வெள்ளி, செப்டம்பர் 14, 2012

ஊர் நினைவுகள்... (மறுபடியும் வந்துட்டோம் இல்ல..)

ரெம்ப பெரிய்ய்ய்..ய இடைவெளிகளுக்கு பின் மீண்டும் வலைப்பூ பக்கம் திரும்பி இருக்கோம்.
 இந்த இடைவெளிக்குள்ள வாழ்க்கையில் ரெம்ப பெரிய சந்தோஷங்கள் மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கு.. அவை எல்லாத்தையும் இங்கே பகிர முடியாது என்பதால ஒரு சந்தோஷத்தை மட்டும் இங்கே பகிர்ந்துக்கிறேன்.

வவுனியா காட்டுக்குள்.. :))
என் சொந்த நாட்டிற்க்கு (இலங்கை) போயிட்டு வந்தோம் இல்ல :)) சின்ன வயசில் இலங்கையை விட்டு பிரிந்து வந்த பின் இப்போழுதுதான் முதல் முதலாய் இலங்கை போயிருந்தேன்.

அங்கு நின்ற ஒரு மாசம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த ஒரு மாசத்தில் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஒட்டிசுட்டான், கிளி நெச்சி, முல்லைத்தீவு, நெடுங்கேணி என்று பார்க்க ஆசைப்பட்ட அத்தனை இடங்களையும் பார்த்தாச்சு.
 
முல்லைத்தீவு கடற்கரையில் "அவங்களோடு.." :))
முல்லைத்தீவு கடற்கரையில் குளித்துவிட்டு அப்படியே நந்திக்கடற்கரையோரம் நடந்த போது ஏதேதோ நினைவுகளில் மனசு கனத்துப்போய்விட்டது :((

அப்புறம் நெடுங்கேணி...
ஆச்சரியம் தான்.. இறுதியாக இருந்து வந்த வவுனியாவில் உள்ள இடங்களே மறந்துவிட்ட நிலையில்.. பிறந்து, 8 வயது வரையே வாழ்ந்த நெடுங்கேணியில் ஒவ்வொரு இடமும் நினைவில்...!

"அப்பா இவ்வடத்த ஒரு பெரிய புளியமரம் நின்றதல்லோ இப்போ கானல்ல.." "இந்த கொண்டை மரத்துக்கு கீழதான நாதம்பிரான் கோயில் இருந்திச்சு.. இப்போ மரம் மட்டும் நிக்குது..!" "இதானே ராஜலிங்கம் மாமா இருந்த வீடு.. சுவருகள் மட்டும் இன்னும் உடையாம இருக்குப்பா" "என்னப்பா இது..! முந்தி என் ப்ரெண்டுட்ட எல்லாம் எவ்ளோ பெருமையா சொல்லி கூட்டிக்கொண்டு வந்தெல்லாம் காட்டி இருக்கேன் எங்க காணிக்கேயே குளம் (ஆறு) இருக்கென்று.. இப்போ என்னப்பா இப்படி மணல்மேடா இருக்கு" இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டு துளைக்கும் என்னை ஆச்சரியமாய் பார்த்தபடி கனத்த மனத்துடன் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அப்பா.
 
எங்கள் வீடு இருந்த இடம்.. இந்த மாமரம் துஷி நட்டது.. :))
எங்கள் வீடு இருந்த காணி..! என் மனசை ரெம்ப வேதனை படுத்திய இடம் அது :(( கேற்றில் ராட்ஷச உருவில் ஒரு கூழா மரம் அதன் கீழ் எங்கள் குல தெய்வம் வைரவர். பெரிய வீடு.. அதை சுற்றிய பூஞ்சோலை (இவை அம்மாவின் உயிர்) தென்னை,தேக்கு,விளாமரம்,மாமரம் என்று தேவையான எல்லாமே காணிக்குள் இருக்கும் (வன்னியில் பெரும்பாளும் எல்லோர் வீடுகளும் இப்படியே).
எங்கள் குலதெய்வம் வைரவர் :((
இன்று....
வேலிகள் அற்று அலங்கோலமாய்...
காணிக்குள் ஒரு விளாமரம் ஒரு மாமரம் மட்டுமே.. :(( உன்னிபற்றைகளுக்குள் அவை மட்டுமே கம்பீரமாய் நிக்க கேற்றடியில் கூழாமரமும் அதன் கீழ் சிறு சீமந்து கொட்டினுள் சருகுகளுக்குள் எங்கள் குல தெய்வம் வைரவர் (சீமந்து கொட்டில் போருக்கு பின் அண்ணா கட்டியது).

வவுனியாவில் இருந்து வேன் பிடித்து குடும்பத்தில் எல்லோரும் போயிருந்தோம்...
ரெம்ப நேரமாகியும் யாருக்குமே காணியை விட்டு வர மனமே இல்லை. நான் வருவேன் என்று தெரிந்தோ என்னவோ மாமரம், விளாத்தி, கூளாமரம் மூன்றும் பழங்களால் நிறைந்து போயிருந்தது.. மரங்களில் ஏறி பறித்து அங்கேயே இருந்து சாப்பிட்டு மிகுதியை வவுனியாவுக்கு கொண்டுவந்து பக்கத்து வீட்டுக்காரருக்கு எல்லாம் கொடுத்து ஃப்ராண்ஸ் வரை கொண்டு வந்தேன் :))

காணிக்குள் மரத்தில் ஏறி, ஒருவரை ஒருவர் துரத்தி உன்னிப்பற்றைகளுக்குள் ஓடி.. நானும் தம்பியும் தங்கச்சியும் பண்ணிய அட்டகாசங்கள் சமாளிக்க மிடியாமல் அப்பாவும் அம்மாவும்தான் தடுமாறிப்போனார்கள். நாம போட்ட சத்தத்தில் அயலவர்கள் எல்லாம் வந்து என்னை தம்பியை தங்கச்சியை அடையாளம் கண்டு பெயர் சொல்லி கட்டிதழுவி ஆனந்தகண்ணீர் விட்டது ஆச்சரியமான நெகிழ்ச்சி.
 
மணி படித்த பாடசாலை.. ( மீயும் இங்கேதான் மூன்றாம் வகுப்பு வரை. பெருமை.. பெருமை lol)
இறுதியில் இருட்ட தொடங்கியும் யாருக்கும் கிளம்ப மனசே இல்லை.. பிரிய மனமே இல்லாமல் கலங்கிய கண்களோடு வேனுக்குள் ஏறி புறப்பட்டோம். வரும் போது பாட்டு பேச்சு என்று அல்லோலப்பட்ட வேன் திரும்பும் போது அமைதியாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேச வில்லை.. ஒவ்வொருவர் மனசிலும் கனமான நினைவுகள்.

எனக்கு ரெம்ப பிடித்த பதிவர்களில் மிக முக்கியமானவர்கள் 'மருதமூரான்'அண்ணாவும் 'ஜீ'அண்ணாவும். இருவரையும் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹுமும்.. நாட்கள் படு வேகமாய் நகர்ந்ததில் அவர்களை சந்திக்கவே முடியவில்லை. அப்புறம் நம்ம தோஸ்த் ராஜ், மைந்தன், வரோ, சுதாண்ணா என்று யாரையுமே பார்க்க முடியவில்லை :((

பதிவர், நன்பன் என்று சந்தித்தது என்றால்.. நம்ம 'சிறகுகள்' மதுரனை மட்டுமே. (மதுரனை சந்திக்காமல் வந்தால் அப்புறம் ஃப்ராண்ஸுக்கு ஆள் அனுப்பியே போட்டுத்தள்ளிருவேன் என்று மிரட்டி வைத்திருந்தான்.. ஆவ்வ்வ்).

முன்பே இலங்கைக்கு போய் வரும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அதிக விருப்பம் இல்லாததால் இலங்கை பயணத்தை தவிர்த்துக்கொண்டே வந்தேன். இப்பொழுது இலங்கை சென்று வந்ததில் இருந்து இவ்ளோ நாளா அங்கே போகாமல் மிஸ் பண்ணிவிட்டேனே என்று கவளையாய் இருந்திச்சு. இப்போ முடிவே பண்ணியாச்சு.. இனி ஒவ்வொரு ஆண்டு விடுமுறையையும் இலங்கையில்தான் கழிப்பது என்று.
 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...