ஞாயிறு, நவம்பர் 27, 2011

துஷ்யந்தனின் காதல்...



துஷ்யந்தன் என்பவன் ஓர் அரசன். அவன் வேட்டையாட விருப்பம் கொண்டு கானகம் சென்றான். அங்கே ஓர் அழகிய புள்ளிமானைக் கண்டு, அதனைத் துரத்திச் சென்றான். வழியில் ஒரு முனிவர் அவனை வழிமறித்தார். “மன்னா, இது தவத்திற் சிறந்த கண்வ முனிவரின் ஆசிரமம் இருக்குமிடம். இங்குள்ள மிருகம் எதனையும் வேட்டையாடலாகாது” என்று எச்சரித்துச் சென்றார். கண்வ மகரிஷியைப் பற்றித் துஷ்யந்தன் ஏற்கனவே கேள்வியுற்றிருக்கிறான். அத்தவ மேலோரின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என அஞ்சினான். வேட்டையாடும் எண்ணத்தை விடுத்தான். ஆனால், அக்கானகத்தின் எழிற்காட்சியினை இரசித்துக் கொண்டே மெல்ல நடந்து சென்றான். சற்றுத் தொலைவில் பெண்டிரின் சிரிப்பொலி அருவி போல் ஒலித்தது. அந்தச் சிரிப்பொலி வர வர துஷ்யந்தனுக்கு வெகு அருகில் ஒலித்தது. சிரிப்பொலி கேட்கும் திசையில் தன் பார்வையைச் செலுத்தினான் மன்னன்.


அழகு கொழிக்கும் ஆரணங்குகள் மூவர் மன்னன் பார்வைக்கு விருந்தாயினர். அவர்களுள் ஒருத்தி, அழகாலும் தகுதியாலும் அவர்களுக்குத் தலைவியாகத் தோற்றமளிப்பதைக் கண்டான் துஷ்யந்தன். அந்தத் தலைவியின் எழில் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவளை!. அழகு! அந்த அழகுக்கு மெருகேற்றும் பருவம்! அந்தப் பருவத்தை மிகைப்படுத்திக் காட்டும் அந்த உருவம்! ஆ! இவளன்றோ அப்சரஸ்’! எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான் இந்தத் துஷ்யந்தன். ஆனால், இப்படியொரு திருவுருவை அவன் வாழ்நாளில் கண்டதே இல்லை! அவனையும் அறியாமல் அவன் பாதங்களை ஈர்த்தன, அப்பெண்ணின் உருவமும் நடையின் ஒயிலும் சிரிப்பின் சாகசமும்!. மெல்ல அவன், பெண்களுக்கு அருகில் வந்து நின்றான். அவனுக்கும் அப்பெண்களுக்கும் இடையில் அடர்ந்த மல்லிகைக் கொடியே மறைப்பாக இருந்தது. துஷ்யந்தனுக்கு ஓர் ஐயம் எழுந்தது. ‘இவள் முனிவரின் மகளாய் இருக்க மாட்டாள். என் போன்ற மன்னர் குடும்பத்தில் உதித்தவளாய் இருப்பாள். அதனால் தான் எனக்கு இவள்பால் காதல் உண்டாகின்றதோ?’ என்று மனத்துள் எண்ணிப் பெருமூச்செறிந்தான்.


அச்சமயம் விதியின் பலனாகவோ என்னவோ ஒரு கருவண்டு மல்லிகைக் கொடியினை நோக்கிப் பறந்து வந்தது. அங்கே சகுந்தலை நிற்பதைக் கண்டு, அவள் கூந்தலின் மணத்தில் மயங்கி, அக்கூந்தலைச் சுற்றி ரீங்காரம் பாடத் தொடங்கியது. வண்டினைக் கண்ட சகுந்தலை அச்சமேலீட்டால் வீறிட்டு அலறினாள். “அடி அனுசூயே! பிரியம்வதே! இந்த வண்டை விரட்ட வாருங்களேன்” என்று கூவியபடி மல்லிகைக் கொடியை நீக்கிக் கொண்டு மறுபக்கமாய் ஓடினாள். ஓடிய சகுந்தலை, தன்னை அறியாமலேயே, அங்கு நின்றிருந்த துஷ்யந்தனின் மேல் மோதிக்கொண்டாள். எதிரே ஓர் ஆடவன் நிற்பதைக் கண்டு பிரமித்து நின்றாள். அதே நேரத்தில் சகுந்தலையின் கூக்குரலைக் கேட்டு ஓடிவந்தனர் பிரியம்வதையும் அனுசூயையும். அங்கு சகுந்தலை முன் ஓர் ஆடவன் நிற்பதைக் கண்டு திகைத்தனர். ஆனால், அந்த ஆடவனின் அழகு அவர்களை மயங்கச் செய்தது.


துஷ்யந்தன், “மன்னிக்க வேண்டும். பெண்கள் தங்கியிருக்கும் உத்தியானவனத்திற்குள் அத்துமீறி வந்தது குற்றந்தான். வழி தவறித்தான் இப்பக்கம் வந்து விட்டேன்” என்று மன்னிப்புக் கோரினான்.
துஷ்யந்தனின் நெடிய உருவமும் திண்தோளும் இனிய தோற்றமும் எழிலார்ந்த  முகப்பொலிவும் சகுந்தலையை மெய்மறக்கச் செய்தன. அவள் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். அவள் ஓரக்கண்ணால் துஷ்யந்தனின் அழகைப் பருகினாள். “இந்த ஆணழகர் அரச குடும்பத்தைச் சார்ந்தவராய்த் தோன்றுகிறாரே! எந்த நாட்டு மன்னராய் இருப்பார்?’ என்றெல்லாம் நெஞ்சுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் சகுந்தலை. “ஐயா, நீர் வழிதவறி வந்ததை நாங்கள் தவறாகவோ குற்றமாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. எனினும், நீர் எந்த நாட்டு மன்னர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டால் அதற்கேற்றவாறு உம்மை உபசரிக்கலாம் என்று கருதுகிறோம்” என்றாள் பிரியம்வதை. ஏனென்றால், அவள்தான் அனுசூயையைவிடச் சற்றுத் துடுக்கானவள். அதைக் கேட்ட துஷ்யந்தன், தான் யார் என்பதைக் கூறவில்லை. மாறாக, மன்னன் துஷ்யந்தன் ஆளுகைக்குட்பட்டுள்ள கானகங்களைக் கண்காணிக்கும் அதிகாரி என்றும், அப்பொழுது அக்கானகத்தின் நடப்பினை ஆராய்ந்து செல்ல வந்திருப்பதாகவும் கூறினான். பின் “ஆமாம், கண்வ முனிவருக்குப் பெண் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லையே!’ என்று மெல்லப் பீடிகை போட்டான்.


அவன் ஐயத்தைப் போக்கும் வகையில் பிரியம்வதை கூறினாள்:  ‘எங்கள் சகுந்தலை கண்வ முனிவர் மகள் அல்லள், வளர்ப்புப் பெண். கௌசிக வமிசத்தைச் சார்ந்த இராஜரிஷியான விசுவாமித்திரரின் அருந்தவப் புதல்வி இவள். தனிமையில் அழுதுகொண்டிருந்த குழந்தையை, எங்கள் கண்வ முனிவர் கண்டெடுத்து, சகுந்தலை என்று பெயர் சூட்டி வளர்த்து வருகின்றார். இவள் தாய் மேனகை ஆவாள். “ஓ! தேவமகள் பேரழகி மேனகையின் மகளா! அவள் வயிற்றில் பிறந்ததால் தான் இந்தச் சகுந்தலை இவ்வளவு அழகு வாய்ந்தவளாய் இருக்கிறாள்!” என மனத்துள் வியப்புற்றான் துஷ்யந்தன். “இவளை நான் அடைய முடியுமா? நான் இவளை விரும்புவதுபோல் இவளும் என்னை விரும்பவேண்டுமே!’ என்றும் ஐயப்பட்டான்.


அப்போது சகுந்தலை நாணத்தால் முகம் சிவந்து, “அடி பிரியம்வதை, எனக்குத் தலை சுற்றுவதுபோல் இருக்கிறது. அப்பால் சென்று ஓய்வெடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி, துஷ்யந்தனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சென்றாள். அவள் ஏதோ சொல்லி அவ்விடத்தை விட்டுச் செல்லப் பார்க்கிறாள் என்பது தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. ஆகவே, அவளைப் போகவிடாமல் தடுக்க எண்ணிய பிரியம்வதை, ‘அடி சகுந்தலை, உன் சாகசமெல்லாம் நானறிவேன்! மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டியது உன்னுடைய முறையாகும். நீ எப்படியடி ஓய்வெடுக்கச் செல்லலாம்! உன் கடனைத் தீர்த்துவிட்டுச் செல்” என்றாள், சற்றே கடுமையான குரலில். அது வெறும் நடிப்பு என்பதை அறியாத துஷ்யந்தன், “அவளைப் போகவிடுங்கள். அவள் கடனை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியவாறு தன் விரலில் அணிந்திருந்த கணையாழியைக் கழற்றிப் பிரியம்வதையிடம் கொடுத்துவிட்டு, தரையிலிருந்த குடத்தை எடுக்கப் போனான்.
கணையாழியைப் பெற்றுக்கொண்ட பிரியம்வதை, அதிலும் பொறிக்கப்பட்ட ராஜமுத்திரையைக் கண்டு, “இது அரசருக்குரிய கணையாழியன்றோ!” என்று ஐயம் தொனிக்கக் கேட்டாள். மன்னன் சமாளித்துக்கொண்டு, “அரசருக்குரிய கணையாழிதான். அதை அவர் எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்” என்றான்.


இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சகுந்தலை மேற்கொண்டு நடக்காமல், பிரியம்வதையைத் திரும்பிப் பார்த்தாள். “சகுந்தலை, இம்மன்னன் உன் கடனை ஏற்றுக் கொண்டார். அதனால் நீ போகலாம்” என்றாள் பிரியம்வதை. சகுந்தலை செல்லமாகச் சிணுங்கினாள்: “என்னைப் போகச் சொல்லவும் நிறுத்தவும் நீ யாரடி?” சகுந்தலையின் உள் மனத்தை ஓரளவு புரிந்துகொண்டான் துஷ்யந்தன். அவன் மனம் இவ்வாறு எண்ணியது:  “இவள் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டேன் என்கிறாள். ஆனால் தன் கடைக்கண்ணை மட்டும் என் மேல் வீசுகிறாளே! வாய் திறந்து ஒரு வார்த்தையும் என்னுடன் பேசவில்லை. எனினும் நான் பேசும்போது எல்லாவற்றையும் காது கொடுத்து உற்றுக் கேட்கிறாளே! இதற்கு என்ன காரணம்?’ இவ்வாறாகத் துஷ்யந்தனும் சகுந்தலையும் தனித்தனியே தமக்குள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தபோது யாரோ சிலர் ஓடுவது கேட்டது. அவர்கள் உரத்த குரலில் “மதங்கொண்ட யானை ஒன்று மரங்களை ஒடித்து எறிந்துகொண்டு வருகிறது. எல்லோரும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று எச்சரிக்கை செய்து கொண்டு சென்றனர்.


அதுகேட்டுத் தோழிகள் மருண்டு, துஷ்யந்தனைப் பரிதாபமாகப் பார்த்தனர். துஷ்யந்தன் அவர்களுக்குத் தைரியமூட்டும் வகையில், “நீங்கள் ஆசிரமத்திற்கு விரைந்து செல்லுங்கள். நான் அந்த யானையை அடக்கி விரட்டுகிறேன். வாய்ப்புக் கிட்டுமாயின் மீண்டும் சந்திப்போம்” எனக் கூறி அவர்களைப் போய்விடுமாறு தூண்டினான் துஷ்யந்தன். தோழியர் இருவரும் புறப்பட்டனர். சகுந்தலை இரண்டடி எடுத்து வைத்தவள், 
“ஆ! அனுசூயே, என் காலில் முள் தைத்துவிட்டதே!” என்று கூறி பாதத்தைத் தூக்கிப் பிடித்தபடி, துஷ்யந்தனைத் திரும்பிப் பார்த்தாள். துஷ்யந்தனும் அவளை ஆழமாக நோக்கினான். அந்த ஒரு கணப் பொழுதில்.. துஷ்யந்தனின் பார்வையைச் சகுந்தலை பார்வையும், சகுந்தலையின் பார்வையைத் துஷ்யந்தன் பார்வையும் கவ்வி இழுத்தன. அதற்குப் பிறகு துஷ்யந்தன் செயலற்றவனாய் ஆசிரமத்தை வளைய வந்து கொண்டிருப்பதில் ஆனந்தம் கொண்டான். சகுந்தலை அறியாவண்ணம் மறைந்திருந்து அவள் எழிலைப் பார்த்துப் பரவசப்பட்டான். நகர் திரும்பவேண்டும் என்கின்ற எண்ணமே எழவில்லை. ஆசிரமத்தருகிலே முகாமிட முடிவு செய்தான் துஷ்யந்தன். சகுந்தலையும் சமயம் கிட்டும் பொழுதெல்லாம் ஆசிரமத்து உத்தியாவனத்தில் திரிந்தாள். துஷ்யந்தன் தன் கண்ணில் பட மாட்டானா, அவனிடம் தனிமையில் பேச மாட்டோமா என்று எப்போதும் மன்னனையே நினைத்து ஏங்குவாளானாள்.


மேலே உள்ளவை நான் எழுதியவை அல்ல.. 'உலக பிரசித்தி பெற்ற காதலர்கள் துஷ்யந்தன்-சகுந்தலா' என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி..  விஸ்வாமித்ர முனிவருக்கும் மேனகா என்ற வானுலக நாட்டிய தேவதைக்கு பிறக்கும் பெண்தான் சகுந்தலா. காட்டில் ஆசிரமத்தில் வாழும் சகுந்தலாவை வேட்டையாட வரும் அரசன் துஷ்யந்தன் காதல் கொண்டு காந்தர்வமணம் செய்து அதன் அடையாளமாய் தங்கள் அரசகுல மோதிரம் ஒன்றை கொடுத்துவிட்டு 
செல்கிறான். ஒரு நாள் காட்டில் சகுந்தலா துஷ்யந்தன் நினைவில் உருகி நின்ற வேளை அங்கு வந்த துர்வாசர் முனிவரை கவனியாது இருக்க கோபம் கொண்ட முனிவர் நீ யாரை நினைத்து உருகிறாயோ அவர் உன்னை மறப்பாறாக என்று சபிக்கிறார்.. பின் சகுந்தலை மேல் இரக்கம் கொண்டு இப்போது உன்னை மறந்து இருக்கும் துஷ்யந்தன் அவன் உனக்கு தந்த தனிப்பட ஒரு பரிசு பொருளை உன்னிடம் கண்டு நினைவு வந்து உன்னை அடையாளம் கண்டுகொள்வான் என்று கூறி விடைபெறுகிறார்.

துஷ்யந்தன் தன்னை தேடிவராததால் கவலை கொண்ட சகுந்தலா துஷ்யந்தனை தேடி காட்டைவிட்டு நாட்டுக்கு துஷ்யந்தன் அரண்மனைக்கு போகும் போது இடையில் ஆற்ரைகடக்கும் போது துஷ்யந்தன் தந்த மோதிரத்தை ஆற்றுக்குள் தவற விட்டு செல்கிறாள். துஷ்யந்தன் அரண்மனை வந்த சகுந்தலா துஷ்யந்தனால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் அரண்மனையில் உள்ளோரால் அவமானப்படுத்தப்பட்டு நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்படுகிறாள். அவமானத்துடனும் வேதனையுடனும் கானகம் திரும்பும் சகுந்தலா கானகத்தில் தனியே குடில் அமைத்து துஷ்யந்தனுக்கும் தனக்கும் பிறந்த பரதனை ஒரு அரசனுக்கு உரிய தகுதியுடன் பலம் பொருந்தியவனாக வளர்க்கிறாள்.

சகுந்தலா ஆற்றில் தவறவிட்ட மோதிரம் மீனின் வயிற்றுக்குள் இருந்து மீனவனால் கண்டுபிடிக்கப்பட்டு துஷ்யந்தன் பார்வைக்கு போகிறது.. முனிவரின் சாபம் தீர்ந்து பழைய நினைவுக்கு வரும் துஷ்யந்தன் சகுந்தலா நினைவுவந்து தன்னை தேடிவந்து தன அரண்மனையால் சகுந்தலா அவமானப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டதை அறிந்து துடிதுடித்து போகிறான்.. அரண்மனை வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு சகுந்தலாவை தேடி கானகம் செல்லும் துஷ்யந்தன் அங்கு பரதனை கண்டு அவன் மூலம் சகுந்தலாவை கண்டு மனைவி சகுந்தலாவுடனும் மகன் பரதனுடனும் ஒன்று சேர்கிறான். பாண்டவர் பிறப்புக்கு முன் அவ்விடத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர்கள் துஷ்யந்தன்-சகுந்தலா-பரதன் ஆகிய மன்னன் குடும்பமே என்று மகாபாரதம் சொல்லுகிறது.

நட்புக்கு பிறந்த நாளு....

வரும் 01 -12 -2011 நம்ம சக பதிவர்.. என் ரெம்ப நெருங்கிய  பெஸ்ட் நண்பன் மதுரனுக்கு பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சி.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை மச்சி அப்படி கடவுள் இருந்தால்! எப்போதும் நீ சந்தோஷமாய் இருக்க வேண்டிக்கிறேன்.. அப்புறம் மச்சி வாழ்க்கை என்கிறது நதி மாதிரி ஓடிட்டே இருக்கணும் யாருக்காகவாதும் தேங்கி நின்றோம் என்றா குட்டை ஆகிடுவோம்.. அப்படித்தான் பலரை காதல் குட்டையாக்கிடுது.. காதலே வாழ்க்கை இல்லை நம் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் காதல்.. இதெல்லாம் இப்போ ஏன் சொல்லுறேன் என்று உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்..! இப்போ என்ன சொல்ல வாறேன் என்றால் உன் அடுத்த பிறந்தநாளுக்கு இடையில் ஒரு நல்ல நியூஸ் சொல்லணும் மச்சி.. இல்லைன்னுவை நானே உங்க ஒராளை அனுப்பி... அப்புறம் நீ.. அதுதான் எல்லாம்தான் முடிஞ்சுதே இனி அவாதானே நமக்கு வாழ்க்கை கொடுக்கணும் என்று சொல்லுற முடிவுக்கு கொண்டுவந்திருவேன்... புரியல்லையா..!! CHATக்கு வா சொல்லுறேன்.. 
ஹீ.. ஹீ.
மதுக்கு நான் அனுப்பிய Birthaday Card
                   


என் ப்ளாக் நண்பர்களுக்கு......
நானும் எவ்ளோ நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... அவ்வவ்... நிஜமாவே முடில்ல.. இப்போ துஷி நம்ம பக்கம் வாறதே இல்லையே என்று என்று எல்லோரும் நினைப்பீங்க..வேலைப்பளு அதிகம் அதுதான் ப்ளாக் வாறதே இல்லை. சாப்பிட கூட நேரமின்றி ஓடிட்டே இருக்கேன். சண்டே ஒருநாள்தான் விடுமுறை.. அதுவும் என் நண்பர்களுடன் ஊர் சுத்த கிளம்பிவிடுவதால் அன்றும் ப்ளாக் வரமுடிவதில்லை. ஆனால் இன்றில் இருந்து சண்டே புள்ளா வீட்டில் இருந்து என் ப்ளாக் நண்பர்களுக்கு ஒதுக்குவதாக முடிவுபண்ணியுள்ளேன். அப்போ இனி வாரத்தில் சண்டே மட்டுமே ப்ளாக் வருவேன்.. அன்று என் எல்லா நண்பர்கள் ப்ளாக்குக்கும் வருவேன். வாரத்தில் ஒருநாள் மட்டும் ப்ளாக் வருவதால் என்னால் அதிகம் பதிவு போட முடியாவிட்டாலும் என் நண்பர்கள் பதிவுகளில் கண்டிப்பாக நிற்பேன். இடையிடையே நேரம் கிடைத்தாலும்...!! வருகிறேன். நன்றி.


முக்கிய குறிப்பு: தலைப்பை பார்த்து யாராவது வில்லங்கமான எண்ணத்துடன் ஓடி வந்திருந்தால்! அதற்க்கு நான் பொறுப்பல்ல.. ஹே.. ஹே.




63 கருத்துகள்:

  1. ஹி.ஹி.ஹி.ஹி மாப்ள நானும் நம்பி வந்தேன் ஆனால் அந்த படத்தை பார்கும் போது சின்ன டவுட்டுதான் அவ்...........

    மதுரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கிஸ், துஸி பேஸ்புக் இன்பாக்ஸை பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  3. நீ அடிக்கடி டெம்பிலேட் மாத்துறாய்? உன்னை நம்பி எப்பிடி காட்டான் பொண்ணு தாறது

    பதிலளிநீக்கு
  4. நானும் உங்க விஷயமோன்னு நெனச்சி வந்தேன்.சரி விடுங்க இதுவும் நல்லாருக்கு! மதுரனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. இப்படி ஆமாத்தலாமா??? 
    பிற்சேர்க்கை நண்பர்கள் குறிப்பு எனக்கும் சேர்த்துச் சொல்லியதற்கு நன்றி நீ நண்பேண்டா!

    பதிலளிநீக்கு
  6. ஏமாத்தலாமா என்று வரனும் பாஸ் chap  வந்ததால் வந்த தவறு!ஹீ

    பதிலளிநீக்கு
  7. கதை படிக்க ரொம்ப நல்லாயிருக்கு, எழுத்து நடை பிரமாதம். முடிந்தால் அந்தப் புத்தகத்தை வாங்கி முழுசையும் படிக்கணும் போல இருக்கு, நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தலைப்பினையும் படத்தினையும் பார்த்தேன் அதில் உங்கள் அபிமான நடிகை உங்கள் அபி இருப்பதால் வந்தேன் . ஆனா ஒரு தமிழ் வரலாற்றினை புரட்டி பதிவிட்டுள்ளீர்கள் நன்றி நண்பா .

    பதிலளிநீக்கு
  9. மதுரனுக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  10. தலைப்பைப் பார்த்து ஏமாந்தோர் வரிசையில் நானும் இப்போ கடைசியில் நிக்குறேன்! ஹா ஹா ஹா இருந்தாலும் அந்தக் கதையும் சூப்பர்தான்!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் துஸி,
    நல்லா இருக்கிறீங்களா?

    துஸ்யந்தன், சகுந்தலை காதலை விட, மதுவுக்கு நீங்க எழுதியிருக்கும் விடயங்கள் தான் மனதில் நிறைந்து விடுகின்றது!

    மதுரனின் எண்ணங்கள், கனவுகள் யாவும் ஈடேறிட,
    வாழ்வு வளம் பெற
    உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்!

    அடுத்த வருசன் மதுரனுக்கு டும் டும் நடக்கிற மாதிரி நாம பொம்பிளை பார்க்க களத்தில இறங்கிட வேண்டியது தான்;-))))

    பதிலளிநீக்கு
  12. அப்புறம் முக்கிய மேட்டர்,

    ஃபிரான்ஸின் புகழ்பூத்த மன்னன் 6 ம் லூயி,

    பிரபல ஃபிரெஞ்சு மெழுகுச் சிலை சிற்பாச்சாரியாகிய மேரி தாசோ ( (Madame Tussauds) - இவரது பெயரில் தான் லண்டன் மெழுகுச்சிலை மியூசியம் உள்ளது,

    சிறிலங்கா கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க,

    நம்ம கோவை சரளமாதிரி அமெரிக்காவின் கோவை சரளா, நகைச்சுவை நடிகை சாரா சில்வர்மன்,

    போன்ற பலநூறு பிரபலங்கள் அவதரித்த, டிசம்பர் 1 ம் நாளில் பிறந்து, எம் இதயம் நுழைந்து, உயிரில் கலந்த ( நன்றி - வைரமுத்து ) அன்பு நண்பன், ஆருயிர் தோழன், ஹன்சிகாவின் பாவாடையை கஞ்சி போட்டு, கசங்காமல் காவல் காக்கும் காவல் தெய்வம், முன்னுக்கு மட்டும் போதாது பின்னுக்கும் இரண்டு வேண்டும் என்று அடம்புடிக்கும் அன்பு நண்பன் மதுரனுக்கு எனது சார்பாகவும், நிரூபனின் மூன்றாவது மனிசியின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. நானும் எதோ எண்டு வந்தா இப்படி கவுத்துவிடீன்களே..

    கதை அருமை முன்பு கேடிருகுறேன்....

    பதிலளிநீக்கு
  14. மதுரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  15. மைந்தன் சிவா கூறியது...
    :)<<<<<

    யோவ் இதுக்கு என்னய்யா அர்த்தம்.... இந்த மொழி நான் படிக்கவில்லை.... எதா இருந்தாலும் தமிழில் சொல்லணும்... ராஸ்கல்ஸ்

    பதிலளிநீக்கு
  16. K.s.s.Rajh கூறியது...
    ஹி.ஹி.ஹி.ஹி மாப்ள நானும் நம்பி வந்தேன் ஆனால் அந்த படத்தை பார்கும் போது சின்ன டவுட்டுதான் அவ்...........
    மதுரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்<<<<<<<<<<<<<

    கிஸ் புரளியை கிளபிடாதே செல்லம்... அவ்வவ்

    பதிலளிநீக்கு
  17. KANA VARO கூறியது...
    Ade!<<<<<<<<<<<<

    ஆஹா... சிங்கம் கிளம்பிட்டுதா ????????

    பதிலளிநீக்கு
  18. KANA VARO கூறியது...
    கிஸ், துஸி பேஸ்புக் இன்பாக்ஸை பார்க்கவும்<<<<<<<<<<<<

    ஹீ ஹீ...

    பதிலளிநீக்கு
  19. KANA VARO கூறியது...
    நீ அடிக்கடி டெம்பிலேட் மாத்துறாய்? உன்னை நம்பி எப்பிடி காட்டான் பொண்ணு தாறது<<<<<<<<<<

    என்ன போட்டு கொடுக்குறீங்களா??? விடுங்க பாஸ் அவர் கண்டுக்க மாட்டார்... காரணம் அவரே அடிக்கடி மாப்பிள்ளையை மாத்திட்டு இருக்கிற ஆளாச்சே.... அவ்வ

    பதிலளிநீக்கு
  20. shanmugavel கூறியது...
    நானும் உங்க விஷயமோன்னு நெனச்சி வந்தேன்.சரி விடுங்க இதுவும் நல்லாருக்கு! மதுரனுக்கு வாழ்த்துக்கள்.<<<<<


    ஹீ ஹீ..... தேங்க்ஸ் பாஸ்...

    பதிலளிநீக்கு
  21. தனிமரம் கூறியது...
    இப்படி ஆமாத்தலாமா???
    பிற்சேர்க்கை நண்பர்கள் குறிப்பு எனக்கும் சேர்த்துச் சொல்லியதற்கு நன்றி நீ நண்பேண்டா!<<<<

    ஹீ ஹீ..... தேங்க்ஸ் பாஸ்...

    பதிலளிநீக்கு
  22. தனிமரம் கூறியது...
    ஏமாத்தலாமா என்று வரனும் பாஸ் chap வந்ததால் வந்த தவறு!ஹீ<<<<<<<

    விடுங்க பாஸ்.. ஜ போன் எழுத்தில் இதெல்லாம் சகஜமப்பா.... ஹா ஹா

    பதிலளிநீக்கு
  23. Jayadev Das கூறியது...
    கதை படிக்க ரொம்ப நல்லாயிருக்கு, எழுத்து நடை பிரமாதம். முடிந்தால் அந்தப் புத்தகத்தை வாங்கி முழுசையும் படிக்கணும் போல இருக்கு, நன்றி.<<<<<<<<<<<<<

    நன்றி தாஸ்...
    முடிந்தால் அந்த புத்தகத்தை வேண்டி படியுங்கள்... இலக்கிய ரசம் கொட்டும் புத்தகம்... மிஸ் பண்ணாமல் படியுங்கள் பாஸ்.

    பதிலளிநீக்கு
  24. Mahan.Thamesh கூறியது...
    தலைப்பினையும் படத்தினையும் பார்த்தேன் அதில் உங்கள் அபிமான நடிகை உங்கள் அபி இருப்பதால் வந்தேன் . ஆனா ஒரு தமிழ் வரலாற்றினை புரட்டி பதிவிட்டுள்ளீர்கள் நன்றி நண்பா .<<<<<<<<<<<<<<

    நன்றி பாஸ்..
    அட இன்றைக்கு ரெம்ப பேர்தான் ஏமாந்து இருக்காங்க போல... ஹீ ஹீ...

    பதிலளிநீக்கு
  25. Mahan.Thamesh கூறியது...
    மதுரனுக்கு வாழ்த்துக்கள் .<<<<

    :))

    பதிலளிநீக்கு
  26. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
    தலைப்பைப் பார்த்து ஏமாந்தோர் வரிசையில் நானும் இப்போ கடைசியில் நிக்குறேன்! ஹா ஹா ஹா இருந்தாலும் அந்தக் கதையும் சூப்பர்தான்!<<<<<<<<<<

    பார்டா.... தலையும் ஏமாந்துட்டுதா ???ஹீ ஹீ
    ஹப்பி ஹப்பி

    பதிலளிநீக்கு
  27. நிரூபன் கூறியது...
    வணக்கம் துஸி,
    நல்லா இருக்கிறீங்களா?

    துஸ்யந்தன், சகுந்தலை காதலை விட, மதுவுக்கு நீங்க எழுதியிருக்கும் விடயங்கள் தான் மனதில் நிறைந்து விடுகின்றது!

    மதுரனின் எண்ணங்கள், கனவுகள் யாவும் ஈடேறிட,
    வாழ்வு வளம் பெற
    உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்!

    அடுத்த வருசன் மதுரனுக்கு டும் டும் நடக்கிற மாதிரி நாம பொம்பிளை பார்க்க களத்தில இறங்கிட வேண்டியது தான்;-))))<<<<<<<<<<<

    வணக்கம் பாஸ்..
    தேங்க்ஸ் நான் நல்லா இற்றுக்கேன்... நீங்களும் நலம் தானே??

    தேங்க்ஸ் பாஸ்.
    ஆமா ஆமா மதுக்கு ஒரு பொண்ணு பாருங்க பாஸ்...
    பொண்ணு சுண்டினா ரத்தம் வரணுமாம் அந்த கலரில்தான் பையனுக்கு பொண்ணு வேணுமாம்.... ;(

    பதிலளிநீக்கு
  28. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
    அப்புறம் முக்கிய மேட்டர்,

    ஃபிரான்ஸின் புகழ்பூத்த மன்னன் 6 ம் லூயி,

    பிரபல ஃபிரெஞ்சு மெழுகுச் சிலை சிற்பாச்சாரியாகிய மேரி தாசோ ( (Madame Tussauds) - இவரது பெயரில் தான் லண்டன் மெழுகுச்சிலை மியூசியம் உள்ளது,

    சிறிலங்கா கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க,

    நம்ம கோவை சரளமாதிரி அமெரிக்காவின் கோவை சரளா, நகைச்சுவை நடிகை சாரா சில்வர்மன்,

    போன்ற பலநூறு பிரபலங்கள் அவதரித்த, டிசம்பர் 1 ம் நாளில் பிறந்து, எம் இதயம் நுழைந்து, உயிரில் கலந்த ( நன்றி - வைரமுத்து ) அன்பு நண்பன், ஆருயிர் தோழன், ஹன்சிகாவின் பாவாடையை கஞ்சி போட்டு, கசங்காமல் காவல் காக்கும் காவல் தெய்வம், முன்னுக்கு மட்டும் போதாது பின்னுக்கும் இரண்டு வேண்டும் என்று அடம்புடிக்கும் அன்பு நண்பன் மதுரனுக்கு எனது சார்பாகவும், நிரூபனின் மூன்றாவது மனிசியின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    மணி பாஸ்..... தகவல்கள் அருமை..... தேங்க்ஸ்..

    அப்புறம் நிருபனின் அந்த மூன்றாவது மனைவி யார் ??
    அப்போ முதல் ரெண்டும் இப்போ எங்கோ தகவலை கொஞ்சம் எனக்கும் கசிய விடுங்களேன்...
    "முகமூடி கிழியும் 'நிரூ'ப்பதிவர் " என்று ஒரு புலனாய்வு பதிவு போட்டுடுவோம்.. நமக்கும் பொழுது போகும் இல்ல.......... :)

    பதிலளிநீக்கு
  29. ஆகுலன் கூறியது...
    நானும் எதோ எண்டு வந்தா இப்படி கவுத்துவிடீன்களே..

    கதை அருமை முன்பு கேடிருகுறேன்....<<<<<<<<<<<<

    அட... நம்ம "குட்டியும் " ஏமாந்துட்டுதா??? ஹீ ஹீ....

    யா அருமையான இலக்கிய ரசம் கொட்டும் கதை பாஸ் துஷ்யந்தன்-சகுந்தலா

    பதிலளிநீக்கு
  30. ஆகுலன் கூறியது...
    மதுரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..<<<<<<<<<<<<<

    நண்பன் சார்பாய் நன்றிகள் ஆகுலன் ;)

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் மருமோனே ஏன்?ஏன்யா இந்த கொலை வெறி... இவ்வளவு நீண்ண்ண்ட பதிவை வாசிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்போல..?.. சரி சரி என்ர அடுத்த மருமோனுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!

    பதிலளிநீக்கு
  32. இங்கேயும் தேவயானிதான் சகுந்தலையா..? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  33. அருமை!காப்பி பேஸ்ட்டும் அருமை!மதுரனுக்கு ஒன்றாம் திகதியே வாழ்த்துச் சொல்லி விடலாம்.(இந்த மூஞ்சிய யாரு காதலிப்பா?ஹி!ஹி!ஹி!ச்சும்மா!)Yoga.S.Fr.

    பதிலளிநீக்கு
  34. அட கையெழுத்து நல்லா இருக்கையா..!!

    பதிலளிநீக்கு
  35. காட்டான் சொன்னது…
    அட கையெழுத்து நல்லா இருக்கையா..!!//

    தலை எழுத்து தான் பிழைச்சிட்டுது

    பதிலளிநீக்கு
  36. பெயரில்லா12:22 AM, நவம்பர் 28, 2011

    அது தானா உங்களுக்கு துஷியந்தன் எண்டு பெயர் வைத்தார்கள்...)))

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா12:22 AM, நவம்பர் 28, 2011

    மதுரனுக்கு வாழத்துக்கள்...

    பதிலளிநீக்கு
  38. அவ் இது அந்த துஷ்யந்தனா......

    பதிலளிநீக்கு
  39. வாழ்த்துக்கு நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  40. //இல்லைன்னுவை நானே உங்க ஒராளை அனுப்பி... அப்புறம் நீ.. அதுதான் எல்லாம்தான் முடிஞ்சுதே இனி அவாதானே நமக்கு வாழ்க்கை கொடுக்கணும் என்று சொல்லுற முடிவுக்கு கொண்டுவந்திருவேன்... //

    யாரு அந்த பிரெஞ்சு பிகரா?????????????

    பதிலளிநீக்கு
  41. //Mahan.Thamesh சொன்னது…
    மதுரனுக்கு வாழ்த்துக்கள் .//

    நன்றி தமேஷ்

    பதிலளிநீக்கு
  42. //நிரூபன் சொன்னது…
    வணக்கம் துஸி,
    நல்லா இருக்கிறீங்களா?

    துஸ்யந்தன், சகுந்தலை காதலை விட, மதுவுக்கு நீங்க எழுதியிருக்கும் விடயங்கள் தான் மனதில் நிறைந்து விடுகின்றது!

    மதுரனின் எண்ணங்கள், கனவுகள் யாவும் ஈடேறிட,
    வாழ்வு வளம் பெற
    உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்!

    அடுத்த வருசன் மதுரனுக்கு டும் டும் நடக்கிற மாதிரி நாம பொம்பிளை பார்க்க களத்தில இறங்கிட வேண்டியது தான்;-))))//

    ஆஹா....... யோவ் துஷி சும்மா இருந்த நிரூவையும் கெளப்பி விட்டாச்சா

    நன்றி நிரூ

    பதிலளிநீக்கு
  43. @Powder Star - Dr. ஐடியாமணி //

    அண்ணே என்ன வாழ்த்துறீங்களா இல்ல வாருறீங்களா ஒண்ணுமே புரியல்ல...


    ரொம்ப நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  44. @காட்டான்

    நன்றி மாமோய்

    பதிலளிநீக்கு
  45. @கந்தசாமி

    நன்றி கந்தசாமி அண்ணே

    பதிலளிநீக்கு
  46. நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  47. KANA VARO சொன்னது…
    காட்டான் சொன்னது…
    அட கையெழுத்து நல்லா இருக்கையா..!!//

    தலை எழுத்து தான் பிழைச்சிட்டுது

    மாப்பிள “சும்மா” இருந்த சங்கை ஏன்யா ஊதி கெடுக்கிறாய்?... ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  48. ஆண்டு 10,11ன்றில் நித்திரை தூங்கி தூங்கி படித்த விருப்பத்துகுரிய தமிழ் பாடத்தில் ரசித்து படித்த கதைகள்

    பதிலளிநீக்கு
  49. நானும் தேவயானி பத்திப் பாத்திட்டு என்னமோ, ஏதோன்னு பதறி வந்தேன்! :-)

    வாழ்த்துக்கள் மதுரன்!

    பதிலளிநீக்கு
  50. உங்கள் கதையை படிக்கும் பொழுது, நீங்கள் நன்றாக கதை எழுதுவீர்கள் என்று நினைத்து விட்டேன். பிறகுதான் தெரியுது உங்களுடையதல்ல என்பது. கதை நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  51. இந்த பதிவு டைப் பண்ணவே ஒரு சண்டே ஆகியிருக்குமே?

    பதிலளிநீக்கு
  52. பள்ளிப்பருவத்தில் படிக்காத கதையெல்லாம் இப்போ படிக்கிறோம்.ம்

    பதிலளிநீக்கு
  53. ஹோ..நம்ம துஷியோட கதையில்லையா இது..
    @மதுரன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  54. பெயரில்லா5:27 PM, நவம்பர் 28, 2011

    தலைப்பைப் பார்த்து ஏமாந்தோர் வரிசையில் நானும்....-:)

    எப்ப வந்தீங்க...? Welcome back...

    ரொம்ப நாளைக்கப்புறம் சந்திக்கிறோம்...வாழ்த்துக்கள் துசி...

    பதிலளிநீக்கு
  55. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். தங்களின் பகிர்வுக்கு நன்றி. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    பதிலளிநீக்கு
  56. வணக்கம் சகோ நலந்தானா?...பிளாக்குக்கு வராத காரணம் அறிஞ்சாச்சு
    உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க
    நன்றி அருமையான கதைப் பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  57. துஷ்யந்தன் என்பவன் ஓர் madaijan. அவன் வேட்டையாட விருப்பம் கொண்டு aduththa nadu சென்றான். அங்கே ஓர் அழகிய vellaikkarijai கண்டு, அதனைத் துரத்திச் சென்றான். வழியில் ஒரு kaaddan அவனை வழிமறித்தார்.

    இது எப்பூடி... ஹ..ஹ..

    நல்ல ரசனையுள்ள பதிவப்பா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...