செவ்வாய், டிசம்பர் 20, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 07

"என் மேலான உன் காதல் எதுவரைக்கும்... நீ பிரான்ஸ் திரும்பும் வரைக்குமா?" என்று அவள் என் காதலை அலட்சிய படுத்தி கேட்டாலும் அதில் அவள் சம்மததுக்கான அறிகுறிகள் கொஞ்சம் பொதிந்து கிடைந்தமை எனக்குள் சந்தோஷத்தை உண்டுபண்ண உற்சாகமாக பேச தொடங்கினேன்.

"சுலக்க்ஷிகா.. என்னை புரிஞ்சுக்கோ, இப்பவே என்னால உன்னை பிரான்ஸ் கூட்டிட்டு போக முடியும்.. எங்க வீட்டுகாரங்க மேலேயும் எனக்கு நம்பிக்கை இருக்கு அவங்களுக்கு என் பிடிவாதமும் உறுதியும் நன்றாகவே தெரியும், அதைவிட எங்க வீட்டுக்கு ஒரே பையன் நான். என் சந்தோஷமும்  அவங்களுக்கு முக்கியம் இல்லையா?  சுலக்க்ஷிகா எனக்கு நீ சம்மதம் தந்தாள் மட்டும் போதும்.. அதற்கு பிறகு எல்லோரிடமும் சம்மதம் வாங்கிறதும் உன்னை என்னோடு கூட்டிப்போவதும் என் பொறுப்பு. நீ உன் குடும்பத்தை நினைத்து கவலைப்படாதே.. நாம தூர இருந்தாலும் அவங்களையும் நல்லா பார்ப்போம். கொஞ்ச நாள் போனபிறகு உன் தம்பியையும் எங்க கூட கூப்பிட்டு நல்லா படிக்க வைப்போம். ப்ளீஸ்... நீ மட்டும் எனக்கு சம்மதம் சொல்லு அது போதும் எனக்கு.. ப்ளீஸ்..."  நான் கெஞ்சும் குரலில் சொல்ல..


"முடியாது ஆர்ணி.. நீ நினைக்கிற எதுவுமே ஒரு போதும் நடக்காது.." தீர்க்கமாய் வந்தது அவள் பதில்.


நான் அதிர்ச்சியோடு அவளைப்பார்த்தேன்.


"ஆர்ணி.. நீ இவ்ளோ சுயநலக்காரனாய் இருப்பாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல்ல..  உன் பணத்தைக்காட்டி என்னை வாங்கலாம் அல்லாட்டி மயக்கலாம் என்று நினைக்கிறியா? உன்னை கல்யாணம் பண்ணி உன் பணத்தில்தான் என் குடும்பத்தை கரை சேர்க்கணும் என்ற எந்த தேவையும் எனக்கில்லை.. அப்படிப்பட்டவளும் நான் இல்லை.. சரி அதைவிடு வேற என்ன சொன்ன..! நான் சம்மதிச்சா.. பிரான்ஸ் வரணுமாம்!! ஏன் நீ என் கூட இங்கே இருக்கமாட்டியா? இங்கே பார்.. எனக்கு எப்படி என் குடும்பமோ அதற்க்கு ஒரு படி மேலேயே என் நாடு. இதில் என்னென்ன பிரச்சனைகள் வந்தாலும் யாருக்காகவும் இவை இரண்டையும் உதறிட்டு என்னால் வரமுடியாது.." கடைசி வரிகளை அழுத்தமாக சொல்லிவிட்டு என்னைப்பார்த்தாள்.


பேச திரணியற்று மிச்சம் இருந்த கொஞ்ச நம்பிக்கைகளும் உடைந்து போக கண்ணீர் முட்டிய கண்களுடன் அவளை பார்த்துகொண்டு நின்றேன்.


"சரி.. ஆர்ணி, நீதானே என்னை ரெம்ப நேசிக்கிறதா சொன்ன..  அது உண்மையா இருந்தா நீ இங்கயே என் கூட தங்கிடேன்.  என்ன அப்படிப்பாக்கிற..! எனக்கு வாழ்க்கையில் பெருசா எந்த ஆசைகளும் கனவுகளும் இல்லை. மானத்தை காப்பாற்ற துணி.. உயிரை காப்பாற்ற சாப்பாடு இது மட்டும் போதும்டா.. நீ இங்கே தங்கி இதை உன்னால் செய்யமுடியும் என்றால் சொல்லு, இப்பவே இந்த நிமிஷமே உன் கூட வர நான் தயார்.. சொல்லு ஆர்ணி உன்னால முடியுமா..?"


நான் தடுமாறி ஏதோ சொல்ல எடுக்க கையமர்த்தி தடுத்தவள்.


"உன் காதல் என்ற போர்வையிலே தயவுசெய்து முடியும் என்று மட்டும் பொய் சொல்லிடாத.. எனக்கு தெரியும் ஆர்ணி உன்னால கண்டிப்பா முடியாது. என்னதான் நான் உன்னை பாதித்து இருந்தாலும் பெத்த அப்பா அம்மாவை விட்டு இங்கே என் கூட உன்னால் இருக்க முடியாது. அப்படி இருந்தாலும் அங்கு தொட்டதுக்கெல்லாம் காரில் போன உன்னால் இங்கே நடந்து ஒரு கிராமத்தானாய் வாழ முடியாது.. நீ இப்போ படித்துகொண்டு இருக்கிறாய், இன்னும் கொஞ்ச காலம் போக அங்கே நல்ல ஒரு வேலை எடுப்பாய். ஆனா இங்கே நீ என் கூட தங்கினா.. உன் அங்கத்தைய படிப்புக்கு இங்கே என்ன வேலை இருக்கு? அப்போ எப்படி என்னை வைத்து காப்பாற்றுவாய்? சேற்றுக்க கால் வைத்து தோட்ட வேலை செய்வியா ? அதெல்லாத்தையும் உன்னால் செய்யமுடியுமா? யோசிச்சு பார்.. ப்ளீஸ்டா..  எனக்காக யாரும் கஸ்ரப்பட வேண்டாம்.  ஆர்ணி..  எதுவும் வேண்டாம்டா.. என்னை விட்டுடேன்.. ப்ளீஸ்... அவள் உடைந்துபோய் சொல்ல நான் உள்ளே உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்தேன்.


மீண்டும் அவளே தொடர்ந்தாள். "ஆர்ணி.. நீ என்னை கட்ட உன் குடும்பம் சம்மதிக்கும் என்று என்னதான் சப்பக்கட்டு கட்டினாலும் உன் குடும்பம் இதற்க்கு ஒரு போதும் சம்மதிக்காது.. இந்த கிராமத்தில் எங்க குடும்பத்துக்கு இருக்கிற 'நல்ல பெயர்' அப்படிடா.. ஒரு வேளை அவர்கள் சம்மதித்தாலும்! என் நாட்டை.. இந்த கிராமத்தை.. பழகின முகங்களை.. நடந்து திரிந்த வீதிகள்.. எல்லாத்தையும்டா.. எல்லாத்தையும் என்னால் விட்டுட்டு உன் கூட வரமுடியாது.. ப்ளீஸ் போதும்.. இதுக்கு மேலே என்ன பேச வைக்காதே... நான் ரெம்ப நொந்துபோய் இருக்கேண்டா.. வேணாம்டா.. என்னை விட்டுடேன்.. நான் போறேன்.."  தழுதழுத்த குரலில் சொன்னாள். அழுதழுது அவள் கண்கள் சிகப்பாகியிருந்தது.


"சுலக்க்ஷிகா உன் மனசை தொட்டு சொல்லு.. என்னை நீ லவ் பண்ணல்ல..? சொல்லு சுலக்க்ஷிகா.. என்னை உனக்கு புடிக்கல்ல..?!"  மனதில் நிறைந்த ஒட்டுமொத்த வலிகளையும் வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கேட்டேன்.


கண்களில் தடம்புரளும் கண்ணீரை துடைத்தபடி விரக்தியாக புன்னகைத்தபடி சொன்னாள்.  "யார் யாரைத்தான் காதலிக்கல்ல.. சொல்லு? அவங்க எல்லாம் காதலிச்சவங்கலையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இன்றைக்கு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டி என்று இருக்கிறவங்க எல்லோர் மனசிலையும் ஒரு உடைந்துபோன காதல் ரணமாய் இருக்கும்.. அவங்க எல்லாம் வாழலையா...?" எங்கையோ வெறித்து பார்த்தபடி சொன்னாள்.


அதற்கு மேல் எதையும் பேச பிடிக்காமல் அமைதியாக நின்றேன். இதயத்தை யாரோ துண்டு துண்டாய் அறுப்பதை போல் வேதனை. அவளும் அதே நிலையில்தான் நின்றாள்.


இருண்ட மேகங்கள் மேலும் இருள..  மழை கொட்ட தொடங்கியது. அந்த உடைந்த கட்டிடத்தின் உள்ளே சென்று மழைத்துளிகள் படாது ஓரமாய் நின்றுகொண்டேன். அவளும் என் பின்னால் வந்து அந்த சிறிய இடத்திற்குள் என்னருகே நெருக்கமாக நின்றுகொண்டாள். மழைக்காற்று தூவானமாய் அடிக்கடி இருவரையும் நனைத்துகொண்டிருந்தது. இருள் வேறு இருக்கும் கொஞ்ச கொஞ்ச பகளையும் விழுங்கி கொண்டிருந்தது. நான் மார்புக்கு நடுவே கைகளை இறுக கட்டியபடி மழைக்குளிரில் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தேன்.


அவள் தூரத்தில் இருளில் மறையும் தன் வீட்டையே பார்த்துகொண்டிருந்தாள். அவள் முகம் அந்த சோகமான நிலையிலும் மழை மின்னலின் வெளிச்சத்தில் பளிங்கு போல் மின்னியது. பின்னிய அவள் கூந்தலில் இருந்து கலைந்த முடிகள் மழை நீர் பட்டு அவள் முகத்தில் ஒட்டியிருந்ததமை  அவளை ரவிமர்மன் வரைந்த ஓவியம்போல் அழகாக காட்டிக்கொண்டிருந்தது. அவளின் சிவந்த உதடுகள் குளிரில் விறைத்து படபடத்துகொண்டிருந்தது. அவளின் மெல்லிய உடை மழையில் தொப்பமாக நனைந்திருந்ததால் அவள் அழகு இளமையெல்லாம் இலைமறை காயாக தெரிந்துகொண்டிருந்தது. என் விழிகள் மெய்மறந்து அவளை ஆராய்ந்து கொண்டிருந்தன..


சட்டென திரும்பியவள் தன்னை விழுங்கி விடுவதுபோல் பார்த்துகொண்டிருக்கும் என்னைப்பார்த்ததும், நாணங்கள் அந்த சோகங்களை எல்லாம் மறைக்க வெக்கத்துடன் தடுமாறினாள்.


நான் குற்ற உணர்சியுடன் திரும்பிக்கொண்டேன். அவள் கண்கள் என் முதுகை துளைப்பது போல் இருந்தது. அவளின் சூடான மூச்சுக்காற்று என் முதுகில் மோதிக்கொண்டிருந்தது.  என் இதயம் வேகமாக துடிக்க,  முள் மேல் நிற்பதுபோல் அவஸ்தையில் நின்று கொண்டிருந்தேன்.. மழை வேறு வேகம் பிடிக்க தொடங்கியிருந்தது.


இது கனவா..?!!!!  திடிரென ரோஜா இதழ்களை என் முதுகில் கொட்டியதுபோல் ஓர்  உணர்வு.. பேச திணறி அற்று இன்பத்தில் திளைத்து நான் சிலையாக நின்றேன்.  பின்னால் நின்று என்னை இறுக்கமாக கட்டியபடி அவள். அவள் அழகையெல்லாம் மேலும் மேலும் என் மேல் இறுக்கி கொண்டிருந்தாள். உலகத்தில் உள்ள அத்தனை சுகங்களையும் என் மேல் போர்த்து விட்டதுபோல் ஓர் உணர்வு.


அவள் முகம் புதைத்திருந்த என் கழுத்து பகுதி அவள் கண்ணீரால் நனைந்து பிசுபிசுக்க தொடங்கியது.. சட்டென அவள் அணைப்பில் இருந்து விலகி திரும்பினேன்.. திரும்பிய என்னை கலங்கிய கண்களோடு பார்த்தவள் மீண்டும் என்னை இறுக கட்டிப்பிடித்துகொண்டாள். அவள் முகம் என் மார்பில் புதைந்து கிடந்தது. அவளின்  ராட்ஷஸ அணைப்பில் நான் உணர்சிகளின் விளிம்பில். கடவுளே இந்த நிமிடங்கள் இப்படியே உறைந்துவிடக்கூடாதா..?
தொடரும்...


குறிப்பு
: இத்தொடர் யுத்தம் நடந்த காலப்பகுதியிலேயே நடப்பதாக எழுதப்பட்டுள்ளது.
: இத்தொடரில் வரும் கதாபாத்திரங்களும் கதையும் நிஜம் அல்ல. (அவ்வ)



................................................................................
மகேந்திரன் சொன்னது…
துஷி கதை அருமையா இருந்துச்சு,
கதைநாயகியின் மனமும் கதைநாயகனின்
மனமும் உங்களுக்காக கவிதையாக..

கண்களிலே கண்ணீர் ஏனடி..
காத்திருக்கேன் நானடி!
காலமிங்கே பதில் சொல்லும்
காதலை நீ ஏத்துக்கோ
கலங்காது பார்த்துக்கிறேன்!!
காமத்தில் விளையவில்லை
கடும் மோகத்தில் விளையவில்லை
உன் முக பாவத்தில் விளைந்ததடி
உன்னோடு நானிருப்பேன் என்கிறேன்
நீயோ என்னை விட்டு போவாய் என்கிறாய்..
உன்னைவிட்டுப் போனாலும்
உன் நெஞ்சை விட்டுப் போவதில்லை ..
பதில் சொல்லடி கண்மணியே!!


(நன்றி: மகேந்திரன்)




74 கருத்துகள்:

  1. வாசிப்பு தொடர்கிறது. நானும் உனக்கு கவிதை எழுத வேணுமோ?

    பதிலளிநீக்கு
  2. அவ்வ்... அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...

    முக்கியமான இடத்தில கட்டிங்கா....

    பதிலளிநீக்கு
  3. பாஸ் விரிவா கமெண்ட்ஸ் போட முடியவில்லை.. சாரி

    பதிலளிநீக்கு
  4. பல விடயங்களை சிறப்பாக சொல்கின்றீங்க மச்சி சுவாரஸ்யமாக இருக்கு பாராட்டுக்கள் நான் சொல்கின்றேன் இதை ஒரு குறுநாவலாக வெளியிடுங்க சூப்பர் ஹிட்டாகும்

    பதிலளிநீக்கு
  5. ////நான் குற்ற உணர்சியுடன் திரும்பிக்கொண்டேன். அவள் கண்கள் என் முதுகை துளைப்பது போல் இருந்தது. அவளின் சூடான மூச்சுக்காற்று என் முதுகில் மோதிக்கொண்டிருந்தது. என் இதயம் வேகமாக துடிக்க, முள் மேல் நிற்பதுபோல் அவஸ்தையில் நின்று கொண்டிருந்தேன்.. மழை வேறு வேகம் பிடிக்க தொடங்கியிருந்தது.


    இது கனவா..?!!!! திடிரென ரோஜா இதழ்களை என் முதுகில் கொட்டியதுபோல் ஓர் உணர்வு.. பேச திணறி அற்று இன்பத்தில் திளைத்து நான் சிலையாக நின்றேன். பின்னால் நின்று என்னை இறுக்கமாக கட்டியபடி அவள். அவள் அழகையெல்லாம் மேலும் மேலும் என் மேல் இறுக்கி கொண்டிருந்தாள். உலகத்தில் உள்ள அத்தனை சுகங்களையும் என் மேல் போர்த்து விட்டதுபோல் ஓர் உணர்வு.
    ////

    சூழ்நிலைகளால் மனித மனங்கள் மாற்றம் அடைகின்றன என்பதை காட்டி நிற்கின்றன இந்த வரிகள்

    பதிலளிநீக்கு
  6. மச்சி உங்கள் தொடரை பற்றி உங்கள் தொடர் நிறைவு பெரும் போது விரிவான ஒரு விமர்சனம் தருகின்றேன்

    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  7. காதல் உளவியல் உங்களுக்கு சிறப்பாக வருகிறது சார்! மிக சுத்தமாக இருக்கிறது உணர்வுகளும்,அதன் வழி வார்த்தைகளும்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ////என்னதான் நான் உன்னை பாதித்து இருந்தாலும் பெத்த அப்பா அம்மாவை விட்டு இங்கே என் கூட உன்னால் இருக்க முடியாது.////

    உண்மையில் நல்ல காதலின் சுட்டல் தான் ஏனென்றால் காதலுக்கு கண் தெரியாதாமே..

    /// அப்படி இருந்தாலும் அங்கு தொட்டதுக்கெல்லாம் காரில் போன உன்னால் இங்கே நடந்து ஒரு கிராமத்தானாய் வாழ முடியாது..////

    இந்த இடத்தில் தானே தம்பி பலருக்கு கண்ணை மறைக்கும்...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துஸி,
    ஒரு பக்கம் வெளிநாட்டிற்கு திரும்ப வேண்டுமே எனும் போராட்டம்,
    மறு பக்கம் சுலக்‌ஷிகாவின் அன்பிற்காக ஏங்கும் மனதின் நிலை,.

    இவை இரண்டிற்கும் இடையில் தவிக்கும் ஆர்ணிகன்.
    சோகம், சந்தோசம் இரண்டையும் கலந்து கதை நகர்கிறது.

    அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் துசி ஐயா!
     நலம்தானே???
     புலத்திற்கும், புலம்பெயர் தேசத்திற்கும், இடையில் இரு ஜீவன்கள் நெஞ்சுருகும் காதல் மொழியை இனிய மொழி நடையில் பகிர்ந்து செல்லும் தொடர்!
     பல்சுவைக் கதம்பம் காதல் வலிகளைச் சொல்கிச் செல்கின்ற அங்கத்தில்! உங்களுடன் இன்று இனைகின்றேன். ஆவலில் வந்தேன் அவளின் தர்கரீதித் தத்துவத்தில் தத்தளிக்கின்றேன்! தாண்டி ஓடுகின்றேன் தவிர்க்க முடியாத தேடலில் விரைவில் சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  11. இந்தத் தொடருக்கு நானும் ஒரு விமர்சனம் எழுதக் காத்திருந்தேன். ஆனாலும் என் இளைய தம்பி ராச் முந்திவிட்டான். வாக்குத் தந்துவிட்டான்!
    விட்டுக் கொடுக்கின்றேன் முன்னர் வந்தவர்கே முதலிடம் என்பதால்! மீண்டும்  சந்திக்கலாம் ! 

    பதிலளிநீக்கு
  12. குறுநாவல் வடிவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கின்றேன் ஈழவயல் ஊடாக !

    பதிலளிநீக்கு
  13. "யார் யாரைத்தான் காதலிக்கல்ல.. சொல்லு? அவங்க எல்லாம் காதலிச்சவங்கலையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இன்றைக்கு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டி என்று இருக்கிறவங்க எல்லோர் மனசிலையும் ஒரு உடைந்துபோன காதல் ரணமாய் இருக்கும்.. அவங்க எல்லாம் வாழலையா...?" //

    இது எதுக்கு.....

    பதிலளிநீக்கு
  14. பாஸ் மிக அருமையா இருக்குது.......
    அவ்வ்வ்வ்வ்வ்வ்(புரியும் எண்டு நினைக்கின்றேன்..)

    பதிலளிநீக்கு
  15. //அவள் முகம் புதைத்திருந்த என் கழுத்து பகுதி அவள் கண்ணீரால் நனைந்து பிசுபிசுக்க தொடங்கியது.. சட்டென அவள் அணைப்பில் இருந்து விலகி திரும்பினேன்.. திரும்பிய என்னை கலங்கிய கண்களோடு பார்த்தவள் மீண்டும் என்னை இறுக கட்டிப்பிடித்துகொண்டாள். //

    இந்த வரிகள் படிக்கும் போதே மனதில் காட்சியாக விரிகிறது...
    இயல்பான உணர்வுகளை உங்கள் யதார்த்தமான மொழி நடை பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. இரவு வணக்கம்,துஷி!கண்ணதாசன்??????????????

    பதிலளிநீக்கு
  17. இனிய சகோதரா துஷி,
    எனது கருத்தையும் இங்கே பதிவுடன் இணைத்தமைக்கு
    மனம் கனிந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. ////உன்னை கல்யாணம் பண்ணி உன் பணத்தில்தான் என் குடும்பத்தை கரை சேர்க்கணும் என்ற எந்த தேவையும் எனக்கில்லை.. அப்படிப்பட்டவளும் நான் இல்லை..///

    தனக்கென தன் கால் இருக்க,
    நீ யார் என்னை சுமக்க !!!!
    கதைநாயகியின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும்
    வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  19. ///நீ இங்கே தங்கி இதை உன்னால் செய்யமுடியும் என்றால் சொல்லு, இப்பவே இந்த நிமிஷமே உன் கூட வர நான் தயார்.. சொல்லு ஆர்ணி உன்னால முடியுமா..?"///

    பெண்ணியக் கொள்கையால் வந்தாய் வார்த்தைகள் அல்ல
    கண்ணியக் கொள்கையால் வந்த வார்த்தைகள்........

    பதிலளிநீக்கு
  20. ///தன்னை விழுங்கி விடுவதுபோல் பார்த்துகொண்டிருக்கும் என்னைப்பார்த்ததும், நாணங்கள் அந்த சோகங்களை எல்லாம் மறைக்க வெக்கத்துடன் தடுமாறினாள்.///

    நான் கொண்ட தாபங்கள் எல்லாம்
    உன்னிரு விழிப் பார்வையிலே
    தூளாகிப் போனதய்யா......
    என் கன்னிமனம் தவிக்குது
    உன்கரமிடை தவழ துடிக்குது.....

    துஷி,
    எளிமையான நடையில் அருமையான காவியைக்
    கதை வரைந்து கொண்டிருக்கிறீர்கள்.
    அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  21. துஷிக்குட்டி...கண்ணதாசனா எப்ப மாறினார்.யோகா அப்பா சொல்லியிருக்கிறார்.அப்பா என் இரண்டு தளத்துக்கும் வந்திருந்தார் துஷி.டொச்ல மாலை வணக்கமும் சொல்லியிருந்தார்.எனக்கு நிறைய சந்தோஷம் !

    பதிலளிநீக்கு
  22. துஷிக்குட்டி...கதை புத்திசாலித்தனமா போகுது.இப்படிப் பெண்கள் முழிச்சபடி இருந்தா எவ்வளவு நல்லது.ஆனாலும் பிறகென்ன வந்தது சுலக்‌ஷிகாவுக்கு.கனவோ !

    பதிலளிநீக்கு
  23. அது தான் மேலே நான் சொல்ல வேண்டியதை பலர் சொல்லிட்டாங்களே ...)

    ஆனாலும் கடைசி வரிகளில் ஏதாவது சஸ்பென்ஸ் இருக்குது போல கிடக்கே!

    பதிலளிநீக்கு
  24. ////கண்களில் தடம்புரளும் கண்ணீரை துடைத்தபடி விரக்தியாக புன்னகைத்தபடி சொன்னாள். "யார் யாரைத்தான் காதலிக்கல்ல.. சொல்லு? அவங்க எல்லாம் காதலிச்சவங்கலையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இன்றைக்கு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டி என்று இருக்கிறவங்க எல்லோர் மனசிலையும் ஒரு உடைந்துபோன காதல் ரணமாய் இருக்கும்.. அவங்க எல்லாம் வாழலையா...?" /// ஆமா ;-)

    பதிலளிநீக்கு
  25. //இது கனவா..?!!!! திடிரென ரோஜா இதழ்களை என் முதுகில் கொட்டியதுபோல் ஓர் உணர்வு.. //

    கவிதை!! கவிதை !!!


    செல்லக் குட்டி பிறந்தநாள்

    பதிலளிநீக்கு
  26. ////தனிமரம் சொன்னது…
    இந்தத் தொடருக்கு நானும் ஒரு விமர்சனம் எழுதக் காத்திருந்தேன். ஆனாலும் என் இளைய தம்பி ராச் முந்திவிட்டான். வாக்குத் தந்துவிட்டான்!
    விட்டுக் கொடுக்கின்றேன் முன்னர் வந்தவர்கே முதலிடம் என்பதால்! மீண்டும் சந்திக்கலாம் ////

    ஹி.ஹி.ஹி.ஹி அண்ணே பரவாயில்லை நீங்களே எழுதுங்க நான் இன்னும் ஒரு தொடருக்கு எழுதுறன்.

    பதிலளிநீக்கு
  27. அருமை நண்பா!! ஏற்கனவே பலர் சொல்லியதைபோலவே!

    ஒரு முழுமையான நாவலுக்கான .. தகுதி இருக்கிறது இந்த தொடர்கதையில்..

    பதிலளிநீக்கு
  28. K.s.s.Rajh "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 07" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்: 

    ////தனிமரம் சொன்னது…
    இந்தத் தொடருக்கு நானும் ஒரு விமர்சனம் எழுதக் காத்திருந்தேன். ஆனாலும் என் இளைய தம்பி ராச் முந்திவிட்டான். வாக்குத் தந்துவிட்டான்!
    விட்டுக் கொடுக்கின்றேன் முன்னர் வந்தவர்கே முதலிடம் என்பதால்! மீண்டும் சந்திக்கலாம் ////

    ஹி.ஹி.ஹி.ஹி அண்ணே பரவாயில்லை நீங்களே எழுதுங்க நான் இன்னும் ஒரு தொடருக்கு எழுதுறன். 

    //
    தம்பி  துசி விரைவில்  இருவாரங்களுக்குள்  தொடரை முடித்தால் என்னால் எழுத முடியும் 9/1/2012 பின் வரை நீளும் என்றாள் தனிமரத்தால் முடியாது. தனிப்பட்ட தேடலில் கடல் கடந்துவிடும் தனிமரம் கட்டுமரமாக!
    மீளவும் கரைசேரும் சில வாரங்களின் பின்புதான்! ஹீ ஹீ ! 
    விட்டுக் கொடுத்த உங்கள் நல்ல மனசுக்கு ஒரு சலாம் குருவே!

    பதிலளிநீக்கு
  29. மிகசிறந்த ஆக்கம் உங்களின் கதையும் மகேந்திரன் அவர்களின் கவிதையும் பாரட்டுகள்

    பதிலளிநீக்கு
  30. KANA VARO சொன்னது…
    வாசிப்பு தொடர்கிறது. நானும் உனக்கு கவிதை எழுத வேணுமோ?<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் பாஸ்.... கவிதையா... உங்களிட்டையா?? அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  31. நண்டு @நொரண்டு -ஈரோடுகூறியது...
    தொடருங்கள் ...தொடர்கிறேன் ...<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  32. மதுரன் கூறியது...
    அவ்வ்... அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...
    முக்கியமான இடத்தில கட்டிங்கா....<<<<<<

    ஹா ஹா

    பதிலளிநீக்கு
  33. மதுரன் கூறியது...
    பாஸ் விரிவா கமெண்ட்ஸ் போட முடியவில்லை.. சாரி<<<<<<<<<<<<<<<<<<<<<

    இதில என்ன இருக்கு பாஸ்... :)

    பதிலளிநீக்கு
  34. மைந்தன் சிவா கூறியது...
    வாசிக்கிறேன் பாஸ்<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  35. மைந்தன் சிவா கூறியது...
    வாசிக்கிறேன் பாஸ்<<<<<<<<<<<<<<<<<<<<<

    மறுபடியுமா??? அவ்வ

    பதிலளிநீக்கு
  36. K.s.s.Rajh கூறியது...
    பல விடயங்களை சிறப்பாக சொல்கின்றீங்க மச்சி சுவாரஸ்யமாக இருக்கு பாராட்டுக்கள் நான் சொல்கின்றேன் இதை ஒரு குறுநாவலாக வெளியிடுங்க சூப்பர் ஹிட்டாகும்<<<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் மச்சான்.. ஆனால் இது மிக சிறிய தொடர்தானே.. ஆகையால் புத்தகம் வெளியிடுவது கஸ்ரம் .... ஒரு காலத்தில் இன்னும் நிறைய எழுதினால் எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து வெளியிட முயற்சிக்கிறேன்... தேங்க்ஸ் பாஸ் உங்க அன்புக்கு

    பதிலளிநீக்கு
  37. K.s.s.Rajh கூறியது...
    ////நான் குற்ற உணர்சியுடன் திரும்பிக்கொண்டேன். அவள் கண்கள் என் முதுகை துளைப்பது போல் இருந்தது. அவளின் சூடான மூச்சுக்காற்று என் முதுகில் மோதிக்கொண்டிருந்தது. என் இதயம் வேகமாக துடிக்க, முள் மேல் நிற்பதுபோல் அவஸ்தையில் நின்று கொண்டிருந்தேன்.. மழை வேறு வேகம் பிடிக்க தொடங்கியிருந்தது.இது கனவா..?!!!! திடிரென ரோஜா இதழ்களை என் முதுகில் கொட்டியதுபோல் ஓர் உணர்வு.. பேச திணறி அற்று இன்பத்தில் திளைத்து நான் சிலையாக நின்றேன். பின்னால் நின்று என்னை இறுக்கமாக கட்டியபடி அவள். அவள் அழகையெல்லாம் மேலும் மேலும் என் மேல் இறுக்கி கொண்டிருந்தாள். உலகத்தில் உள்ள அத்தனை சுகங்களையும் என் மேல் போர்த்து விட்டதுபோல் ஓர் உணர்வு.
    ////

    சூழ்நிலைகளால் மனித மனங்கள் மாற்றம் அடைகின்றன என்பதை காட்டி நிற்கின்றன இந்த வரிகள்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    உண்மைதான் பாஸ்.... மனிதனை சூழ் நிலைதானே மாற்றுது

    பதிலளிநீக்கு
  38. கதை மிகச் சிறப்பாக நகர்கிறது
    சுலக்ஷிகாவின் பேச்சில் இருந்த யதார்த்தம் என்னை
    மிகவும் கவர்ந்தது
    மனம் கவரும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. K.s.s.Rajh கூறியது...
    மச்சி உங்கள் தொடரை பற்றி உங்கள் தொடர் நிறைவு பெரும் போது விரிவான ஒரு விமர்சனம் தருகின்றேன்
    தொடருங்கள்.....<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் மச்சி... உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் ரெம்ப நன்றி. தொடர் முடிந்ததும் உங்கள் விமர்சனத்துக்கு எதிர்பார்த்து நிற்பேன் :)

    பதிலளிநீக்கு
  40. shanmugavel கூறியது...
    காதல் உளவியல் உங்களுக்கு சிறப்பாக வருகிறது சார்! மிக சுத்தமாக இருக்கிறது உணர்வுகளும்,அதன் வழி வார்த்தைகளும்.வாழ்த்துக்கள்.<<<<<<<<<<<<<<<<



    ஆஹா..... என்ன பாஸ் இப்படி சொல்லி என்னை மாட்டி விடுறீங்க!!!! அவ்வ்வ்வவ்

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  41. ♔ம.தி.சுதா♔ கூறியது...
    ////என்னதான் நான் உன்னை பாதித்து இருந்தாலும் பெத்த அப்பா அம்மாவை விட்டு இங்கே என் கூட உன்னால் இருக்க முடியாது.////
    உண்மையில் நல்ல காதலின் சுட்டல் தான் ஏனென்றால் காதலுக்கு கண் தெரியாதாமே..

    /// அப்படி இருந்தாலும் அங்கு தொட்டதுக்கெல்லாம் காரில் போன உன்னால் இங்கே நடந்து ஒரு கிராமத்தானாய் வாழ முடியாது..////
    இந்த இடத்தில் தானே தம்பி பலருக்கு கண்ணை மறைக்கும்...<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    நம்ம அண்ணனுக்கு ரெம்ப காதல் அனுபவம் இருக்கோ.... ஹா ஹா

    பதிலளிநீக்கு
  42. நிரூபன் கூறியது...
    வணக்கம் துஸி,
    ஒரு பக்கம் வெளிநாட்டிற்கு திரும்ப வேண்டுமே எனும் போராட்டம்,
    மறு பக்கம் சுலக்‌ஷிகாவின் அன்பிற்காக ஏங்கும் மனதின் நிலை,.

    இவை இரண்டிற்கும் இடையில் தவிக்கும் ஆர்ணிகன்.
    சோகம், சந்தோசம் இரண்டையும் கலந்து கதை நகர்கிறது.
    அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.<<<<<<<<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் பாஸ்.... :)

    பதிலளிநீக்கு
  43. தனிமரம் கூறியது...
    வணக்கம் துசி ஐயா!
    நலம்தானே???
    புலத்திற்கும், புலம்பெயர் தேசத்திற்கும், இடையில் இரு ஜீவன்கள் நெஞ்சுருகும் காதல் மொழியை இனிய மொழி நடையில் பகிர்ந்து செல்லும் தொடர்!
    பல்சுவைக் கதம்பம் காதல் வலிகளைச் சொல்கிச் செல்கின்ற அங்கத்தில்! உங்களுடன் இன்று இனைகின்றேன். ஆவலில் வந்தேன் அவளின் தர்கரீதித் தத்துவத்தில் தத்தளிக்கின்றேன்! தாண்டி ஓடுகின்றேன் தவிர்க்க முடியாத தேடலில் விரைவில் சந்திப்போம்!<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    கருத்துரையை கூட கவிதையாய் போட உங்களால் மட்டுமே முடியும் நேசன் அண்ணா.... சூப்பர். தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  44. தனிமரம் கூறியது...
    இந்தத் தொடருக்கு நானும் ஒரு விமர்சனம் எழுதக் காத்திருந்தேன். ஆனாலும் என் இளைய தம்பி ராச் முந்திவிட்டான். வாக்குத் தந்துவிட்டான்!
    விட்டுக் கொடுக்கின்றேன் முன்னர் வந்தவர்கே முதலிடம் என்பதால்! மீண்டும் சந்திக்கலாம் ! <<<<<<<<<<<<<<<<<<<<

    உங்கள் ரெண்டு பேரின் அன்பும் நெகிழ்வாகவும் சந்தோஷமாகவும் இருக்கு... ரெண்டு பேர் விமர்சனமும் எனக்கு வேணும் ஆமா சொல்லிட்டேன். :)

    பதிலளிநீக்கு
  45. தனிமரம் கூறியது...
    குறுநாவல் வடிவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கின்றேன் ஈழவயல் ஊடாக !<<<<<<<<<<<<<<<<

    பார்ப்போம் பாஸ்.... என் நண்பர்கள் முடிவையும் பார்த்து :)

    பதிலளிநீக்கு
  46. ஆகுலன் கூறியது...
    "யார் யாரைத்தான் காதலிக்கல்ல.. சொல்லு? அவங்க எல்லாம் காதலிச்சவங்கலையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இன்றைக்கு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டி என்று இருக்கிறவங்க எல்லோர் மனசிலையும் ஒரு உடைந்துபோன காதல் ரணமாய் இருக்கும்.. அவங்க எல்லாம் வாழலையா...?" //
    இது எதுக்கு.....<<<<<<<<<<<<<<<<<<<



    அதற்குத்தான்... ஹா ஹா lol

    பதிலளிநீக்கு
  47. Advocate P.R.Jayarajan கூறியது...
    //அவள் முகம் புதைத்திருந்த என் கழுத்து பகுதி அவள் கண்ணீரால் நனைந்து பிசுபிசுக்க தொடங்கியது.. சட்டென அவள் அணைப்பில் இருந்து விலகி திரும்பினேன்.. திரும்பிய என்னை கலங்கிய கண்களோடு பார்த்தவள் மீண்டும் என்னை இறுக கட்டிப்பிடித்துகொண்டாள். //

    இந்த வரிகள் படிக்கும் போதே மனதில் காட்சியாக விரிகிறது...
    இயல்பான உணர்வுகளை உங்கள் யதார்த்தமான மொழி நடை பிரதிபலிக்கிறது.<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    உங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் பாஸ்.... ரெம்ப தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  48. ஆகுலன் கூறியது...
    பாஸ் மிக அருமையா இருக்குது.......
    அவ்வ்வ்வ்வ்வ்வ்(புரியும் எண்டு நினைக்கின்றேன்..)<<<<<<<<<<<<<<<



    புரியுது புரியுது பாஸ்... ஹா ஹா

    பதிலளிநீக்கு
  49. Yoga.S.FR கூறியது...
    இரவு வணக்கம்,துஷி!கண்ணதாசன்?????????<<<<<<<<<<<<<<<<<<<

    ஆஹா..... அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  50. மகேந்திரன் கூறியது...
    இனிய சகோதரா துஷி,
    எனது கருத்தையும் இங்கே பதிவுடன் இணைத்தமைக்கு
    மனம் கனிந்த நன்றிகள்.<<<<<<<<<<<<<<<<<

    நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் பாஸ்...

    இவ்ளோ அழகான ஒரு கவிதை தந்தமைக்கு :)

    பதிலளிநீக்கு
  51. மகேந்திரன் கூறியது...
    ////உன்னை கல்யாணம் பண்ணி உன் பணத்தில்தான் என் குடும்பத்தை கரை சேர்க்கணும் என்ற எந்த தேவையும் எனக்கில்லை.. அப்படிப்பட்டவளும் நான் இல்லை..///

    தனக்கென தன் கால் இருக்க,
    நீ யார் என்னை சுமக்க !!!!
    கதைநாயகியின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும்
    வார்த்தைகள்.<<<<<<<<<<<<<<<<<<<<<<



    வாவ்.... சூப்பர் பாஸ்.

    பதிலளிநீக்கு
  52. மகேந்திரன் கூறியது...
    ///நீ இங்கே தங்கி இதை உன்னால் செய்யமுடியும் என்றால் சொல்லு, இப்பவே இந்த நிமிஷமே உன் கூட வர நான் தயார்.. சொல்லு ஆர்ணி உன்னால முடியுமா..?"///

    பெண்ணியக் கொள்கையால் வந்தாய் வார்த்தைகள் அல்ல
    கண்ணியக் கொள்கையால் வந்த வார்த்தைகள்........<<<<<<<<<<<<<<<<<

    சுலக்க்ஷிகாவின் மன நிலை சொல்லும் கவிதை.... பிரமாதம் பாஸ்

    பதிலளிநீக்கு
  53. மகேந்திரன் கூறியது...
    ///தன்னை விழுங்கி விடுவதுபோல் பார்த்துகொண்டிருக்கும் என்னைப்பார்த்ததும், நாணங்கள் அந்த சோகங்களை எல்லாம் மறைக்க வெக்கத்துடன் தடுமாறினாள்.///

    நான் கொண்ட தாபங்கள் எல்லாம்
    உன்னிரு விழிப் பார்வையிலே
    தூளாகிப் போனதய்யா......
    என் கன்னிமனம் தவிக்குது
    உன்கரமிடை தவழ துடிக்குது.....

    துஷி,
    எளிமையான நடையில் அருமையான காவியைக்
    கதை வரைந்து கொண்டிருக்கிறீர்கள்.
    அருமை அருமை.<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ரெம்ப தேங்க்ஸ் பாஸ்.... ரியலி ஹப்பி.....

    கவிதை உங்களுக்கு மிக சரளமாய் வருது.... பொறாமையா இருக்கு பாஸ்

    பதிலளிநீக்கு
  54. ஹேமா கூறியது...
    துஷிக்குட்டி...கண்ணதாசனா எப்ப மாறினார்.யோகா அப்பா சொல்லியிருக்கிறார்.அப்பா என் இரண்டு தளத்துக்கும் வந்திருந்தார் துஷி.டொச்ல மாலை வணக்கமும் சொல்லியிருந்தார்.எனக்கு நிறைய சந்தோஷம் !<<<<<<<<<<<<<<<<<<



    ஹாய் அக்காச்சி.... கண்ணதாசனா?????அவ்வ்வ்வ்... அப்பா மகளிடம் வராமல் விடுவாரா??? ஹா ஹா

    பதிலளிநீக்கு
  55. ஹேமா கூறியது...
    துஷிக்குட்டி...கதை புத்திசாலித்தனமா போகுது.இப்படிப் பெண்கள் முழிச்சபடி இருந்தா எவ்வளவு நல்லது.ஆனாலும் பிறகென்ன வந்தது சுலக்‌ஷிகாவுக்கு.கனவோ !<<<<<<<<<<<<<<<<<<<<<



    ரெம்ப தேங்க்ஸ் அக்காச்சி....

    கனவு இல்லை அக்கா நிஜம் தான்...

    சுலக்க்ஷிகா ஆர்னிகணை லவ் பண்ணுறாள் ஆனால் ஒத்துக்கிறாள் இல்லை.... :( இந்த பெண்களே இப்படித்தான் அக்காச்சி...... :)))

    பதிலளிநீக்கு
  56. கந்தசாமி. கூறியது...
    அது தான் மேலே நான் சொல்ல வேண்டியதை பலர் சொல்லிட்டாங்களே ...)
    ஆனாலும் கடைசி வரிகளில் ஏதாவது சஸ்பென்ஸ் இருக்குது போல கிடக்கே!<<<<<<<<<<<<<<<<



    ஹா ஹா.... இதான் பிந்தி வரப்படாது என்று சொல்லுறது :)))

    பதிலளிநீக்கு
  57. கந்தசாமி. கூறியது...
    ////கண்களில் தடம்புரளும் கண்ணீரை துடைத்தபடி விரக்தியாக புன்னகைத்தபடி சொன்னாள். "யார் யாரைத்தான் காதலிக்கல்ல.. சொல்லு? அவங்க எல்லாம் காதலிச்சவங்கலையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இன்றைக்கு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டி என்று இருக்கிறவங்க எல்லோர் மனசிலையும் ஒரு உடைந்துபோன காதல் ரணமாய் இருக்கும்.. அவங்க எல்லாம் வாழலையா...?" /// ஆமா ;-)<<<<<<



    ஹீ ஹீ.... கந்து மனசுக்கே யாரு???

    பதிலளிநீக்கு
  58. எனக்கு பிடித்தவை கூறியது...
    //இது கனவா..?!!!! திடிரென ரோஜா இதழ்களை என் முதுகில் கொட்டியதுபோல் ஓர் உணர்வு.. //

    கவிதை!! கவிதை !!!


    செல்லக் குட்டி பிறந்தநாள்<<<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் தேங்க்ஸ் :))

    பதிலளிநீக்கு
  59. K.s.s.Rajh கூறியது...
    ////தனிமரம் சொன்னது…
    இந்தத் தொடருக்கு நானும் ஒரு விமர்சனம் எழுதக் காத்திருந்தேன். ஆனாலும் என் இளைய தம்பி ராச் முந்திவிட்டான். வாக்குத் தந்துவிட்டான்!
    விட்டுக் கொடுக்கின்றேன் முன்னர் வந்தவர்கே முதலிடம் என்பதால்! மீண்டும் சந்திக்கலாம் ////

    ஹி.ஹி.ஹி.ஹி அண்ணே பரவாயில்லை நீங்களே எழுதுங்க நான் இன்னும் ஒரு தொடருக்கு எழுதுறன்.<<<<<<<<<<<<<<<<<<<<<<



    நோ நோ........ ரெண்டு பேர் விமர்சனமும் எனக்கு வேணும் வேணும் வேணும் :))))))

    பதிலளிநீக்கு
  60. குடிமகன் கூறியது...
    அருமை நண்பா!! ஏற்கனவே பலர் சொல்லியதைபோலவே!

    ஒரு முழுமையான நாவலுக்கான .. தகுதி இருக்கிறது இந்த தொடர்கதையில்..<<<<<<<<<<<<<<<<<<<<<



    தேங்க்ஸ் பாஸ்..... ரெம்பவே தேங்க்ஸ் ................... :)

    பதிலளிநீக்கு
  61. கவி அழகன் கூறியது...
    நல்ல கதை
    வாழ்த்துக்கள்.<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  62. தனிமரம் கூறியது...
    K.s.s.Rajh "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 07" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

    ////தனிமரம் சொன்னது…
    இந்தத் தொடருக்கு நானும் ஒரு விமர்சனம் எழுதக் காத்திருந்தேன். ஆனாலும் என் இளைய தம்பி ராச் முந்திவிட்டான். வாக்குத் தந்துவிட்டான்!
    விட்டுக் கொடுக்கின்றேன் முன்னர் வந்தவர்கே முதலிடம் என்பதால்! மீண்டும் சந்திக்கலாம் ////

    ஹி.ஹி.ஹி.ஹி அண்ணே பரவாயில்லை நீங்களே எழுதுங்க நான் இன்னும் ஒரு தொடருக்கு எழுதுறன்.

    //
    தம்பி துசி விரைவில் இருவாரங்களுக்குள் தொடரை முடித்தால் என்னால் எழுத முடியும் 9/1/2012 பின் வரை நீளும் என்றாள் தனிமரத்தால் முடியாது. தனிப்பட்ட தேடலில் கடல் கடந்துவிடும் தனிமரம் கட்டுமரமாக!
    மீளவும் கரைசேரும் சில வாரங்களின் பின்புதான்! ஹீ ஹீ !
    விட்டுக் கொடுத்த உங்கள் நல்ல மனசுக்கு ஒரு சலாம் குருவே!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    நேசன் அண்ணா..... இந்த மாசத்துக்குலேயே தொடரை முடித்துவிடுவேன்..... உங்கள் ரெண்டு பேரின் விமர்சனமும் எனக்கு வேணும்..... உங்கள் அன்புக்கு நன்றி பாஸ்...

    பதிலளிநீக்கு
  63. மாலதி கூறியது...
    மிகசிறந்த ஆக்கம் உங்களின் கதையும் மகேந்திரன் அவர்களின் கவிதையும் பாரட்டுகள்<<<<<<<<<<<<<

    ரெம்ப நன்றி அக்கா...... உங்கள் பாராட்டு ஹப்பியா இருக்கு :)))))

    பதிலளிநீக்கு
  64. வணக்கம் மருமோனே!
    அழகான எழுத்து நடையோடு கூடிய இந்த கதை அனைவனையும் கட்டிப்போட்டுள்ளதை பினூட்டத்தில் பார்க்கும்போதே தெரிகிறது... கருத்துரைக்கு இப்படி அடிபடுகிறார்களே...!! அதைவிட மகேந்திரனின் கவிதை தொடருக்கு பொருத்தமாய்தான் வந்திருக்கு... வாழ்த்துக்கள்....!!!!

    பதிலளிநீக்கு
  65. "யார் யாரைத்தான் காதலிக்கல்ல.. சொல்லு? அவங்க எல்லாம் காதலிச்சவங்கலையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இன்றைக்கு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டி என்று இருக்கிறவங்க எல்லோர் மனசிலையும் ஒரு உடைந்துபோன காதல் ரணமாய் இருக்கும்.. அவங்க எல்லாம் வாழலையா...?" //

    இது எதுக்கு.....

    பதிலளிநீக்கு
  66. பாஸ்,எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.இப்போதைக்கு அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் என்று சொல்வதை தவிர.

    பதிலளிநீக்கு
  67. காட்டான் சொன்னது…
    வணக்கம் மருமோனே!
    அழகான எழுத்து நடையோடு கூடிய இந்த கதை அனைவனையும் கட்டிப்போட்டுள்ளதை பினூட்டத்தில் பார்க்கும்போதே தெரிகிறது... கருத்துரைக்கு இப்படி அடிபடுகிறார்களே...!! அதைவிட மகேந்திரனின் கவிதை தொடருக்கு பொருத்தமாய்தான் வந்திருக்கு... வாழ்த்துக்கள்....!!!!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் மை மாமா :)))

    பதிலளிநீக்கு
  68. Menaga சொன்னது…
    "யார் யாரைத்தான் காதலிக்கல்ல.. சொல்லு? அவங்க எல்லாம் காதலிச்சவங்கலையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இன்றைக்கு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டி என்று இருக்கிறவங்க எல்லோர் மனசிலையும் ஒரு உடைந்துபோன காதல் ரணமாய் இருக்கும்.. அவங்க எல்லாம் வாழலையா...?" //

    இது எதுக்கு.....<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஆஹா..... ஏன் மேனகா ஏன் ....... அவ்வ்வ்வ்

    தேங்க்ஸ் உங்கள் முதல் வருகைக்கு :))))

    பதிலளிநீக்கு
  69. கோகுல் சொன்னது…
    பாஸ்,எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.இப்போதைக்கு அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் என்று சொல்வதை தவிர.
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
    தேங்க்ஸ் மச்சி :)))

    பதிலளிநீக்கு
  70. அடுத்த பதிவை சீக்கிரம் எழுதுங்கள்:)

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...