஸ்
    அதிலும் "விசா இல்லாத புதுப்பெடியங்களை மிகவும் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தி, மாடு போல வேலை செய்விக்கும் தமிழ்க்கடை பத்ரோன்மார்" இது கொடுமை பாஸ் இதால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகமான அப்பாவிகள்.

    பதிலளிநீக்கு
  18. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
    துஷி, கணேஷ் இப்போது ஃபோயரிலா தங்கி இருக்கிறான்! அவன் நல்லா இருக்கணும்! பாவம் அவன்! அவனுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்!

    அவனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்! எனது அன்பையும் அவனுக்குச் சொல்லிவிடுங்கள்!//

    ஓம் பாஸ்
    ரெம்ப தேங்க்ஸ் கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்
    அதை விட இந்த பதிவை அவன் நாளை கண்டிப்பாக பார்ப்பான்.

    பதிலளிநீக்கு
  19. ஒகே துஷி! நாளைக்கு வேலைக்குப் போகணும்! கெளம்புறேன்! குட் நைட்! நல்லதொரு பதிவைப் படித்த திருப்தி மனசில்.....!

    பதிலளிநீக்கு
  20. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
    ஒகே துஷி! நாளைக்கு வேலைக்குப் போகணும்! கெளம்புறேன்! குட் நைட்! நல்லதொரு பதிவைப் படித்த திருப்தி மனசில்.....!
    //

    ஒகே பாஸ் ,
    நானும் படுக்கணும் நாளைக்கு எனக்கும் வொர்க் ,
    தேங்க்ஸ் பாஸ்,
    எனக்கு சந்தோசமாக இருக்கிறது, எனக்கு புடித்த ஒரு பதிவருடன் இவ்வளவு நேரம் பேசியதை நினைத்து,
    மீண்டும் ஒரு தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  21. நண்பா பதிவினை படிக்கும் போது கவலையாக இருக்கிறது . பல நண்பர்கள் என்னிடம் பகிர்ந்த விடயம் இதுதான் . நீங்கள் வெளிகொனர்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  22. வெளிநாட்டில் உள்ள பல இளையோரின் வாழ்க்கை இப்படிதான் போகிறது . I

    பதிலளிநீக்கு
  23. இந்த பதிவினை எனது முக பக்கத்தில் இணைக்கிறேன் நண்பா

    பதிலளிநீக்கு
  24. //Mahan.Thamesh கூறியது...
    நண்பா பதிவினை படிக்கும் போது கவலையாக இருக்கிறது . பல நண்பர்கள் என்னிடம் பகிர்ந்த விடயம் இதுதான் . நீங்கள் வெளிகொனர்துள்ளீர்கள்.
    //

    நன்றி நண்பா.
    உண்மைதான்
    இங்கே (பிரான்சில்) ஓராயிரம் கணேஷ்மார் மாமா வீட்டிலோ மாமி, சித்தப்பா,அன்ரி, பெரியம்மா இப்படி நிறைய வீடுகளில் இன்னும்
    அடைபட்டு விடிவுக்ககா விடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் பாஸ்,
    அவர்களுக்காக இரக்கப்பட மட்டும்தான் முடியும் பாஸ்

    பதிலளிநீக்கு
  25. //Mahan.Thamesh கூறியது...
    வெளிநாட்டில் உள்ள பல இளையோரின் வாழ்க்கை இப்படிதான் போகிறது . //

    சத்திய உண்மை நண்பா
    பாவப்பட்ட ஜீவன்கள் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  26. //Mahan.Thamesh கூறியது...
    இந்த பதிவினை எனது முக பக்கத்தில் இணைக்கிறேன் நண்பா
    //

    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  27. படிக்கும் போதே ரொம்ப கஸ்டமா இருக்கு அண்ணா

    தமிழனை ஏமாற்றுவதே தமிழன்தான்

    பதிலளிநீக்கு
  28. கணேஷ் அண்ணாவை நலம் விசாரிச்சதா சொல்லி விடுங்கோ அண்ணா

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் துஷி
    மனதை கனக்க வைத்த ஒரு பதிவு..
    வெளிநாட்டவரின் அரக்க குணத்தை அப்படியே வெளிப்படுத்திவிட்டீர்கள்.. ஆனால் எவ்வளவுதான் சொன்னாலும், எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு என்பதுதான் என் கருத்து.

    பதிலளிநீக்கு
  30. இறுதிப்போரில் எம் உறவுகள் ஆயிரக்கணக்காக இங்கு கொல்லப்பட்டபோதுகூட, அதைபற்றி பேசாமல், போராட்டத்துக்கு பெரும் பங்காற்றியவர்கள் நாம்தான், போர் மீண்டும் வெடிக்கும், அவனை கொல்லுவோம் இவனைக்கொல்லுவோம் என்று பிதற்றித்திரிந்த காடையர் கூட்டம்தானே அவர்கள்...

    இப்படியானவர்கள் செய்யும் அநியாயங்களால் கிடைக்கும் கெட்ட பெயர், அங்குள்ள சில நல்மனம் கொண்ட உறவுகள் மீதும் படர்வதுதான் வேதனைக்குரியது

    பதிலளிநீக்கு
  31. இது போன்றவர்களையெல்லாம் நடு வீதியில் விட்டு நாயை சுடுவது போல சுட்டுத்தள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  32. உங்கள் நன்பன் பல துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் மகிழ்ச்சியான வாழ்வுக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  33. நண்பரே...தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை சேர்ந்த நான் சிறு வயதில் சென்னைக்கு படிக்கப்போய் பட்ட கஷ்டங்களை அப்படியே பதிவிட்டுள்ளீர்கள்.

    உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவையில்லை என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.
    வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. நட்புக்காக நண்பனுக்காக நீங்கள் துணிச்சலாக செய்த விடையங்களை என்னவென்று சொல்லி பாராட்டுவது என்று எனக்கு தெரிய வில்லை அண்ணா உங்களை போல ஒரு நண்பன் அமைவது கடினம் இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்தில் பங்கெடுத்து துயர் துடைப்பவன் தான் நண்பன் அதை நீங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.......... அண்ணா சுதந்திரப்பறவையாக இருந்த என் நண்பன் ஒருவன் உங்கள் இடத்தில் கூண்டுப்பறவையாக இப்போது அடைபட்டுக்கிடக்கிறான்(விளங்கும் எண்டு நினைக்கிறன்) அவன் மீட்சி எப்போது??????????

    பதிலளிநீக்கு
  35. என்ன செய்வது. மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள். இன்று நல்ல நிலையில் இருந்தாலும் கூட, அவர்களும் கஷ்டப்பட்டு வந்தவர்கள் தான். அதை அவர்கள் உணர வேண்டும். உணர்ந்தால் தான் மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  36. நண்பரே உங்களுடைய இந்த பதிவை நான் படித்தலில் இருந்து எனக்கு வெளிநாடுகளில் உறவினர் விடுகளில் தங்கி இருக்கும் என் நண்பர்களை பற்றிய நிலைமையும் இப்படித்தானோ என்று தோன்றுகிறது...உங்களுடைய இந்த பதிவு என்னை மட்டும் அல்ல இதை படித்த அனைவரையும் ஒரு நிமிடம் யோசிக்க வைத்து இருக்கும் நண்பரே..உங்களுடைய அருமையான இந்த பதிவிற்கு ஒரு நன்றி...

    பதிலளிநீக்கு
  37. எல்லா அலங்கரத்துக்குள்ளும் ஒரு சோகம் உண்டென்று நிருபித்த பதிவு துஷி, அந்த வயதிலும் உங்களின் நண்பனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வத்து மனம் நெகிழச்செய்தது
    நல்லப் பதிவு

    பதிலளிநீக்கு
  38. சாரிடா கணேஷ் , உன்னிடம் கேட்காமல் உன் கடந்தாகால
    வாழ்க்கையை பதிவிட்டத்துக்கு./// pottaachchu samaalippaa?

    பதிலளிநீக்கு
  39. உணர்வுகளை பிரதிபலிக்கும் நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  40. எங்களுக்கு உங்க நடக்கிறது பெருசா தெரிய வாரேல...உங்க பதிவு மூலமா தெரியுது துஷி..
    இத்தனை வேதனைகளை தாண்டி போனால் அங்கும் வேதனை தான் போலும்...
    கனக்க வைத்த பதிவு...ஓட்டவடைக்கு நன்றிகள் பதிவை ஹை லைட் பண்ணி பேஸ்புக்கில் காட்டியமைக்கு..

    பதிலளிநீக்கு
  41. //ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க கூறியது...
    படிக்கும் போதே ரொம்ப கஸ்டமா இருக்கு அண்ணா

    தமிழனை ஏமாற்றுவதே தமிழன்தான்//

    தேங்க்ஸ் பாஸ்

    உண்மைதான் மற்ற இனத்துக்கு மட்டும் அல்ல தமிழனுக்கும் தமிழனை புடிக்குது இல்லை

    பதிலளிநீக்கு
  42. //ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க கூறியது...
    கணேஷ் அண்ணாவை நலம் விசாரிச்சதா சொல்லி விடுங்கோ அண்ணா
    //

    கண்டிப்பாக...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்
    அடிக்கடி வாங்க தம்பி

    பதிலளிநீக்கு
  43. //மதுரன் கூறியது...
    வணக்கம் துஷி
    மனதை கனக்க வைத்த ஒரு பதிவு..
    வெளிநாட்டவரின் அரக்க குணத்தை அப்படியே வெளிப்படுத்திவிட்டீர்கள்.. ஆனால் எவ்வளவுதான் சொன்னாலும், எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு என்பதுதான் என் கருத்து.
    //

    தேங்க்ஸ் பாஸ்,
    உண்மைதான் ஓட்டவடை அண்ணா சொன்ன மாதிரி
    இவர்களின் அடிப்படை பிரச்சனை "படிப்பறிவு இன்மைதான்" மதுரன்

    பதிலளிநீக்கு
  44. //மதுரன் கூறியது...
    இது போன்றவர்களையெல்லாம் நடு வீதியில் விட்டு நாயை சுடுவது போல சுட்டுத்தள்ள வேண்டும்
    //

    சரியாக சொன்னீர்கள் நண்பா,
    அப்படி செய்தால் கூட இவர்கள் மேல் உள்ள கோவம் எனக்கு போகாது மதுரன்,
    மனிதப்பிறவி என்று சொல்லவே வெக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்.

    பதிலளிநீக்கு
  45. //மதுரன் கூறியது...
    உங்கள் நன்பன் பல துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் மகிழ்ச்சியான வாழ்வுக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.//

    உண்மை மதுரன்,
    அவன் நிறையா காயம் பட்டுவிட்டான்,
    இப்போது சந்தோசமாக இருக்கிறான் இருக்க வேண்டும் இதுதான் என் ஆசையும்.

    பதிலளிநீக்கு
  46. //நவீனன் கூறியது...
    நட்புக்காக நண்பனுக்காக நீங்கள் துணிச்சலாக செய்த விடையங்களை என்னவென்று சொல்லி பாராட்டுவது என்று எனக்கு தெரிய வில்லை அண்ணா உங்களை போல ஒரு நண்பன் அமைவது கடினம் இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்தில் பங்கெடுத்து துயர் துடைப்பவன் தான் நண்பன் அதை நீங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.......... அண்ணா சுதந்திரப்பறவையாக இருந்த என் நண்பன் ஒருவன் உங்கள் இடத்தில் கூண்டுப்பறவையாக இப்போது அடைபட்டுக்கிடக்கிறான்(விளங்கும் எண்டு நினைக்கிறன்) அவன் மீட்சி எப்போது??????????//

    தேங்க்ஸ் நவீனன்,
    உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் என்று நினைக்குறேன்

    பதிலளிநீக்கு
  47. //உலக சினிமா ரசிகன் கூறியது...
    நண்பரே...தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை சேர்ந்த நான் சிறு வயதில் சென்னைக்கு படிக்கப்போய் பட்ட கஷ்டங்களை அப்படியே பதிவிட்டுள்ளீர்கள்.

    உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவையில்லை என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.
    வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.
    //

    வருகைக்கு நன்றி பாஸ்,
    அப்படியா???
    இப்படிபட்டவர்கள் எல்லா இடமும் பரவித்தான் இருக்கிறார்கள் போல்

    இதோ வருகிறேன் பாஸ்

    பதிலளிநீக்கு
  48. //தமிழ் உதயம் கூறியது...
    என்ன செய்வது. மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள். இன்று நல்ல நிலையில் இருந்தாலும் கூட, அவர்களும் கஷ்டப்பட்டு வந்தவர்கள் தான். அதை அவர்கள் உணர வேண்டும். உணர்ந்தால் தான் மனிதர்கள்.
    //

    இவர்கள் வந்த பாதைகளை மறந்த மடையர்கள் நண்பா,

    பதிலளிநீக்கு
  49. // A.R.ராஜகோபாலன் கூறியது...
    எல்லா அலங்கரத்துக்குள்ளும் ஒரு சோகம் உண்டென்று நிருபித்த பதிவு துஷி, அந்த வயதிலும் உங்களின் நண்பனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வத்து மனம் நெகிழச்செய்தது
    நல்லப் பதிவு
    //

    ரெம்ப நன்றி பாஸ்,
    உண்மைதான் பாஸ், பெயருக்குத்தான் இது வெளிநாடு மற்றபடி நாங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது..

    பதிலளிநீக்கு
  50. //வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
    உணர்வுகளை பிரதிபலிக்கும் நல்ல பதிவு..
    //

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  51. //vidivelli கூறியது...
    supper pathivu
    vaalththukkal//

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  52. //மைந்தன் சிவா கூறியது...
    எங்களுக்கு உங்க நடக்கிறது பெருசா தெரிய வாரேல...உங்க பதிவு மூலமா தெரியுது துஷி..
    இத்தனை வேதனைகளை தாண்டி போனால் அங்கும் வேதனை தான் போலும்...
    கனக்க வைத்த பதிவு...ஓட்டவடைக்கு நன்றிகள் பதிவை ஹை லைட் பண்ணி பேஸ்புக்கில் காட்டியமைக்கு..//

    வருகைக்கு நன்றி மைந்தன்,
    நண்பா தமிழனுக்கு எங்கு போனாலும் துன்பம் மட்டும் விட்டு போகாது,
    நம்மவர்கள்தான் நம்மை அதிகம் நோகடிக்கிறார்கள்,

    ஓட்டைவடைக்கு ரெம்ப தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  53. வணக்கம் துஸி, அருமையான ஒரு பதிவினைத் தவற விட்ட குற்ற உணர்ச்சியோடு வருகிறேன்,
    மன்னிக்கவும்,

    புலம் பெயர் நாட்டில் இப்படியும் கொடுமைகளா என்று எண்ணத் தோன்றுகின்றது.

    எமது சொந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என்று தானே எல்லோரும் புலம் பெயர்கிறார்கள்,. புலம் பெயர்ந்த பின்னரும் எம்மவர்கள் திருந்தவில்லை என்றால் வேதனையாக இருக்கிறது.

    மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த ஒரு புலம் பெயர் தேசத்தில் இருந்து கொண்டு கூண்டுக் கிளி போல ஒரு சிறுவனைக் கட்டி வாழ வைக்க நினைப்பது விரக்தியினை ஏற்படுத்தும் என்பது தெரியாத மடையர்கள் துஸி.

    உங்கள் நாட்டில் கவுன்சிலிங் வசதி ஏதும் இருந்தால் அவர்களிடம் சொல்லி, இந்த மனிதர்கள் மீது கேஸ் போட்டுத் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வழி செய்ய வேண்டும்.

    தமிழன் எப்போதும் எங்கேயும் அடிமையாக இருப்பான் எனும் வாக்கியம் இந்த மாதிரி மனித உணர்வற்ற ஜென்மங்களால் நிரூபணமாகிறது.

    புலம் பெயர்ந்த பின்னரும் ஒரு மனிதனை அடிமையாக நடாத்த நினைக்கும் தமிழர்கள்........இருக்கும் வரை, மூன்றாம் தலை முறையும் நாகரிகமான பாதையில் சென்று எமது இனத்தினை முன்னேற்றும் எனக் கனவு காண்பது பொய்யாகி விடுமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  54. பெயரில்லா2:59 PM, ஜூன் 30, 2011

    மன்னிக்கணும் பாஸ் பிந்திய வருகைக்கு நல்ல வேளை இந்த பதிவை நான் தவற விடவில்லை ....

    பதிலளிநீக்கு
  55. பெயரில்லா3:00 PM, ஜூன் 30, 2011

    ///என் பெற்றோர் எங்களை விட அவர்களைத்தான் அதிகம் கவனிப்பார்கள்.
    எங்களுக்குள் சிறு சண்டை வந்தால் கூட என் பெற்றோர் அவர்கள் பக்கம் தான் நிப்பார்கள். சின்ன வயசில் இதற்காக என் பெற்றோருடன் சண்டை கூட போட்டு உள்ளேன் அதற்க்கு அவர்கள் சொல்லுவார் நீ என் பிள்ளை உன்னை கவனிக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னை நம்பி அவர்கள் பெற்றோர் அனுப்பி இருக்கிறார்கள் அவர்களும் என்னை நம்பி வந்து இருக்கிறார்கள் அவர்கள் மனம் நோகாது நடந்து கொள்வதுதான் எனக்கு மட்டும் அல்ல உனக்கும் மரியாதை பெருமை என்று./// நிச்சயமாக ஈழத்தில் வாழும் தமிழர்களின் தனித்துவமே இது தான்... ஆனால் வெளிநாட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் பலருக்கு இது இல்லாமலே போய்விடுகிறது காரணம் பணம் வசதி போட்டி பொறாமை என்பவை தான்..

    பதிலளிநீக்கு
  56. பெயரில்லா3:02 PM, ஜூன் 30, 2011

    அந்த சகோதரனின் சம்பவத்தை வாசித்து முடித்ததும் மனசு கனத்துவிட்டது .. அவன் பெற்றோர் நாட்டில் " எனது பிள்ளை வெளிநாட்டில் அவன் சந்தேசமாக இருப்பான் " என்ற நம்பிக்கையில் இருந்திருப்பார்கள் .. அந்த தருணத்தில் இந்த சம்பவங்கள் அவன் பெற்றோருக்கும் தெரிய வந்திருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும் .. பெத்த மனம் எப்படி எல்லாம் தவித்திருக்கும் ...

    பதிலளிநீக்கு
  57. பெயரில்லா3:03 PM, ஜூன் 30, 2011

    பாஸ் உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது ஆபத்தில் உதபுவனே உண்மையான நண்பன் ...

    பதிலளிநீக்கு
  58. பெயரில்லா3:05 PM, ஜூன் 30, 2011

    உண்மையிலே நான் கூட இவ்வாறு பல கொடுமைகளை அறிந்துள்ளேன் ,ஏன் சில நேரில் கூட கண்டுள்ளேன் .. வெளிநாடு என்று இங்கு வந்து ஆரம்பத்தில் படும் கஸ்ரங்கள் துன்பங்கள் அனைத்தும் அவன் "வெளிநாடு " என்று கட்டி வைத்த கனவு கோட்டைகளை தகர்த்து விடுகிறது..

    பதிலளிநீக்கு
  59. பெயரில்லா3:06 PM, ஜூன் 30, 2011

    இந்த பதிவை அந்த கொடுமை செய்த சம்மந்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம் ...

    பதிலளிநீக்கு
  60. மனதை தொட்ட பதிவு .வயதில் பெரியோரே செய்ய பயப்படும் விஷயத்தை துணிந்து செய்ததற்கு பாராட்டுக்கள் ..நீங்கள் அவரைப்பற்றி பதிவிட்டது நல்லது தான் .இந்த மாதிரி இருளில் எத்தனை கணேஷ்கள் இருக்காங்களோ .
    நீங்கள் சரியான நேரத்தில் செய்த உதவிக்கு .இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார் .

    பதிலளிநீக்கு
  61. வெளிநாட்டில் நாம் வாழும் இந்த நாய் வாழ்க்கை நிஜமாகவே வெறுத்துப்போச்சு சகோ.இதுமாதிரி
    சம்பவங்கள் மனதை எவ்வளவுதூரம் பாதிக்கும் என்பதனை நானும் அனுபவரீதியாய் உணர்ந்துள்ளேன்.
    இங்கு பந்தபாசங்களுக்கு இடமே இல்லை.கொஞ்சம் அசந்தால் நெருங்கிய உறவினரே சங்கு ஊதிவிடுவார்கள்.
    நன்று சுமைகள் தீர தைரியமாக எழுதப்பட்ட தங்களின் இந்த ஆக்கம் வரவேற்கத் தக்கது.பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  62. //நிரூபன் கூறியது...
    வணக்கம் துஸி, அருமையான ஒரு பதிவினைத் தவற விட்ட குற்ற உணர்ச்சியோடு வருகிறேன்,
    மன்னிக்கவும்,

    புலம் பெயர் நாட்டில் இப்படியும் கொடுமைகளா என்று எண்ணத் தோன்றுகின்றது.

    எமது சொந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என்று தானே எல்லோரும் புலம் பெயர்கிறார்கள்,. புலம் பெயர்ந்த பின்னரும் எம்மவர்கள் திருந்தவில்லை என்றால் வேதனையாக இருக்கிறது.

    மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த ஒரு புலம் பெயர் தேசத்தில் இருந்து கொண்டு கூண்டுக் கிளி போல ஒரு சிறுவனைக் கட்டி வாழ வைக்க நினைப்பது விரக்தியினை ஏற்படுத்தும் என்பது தெரியாத மடையர்கள் துஸி.

    உங்கள் நாட்டில் கவுன்சிலிங் வசதி ஏதும் இருந்தால் அவர்களிடம் சொல்லி, இந்த மனிதர்கள் மீது கேஸ் போட்டுத் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வழி செய்ய வேண்டும்.

    தமிழன் எப்போதும் எங்கேயும் அடிமையாக இருப்பான் எனும் வாக்கியம் இந்த மாதிரி மனித உணர்வற்ற ஜென்மங்களால் நிரூபணமாகிறது.

    புலம் பெயர்ந்த பின்னரும் ஒரு மனிதனை அடிமையாக நடாத்த நினைக்கும் தமிழர்கள்........இருக்கும் வரை, மூன்றாம் தலை முறையும் நாகரிகமான பாதையில் சென்று எமது இனத்தினை முன்னேற்றும் எனக் கனவு காண்பது பொய்யாகி விடுமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
    //

    வருகைக்கு தேங்க்ஸ் பாஸ்,
    சூப்பரா சொன்னிங்க,

    இவர்களுக்கு இங்கு தண்டனை வேண்டி கொடுப்பது ரெம்ப சுலபம்
    ஆனால் என்ன செய்வது அண்ணா
    நாம் தான் அன்புக்கும் உறவுக்கும் அடிமையாகி விடுகிறோமே
    மன்னிப்பதே மகத்தானது என்று அடிவாங்குபவர்கள் நினைப்பதான்
    அடிக்கும் கயவர்கள் தப்பி விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  63. //கந்தசாமி. கூறியது...
    மன்னிக்கணும் பாஸ் பிந்திய வருகைக்கு நல்ல வேளை இந்த பதிவை நான் தவற விடவில்லை ....//

    நன்றி பாஸ்,
    உங்கள் வருகை அதி சந்தோஷத்தை கொடுக்குது.

    பதிலளிநீக்கு
  64. //கந்தசாமி. கூறியது...
    ///என் பெற்றோர் எங்களை விட அவர்களைத்தான் அதிகம் கவனிப்பார்கள்.
    எங்களுக்குள் சிறு சண்டை வந்தால் கூட என் பெற்றோர் அவர்கள் பக்கம் தான் நிப்பார்கள். சின்ன வயசில் இதற்காக என் பெற்றோருடன் சண்டை கூட போட்டு உள்ளேன் அதற்க்கு அவர்கள் சொல்லுவார் நீ என் பிள்ளை உன்னை கவனிக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னை நம்பி அவர்கள் பெற்றோர் அனுப்பி இருக்கிறார்கள் அவர்களும் என்னை நம்பி வந்து இருக்கிறார்கள் அவர்கள் மனம் நோகாது நடந்து கொள்வதுதான் எனக்கு மட்டும் அல்ல உனக்கும் மரியாதை பெருமை என்று./// நிச்சயமாக ஈழத்தில் வாழும் தமிழர்களின் தனித்துவமே இது தான்... ஆனால் வெளிநாட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் பலருக்கு இது இல்லாமலே போய்விடுகிறது காரணம் பணம் வசதி போட்டி பொறாமை என்பவை தான்..//

    சரியாக சொன்னிர்கள் பாஸ்,
    இவர்களின் முதல் பிரச்சனையே அதிக சுயநலமும் முக்கியமாக படிப்பறிவு இன்மையே..

    பதிலளிநீக்கு
  65. //கந்தசாமி. கூறியது...
    பாஸ் உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது ஆபத்தில் உதபுவனே உண்மையான நண்பன் ...//

    நன்றி பாஸ்,
    இருப்பினும் அதை விட உங்களைப்போன்றவர்களின் இந்த பாராட்டுத்தான் எனக்கு இன்னும் பெருமையாக இருக்கு பாஸ்

    பதிலளிநீக்கு
  66. //கந்தசாமி. கூறியது...
    உண்மையிலே நான் கூட இவ்வாறு பல கொடுமைகளை அறிந்துள்ளேன் ,ஏன் சில நேரில் கூட கண்டுள்ளேன் .. வெளிநாடு என்று இங்கு வந்து ஆரம்பத்தில் படும் கஸ்ரங்கள் துன்பங்கள் அனைத்தும் அவன் "வெளிநாடு " என்று கட்டி வைத்த கனவு கோட்டைகளை தகர்த்து விடுகிறது..
    //

    எல்லோருடைய வெளிநாட்டு ஆடப்பர வாழ்க்கைக்கும் பின்னல் ஒரு சோகம் இருக்கு பாஸ்,
    தாய் தந்தையை பிரிந்துல் இங்கு வரும் எல்லா ஜீவன்களும் ஏதோ ஒரு விதத்தில் பாவம் செய்தவர்கள் போல்

    பதிலளிநீக்கு
  67. //கந்தசாமி. கூறியது...
    இந்த பதிவை அந்த கொடுமை செய்த சம்மந்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம் ...//

    படித்தால் மட்டும் திருந்தி விடவா போகிறார்கள்?? நாய் வாலை நிமிர்த்த முடியாது நண்பா

    பதிலளிநீக்கு
  68. //angelin கூறியது...
    மனதை தொட்ட பதிவு .வயதில் பெரியோரே செய்ய பயப்படும் விஷயத்தை துணிந்து செய்ததற்கு பாராட்டுக்கள் ..நீங்கள் அவரைப்பற்றி பதிவிட்டது நல்லது தான் .இந்த மாதிரி இருளில் எத்தனை கணேஷ்கள் இருக்காங்களோ .
    நீங்கள் சரியான நேரத்தில் செய்த உதவிக்கு .இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார் //

    ரெம்ப நன்றி,
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி,
    உண்மைதான் வெளிநாட்டில் பல வீடுகளில் பல கணேஷ் மார் உண்டு,
    என்ன செய்ய அவர்கள் வேண்டிவந்த வரம் அது போலும்
    அவர்களை நினைத்து கவலைப்பட மட்டுமே எங்களால் முடிகிறது.
    உங்கள் வருகை சந்தோஷத்தை கொடுக்குது
    அடிக்கடி வாருங்கள்

    பதிலளிநீக்கு
  69. //அம்பாளடியாள் கூறியது...
    வெளிநாட்டில் நாம் வாழும் இந்த நாய் வாழ்க்கை நிஜமாகவே வெறுத்துப்போச்சு சகோ.இதுமாதிரி
    சம்பவங்கள் மனதை எவ்வளவுதூரம் பாதிக்கும் என்பதனை நானும் அனுபவரீதியாய் உணர்ந்துள்ளேன்.
    இங்கு பந்தபாசங்களுக்கு இடமே இல்லை.கொஞ்சம் அசந்தால் நெருங்கிய உறவினரே சங்கு ஊதிவிடுவார்கள்.
    நன்று சுமைகள் தீர தைரியமாக எழுதப்பட்ட தங்களின் இந்த ஆக்கம் வரவேற்கத் தக்கது.பகிர்வுக்கு நன்றி சகோ.
    //

    ரெம்ப நன்றி பாஸ்.
    நிஜமாக பாஸ் உண்மையில் இந்த வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து போச்சு,
    இப்போது எல்லாம் நான் யாரையும் நன்புறதே இல்லை
    அந்தளவு மனசு காயம்பட்டு விட்டது,
    வெளிநாட்டில் பந்த பாசத்துக்கு மதிப்பே இல்லை பாஸ்

    பதிலளிநீக்கு
  70. வணக்கம், மிக அருமையான,உண்மையை சொல்லும் பதிவு. நானும் பிரான்சில் இருந்து இதே வேதனையை அனுபவித்தவன்.

    பதிலளிநீக்கு
  71. //mahendrarajah கூறியது...
    வணக்கம், மிக அருமையான,உண்மையை சொல்லும் பதிவு. நானும் பிரான்சில் இருந்து இதே வேதனையை அனுபவித்தவன்.
    //

    வணக்கம் நண்பா
    நன்றி,
    ஊரில் இருந்து சின்ன வயதில் வரும் பெரும்பானவர்கள்
    இந்த கொடுமைகளில் சிக்குகிறார்கள் நண்பா, நானும் இந்த வேதனைகள் அனுபவித்து இருக்குறேன்
    ஆனால் என்ன எனக்கு இயல்பிலேயே கொஞ்சம் தைரியம் அதிகம் என்பதால் உடனேயே சுதாரித்து கொண்டேன்,
    எனக்கு தெரிந்தே பிரான்சில் மட்டுமே இப்படி கொடுமைகளை அனுபவித்தவர்கள் ஏராளம் நண்பா.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  72. துஷி நானும் இப்படி சின்ன வயதில்தான் பிரான்ஸ் வந்தனான் ஆனால் எனது அப்பா பிரான்சில் எனக்கு முன்னமே வந்துவிட்டார் என்றாலும் ஆரம்பகாலங்களில் அப்பாவின் வேலை நிமிர்த்தம் நான் அவருடன் தங்கவில்லை சொந்தக்காரங்களுடன்தான் இருந்தேன் அப்பா இங்கிருந்ததால் நான் பிழைத்துவிட்டேன் என நம்புகிறேன்..?நீங்கள் செல்வது உண்மைதான் பெரும்பாலான நம்மவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் எனக்கும் அப்படி இருப்பவர்கள் மீதுதான் கோபம்..?அட இதுவாவுதல் பரவாயில்லை அன்மையில் முற்பது வயது மதிக்கதக்கவரை சந்தித்தேன் சித்தப்பாவுடன் இருக்கிறேன் என்றார் சித்தப்பாவின் மகன் சொன்ன வேலையை இவர் செய்யவில்லையென இவரை அடிபின்னி விட்டானாம்  இங்கே யார்மீது பிழை..?குட்ட குட்ட குனியிரவன் முட்டாளில்லை அடி முட்டாள்!!?

    பதிலளிநீக்கு
  73. ஃஃஃஃஃவீட்டு கொடுமைகளையும்
    அவமானங்களையும் சகித்துக்கொண்டு வாழ்பவர்களை சந்தித்துகொண்டுதேதான் இருக்குறேன். ஃஃஃஃ

    இது தொடரும் கதைகளல்லவா இன்னும் பல இருக்கும் பகிர முயற்சியுங்கள்... பலரக்கு வழிகாட்டியாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  74. பதிவு நன்று...நேரமிருந்தால் இந்த கவிதையை படிக்கவும்
    ஒற்றை மரமாய்
    http://pesalamblogalam.blogspot.com/2011/06/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  75. அதிகம் பிந்திவந்து விட்டேன் நல்ல பதிவை படித்த உணர்வு என்ன செய்வது இங்கு சிலரின் மேதாவித்தனம் பலவிரிசல்களை தருகிறது நீங்கள் சொல்லியது போல் இப்படி பல அவமானங்களை பதிவில் சொல்ல முடியும் ஆனால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கு. பாராட்டுக்கள் இன்னொரு புலம் பெயர் முகத்தை வெளிச்சம் இட்டதற்கு.

    பதிலளிநீக்கு
  76. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

    பதிலளிநீக்கு
  77. எனக்கு உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது துஷி.மனிதத் தன்மையே இல்லாத மனிதர்களிடம் அகப்பட்டிருக்கிறார் கணேஸ்.
    உங்களைப்போலவும் மனிதர்களும் இருக்கிறார்கள்தானே.அப்பாவிகள் தப்பிக்கொள்வார்கள் !

    பதிலளிநீக்கு
  78. //ATHAVAN கூறியது...
    துஷி நானும் இப்படி சின்ன வயதில்தான் பிரான்ஸ் வந்தனான் ஆனால் எனது அப்பா பிரான்சில் எனக்கு முன்னமே வந்துவிட்டார் என்றாலும் ஆரம்பகாலங்களில் அப்பாவின் வேலை நிமிர்த்தம் நான் அவருடன் தங்கவில்லை சொந்தக்காரங்களுடன்தான் இருந்தேன் அப்பா இங்கிருந்ததால் நான் பிழைத்துவிட்டேன் என நம்புகிறேன்..?நீங்கள் செல்வது உண்மைதான் பெரும்பாலான நம்மவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் எனக்கும் அப்படி இருப்பவர்கள் மீதுதான் கோபம்..?அட இதுவாவுதல் பரவாயில்லை அன்மையில் முற்பது வயது மதிக்கதக்கவரை சந்தித்தேன் சித்தப்பாவுடன் இருக்கிறேன் என்றார் சித்தப்பாவின் மகன் சொன்ன வேலையை இவர் செய்யவில்லையென இவரை அடிபின்னி விட்டானாம் இங்கே யார்மீது பிழை..?குட்ட குட்ட குனியிரவன் முட்டாளில்லை அடி முட்டாள்!!?
    //

    நன்றி பாஸ் ,
    வருகைக்கும் கருத்துக்கும்.
    ஹும்ம் ... நீங்கள் அதிஸ்ரசாலி பாஸ்,
    பெற்றவர்கள் அரவணைப்பில் வெளிநாட்டில் இருப்பதற்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்.

    நீங்கள் சொன்னவரின் கதை வேதனை அளிக்குது,
    இங்கத்த பெரியவர்கள் மட்டும் அல்ல அவர்களின் வாரிசுகளும் வில்லத்தனத்தோடு இருக்கிறார்கள்
    இதைத்தான் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்று சொன்னார்களோ

    பதிலளிநீக்கு
  79. //♔ம.தி.சுதா♔ கூறியது...
    ஃஃஃஃஃவீட்டு கொடுமைகளையும்
    அவமானங்களையும் சகித்துக்கொண்டு வாழ்பவர்களை சந்தித்துகொண்டுதேதான் இருக்குறேன். ஃஃஃஃ

    இது தொடரும் கதைகளல்லவா இன்னும் பல இருக்கும் பகிர முயற்சியுங்கள்... பலரக்கு வழிகாட்டியாக இருக்கும்...//

    உங்கள் வருகை சந்தோஷம் அளிக்குது அண்ணா,
    உண்மைதான் திக்குதிசை தெரியா நாட்டில் வீட்டு கொடுமைகள் அனுபவிப்போர் பலர்,

    கண்டிப்பா இவற்றை வெளி கொண்டுவர முயற்சிக்குறேன், முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
  80. //ananthu கூறியது...
    பதிவு நன்று...நேரமிருந்தால் இந்த கவிதையை படிக்கவும்
    ஒற்றை மரமாய்
    http://pesalamblogalam.blogspot.com/2011/06/blog-post_30.html
    //

    நன்றி பாஸ்,

    கண்டிப்பா வருகிறேன்,

    பதிலளிநீக்கு
  81. //Nesan கூறியது...
    அதிகம் பிந்திவந்து விட்டேன் நல்ல பதிவை படித்த உணர்வு என்ன செய்வது இங்கு சிலரின் மேதாவித்தனம் பலவிரிசல்களை தருகிறது நீங்கள் சொல்லியது போல் இப்படி பல அவமானங்களை பதிவில் சொல்ல முடியும் ஆனால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கு. பாராட்டுக்கள் இன்னொரு புலம் பெயர் முகத்தை வெளிச்சம் இட்டதற்கு.//

    பரவாயில்லை

    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  82. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
    துணீச்சலான பதிவு
    //

    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  83. //ஹேமா கூறியது...
    எனக்கு உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது துஷி.மனிதத் தன்மையே இல்லாத மனிதர்களிடம் அகப்பட்டிருக்கிறார் கணேஸ்.
    உங்களைப்போலவும் மனிதர்களும் இருக்கிறார்கள்தானே.அப்பாவிகள் தப்பிக்கொள்வார்கள் !
    //

    வணக்கம் அக்கா,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா,
    உண்மையாக இவர்களை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது,
    இவர்களை நம்பி வரும் எத்தனை கணேஷ்மார்கள் வலிகளை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்
    இவர்களை கண் கண்ட பின்தான் கண் காணாத ஆண்டவன் மேல் உள்ள நம்பிக்கை போய் விட்டது எனக்கு

    பதிலளிநீக்கு
  84. //அம்பாளடியாள் கூறியது...
    என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
    //

    என்னாச்சு பாஸ் ??????

    பதிலளிநீக்கு
  85. என்ன செய்வது அப்படியும் சமூகம் இருக்கிறது. வாசிக்கும்போது மனதுக்கு கஸ்ரமாக இருந்தது

    பதிலளிநீக்கு
  86. வெளிநாட்டில் உள்ள பல இளையோரின் வாழ்க்கை இப்படிதான் போகிறது . I

    பதிலளிநீக்கு
  87. இந்த பதிவை அந்த கொடுமை செய்த சம்மந்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம் ...

    பதிலளிநீக்கு
  88. நல்ல பதிவு துசி ..எப்போதோ படித்து விட்டாலும் எப்போது தான் கருத்து சொல்லவதற்கு நேரம் கிடைத்துள்ளது ..எனது கருத்துகள் என்ன தான் ஈழத்தில் இருந்து எனக்கு எத்தின சொந்தம் வெளிநாடில இருக்கு அங்க அது செய்யினம் எது செய்யினம் எண்டு எங்க வாய் வலிக்க கதைத்தாலும் அங்கு இருக்கும் சொந்தங்கள் ஈழத்தில் இருக்கும் சொந்தங்களை பணம் பறிக்கும் கும்பல்கள் என நினைப்பதே நிதர்சனம் .எவ்வாறு இருந்தாலும் ஈழத்தில் என் ௨௦ வயதை கழித்ததால் இப்பொழுது வெளிநாட்டில் தற்காலிகமாக வாழ்வதனாலும் என்னால் எந்த வெளிநாடு உறவுகளின் மனப் பிரதிபதிப்பை இலகுவாக உணர்த்து கொள்ள முடிகிறது .துசி சொல்வது போல சிலர் என்று குறிப்பிட என் மனம் இடம் கொடுக்க இல்லை.முதலில் வெளிநாடு வாழ் உறவுகள் (த்தூ ) ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் வெளிநாட்டுக்கு தஞ்சம் கோரி தான் வருகிறோம்.ஆனால் நாங்கள் ஒன்றும் காட்டுக்குள் வேடுவ வாழ்க்கை வாழ்ந்து விட்டு வரவில்லை .நாங்களும் அங்கே ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்து விட்டு தான் வருகிறோம் .. நாங்கள் இங்கே வந்தவுடன் அங்க இதெல்லாம் இருக்கா ? நீங்க எங்க இதெல்லாம் பாத்து இருக்க போரியல் என்ற நையாண்டி கதைகளுடன் தான் அவர்களின் சாராரி கேள்விகள் அமைந்திருக்கும் ..ஆனால் அவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ,நீங்களும் லங்காவில் இருந்து இருந்தால் இப்பொழுது இருக்கும் தொழிநுட்ப அறிவு கூட இல்லாமல் இருந்து இருப்பீர்கள் .நீங்களும் வெளி நாடு வந்தவுடன் தான் இதெல்லாம் அறிந்து இருப்பீர்கள் எவ்வாறு இருக்க நீங்கள் ஏன் அதை மறந்து விட்டு மற்றவரின் மனதை புண்படுத்துகிறேர்கள்..நீங்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் .நீங்கள் லங்காவில் இருக்கும் போது மாட்டு வண்டியில் தான் பயணம் செய்து இருப்பீர்கள் .ஆனால் நாங்கள் அப்பிடி இல்லை.சராசரியாக பக்கத்தில் இருக்கும் கடைக்கு போவது என்றால் கூட மோட்டர் வண்டியில் தான் செல்வோம்(நான் அப்பிடி இல்லை,என்னடதான் பைக் எ இல்லையே என்ன தான் இருந்தாலும் இவர்கள் நல்லவர்கள் வேஷம் போடும் கெட்டவர்கள்.இவர்களின் மனோ நிலைகள் சில hu
    * இவர்களை நம்பி ஒரு அப்பாவி (ஆடு) சிக்கிட்ட காணும் ..போட்டு துவைத்து எடுத்து விடுவார்கள் .ஒரு வேளை அந்த அப்பாவி வாழ்வில் முன்னேறி விட்டால் ஏதோ தான் தான் முன்னேற்றி விட்டது போலவும் தன்னால் தான் இவ்வாறு வாழ்கிறான் என்றும் மார்தட்டி கொள்வார்கள் .ஆனால் உண்மை அவ்வாறு இருப்பதில்லை ...மாறாக ஒருவன் கெட்ட வழியில் சென்று விட்டால் அப்பாட இவர்கள் வாய் படும் பாடு இருக்கே சொல்லவே தேவையில்லை .அவன் இங்க வரக்குள்லையே எனக்கு தெரியும் அது உருப்பிடாது என்று ஆனாலும் ஏதோ எண்ட கடமைக்கு வைச்சிருந்தான் பிறகு அது தண்ட
    எண்ணப்படி போய்ட்டுது என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிடுங்கள் -.ஏன் இவ்வாறு இருகிறார்கள் என்று தெரியவில்லை ..ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம் .....>>>>>>>>>>>>>>>>.மனிதனை மனித உணர்வுகளை தனி மனித சுதந்திரத்தை மதிக்க தெரியாதவன் மனிதனாக இருந்து எவ்வித பயனுமில்லை ..................................>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இது எனது கருத்து எனவும் எடுத்து கொள்ளலாம் அனுபவம் என்றும் எடுத்து கொள்ளலாம் ..இது வெளிநாடுகளில் வாழும் எனது உறவுகளும் எனது தமிழ் உறவுகளும் கண்டிப்பாக கவனத்தில் எடுக்க வேண்டியதாகும் ..........
    *

    பதிலளிநீக்கு
  89. //சந்ரு சொன்னது…
    என்ன செய்வது அப்படியும் சமூகம் இருக்கிறது. வாசிக்கும்போது மனதுக்கு கஸ்ரமாக இருந்தது //

    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  90. //மாலதி கூறியது...
    வெளிநாட்டில் உள்ள பல இளையோரின் வாழ்க்கை இப்படிதான் போகிறது .
    //

    சத்திய உண்மை அக்கா,
    பாவம் அவர்கள்

    பதிலளிநீக்கு
  91. //மாலதி கூறியது...
    இந்த பதிவை அந்த கொடுமை செய்த சம்மந்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம் ...//

    படித்தால் மட்டும் திருந்தி விடவா போகிறார்கள்?? நாய் வாலை நிமிர்த்த முடியாது

    பதிலளிநீக்கு
  92. //Jathu கூறியது...
    நல்ல பதிவு துசி ..எப்போதோ படித்து விட்டாலும் எப்போது தான் கருத்து சொல்லவதற்கு நேரம் கிடைத்துள்ளது ..எனது கருத்துகள் என்ன தான் ஈழத்தில் இருந்து எனக்கு எத்தின சொந்தம் வெளிநாடில இருக்கு அங்க அது செய்யினம் எது செய்யினம் எண்டு எங்க வாய் வலிக்க கதைத்தாலும் அங்கு இருக்கும் சொந்தங்கள் ஈழத்தில் இருக்கும் சொந்தங்களை பணம் பறிக்கும் கும்பல்கள் என நினைப்பதே நிதர்சனம் .எவ்வாறு இருந்தாலும் ஈழத்தில் என் ௨௦ வயதை கழித்ததால் இப்பொழுது வெளிநாட்டில் தற்காலிகமாக வாழ்வதனாலும் என்னால் எந்த வெளிநாடு உறவுகளின் மனப் பிரதிபதிப்பை இலகுவாக உணர்த்து கொள்ள முடிகிறது .துசி சொல்வது போல சிலர் என்று குறிப்பிட என் மனம் இடம் கொடுக்க இல்லை.முதலில் வெளிநாடு வாழ் உறவுகள் (த்தூ ) ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் வெளிநாட்டுக்கு தஞ்சம் கோரி தான் வருகிறோம்.ஆனால் நாங்கள் ஒன்றும் காட்டுக்குள் வேடுவ வாழ்க்கை வாழ்ந்து விட்டு வரவில்லை .நாங்களும் அங்கே ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்து விட்டு தான் வருகிறோம் .. நாங்கள் இங்கே வந்தவுடன் அங்க இதெல்லாம் இருக்கா ? நீங்க எங்க இதெல்லாம் பாத்து இருக்க போரியல் என்ற நையாண்டி கதைகளுடன் தான் அவர்களின் சாராரி கேள்விகள் அமைந்திருக்கும் ..ஆனால் அவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ,நீங்களும் லங்காவில் இருந்து இருந்தால் இப்பொழுது இருக்கும் தொழிநுட்ப அறிவு கூட இல்லாமல் இருந்து இருப்பீர்கள் .நீங்களும் வெளி நாடு வந்தவுடன் தான் இதெல்லாம் அறிந்து இருப்பீர்கள் எவ்வாறு இருக்க நீங்கள் ஏன் அதை மறந்து விட்டு மற்றவரின் மனதை புண்படுத்துகிறேர்கள்..நீங்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் .நீங்கள் லங்காவில் இருக்கும் போது மாட்டு வண்டியில் தான் பயணம் செய்து இருப்பீர்கள் .ஆனால் நாங்கள் அப்பிடி இல்லை.சராசரியாக பக்கத்தில் இருக்கும் கடைக்கு போவது என்றால் கூட மோட்டர் வண்டியில் தான் செல்வோம்(நான் அப்பிடி இல்லை,என்னடதான் பைக் எ இல்லையே என்ன தான் இருந்தாலும் இவர்கள் நல்லவர்கள் வேஷம் போடும் கெட்டவர்கள்.இவர்களின் மனோ நிலைகள் சில hu
    * இவர்களை நம்பி ஒரு அப்பாவி (ஆடு) சிக்கிட்ட காணும் ..போட்டு துவைத்து எடுத்து விடுவார்கள் .ஒரு வேளை அந்த அப்பாவி வாழ்வில் முன்னேறி விட்டால் ஏதோ தான் தான் முன்னேற்றி விட்டது போலவும் தன்னால் தான் இவ்வாறு வாழ்கிறான் என்றும் மார்தட்டி கொள்வார்கள் .ஆனால் உண்மை அவ்வாறு இருப்பதில்லை ...மாறாக ஒருவன் கெட்ட வழியில் சென்று விட்டால் அப்பாட இவர்கள் வாய் படும் பாடு இருக்கே சொல்லவே தேவையில்லை .அவன் இங்க வரக்குள்லையே எனக்கு தெரியும் அது உருப்பிடாது என்று ஆனாலும் ஏதோ எண்ட கடமைக்கு வைச்சிருந்தான் பிறகு அது தண்ட
    எண்ணப்படி போய்ட்டுது என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிடுங்கள் -.ஏன் இவ்வாறு இருகிறார்கள் என்று தெரியவில்லை ..ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம் .....>>>>>>>>>>>>>>>>.மனிதனை மனித உணர்வுகளை தனி மனித சுதந்திரத்தை மதிக்க தெரியாதவன் மனிதனாக இருந்து எவ்வித பயனுமில்லை ..................................>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இது எனது கருத்து எனவும் எடுத்து கொள்ளலாம் அனுபவம் என்றும் எடுத்து கொள்ளலாம் ..இது வெளிநாடுகளில் வாழும் எனது உறவுகளும் எனது தமிழ் உறவுகளும் கண்டிப்பாக கவனத்தில் எடுக்க வேண்டியதாகும் ..........//

    பாஸ் முதலில் உங்க சூப்பர் எழுத்து நடைக்கு ஒரு சல்யுட்,
    ரியலி சூப்பர் வ்வ்.... நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை, அதிலும்

    //இவர்களை நம்பி ஒரு அப்பாவி (ஆடு) சிக்கிட்ட காணும் ..போட்டு துவைத்து எடுத்து விடுவார்கள் .ஒரு வேளை அந்த அப்பாவி வாழ்வில் முன்னேறி விட்டால் ஏதோ தான் தான் முன்னேற்றி விட்டது போலவும் தன்னால் தான் இவ்வாறு வாழ்கிறான் என்றும் மார்தட்டி கொள்வார்கள் .ஆனால் உண்மை அவ்வாறு இருப்பதில்லை//

    இவை நான் அனுபவித்த பார்த்த உண்மை, நீங்கள் சொன்னதுபோல் 'மனிதனை மனித உணர்வுகளை தனி மனித சுதந்திரத்தை மதிக்க தெரியாதவன் மனிதனாக இருந்து எவ்வித பயனுமில்லை' ஏன் இவர்கள் உயிரோடு இருந்தும் பயன் இல்லை.

    பதிலளிநீக்கு
  93. ஜது சூப்பர்டா.......... ஒவ்வெரு வரிகளும்எழுத்து நடையும் நல்லாயிருக்குடா...KEEP IT UP

    பதிலளிநீக்கு
  94. மாட்டு வண்டிய கேவலப்படுத்திய யதுவை கடிமையாக கண்டிக்கிறான் இந்த காட்டான்.. என்ர பதிவுக்கு கட்டாயம் பதில் தர வேண்டும்..!?

    பதிலளிநீக்கு
  95. சாரி
    திரு காட்டான் ....தாமதமான விளக்கம் தான் என்றாலும் நீங்கள் கேட்டதுக்கு இணங்க ....நீங்க பந்தியை வாசித்தால் உங்களுக்கே புரியும் ..நான் ஒண்டும் மாட்டு வண்டிய கேவல படுத்தவில்லை ...சராசரியாக ௯௦ ௨௦௦௦ முதல் பெரும்பாலும் மாட்டு வண்டில்களே போக்குவரத்து பாவனையில் முக்கிய இடம் பெற்று இருந்தன. அதனை மையப்படுத்தியே எனது மன வெளிப்பாடு அமைந்த்திருந்ததே தவிர எதனையும் அவமானப் படுத்தும் நோக்கம் எனக்கில்லை ..அவ்வாறு அவமானப்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன்

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...