உன் செல்லக்குரலை - என்
தேசியக்கீதமாய்
மாற்றிவிட்டுப்போன
வித்தைக்காரியே...
ஒண்ணுமே தெரியாதவள்போல்
அருகில் வந்து
மோகத்தை தூண்டிவிட்டு
உன் தேவைகளை
பூர்த்தி செய்யும்
காரியக்காரியே...
நடந்தால் என் நிழலாக
படித்தால் என் புத்தகமாக
தூங்கினால் என் கனவாக
வெகுதூரத்தில் இருந்தாலும்
அருகில் இருப்பதைப்போல்
என்னை ஆட்டிப்படைக்கும்
மாயக்காரியே...
விருப்போ வெறுப்போ
துக்கமோ சந்தோசமோ
எந் நிலையில் நான் இருந்தாலும்
உன்னைப்பார்த்ததும் - எல்லாம் மறந்து
உன்னைக்காதலிக்க வெக்கும்
வசியக்காரியே..
எங்கேயும் எப்போதும்
உன் கைப்பொம்மையாக
எங்கேயும் எப்போதும்
எந்நேரமும்
உன்னையே உன்னைப்பற்றி
மட்டுமே - பேச வெக்கும்
காதல்காரியே...
உன் கைப்பொம்மையாக
என்னை சீண்டி
விளையாடும் உன்னை
வெறுக்கத்தான் நினைக்குறேன்
ஆனாலும்
என்னையே என்னால்
எப்படி - வெறுக்கமுடியும்
சொல்லடி என்னவளே.
ஆக்கம் துஷ்யந்தன்
ஆக்கம் துஷ்யந்தன்
நடந்தால் என் நிழலாக
பதிலளிநீக்குபடித்தால் என் புத்தகமாக
தூங்கினால் என் கனவாக
வெகுதூரத்தில் இருந்தாலும்
அருகில் இருப்பதைப்போல்
என்னை ஆட்டிப்படைக்கும்
மாயக்காரியே... //
ஆக மொத்தத்தில், உங்கள் வசம் நீங்களே இல்லை...
மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது இருக்கும் ஒரு உணர்வின் வெளிப்பாடு- ய்தார்த்தம்.
பதிலளிநீக்கு// நிரூபன் a dit…
பதிலளிநீக்குஆக மொத்தத்தில், உங்கள் வசம் நீங்களே இல்லை... //
நெசந்தான் அண்ணா..
நான் அவள் வசம் போய் பல வருசங்கள் ஆச்சு ..
// நிரூபன் a dit…
பதிலளிநீக்குமெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது இருக்கும் ஒரு உணர்வின் வெளிப்பாடு- ய்தார்த்தம்.
//
நம்மட கிறுக்கல்களை உங்கள போன்றவர்கள் வந்து பாப்பதே ரெம்ப பெரிய விஷயம்,
இதில் உங்கள் பாராட்டு ரெம்ப சந்தோசத்த கொடுக்குது..
ரெம்ப நன்றி அண்ணா.
ரெம்ப சந்தோசத்த கொடுக்குது..
பதிலளிநீக்குரெம்ப நன்றி அண்ணா.//
என்னது, சந்தோசத்தை கெடுக்குதா...
அவ்...